search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 பேர் சிக்கினர்"

    • கர்நாடகாவில் இருந்து திருப்பத்தூருக்கு மதுபாட்டில்களை கடத்தி சென்றதும் தெரிய வந்தது.
    • ரூ.86 ஆயிரத்து 760 மதிப்புள்ள 1,442 மதுபாட்டில்களை பறமுதல் செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு துணைபோலீஸ் சூப்பிரண்டு சிவலிங்கம் தலைமையில் கலால் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிகுமார் மற்றும் போலீசார் பெங்களூரு- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 90 மில்லி அளவு கொண்ட 960 கர்நாடக மாநில மதுபாட்டில்கள், 180 மில்லி லிட்டர் அளவு கொண்ட 482 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்கள் திருப்பத்தூர் மாவட்டம் சுந்தரம்பள்ளி பகுதியை சேர்ந்த ராஜேஷ்குமார் (35), கிருஷ்ணகிரி நடுப்பட்டி அருகே உள்ள பாண்டவர் கொட்டாயை சேர்ந்த சந்திரசேகர் (36) என்பதும், அவர்கள் கர்நாடகாவில் இருந்து திருப்பத்தூருக்கு மதுபாட்டில்களை கடத்தி சென்றதும் தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் காரில் இருந்த ரூ.86 ஆயிரத்து 760 மதிப்புள்ள 1,442 மதுபாட்டில்களை பறமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய திருப்பத்தூர் காகங்கரையை சேர்ந்த மணிகண்டன் என்பவரை தேடி வருகிறார்கள்.

    அதே போல கிருஷ்ணகிரி -திருவண்ணாமலை சாலையில் போலீசார் ரோந்து சென்றனர். அந்த பகுதியில் தாபா ஓட்டலில் சோதனை செய்தனர். அங்கு 1800 மதிப்புள்ள 10 மதுபாட்டில்கள் இருந்ததை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அதை வைத்திருந்த வேட்டியம்பட்டியை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    • விழுப்புரம் அருகே அரசு கல்லூரி மாணவரை கொன்ற வழக்கில் மேலும் 2 பேர் சிக்கினர்.
    • ஆத்திரம் அடைந்த நாங்கள் அருண்குமாரை அடித்து கொைல செய்ததை ஒப்புக்கொண்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே திருவெண்ணை நல்லூர் போலீஸ் சரகம் டி.எடையார் காலனியை சேர்ந்தவர் முத்துசாமி. அவரது மகன் அருண்குமார். விழுப்புரத்தில் உள்ள அரசு கலை கல்லூரியில் பி.ஏ.2-ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காணாமல்போனது. எனவே மோட்டார் சைக்கிளை தேடும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அருண்குமாரின் நண்பர்கள் 4 பேர் அங்கு வந்தனர். அப்போது அவ ர்கள் அருணை வெளியே அழைத்து சென்றனர். பின்னர் இரவு நேரமாகியும் அருண்குமார் வீட்டுக்கு திரும்பாததால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். அப்போது நண்பர்களி–டம் விசாரிக்க சென்றபோது அவர்களும் மாயமாகி இருந்தனர். இதற்கிடையில் அருண்குமாரின் இன்னொரு நண்பர் ஒருவர் முத்து சாமியிடம் உங்களது மகனை 4 பேர் அடித்து கொன்று ஏரியில் உள்ள கிணற்றில் வீசியதாக தகவல் தெரிவித்தார். பதறிபோன முனுசாமி தனது மகன் அருண்குமாரை தேடினார்.இந்த நிலையில் அருண்குமார்அதே கிராமத்தில் உள்ள ஏரி கிணற்றில்பிணமாக மிதந்தார்.இதனை பார்த்தமுனுசாம மற்றும் உறவினர்கள்அதி ர்ச்சியடைந்தனர்.

    தகவல் அறிந்த விழுப்புரம் போலீஸ் டி.எஸ்.பி. பார்த்திபன், திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு ஆகி யோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.உடலை கைப்பற்றிவிசாரணை நடத்தினர். விசாரணையில் அருண்குமார் அடித்து கொ லை செய்யப்பட்டி–ருப்பது தெரியவந்தது. எனினும் கொலையா ளிகளை கைது செய்யக்கோரி உறவி–னர்கள் எடையார் பஸ் நிறுத்தம் பகுதியில் கடலூர்-–திருக்கோவிலூர் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். தகவல் அறிந்த போலீசார் விசார–ணை–யை முடுக்கினர். இதன்பேரில் அருண்கு–மாரை கொலை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர்கள் கீர்த்திவர்மன் (17), சத்யன் (16), சரசுராஜ் (17), வீரமணி (18) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கொலையில் ராேஜஷ் (20), சந்துரு (17) ஆகி யோரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்ததில் அவர்கள் மது அருந்தி கொண்டிருந்தபோது அங்கு அருண்குமார் வந்தார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நாங்கள் அருண்குமாரை அடித்து கொைல செய்ததை ஒப்புக்கொண்டனர். உடனே போலீசார் அவர்களை மத்தியசிறையில் அடைத்தனர். 

    ×