என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மீஞ்சூர் ஒன்றியக்குழு கூட்டம்"
- பழவேற்காடு மீனவர்களின் வேலை வாய்ப்புக்காக ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட பயிற்சி மையம் 10 வருடமாக கட்டி முடிக்கப்பட்டு மூடியே கிடக்கிறது.
- மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவுன்சிலர் சுமித்ரா குமார் தெரிவித்தார்.
பொன்னேரி:
மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. தலைவர் ரவி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.
கடந்த ஒரு வருடமாக நிதி ஒதுக்கீடு செய்யாததால் ஊராட்சியில் எந்த பணியும் செய்ய முடியவில்லை. ஓட்டு போட்ட மக்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை.
பழவேற்காடு மீனவர்களின் வேலை வாய்ப்புக்காக ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட பயிற்சி மையம் 10 வருடமாக கட்டி முடிக்கப்பட்டு மூடியே கிடக்கிறது. இதில் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவுன்சிலர் சுமித்ரா குமார் தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்து தலைவர் ரவி கூறும்போது, "நிதி வந்தவுடன் ஒதுக்கீடு செய்வதாகவும் பயிற்சி மையம் கட்டிடம் குறித்து மாவட்ட கலெக்டரிடம் தெரிவிப்பதாகவும்" தெரிவித்தார்.
கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, ராமகிருஷ்ணன், கவுன்சிலர்கள், கிருஷ்ணபிரியா வினோத், பானு பிரசாத், தமிம்சா, வெற்றி ராஜேஷ் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்