என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அமலாக்கத்துறை சோதனை"
- தேனாம்பேட்டையில் அரசியல் கட்சி பிரமுகர், தொழில் அதிபர் ஒருவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
- ராஜா அண்ணாமலைபுரம் முதல் தெருவில் அரசு ஒப்பந்த அதிகாரி செல்வராஜ் வசித்து வருகிறார்.
சென்னை:
சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று 10 இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். அரசு ஒப்பந்ததாரர், பார் உரிமையாளர், கட்டுமான நிறுவன அதிபர் வீடு என சென்னை மாநகரின் பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை வேப்பேரியில் போலீஸ் நிலையம் அருகே உள்ள பிரமாண்ட அடுக்குமாடி குடியிருப்பில் தொழில் அதிபர் மகாவீர் இரானி வசித்து வருகிறார். கட்டுமான தொழில் மற்றும் நிதி நிறுவன தொழிலில் ஈடுபட்டு வரும் அவரது வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
ராஜா அண்ணாமலைபுரம் முதல் தெருவில் அரசு ஒப்பந்த அதிகாரி செல்வராஜ் வசித்து வருகிறார். இவர் பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேசன் கடைகளுக்கு வழங்கப்படும் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஒப்பந்த அடிப்படையில் சப்ளை செய்து வருகிறார். அவரது வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.
தேனாம்பேட்டையில் அரசியல் கட்சி பிரமுகர், தொழில் அதிபர் ஒருவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து 10-க்கும் மேற்பட்ட கார்களில் புறப்பட்டுச் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். பணப்பரிமாற்ற புகாரின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- கோட்டூர்புரம், அண்ணாநகர், தி.நகர் உள்ளிட்ட இடங்களில் சோதனை.
- கட்டுமானம் மற்றும் கெமிக்கல் நிறுவன அதிபர்களின் வீடுகளிலும் அதிரடி சோதனை.
சென்னையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கட்டுமானம் மற்றும் கெமிக்கல் நிறுவன அதிபர்களின் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை கோட்டூர்புரத்தில் விஷ்ணு என்பவரின் வீட்டிலும், அண்ணா நகரில் சுப்பிரமணியம் என்பவரின் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
இதேபோல், தி.நகரில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்திலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
- நேபாளம், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் அரபு நாடுகளுடன் வர்த்தகம் செய்து வரும் நிறுவனம், டைட்டில் கம்யூனிகேஷன் என்ற விளம்பர நிறுவனத்தையும் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
- நிறுவனம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக அமலாக்கத்துறைக்கு தகவல் கிடைத்தது.
சென்னை:
மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இன்டர்நேஷனல் டிரேட் லிமிட் என்கிற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
அதன் கிளை நிறுவனங்கள் சென்னை, திருச்சி, டெல்லி, விசாகப்பட்டினம் உள்பட பல நகரங்களில் செயல்பட்டு வருகின்றன.
மேலும் நேபாளம், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் அரபு நாடுகளுடன் வர்த்தகம் செய்து வரும் இந்த நிறுவனம், டைட்டில் கம்யூனிகேஷன் என்ற விளம்பர நிறுவனத்தையும் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிறுவனம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக அமலாக்கத்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இன்று காலை முதல் இந்த நிறுவனத்திற்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
8 வாகனங்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், சென்னை எழும்பூரில் உள்ள ஐ.டி.எல். நிறுவனத்தின் கிளை அலுவலகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள்.
இந்த சோதனை முடிந்த பின்னரே, மற்ற விவரங்கள் தெரிய வரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
- செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் உள்ளார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ராஜினாமா கடிதம் கொடுக்கப்பட்டது.
சென்னை:
கடந்த 2014-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அப்போது, போக்குவரத்துக்கழகத்தில் டிரைவர், கண்டக்டர் பணி வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதோடு, அவர்கள் கொடுத்த பணத்தை திரும்ப தராமல் மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில்பாலாஜி மீது குற்றம்சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் மற்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் செந்தில்பாலாஜி மீது 3 குற்ற வழக்குகளை பதிவு செய்தனர். அந்த வழக்குகள் அனைத்தும் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் இதே விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் செந்தில்பாலாஜி மீது அமலாக்கத்துறை 2021-ம் ஆண்டு தனியாக ஒரு வழக்கை பதிவு செய்தது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந் தேதி செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்த கைது நடவடிக்கையின்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்ட அவருக்கு அங்கு 'பைபாஸ்' அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையில், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டார். அமைச்சரை நீக்கும் அதிகாரம் கவர்னருக்கு கிடையாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். மேலும் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என்றும் அவர் அறிவித்தார். அதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி வகித்து வந்த அரசு துறைகள், வெவ்வேறு அமைச்சருக்கு மாற்றி வழங்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்த உத்தரவை கவர்னர் நிறுத்திவைத்தார்.
தற்போது, செந்தில் பாலாஜி புழல் சிறையில் உள்ளார். மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கமான ஜாமீன் மனுவை தாக்கல் செய்யுமாறு செந்தில் பாலாஜிக்கு கோர்ட்டு தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து, ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரனையின்போது ஐகோர்ட்டு, செந்தில் பாலாஜி சிறையில் இருக்கும் நிலையில், அவரால் மக்களுக்கு என்ன பிரயோஜனம் என்று கேள்வி எழுப்பியது.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ராஜினாமா கடிதம் கொடுக்கப்பட்டது. அதில், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக செந்தில் பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடிதம், நேற்று முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து கவர்னர் மாளிகைக்கு அனுப்பப்பட்ட நிலையில், செந்தில்பாலாஜியின் ராஜினாமாவை கவர்னர் ஆர்.என்.ரவி. ஏற்றுக்கொண்டார்.
முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று செந்தில் பாலாஜியின் ராஜினாமாவை ஏற்பதாக கவர்னர் மாளிகை அறிவித்துள்ளது.
- வழக்கமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு வரும்போது துணை ராணுவப் படையினரை பாதுகாப்பிற்காக அழைத்து வருவது வழக்கம்.
- செந்தில் பாலாஜி தாய், தந்தையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:
சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டம் மண்மங்களத்தை அடுத்த ராமேஸ்வரப்பட்டியில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீடு உள்ளது. இந்த வீட்டில் அவரது தாய், தந்தையர் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் அங்கு கேரளா பதிவு எண் கொண்ட காரில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேர் வந்தனர்.
அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீட்டுக்குள் சென்ற அவர்கள் சோதனையில் ஈடுபட்டனர். ஏற்கனவே இந்த வீட்டில் பல முறை வருமான வரித்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைகள் நடைபெற்ற நிலையில் மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு வரும்போது துணை ராணுவப் படையினரை பாதுகாப்பிற்காக அழைத்து வருவது வழக்கம். அல்லது உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிப்பது வழக்கம்.
ஆனால், பாதுகாப்பிற்காக துணை ராணுவப்படை வீரர்கள் இல்லாமல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அங்கு வசிக்கும் அவரது தாய், தந்தையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை முடியும் வரை, சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு தொ டர்பான அமலாக்கத்துறையின் விசாரணையை தள்ளிவைக்கக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் தீர்ப்பை வரும் 15-ந்தேதிக்கு நீதிபதி அல்லி ஒத்திவைத்தார். இந்த சூழலில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இந்த மனு மீது 15-ந் தேதி தீர்ப்பு கூறப்படும் என நீதிபதி அறிவித்தார்.
- செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் புழல் சிறையில் இருந்து அவர் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
சென்னை:
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கு சென்னை செசன்ஸ் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இந்தநிலையில், போக்குவரத்து கழகங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கின் விசாரணை முடிவடையும் வரை, அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கின் விசாரணையை தொடங்கக்கூடாது என்றும், இந்த விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்றும் வக்கீல் பரணிகுமார் மூலம் செந்தில் பாலாஜி அதே கோர்ட்டில் புதிய மனுவை தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி அல்லி முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் எஸ்.பிரபாகரன், 'மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கில் செந்தில் பாலாஜி விடுவிக்கப்படும் பட்சத்தில் அமலாக்கத்துறை வழக்கு செல்லாததாகிவிடும்' என வாதாடினார்.
அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வக்கீல் என்.ரமேஷ், 'வழக்கின் விசாரணையை முடக்கி, குற்றச்சாட்டு பதிவையும், சாட்சி விசாரணையையும் தாமதப்படுத்தும் நோக்கில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல' என வாதாடினார்.
இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இந்த மனு மீது 15-ந் தேதி தீர்ப்பு கூறப்படும் என நீதிபதி அறிவித்தார்.
செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் புழல் சிறையில் இருந்து அவர் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரது நீதிமன்ற காவலை 15-ந் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
- அமலாக்கத்துறை அதிகாரிகள் உத்தரகாண்ட், டெல்லி, சண்டிகர் மாநிலங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
- 2022-ம் ஆண்டு உத்தரகாண்ட் சட்டமன்ற தேர்தலின்போது பா.ஜனதா கட்சியில் இருந்து ராவத் விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
பண மோசடி வழக்கில் உத்தரகாண்ட் மாநிலத்தின் முன்னாள் மந்திரியும், காங்கிரஸ் கட்சி தலைவருமான ஹரக் சிங் ராவத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் உத்தரகாண்ட், டெல்லி, சண்டிகர் மாநிலங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
2022-ம் ஆண்டு உத்தரகாண்ட் சட்டமன்ற தேர்தலின்போது பா.ஜனதா கட்சியில் இருந்து ராவத் விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
உத்தரகாண்ட் மாநிலத்தின் கார்பெட் புலிகள் சரணாலயத்தின் நடந்ததாக கூறப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாக இந்த விசாரணை நடத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியுடன் தொடர்புடையவர்கள் இடங்களில் சோதனை நடத்தியது. மேற்கு வங்காளத்திலும் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
- பீட்டர் தொடர்புடைய சில இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
- இன்று 2-வது நாளாக அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடந்து வருகிறது
சென்னை:
பிரபல கட்டுமான நிறுவனத்தின் அதிபராக உள்ளவர் பீட்டர். இவர் சென்னை கோட்டூர்புரத்தில் வசித்து வருகிறார்.
முறைகேடாக பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதன் அடிப்படையில் பீட்டர் வீட்டில் நேற்று காலையில் இருந்து அமலாக்கத்துறை சோதனை நடந்தது. பீட்டர் தொடர்புடைய சில இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து எதுவும் அமலாக்கத்துறை தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் இன்று 2-வது நாளாக அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடந்து வருகிறது. சோதனையில் 10-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.
தொழில் அதிபர் பீட்டர் தொடர்பான இடங்களில் சோதனை நடத்தியதில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதனை பற்றிய விவரங்களை அமலாக்கத்துறை வெளியிடவில்லை.
இந்த சோதனையின்போது மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு பாதுகாப்பாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- யமுனா நகர், சோனிபட், மொகலி பரிதாபாத், சண்டிகார் உள்ளிட்ட நகரங்களில் சோதனை.
- சட்டவிரோத சுரங்க வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தகவல்.
அரியானா மாநிலத்தில் சட்டவிரோத சுரங்க வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று காலை காங்கிரஸ் தலைவர் சுரேந்தர் பன்வார் மற்றும் முன்னாள் ஐ.என்.எல்.டி. சட்டமன்ற உறுப்பினர் தில்பாக் சிங் உள்ளிட்டோருக்கு தொடர்பான சுமார் 20 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
In Haryana illegal mining case, the Enforcement Directorate is carrying out searches at premises linked to Congress leader Surender Panwar and former INLD legislator Dilbag Singh. Raids are underway at 20 locations in Yamuna Nagar, Sonipat, Mohali Faridabad, Chandigarh and Karnal… pic.twitter.com/N6ukp1yZT2
— ANI (@ANI) January 4, 2024
இந்த சோதனை யமுனா நகர், சோனிபட், மொகலி பரிதாபாத், சண்டிகார் மற்றும் கர்னால் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது.
அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று ஜார்க்கண்ட் மாநிலத்தில் மிகப்பெரிய அளவிலான சோதனையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக செந்தில் பாலாஜி தரப்பு வக்கீல் தெரிவித்தார்.
- அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வக்கீல் பதிலளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
சென்னை:
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆகஸ்ட் 12-ந்தேதி சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் சுமார் 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கையை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமின் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே 2 முறை தாக்கல் செய்த மனுக்களையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதை தொடர்ந்து ஜாமின் கேட்டு செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டும் தள்ளுபடி செய்தது. இதனால், உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு ஏற்க மறுத்து விட்டது. அதேநேரம், செந்தில் பாலாஜி கீழ் கோர்ட்டை நாடலாம். அந்த மனு மீது தகுதியின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், செந்தில் பாலாஜி ஜாமின் கோரி 3-வது முறையாக சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்த போது, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக செந்தில் பாலாஜி தரப்பு வக்கீல் தெரிவித்தார்.
அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வக்கீல் பதிலளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனையடுத்து, அமலாக்கத்துறை பதிலளிக்க அவகாசம் அளித்த நீதிபதி விசாரணையை 8-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.
- புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்பு செந்தில் பாலாஜி ஆஜரானார்.
- செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடையும் நிலையில் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை வழக்கில் அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதையடுத்து உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடையும் நிலையில் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்பு செந்தில் பாலாஜி ஆஜரானார்.
இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜனவரி 4-ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு வருமான வரித்துறை அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை நடத்தினார்கள்.
- சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
சென்னை:
சென்னையில் 5 இடங்களில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். சென்னை புரசைவாக்கத்தில் மட்டும் 3 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.
சென்னை புரசைவாக்கம் பிரிக்ளின் சாலையில் டி.வி.எச். லும்பானி ஸ்கொயர் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு 9 பிளாக்குகள் உள்ளன. இதில் 4-வது பிளாக்கில் உள்ள அமித் என்பவரின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடந்தது. இன்று காலையில் அமித் வீட்டுக்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் கதவை பூட்டிக்கொண்டு வீட்டுக்குள் சோதனை நடத்தினார்கள்.
அமித், அரசு ஒப்பந்தங்களுக்கு மின்சார சாதனங்களை வினியோகித்து வந்தார். இவர் சட்டவிரோத பண பரிவர்த்தனை மூலம் வெளிநாட்டில் முதலீடு செய்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
இவர் பொதுப்பணித் துறைக்கு மின்சார பொருட்களை மொத்தமாக சப்ளை செய்ததில் முறைகேட்டில் ஈடுபட்டு வரி ஏய்ப்பு செய்ததாக ஏற்கெனவே கிடைத்த தகவலில் அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வருமான வரித்துறை அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை நடத்தினார்கள்.
இந்த நிலையில் தற்போது சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
அமித் வீடு இருக்கும் பக்கத்து தெருவில் உள்ள ஜெயின் வில்லா அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் மகேந்திரா பி.ஜெயின் என்பவரது வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். மகேந்திரா பி.ஜெயினின் தம்பி ரமேஷ்குமார் டி.வி.எச். லும்பானி ஸ்கொயர் அடுக்குமாடி குடியிருப்பில் 3-வது பிளாக், 3-வது மாடியில் வசித்து வருகிறார். அவரது வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டனர்.
அண்ணன்- தம்பி இருவரும் சலீம் ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். இங்கும் சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் சென்னையில் மேலும் 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். மொத்தம் 5 இடங்களில் சோதனை நடந்தது.
இதேபோல் சென்னையில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகளும் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ரசாயன நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் சென்று சோதனை நடத்தினாகள். இந்த நிறுவனம் டெல்லியை தலைமையிடமாக கொண்ட நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டு வரி ஏய்ப்பு செய்ததாக வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து டெல்லியில் உள்ள அந்த நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஏற்கெனவே சோதனை நடத்தினார்கள். அதன் தொடர்ச்சியாக டெல்லியில் இருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அந்த நிறுவனத்தில் சோதனை நடத்தினார்கள். இந்த நிறுவனத்தின் கிளை அண்ணாநகரில் உள்ளது. அங்கும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்