search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காளீஸ்வரி கல்லூரி"

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் சிறப்பு விரிவுரை நிகழ்ச்சி நடந்தது.
    • உதவிப்பேராசிரியை ஜேஸ்மின் பாஸ்டினா இதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் நிறும செயலரியல் துறை ''உன்னுள் இருக்கும் திறன்'' என்ற தலைப்பில் சிறப்பு விரிவுரை நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்வின் நோக்கமானது மாணவர்களிடையே திறனை மேம்படுத்து வதாகும்.

    விருதுநகர் வன்னிய பெருமாள் கல்லூரி முனைவர் காந்திமதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் பேசுகையில், மாணவர்கள் தன்னம்பிக்கை மற்றும் திறனை வளர்ப்பதின் முக்கியத்துவம் பற்றியும், தலைமைத்துவ திறனை வளர்க்கும் வழிமுறைகளையும் எடுத்துரைத்தார்.

    சிறந்த குழுவை அமைக்கும் முறை, குழு தலைவரின் தகுதிகள் மற்றும் கூட்டாக செயல்படும் முறையைப் பற்றியும் எடுத்துரைத்தார். துறைத் தலைவர் செந்தில் குமார் வரவேற்றார். உதவிப் பேராசிரியர் விண்ணரசி ரெக்ஸ் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.

    உதவிப்பேராசிரியை சூரியா நன்றி கூறினார். உதவிப்பேராசிரியை ஜேஸ்மின் பாஸ்டினா இதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் கணினி அறிவியல் துறை மாணவர்களுக்கான கருத்தரங்கு நடந்தது.
    • உதவிப்பேராசிரியர்- கணினி அறிவியல் துறையில் பணிபுரியும் பாலமுருகன் இதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி கணினி அறிவியல் துறை சார்பில் ''வாய்ப்புக்களுக்கான பாதைகள்'' என்ற தலைப்பில் மாணவர்களை நெறிப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் சிவகாசி யூனோபி டெக்னாலஜி நிறுவனத்தின் இயக்குநரும், முன்னாள் மாணவருமான விஜயபாண்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசுகையில் , கணினி அறிவியல் துறையில் உள்ள வேலைவாய்ப்பை எளிதில் எவ்வாறு தெரிந்து கொள்வது? என்பது குறித்த வழிமுறைகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். தகவல் தொழில்நுட்ப பிரிவில் வெவ்வேறான பதவிகள் குறித்து உரையாற்றினார். மாணவர்களிடம் எழுந்த கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.

    கணினி அறிவியல் துறை இளங்கலை 3-ம் ஆண்டு மாணவி சகாய மேரி வரவேற்றார். இளங்கலை 3-ம் ஆண்டு மாணவர் சூர்யா நன்றி கூறினார். இதில் இளங்கலை 2-ம் ஆண்டு மற்றும் 3-ம் ஆண்டு பயிலும் கணினி அறிவியல் துறை மாணவ- மாணவிகள் 160 பேர் கலந்து கொண்டனர்.

    கணினி அறிவியல் துறை பிரியா, பாராட்டுரை வழங்கினார். முதல்வர் பாலமுருகன் முதன்மை உரை ஆற்றினார். உதவிப்பேராசிரியர்- கணினி அறிவியல் துறையில் பணிபுரியும் பாலமுருகன் இதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் கருத்தரங்கு நடந்தது.
    • இதில் 270 கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி கல்லூரி ஜூனியர் ஜேசீஸ் விங் சார்பில் ''ஜும்பா உடற்பயிற்சி (கற்றுநர் மற்றும் தகுதி யாகுதல்)'' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.

    முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர்- கல்லூரி ஜூனியர் ஜேசீஸ் விங் பொறுப்பாளர் பாபு பிராங்கிளின் அறிமுக உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக மதுரை ஜும்பா உடற்பயிற்சி பயிற்சி யாளர் சுதா தயாளன் கலந்து கொண்டார்.

    அவர் பேசுகையில், ஜூம்பா உடற்பயிற்சி என்பதன் பொருள், மற்ற உடற்பயிற்சிகளை விட இதிலுள்ள உற்சா கமான விஷயம் உடலில் உள்ள கலோரிகளை எரித்தல், மனதிலும், உடலிலும் ஏற்படும் ஆரோக்கியமான மாற்றங்கள் பற்றி எடுத்து ரைத்தார். மாணவிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.

    வணிகவியல் துறை முதலாமாண்டு மாணவி ஹேமியஸ்ரீ தொகுத்து வழங்கினார். மாணவி ஜமுனாதேவி வரவேற்றார். மாணவி ஜெயராசாத்தி நன்றி கூறினார்.

    இதற்கான ஏற்பாடுகளை வணிகவியல் துறை உதவி பேராசிரியர், ஜூனியர் ஜேசிஸ் விங் பொறுப்பாளர் பாபு பிராங்கிளின் செய்திருந்தார். இதில் 270 கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
    • மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பவியல் துறையின் நேர்காணல் முறையை எடுத்துரைத்தார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி தகவல் தொழில்நுட்பவியல் துறையின் சார்பில் தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

    தகவல் தொழில் நுட்பவியல் துறை உதவிப்பே ராசிரியர் முத்துகுமார் வரவேற்றார். துணை முதல்வர் முத்துலட்சுமி தலைமை தாங்கினார்.

    முன்னாள் மாணவரும், சென்னை அகரம் இன்போடெக் நிறுவனத்தின் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தகவல் தொழில்நுட்பவியல் துறைத்தலைவர் பாலாஜி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.

    சிறப்பு விருந்தினர் ேபசுகையில், பணிபுரியும் நிறுவனம் பற்றியும், நிறுவனத்தின் செயல் முறைகள் பற்றியும், எடுத்துக் கூறினார். மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பவியல் துறையின் நேர்காணல் முறையை எடுத்துரைத்தார். நேர்காண எவ்வாறு எதிர்கொள்வது? தொடக்க நிறுவனங்களில் இருந்து எவ்வாறு பன்னாட்டு நிறுவனங்களுக்கு முன்னேறுவது? என்பது பற்றியும் விளக்கினார்.

    கணினிப் பயன் பாட்டியல் துறை உதவிப்பேராசிரியர் விசுவநாதன் நன்றி கூறினார். இதில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் கணினிப் பயன்பாட்டியல் துறைகளைச் சேர்ந்த 119 மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் விளையாட்டு விழா நடந்தது.
    • கிராண்ட் மாஸ்டர் விஷ்ணு பிரசன்னா விளையாட்டு விழாவை தொடங்கி வைத்தார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் 22-வது விளையாட்டு விழா நடந்தது. முதல்வர் பால முருகன் வரவேற்றார். தேசியக் கொடியை சிறப்பு விருந்தினர் கிராண்ட் மாஸ்டர் விஷ்ணு பிரசன்னாவும், ஒலிம்பிக் கொடியை மற்றொரு சிறப்பு விருந்தினர்-விருதுநகர் மாவட்ட விளையாட்டு அலுவலர் குமார மணிமாறனும், கல்லூரிக் கொடியை கல்லூரிச் செயலர் அ.பா.செல்வராசனும் ஏற்றினர்.

    தேசிய மாணவர் படை மாணவர்கள் மற்றும் பிற மாணவர்களின் அணி வகுப்பு நடந்தது. இளநிலை தகவல் தொழில்நுட்பவியல் துறை 3-ம் ஆண்டு மாணவர் அபிஷேக் விளையாட்டு விழாவுக்கான உறுதிமொழி வாசித்தார்.

    100மீட்டர், 400மீட்டர் ஓட்டம், மாணவர் நடனம். மாணவிகளின் சிலம்பம். பிரமிடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. உடற்கல்வித்துறை உதவி இயக்குநர் யோகசுவரன் ஆண்டறிக்கை வாசித்தார். துணை முதல்வர் முத்துலட்சுமி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.

    சென்னையை சேர்ந்த சர்வதேச 2-வது கிராண்ட் மாஸ்டர் குகேசின் பயிற்றுநர் கிராண்ட் மாஸ்டர் விஷ்ணு பிரசன்னா விளையாட்டு விழாவை தொடங்கி வைத்தார்.அவர் ேபசுகையில், ஒழுக்கம், காலம் தவறாமை ஆகிய 2-ம் வெற்றி பெறுவதற்கான வழிகள். மனதை எப்பொ ழுதும் அமைதியான சூழலில் வைத்திருக்க வேண்டும். எதற்கும் பதற்றப்படக் கூடாது.

    நம்முடைய எதிரிகள் மூலமே நமக்கு வெற்றி அடைய வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். ஆகவே அவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள் என்றார்.மற்றொரு சிறப்பு விருந்தினரான விருதுநகர் மாவட்ட விளையாட்டு அலுவலர் குமார மணிமாறன் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்தார்.

    போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆண்கள் பிரிவில் ராஜேந்திரன் மணி அணியும் பெண்கள் பிரிவில் ஸ்மிரிதி மந்தனா அணியும் ஒட்டு மொத்த புள்ளிகளை பெற்று முதல் இடத்தைப் பிடித்தன.

    உடற்கல்வித்துறை உதவி இயக்குநர் புனிதவதி நன்றி கூறினார்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் பெண்கள் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • சுற்றுலா மற்றும் உணவக மேலாண்மை துறை உதவிப்பேராசிரியை தர்ஷனா நன்றி கூறினார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி உள்தர உத்தரவாத அமைப்பு மற்றும் மாண வர்கள் ஆலோசனை அமைப்பு இணைந்து கல்லூரி பெண்களுக்காக "மனம் மற்றும் ஆரோக்கியம்'' குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.

    கணினிப் பயன்பாட்டியல் துறை உதவிப்பேராசிரியை மகாலட்சுமி வரவேற்றார். முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் மற்றும் மாணவர்கள் ஆலோசனை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.

    சிறப்பு விருந்தினராக, சிவகாசி சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர். கலுசிவலிங்கம், சிவகாசி சுகாதார பணிகள் துணை இயக்குநர் அலுவலக நேர்முக உதவியாளர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு "பொது சுகாதார பிரச்சினைகள்" என்ற தலைப்பில் பேசினர்.

    விருதுநகர் சுகாதார பணிகள் துணை இயக்கு நர்-தேசிய வளர் இளம் பருவத்தினருக்கான நலத்திட்ட ஒருங்கி ணைப்பா ளர் உதயசங்கரி பேசினார் ''வளரும் மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சனைகள்" என்ற தலைப்பில் பேசினர். தற்போதைய சூழ்நிலையில் பெண்கள் எதிர்கொள்ளும் முக்கிய ஊட்டச்சத்து குறைபாடு- பிரச்சினைகளை மாணவர்களுக்கு விளக்கினார்.

    மேலும் இந்த வயதில் ரத்த சோகை, அதிக எடை மற்றும் குறைந்த எடை போன்ற முக்கிய பிரச்சினைகளை விவரித்தார். இன்றைய சூழலில் மாணவர்கள் உட்கொள்ளும் உணவு முறை ஆரோக்கிய மற்ற உணவுமுறை என்றும் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு ஊட்டச்சத்துமிக்க உணவு திட்டங்கள் அவசியம் என்றும் எடுத்துரைத்தார்.

    திருத்தங்கல் அரசு மருத்துவமனை ஆலோசகர் சங்கர் "இளம் பருவ மனநலப் பிரச்சினைகள்" என்ற தலைப்பில் பேசினார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை தழுவி நல்வாழ்வுக்காக மாணவர்களை வழி நடந்தியது. மேலும் ஆரோக்கி யமான வளர்ச்சிக்கான ஊட்டச்சத்து மதிப்புகள் மற்றும் நினைவாற்றலை மதிப்பீடு செய்ய இது மாணவர்களை ஊக்கப்படுத்தியது.

    சுற்றுலா மற்றும் உணவக மேலாண்மை துறை உதவிப்பேராசிரியை தர்ஷனா நன்றி கூறினார்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் கணிதவியல் துறை கருத்தரங்கு நடந்தது.
    • இந்த கருத்தரங்கில் 114 கணிதத்துறை மாணவர்கள் மற்றும் 9 உதவிப்பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் ''காளீஸ் கணித மன்றம்'' சார்பில் ''தரவு பகுப்பாய்வின் தற்போதைய போக்கு'' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. இதில் சிவகாசி மெப்கோ ஷ்லெங்க் பொறியியல் கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை உதவிப்பேராசிரியர் வீணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    கணிதவியல் துறைத் தலைவர் லலிதாம்பிகை வரவேற்றார். முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.

    சிறப்பு விருந்தினர் பேசுகையில், தரவு பகுப்பாய்வு என்பது மூலத் தரவுகளைப் பகுப்பாய்வு செய்து நமக்குத் தேவையான முடிவுகள் மேற்கொள்ளப் பயன்படுத்தும் கருவிகள் ஆகும். தரவு பகுப்பாய் விற்குப் பயன்படக்கூடிய கருவிகள் மற்றும் நுட்பங்கள் பற்றி விளக்கினார். தரவு பகுப்பாய்விற்கு உறுதுணையாக இருக்கும் மென்பொருள்களின் வகைகளைச் சுட்டிக்காட்டி அவற்றின் நன்மைகள் மற்றும் வரம்புகள் பற்றி எடுத்துரைத்தார். தரவு பகுப்பாய்விற்கு நிகழ் நிலையில் கிடைக்கப்பெறும் மென்பொருள்கள் பற்றி செய்முறை விளக்கம் அளித்தார். "Tableau" என்ற மென்பொருளின் Excel பதிப்பு பற்றி விரிவான செய்முறை விளக்கம் அளித்தார்.

    இந்த கருத்தரங்கில் 114 கணிதத்துறை மாணவர்கள் மற்றும் 9 உதவிப்பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். உதவிப்பேராசிரியர் காளீஸ்வரி நன்றி கூறினார்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் வினாடி-வினா போட்டி நடக்கிறது.
    • முதல் சுற்று எழுத்துத் தேர்வாக நிகழ்ந்தது.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் வினாடி-வினா மன்றம் சார்பில் பல்வேறு துறைகளுக்கு இடையேயான வினாடி-வினா போட்டி நடந்தது.

    வணிகவியல் துறை தலைவர் எம்.குருசாமி போட்டியை தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில், இந்த வினாடி-வினா போட்டி மாணவர்களின் அறிவுத் திறனை வளர்ப்பது மட்டுமின்றி எதிர்காலத்தில் பலதரப்பட்ட போட்டித் தேர்வுகள் எழுதுவதற்கு மாணவர்களுக்கு உதவும் என்றார்.

    வினாடி-வினா மன்ற ஒருங்கிணைப்பாளர்- வணிகவியல் துறை உதவி பேராசிரியர் ஆர்.கீதா போட்டியை நடத்தினார். வினாடி-வினா போட்டி 2 சுற்றுகளாக நடந்தன. முதல் சுற்று எழுத்துத் தேர்வாக நிகழ்ந்தது.

    அதில் 23 குழுக்களாக மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெ ண்கள் அடிப்படை யில் 8 குழுக்கள் தேர்ந்தெடு க்கப்பட்டு இறுதிச் சுற்றில் பங்கேற்றனர். இறுதிச் சுற்றில் வரலாறு, பொது அறிவு, அரசியல் மற்றும் விளையாட்டு குறித்த கேள்விகள் கேட்கப்பட்டன.போட்டியின் முடிவில் முதல் பரிசை 3-ம் ஆண்டு வணிகவியல் துறை (நிறுமச் செயலர்) மாணவிகளான ஆர்.ஜனனி, எஸ்.சுவாதி ஆகியோர் வென்றனர். 2-ம் பரிசை 3-ம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவிகள் எம்.தேவதர்சினி, கே.எம்.ஹரிணி ஆகியோர் வென்றனர்.

    3-ம் பரிசை 2-ம் ஆண்டு வேதியியல் துறை மாணவர் ஆர்.விஷ்வா, முதலாமாண்டு வேதியியல் துறை மாணவர் எம்.மணிபாலன் ஆகியோர் பெற்றனர். இளங்கலை வேதியியல் துறை 3-ம் ஆண்டு மாணவர்

    கே.தினேஷ் குமார் வரவேற்றார். இளங்கலை வேதியியல் துறை 3-ம் ஆண்டு மாணவர் ஜி.பால சுந்தர் நன்றி கூறினார்.வினாடி-வினா, காளீஸ்வரி கல்லூரி, Quiz, Kalishwari College

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் இளைஞர் தின விழா நடந்தது.
    • தமிழியல் துறை உதவிப்பேராசிரியை ரூபாதேவி சிறப்புரையாற்றினார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் இளைஞர் சங்கம், கல்வி வட்டம் மற்றும் விவேகானந்த கேந்திரா ஆகியவை இணைந்து இளைஞர் தினத்தை கொண்டாடும் வகையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளை நடத்தியது. கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். தமிழியல் துறை உதவிப்பேராசிரியை ரூபாதேவி சிறப்புரையாற்றி னார்.

    சுவாமி விவேகானந்தரின் தத்துவங்கள் மற்றும் பொன்மொழிகள் என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும், தேசிய வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியும் நடைபெற்றது. இதில் 13 பள்ளிகளில் இருந்து 119 மாணவர்கள் கலந்து கொண்டனர். கட்டுரைப் போட்டியில், சிவகாசி மாணவி லட்சுமிபிரியா முதல் பரிசையும். விருதுநகர் மாணவி ஸ்ரீ கவுரி 2-ம் பரிசையும், தளவாய்புரம் மாணவர் சரண் சாரதி 3-ம் பரிசையும் பெற்றனர்.

    பேச்சுப் போட்டியில் செவல்பட்டி, அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவி விக்னேஷ்வரி முதல் பரிசையும், விருதுநகர் மாணவி நேகா 2-ம் பரிசையும், தளவாய்புரம் மாணவர் பூமணிகண்டன் 3-ம் பரிசையும் பெற்ற னர். கணிதவியல் துறை உதவி பேராசிரியை அனுபாலா நன்றி கூறினார்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் போட்டித் தேர்வுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
    • தமிழியல் துறை உதவிப்பேராசிரியர் கோமதி அழகு நன்றி கூறினார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் தமிழியல் துறை சங்கப் பலகை இலக்கிய மன்றமும், முன்னாள் மாணவர் சங்கமும் இணைந்து போட்டித் தேர்வுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியை நடத்தியது. இதில் கல்லூரியின் முன்னாள் மாணவரும், மகாராசபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியின் முதுகலைத் தமிழாசிரியருமான ஜான்சன் ரத்தினராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் பேசுகையில் மாணவர்கள் தங்கள் அனுபவத்தைப் பள்ளியில் படிக்கும் போதே பெறுகின்றனர். கல்லூரியில் படிக்கும் போது போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் அனுபவத்தையும் பெறுகின்றனர்.

    படிக்கும்போதே வாழ்க்கை முழுவதும் பயன்படும் கல்வி என்பதை உணர்ந்தே படிக்க வேண்டும். கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே போட்டித்தேர்வுக்கான வழிகாட்டுதல்களையும் மாணவர்கள் பின்பற்ற வேண்டும். மாணவர்கள் தங்கள் நேரத்தை முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப் ஆகியவற்றில் செலவழிக்காமல் போட்டித் தேர்வுகளுக்காக தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

    தமிழியல் துறை உதவிப்பேராசிரியர் சங்கர் வரவேற்றார். துறைத்தலைவர் அமுதா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். தமிழியல் துறை உதவிப்பேராசிரியர் கோமதி அழகு நன்றி கூறினார். இதில் தமிழியல் துறையைச் சேர்ந்த 78 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் இலக்கிய கூட்டம் நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை தமிழியல் துறை பேராசிரியர் ரூபாதேவி செய்திருந்தார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் தமிழியல் துறையும், கோவில்பட்டி கம்பன் கழகமும் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலக்கியக் கூட்டம் நடந்தது.

    முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். கம்பன் கழக உறுப்பினர் பொன்ராஜ் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.

    தன்னம்பிக்கை பேச்சாளர் கவிதா ஜவஹர் ''கம்பன் நம் தோழன்'' என்ற தலைப்பிலும் இளங்கலைத் தமிழ் 3-ம் ஆண்டு மாணவர் தங்கசாமி ''கம்பனில் அறம்'' என்ற தலைப்பிலும், கடம்பூர் இந்து நாடார்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சகுந்தலா ''கோசலையும் சுமித்திரையும்'' என்ற தலைப்பிலும் பேசினர்.

    தமிழியல் துறைத்தலைவர் அமுதா வரவேற்றார். தமிழியல் துறை முதுகலை 2-ம் ஆண்டு மாணவி மகேசுவரி நன்றி கூறினார். இதில் காளீஸ்வரி கல்லூரி மாணவர்கள் 800 பேர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழியல் துறை பேராசிரியர் ரூபாதேவி செய்திருந்தார்.

    • காளீஸ்வரி கல்லூரியில் ஆங்கிலத் துறை கருத்தரங்கம் நடந்தது.
    • 3-ம் ஆண்டு இளங்கலை மற்றும் முதுகலை முதல் மற்றும் 2-ம் ஆண்டு மாணவர்கள் 64 பேர் இதில் கலந்து கொண்டனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி ஆங்கிலத்துறையின் நியூ ஐடோலா இலக்கியமன்றத்தின் சார்பில் சிறப்புக் கருத்தரங்கம் ''தற்கால இலக்கிய கோட்பாடுகள்'' என்ற தலைப்பில் நடந்தது.

    துறைத்தலைவர் பெமினா வரவேற்றார். முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் முனைவர் ஜான் சேகரை, உதவிப்பேராசிரியர் சாந்தி அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினர் இலக்கிய விமர்சனம் மற்றும் ஆய்வு செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தன்னுடைய ஆய்வு கட்டுரையை ஹாங்காங், மலேசியா, சிங்கப்பூர், துபாய், இலங்கையில் சமர்பித்துள்ளார்.

    சிறப்பு விருந்தினர் பேசுகையில், இலக்கிய விமர்சனம் மற்றும் இலக்கிய கோட்பாடு என்றால் என்ன? என்பதை தகுந்த இலக்கிய ஆய்வுகள் மூலமாக எடுத்துக்கூறினார்.

    இந்த கருத்தரங்கம் மாணவர்களுக்கு பயனுள்ளதாகவும், அறிவு சார்ந்ததாகவும் அமைந்தது. உதவிப் பேராசிரியர் சாந்தா கிறிஸ்டினா நன்றி கூறினார். 3-ம் ஆண்டு இளங்கலை மற்றும் முதுகலை முதல் மற்றும் 2-ம் ஆண்டு மாணவர்கள் 64 பேர் இதில் கலந்து கொண்டனர்.

    ×