என் மலர்
நீங்கள் தேடியது "சோதனை சாவடி"
- தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 1600 போலீசார் பாதுகாப்பு பணியில் மேற்கொள்வார்கள்.
- மக்கள் கூடுவதை கட்டுப்படுத்த பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடலூர்:
2023 புத்தாண்டு பாதுகாப்பு முன்னிட்டு கடலுார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் மேற்பார்வையில், கூடுதல் காவல் சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில், 2 உதவி போலீஸ் சூப்பிரண்டு, 8 துணை போலீஸ் சூப்பிரண்டு, 33 இன்ஸ்பெக்டர்கள், 231 சப் இன்ஸ்பெக்டர் கள், சிறப்பு உதவியாளர்கள், மற்றும் காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 1600 போலீசார் பாதுகாப்பு பணியில் மேற்கொள்வார்கள். புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மது கடத்தலை தடுக்கும் பொருட்டு மாவட்ட எல்லையில் 8 மதுவிலக்கு சோதனைச்சாவடிகளில் தீவிர வாகன சோதனையில் மேற்கொண்டு பாதுகாப்பு பணி மேற்கொள்வார்கள். மேலும் கூடுதலாக கடலூர் மாவட்டத்தில் 84 இடங்களில் தற்காலிக சோதனை சாவடி அமைத்து வாகன தணிக்கை மேற்கொள்ளப்படும்.
காவல்துறை வாகனங்களில் காவல் அதிகாரிகள் ரோந்து பணி மேற்கொள்வார்கள். முக்கியமான இடங்களில் இருசக்கர வாகனங்களில் ரோந்து பணி மேற்கொள்ளப்படும். தங்கும் இடங்களில் காவல் அதிகாரிகள் சோதனை மேற்கொள்வார்கள். கோவில்கள், தேவால யங்கள் போன்ற வழிபாட்டு தலங்கள், சுற்றுலா தலங்களான தேவனாம்ப ட்டினம் வெள்ளி கடற்கரை, பிச்சாவரம் சுற்றுலா மையம், சாமியார்பேட்டை கடற்கரை ஆகிய இடங்களில் மக்கள் கூடுவதை கட்டுப்படுத்த பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புத்தாண்டு அன்று இரவு பொது இடங்களிலும், சாலைகளிலும் கூடுவதை தவிர்க்க வேண்டும். வீடுகளில் குடும்பத்துடன் இருந்து புத்தாண்டை கொண்டாடி மகிழ்வது சிறந்தது. நள்ளிரவு 1 மணிக்குமேல் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை. மதுஅருந்திவிட்டு வாகனம் ஒட்டுபவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
- அத்தியாவசிய தேவைகளுக்காக பயன்படக்கூடிய இச்சாலையில் மூடுவது முறையல்ல
- இங்கு கேட் அமைக்கக்கூடாது என்று பொதுமக்கள் தரப்பில் கூறியுள்ளனர்.
கன்னியாகுமரி:
ஆறு காணி பகுதியில் இருந்து சூரக்காணி கேர ளாவையொட்டி இருக்கக் கூடிய பகுதிகளுக்கு செல் லக்கூடிய சாலையின் குறுக்கே சோதனை சாவடி உள்ளது. தற்போது வனத்துறையினர் திடீரென்று கேட் அமைத்து மூடுவதற்காக கேட்டுடன் வந்து சாலையை மூடுவ தற்கான முயற்சியில் ஈடுபட்டனர். இதனை அறிந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
இப்பகுதியில் கேட்டு அமைத்து தடைசெய்தால் யாரும் வனத்துறையின் அனுமதி இல்லாமல் சாலை யை கடக்க முடியாது. ஒவ்வொரு முறையும் சாலையை கடக்கும் பொழுதும் கையெழுத்து போட்ட பின்பு தான் அந்தப் பக்கமும் இந்த பக்கமும் செல்லமுடியும். இரவு நேரங்களில் கேட்டை திறந்து தருவதற்கோ திடீரென்று சாலையை கடப்பதற்கோ பொதுமக்களுக்கு இயலாது. ஆகையால் இங்கு கேட் அமைக்கக்கூடாது என்று பொதுமக்கள் தரப்பில் கூறி யுள்ளனர்.
இது சம்பந்தமாக நேற்று மாலை சுமார் மாலை 5 மணி அளவில் தொடங்கிய போராட்டம் சுமார் மூன்று மணி நேரம் நீடித்தது. பின்னர் திருவட்டார் இன்ஸ்பெக்டர், கடையால் மூடு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் காவல்துறையினர் பொதுமக்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் ஆர்டிஓ மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஆகியோர்களுடன் கலந்துரையாடிய தீர்மா னிக்கப்படும் என்று வாக்குறுதியை அளித்தபின் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.
கடையால்பேரூராட்சி தலைவர் கூறும்போது, கடையால் மூடு பேரூராட்சி ஆனது நிலப்பரப்பில் பெரிய பேரூராட்சி மக்கள் அதிகமாக வசிக்கக்கூடிய பேரூராட்சி எல்லா தரப்பு மக்களும் இப்பகுதியில் வசிக்கின்றனர்.கேரளா பகுதியோடு ஒட்டி இருக்கக்கூடிய பேரூராட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
அவசர தேவைகள் என் றால் கேரளாவிற்கு அதாவது திருவனந்தபுரம் மாவட் டத்தை அமைந் துள்ள பனச்ச மூடு, வெள்ள றடை, அம்பூரி, ஆனபாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருக்கக் கூடிய பகுதியில் வெகு விரைவாக சென்று வரவும் ஆனப்பாறையில் அமைந்துள்ள கேரளா அரசின் அரசு மருத்துவ மனைக்கு அவசர சிகிச் சைக்காக செல்லவும் இப்பகுதி மக்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். அதேபோன்று திருவனந்த புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக செல்லக்கூடிய நோயாளி களை இச்சாலைவழியாக தான் கொண்டு செல்ல வேண்டும். எனவே மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக அதிகம் பயன்படக்கூடிய இச்சாலையில் சோதனை சாவடி இருந்தும் மறுபுறம் வனத்துறையினர் கேட்டு போட்டு மூடுவது என்பது முறையல்ல அதை ஒரு போதும் அனுமதிக்க முடி யாது என பேரூராட்சி தலைவர் கூறியுள்ளார்.
- கோவை மாவட்டம் கிணத்துக்கடவு மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் அதிகளவு கல்குவாரிகள் உள்ளன.
- விவசாய அமைப்புகள், பல்வேறு எதிர்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
கோவை:
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் அதிகளவு கல்குவாரிகள் உள்ளன.
இந்த கல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி முறைகேடாக கனிம வளத்தை கொள்ளையடித்து, கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருகிறது.
இதற்கு விவசாய அமைப்புகள், பல்வேறு எதிர்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கனிம வள கொள்ளையை தடுக்க கோரி கடந்த 26-ந் தேதி பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் மாநில தலைவர் அண்ணாமலையும் கலந்து கொண்டு கனிம வள கொள்ளையை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் பா.ஜ.கவினர் சோதனை சாவடிகளில் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என தெரிவித்தார்.
இந்த நிலையில் விவசாயிகள் மற்றும் மக்களின் தொடர் போராட்டத்தை அடுத்து, கனிமவள கொள்ளையை தடுக்கும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் சார்பில் கிராம நிர்வாக அலுவலர்கள் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
கிராம நிர்வாக அலுவலர்கள் தலைமையிலான குழுவினர் இன்று முதல் கேரள மாநில எல்லைகளையொட்டிய சோதனை சாவடிகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி நடுபுணி, கோபாலபுரம், சொக்கனூர், வீரப்ப கவுண்டனூர், மீனாட்சிபுரம் செம்மணாம்பதி சோதனை சாவடிகளில் கிராம நிர்வாக அலுவலர்கள் தலைமையிலான குழுவினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக லாரிகளில் அதிரடி சோதனை மேற்கொள்கின்றனர். கனிம வளங்கள் கடத்தப்படுவது தெரிந்தால் உடனடியாக பிடித்து நடடிக்கையும் எடுத்து வருகிறார்கள்.
மாவட்ட நிர்வாகம், புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் மற்றும் சப்-கலெக்டர் அறிவுறுத்தலின் படி கிராம நிர்வாக அலுவலர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. கேரள மாநில எல்லைகளையொட்டிய சோதனை சாவடிகளில் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.
பொள்ளாச்சி தாலுகாவில் உள்ள நடுபுணி மற்றும் கோபாலபுரம் பகுதியில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையும், இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை என 2 ஷிப்டுகளாக குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல் கிணத்துக்கடவு தாலுகா சொக்கனூர், வீரப்ப கவுண்டனூர் சோதனை சாவடிகளில் காலை8 மணி முதல் மதியம் 2 மணி வரையும், மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரையும், இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை 3 ஷிப்டுகளாகவும், ஆனைமலை தாலுகாவில் மீனாட்சிபுரம் சோதனை சாவடியில் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரையும், மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரையும், இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரை என 3 ஷிப்டுகளாகவும் இந்த சோதனையானது நடக்கிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- பண்ருட்டி போலீஸ் சரகத்தில் அடிக்கடி வாகன விபத்து பெருமளவில் நடக்கிறது.
- தினமும் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை வாகன சோதனை மேற்கொள்வதென போலீசார் முடிவு செய்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம், பண்ருட்டி போலீஸ் சரகத்தில் அடிக்கடி வாகன விபத்து பெருமளவில் நடக்கிறது. இதனை தொடர்ந்து கடலூர் போலீஸ் சூப்பிரண்டு, பண்ருட்டி துணை சூப்பிரண்டு ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில் பண்ருட்டி, மேல்பட்டாம்பாக்கம், புதுப்பேட்டை, கொள்ளுகாரன் குட்டை உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு வாகன சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. தினமும் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை வாகன சோதனை மேற்கொள்வதென போலீசார் முடிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து பண்ருட்டி சென்னை சாலை கொள்ளு காரன் குட்டை பகுதியில் சிறப்பு சோதனை சாவடி அமைக்கப்பட்டு நேற்று பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் தலைமையில் தீவிர வாகன சோதனை நடைபெற்றது.
- 4 மாவட்டங்களின் எல்லைகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டனர்.
- தென்காசி மாவட்டத்தில் இருந்து கனிம வளங்கள் கடத்தப்படுவதில்லை.
செங்கோட்டை:
தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் அளவுக்கு அதிகமாக கடத்தப்படுவதை தடுக்க பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.
இதனை தடுத்து கட்டுப்படுத்தும் பொருட்டு கன்னியாகுமரி, தென்காசி, கோவை, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களின் எல்லையில் தீவிரமாக கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டனர். அதன்படி தென்காசி மாவட்டத்திற்கு திருச்சி பறக்கும் படை உதவி இயக்குனர் அருள்முருகன் தலைமையில் 3 பேர் கொண்ட அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு மேலாக அதிகாலை முதல் புளியரை சோதனைச் சாவடியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலையில் புளியரை சோதனைச் சாவடிக்கு தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் ஆகியோர் வந்தனர். பின்னர் அங்கு கலெக்டர், எஸ்.பி. ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பின்னர் கலெக்டர் ரவிச்சந்திரன் செய்தியாளர் களிடம் கூறியதாவது:-
தென்காசி மாவட்டத்தில் இருந்து கனிம வளங்கள் கடத்தப்படுவதில்லை. இங்கு 39 குவாரிகள் இயங்கி வருகின்றன. இங்கிருந்து விதிகளுக்குட்பட்டு கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகிறது.
ஒரு சில வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட எடையை விட கூடுதலாக கனிம வளங்கள் கொண்டு செல்வது கண்டுபிடிக்கப் பட்டால் உரிய அபராதம் விதிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கேரளாவில் விலை உயர்வு காரணமாக எரிபொருள் நிரப்பவும் ஏராளமான வாகனங்கள் வருகிறது.
- போக்குவரத்து நெரிசலால் பஸ்களும் உரிய நேரத்தில் செல்ல முடியவில்லை.
செங்கோட்டை:
அண்டை மாநிலமான கேரளாவிற்கு தென்காசி மாவட்டம் செங்கோட்டை அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள இடங்களுக்கு தொழில்நுட்ப வேலைக்கு பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் மூலமாக ஆயிரக்க ணக்கான தொழிலாளர்கள் நாள்தோறும் செல்கின்றனர். அவ்வாறு பணிக்கு செல்வோர் அதிகாலையில் 5 மணியில் இருந்து 8 மணிக்குள் செல்ல வேண்டி உள்ளது.
மேலும் அண்டை மாநில தலைநகர் திருவனந்தபுரம் மற்றும் புனலூர், தென்மலை, அடூர், அஞ்சல், எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மருத்துவம் பார்ப்பதற்காகவும், பிற காரணங்க ளுக்காகவும் ஏராளமானோர் சென்று வருகின்றனர். மேலும் அவசர காலங்களில் துரிதமாக கேரளா செல்லவும் இந்த பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது அண்டை மாநிலமான கேரளாவில் டீசல், பெட்ரோல் விலை உயர்வு காரணமாக தமிழகத்தின் எல்லையில் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பவும் ஏராளமான வாகனங்கள் கடந்த சில வாரங்களாக அதிக அளவில் வருகிறது.
இதனால் எல்லை பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், பயணிகள் குறிப்பிட்ட நேரத்துக்குள் சென்று வர முடியாத சூழ்நிலை நிலவுகிறது. பஸ்களும் உரிய நேரத்தில் செல்ல முடியவில்லை.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து வருகிறது. அவர்களுடைய வாழ்வா தாரம் பாதிக்கப்படுகிறது. இதனை தவிர்க்க புளியரை சோதனை சாவடியில் இருந்து தமிழக-கேரள எல்லை வரை 6 கிலோ மீட்டர் தொலைவுக்கு போக்குவரத்து காவலர்களை ரோந்து வரச்செய்து, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- போலீசார் இரவு நேரத்தில் குடியிருப்பு மற்றும் சோதனை சாவடி பகுதிகளில் சைக்கிளில் சென்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- சோதனை சாவடிகளில் நின்றபடி வாகன சோதனை நடத்தி எரிசாராயம், போதை பொருட்கள் கடத்தப்படுகிறதா என தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
சென்னை:
ஆவடி மாநகர காவல் ஆணையரகத்துக்குட்பட்ட பகுதிகளில் செயின் பறிப்பு மற்றும் குற்றங்களை தடுப்பதற்காக பொதுமக்களுடன் போலீசார் தொடர்பில் இருப்பதற்காகவும் அக்கம், பக்கம் கண்காணிப்பு திட்டம் என்ற புதிய திட்டத்தை ஆவடி சரக போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தொடங்கி வைத்தார்.
இதற்காக போலீசார் இரவு நேரத்தில் குடியிருப்பு மற்றும் சோதனை சாவடி பகுதிகளில் சைக்கிளில் சென்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் பெண்கள், குழந்தைகள், முதியவர்களுக்கான பாதுகாப்பு, போதைப்பொருள் நடமாட்டம் குறித்து சைக்கிளில் சென்று கண் காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதுபோல இரவு நேரத்தில் பணி முடிந்து வீடு திரும்பி வருவோர், வெளியூரில் இருந்து வீடு திரும்புவோர்களிடம் சென்று செயின் பறிப்பு திருடர்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி பாதுகாப்பாக செல்ல வலியுறுத்தி வீடுவரை சென்று விட்டு வருகிறார்கள். மேலும் சோதனை சாவடிகளில் நின்றபடி வாகன சோதனை நடத்தி எரிசாராயம், போதை பொருட்கள் கடத்தப்படுகிறதா என தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ஆவடி உதவி கமிஷனர் புருசோத்தமன் இன்ஸ்பெக்டர்கள் டில்லிபாபு அருணாச்சல ராஜா மற்றும் போலீசார் இந்த பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் ஆத்தூரை அடுத்து ஆவரையூர் விலக்கு, கீரனூர் விலக்கு, தலைவன்வடலி விலக்கு ஆகிய இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
- இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆறுமுகநேரி:
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தலைவன்வடலி கிராமத்தில் கடந்த மாதம் ஒரே சமயத்தில் பல்வேறு கோவில்களின் கொடை விழாக்கள் நடை பெற்ற நிலையில் அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீ சார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.
இந்த நிலையில் தற்போது மேலும் பதட்டமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு தலைவன்வடலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசாரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் ஆத்தூரை அடுத்து ஆவரை யூர் விலக்கு, கீரனூர் விலக்கு, தலைவன்வடலி விலக்கு ஆகிய இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அவ்வழியே செல்லும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் ரோந்து பணி யிலும் ஈடுபட்டு வருகின்ற னர்.
இதனிடையே தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேற்று ஆத்தூருக்கு வருகை தந்து போலீசாரின் பாது காப்பு பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்து அறிவுரை களை வழங்கினார்.
அப்போது திருச்செந்தூர் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ், ஆத்தூர் இன்ஸ்பெக்டர் பால முருகன், திருச்செந்தூர் தனிப்பிரிவு சப்-இன்ஸ் பெக்டர் ரகு ஆகியோர் உடன் சென்றனர்.
- சின்னார்கலால் சோதனை சாவடி அருகே போலீசார் காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
- கொச்சி பகுதியிலும் போதை பவுடர் மற்றும் ஹாசிஸ் எண்ணை கடத்தி வந்த 2 பேர் பிடிப்பட்டனர்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த போதை பொருள் கடத்தல் தடுப்பு போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் மாநில எல்லைகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தின் உடுமலை பேட்டை வழியாக கேரளாவின் மறையூருக்கு ஒரு கார் வந்தது. சின்னார்கலால் சோதனை சாவடி அருகே போலீசார் அந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரில் கஞ்சா மற்றும் போதை பவுடர் இருந்தது. அதனை கண்டுபிடித்து போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் காரில் இருந்த தாம்சன் செபாஸ்டியான் (வயது 23) மற்றும் அவரது கூட்டாளிகள் உள்பட 4 பேர் பிடிப்பட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து தேவிகுளம் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தினர். போதை பொருள் கடத்தி வந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுபோல கொச்சி பகுதியிலும் போதை பவுடர் மற்றும் ஹாசிஸ் எண்ணை கடத்தி வந்த 2 பேர் பிடிப்பட்டனர். இவர்களில் ஒருவர் மாணவர் ஆவார். 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் எங்கிருந்து போதை பொருளை கடத்தி வந்தனர் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுபோல கொச்சியை அடுத்த கலூர், பச்சலம், எமலக்கரை பகுதியில் போதை பொருள் விற்றதாக வடமாநில தொழிலாளி ஒருவரும் சிக்கினார். அவரையும் கைது செய்த போலீசார் அவரிடம் இருந்தும் போதை பொருள்களை பறிமுதல் செய்தனர். கடந்த 2 நாட்களில் மட்டும் கொச்சி மற்றும் மறையூர் பகுதிகளில் போதை பொருள் வைத்திருந்ததாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- ஒரே நேரத்தில் பலர் ஆன்லைனை கையாள முனைவதால், சர்வர் பிரச்சினை ஏற்பட்டு, ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி பர்மிட் பெற முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது.
- தமிழகத்திற்குள் நுழைய முடியாமல், பல வாகனங்கள் மீண்டும் தங்கள் பகுதிக்கே திரும்பிச் செல்லும் அவலநிலை இருந்து வருகிறது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜுஜுவாடி சோதனைச்சாவடியில் உள்ள அலுவலகத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக, வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்கள், நேரிடையாக பணம் செலுத்தி பர்மிட் பெறும் முறையை ரத்து செய்துவிட்டதாகவும், ஆன்லைனில் மட்டுமே பணம் செலுத்தி பர்மிட் பெற வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனை அறியாமல், கர்நாடகம், ஆந்திரா, புதுச்சேரி மற்றும் பல்வேறு வெளிமாநிலங்களிலிருந்து ஓசூர் வழியாக தமிழகத்திற்குள் நுழையும் கார்கள், லாரிகள், டூரிஸ்ட் வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்களின் டிரைவர்கள், உரிமையாளர்கள், கால் கடுக்க பல மணிநேரம் சோதனைச்சாவடி அலுவலகத்தில் வரிசையில் காத்து நின்று ஏமாற்றமடையும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், சோதனைச்சாவடியிலேயே ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி, பர்மிட் பெறும் வசதி செய்யப்பட்டிருந்தாலும், ஒரே நேரத்தில் பலர் ஆன்லைனை கையாள முனைவதால், சர்வர் பிரச்சினை ஏற்பட்டு, ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி பர்மிட் பெற முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது.
இது தவிர, பெரும்பாலான லாரி டிரைவர்களுக்கு, செல்போனில் ஆன்லைன் முறையை கையாள்வது தெரியாத காரணத்தால் அவர்கள் தடுமாறி நிற்கும் சூழ்நிலையும் உள்ளது.
இவ்வாறு ஆன்லைனிலும் பர்மிட் பெற முடியாமலும், நேரிடையாகவும் பர்மிட் பெற முடியாமலும் இக்கட்டான நிலை ஏற்பட்டு, தமிழகத்திற்குள் நுழைய முடியாமல், பல வாகனங்கள் மீண்டும் தங்கள் பகுதிக்கே திரும்பிச் செல்லும் அவலநிலை இருந்து வருகிறது.
எனவே, ஆன்லைன் வசதி மட்டுமின்றி, நேரிடையாக பணம் செலுத்தி எளிதில் பர்மிட் பெறும் முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் டூரிஸ்ட் வாகனங்களை இயக்குபவர்கள், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சமூக விரோத செயல்கள் தடை இன்றி நடைபெற வாய்ப்புள்ளதாக இருந்தது.
- புகாரின் பெயரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
உடுமலை:
உடுமலையிலிருந்து கொழுமம் வழியாக பழனி செல்லும் சாலையில் குதிரையாறு சோதனை சாவடி உள்ளது.
இங்கு குமரலிங்கம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட இந்த சோதனை சாவடியில் சமீப காலமாக போலீசார் யாரும் பணியில் இல்லை. இதனால் மணல் கடத்தல், அதிவேகமாக வாகனத்தில் செல்லுதல், மரங்களை வெட்டி கடத்துதல், பாதுகாப்பு பட்டியலில் உள்ள வனவிலங்களை வேட்டையாடுதல் போன்ற சமூக விரோத செயல்கள் தடை இன்றி நடைபெற வாய்ப்புள்ளதாக இருந்தது.
இது குறித்து இந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் குமரலிங்கம் சோதனை சாவடியில் போலீசாரை கண்காணிப்பு பணிக்கு நியமித்து உள்ளனர்.
- சத்தியமங்கலம் வனத்துறை அதிகாரிகள் இது குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.
- தீபக்குமார், மூர்த்தி 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து வனத்துறை அதிகாரிகள் அதிரடி உத்தரவிட்டனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள பண்ணாரியில் சத்தியமங்கலம் வனத்துறைக்கு சொந்தமான சோதனை சாவடி உள்ளது. வனப்பகுதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு வன சோதனை சாவடியில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சோதனை சாவடி வழியாக வாகனத்தில் சென்ற கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த லாரி டிரைவரிடம் சோதனை சாவடி பணியில் இருந்த வனவர் தீபக்குமார் மற்றும் வேட்டை தடுப்பு காவலர் மூர்த்தி ஆகிய 2 பேரும் சேர்ந்து லஞ்சம் கேட்டு அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். லஞ்சம் தர மறுத்ததால் டிரைவரை அவர்கள் சரமாரியாக தாக்கினர்.
இது குறித்த வீடியோ வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து சத்தியமங்கலம் வனத்துறை அதிகாரிகள் இது குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.
அதில் டிரைவரை வனவர் தீபக்குமார், வேட்டை தடுப்பு காவலர் மூர்த்தி ஆகியோர் ஆகியோர் தாக்கியது உறுதியானது. இதனையடுத்து தீபக்குமார், மூர்த்தி 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து வனத்துறை அதிகாரிகள் அதிரடி உத்தரவிட்டனர்.
இந்நிலையில் வனத்துறையினர் லாரி ஓட்டுனரை தாக்கிய காட்சியை வீடியோ எடுத்த மற்றொரு லாரி ஓட்டுனரை வனத்துறையினர் மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது.