search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுப்பையார் குளம்"

    • ரூ.47 லட்சம் செலவில் சீரமைப்பு
    • சுப்பையார் குளத்தை சீரமைத்ததற்காக மேயர் மகேசிற்கு பாராட்டு விழா நடத்தினர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சி 14-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ண ன்கோவில் சுப்பையார்குளம் உள்ளது. இந்த குளம் ஆகாயத்தாமரைகள் படர்ந்து சேறும் சகதியுமாக பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு மோசமான நிலையில் காணப்பட்டது.

    குளத்தை தூர்வாரி சீரமைக்க 14-வது வார்டு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் நாகர்கோ வில் மாநகராட்சி மேயர் மகேஷ் ரூ.47 லட்சம் செலவில் குளத்தை தூர்வாரி சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்தார்.

    அதன்படி கடந்த சில நாட்களாக இந்த பணிகள் நடந்தது. குளத்தில் கிடந்த கழிவு மண் அகற்றிவிட்டு சுற்றுச்சுவர்கள் கட்டப்ப ட்டுள்ளது. இந்த நிலையில் 14-வது வார்டு பொதுமக்கள் சுப்பையார் குளத்தை சீரமைத்ததற்காக மேயர் மகேசிற்கு பாராட்டு விழா நடத்தினர்.

    இந்த நிகழ்ச்சிக்கு 14-வது வார்டு கவுன்சிலர் கலா ராணி தலைமை தாங்கினார். மேயர் மகேஷ் பொதுமக்கள் மத்தியில் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநகர மத்தியில் இப்படி ஒரு குளம் கிடைப்பது அரிது. இந்த குளத்தை பொது மக்கள் நீங்கள் சுத்தமாக வைத்துக்கொள்ள வே ண்டும். இதற்கு குளத்தை சுற்றி நடைபாதை மற்றும் பூங்கா அமைக்கப்பட உள்ளது. அதனையும் பாது காப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். குப்பைகளை குளத்திற்குள் கொட்ட க்கூடாது.

    வேறு பகுதியில் இருந்து வந்து கொட்டினாலும் அதை கண்காணித்து தடுக்க வேண்டும். குளத்தை சுற்றி தடுப்பு சுவர் மேல் கம்பிவேலி அமைக்கப்பட உள்ளது. மாநகராட்சி பணியாளர்கள் வரும்போது குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வேண்டும்.

    இந்த குளத்தை பாதுகாக்கும் வகையில் ஒரு பாதுகாப்புக்குழு அமைத்து குளத்தை கண்காணிக்க வேண்டும். குளத்தை சேதப்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நீங்கள் இந்த குளத்தை நல்ல படியாக பராமரித்தால் படகு விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    இந்த குளத்தை பாதுகாக்கும்போது சுற்றுப்புறங்களில் நிலத்தடி நீரும் பெருகும். இந்த பகுதியில் உள்ள இடங்களுக்கும் மதிப்பு கூடும்.

    இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் தி.மு.க. மாநகர துணை செயலாளர் வேல்முருகன், சிறுபான்மை நல உரிமை பாதுகாப்பு துணை அமைப்பாளர் ஜெகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • வட சேரி பகுதியில் ரூ.2 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டார்.
    • இறைச்சிகள் ஆங்காங்கே வெட்டப்படுவதாக புகார்கள் வந்துள்ளது

    நாகர்கோவில் :

    வடசேரி கிருஷ்ணன் கோவில் பகுதியில் உள்ள சுப்பையார்குளம் நகர்ப்புற திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட்டு வருகிறது. இந்த பணியை மேயர் மகேஷ் இன்று காலை நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    இதைத்தொடர்ந்து வட சேரி பகுதியில் ரூ.2 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டார். அந்த பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து மேயர் மகேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நாகர்கோவில் நகரின் மையப்பகுதியில் சுப்பையார்குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் அந்த பகுதியில் உள்ள கழிவு நீர்கள் பாய்ந்து மோசமான நிலையில் காணப்பட்டது. இதையடுத்து சுப்பையார் குளத்தை சீரமைக்க நட வடிக்கையை மேற்கொள்ளப்பட்டது.

    நகர்ப்புற திட்டத்தின் கீழ் தற்பொழுது சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. குளத்தில் உள்ள மணல்கள் எடுத்து அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.

    50 சதவீத பணிகள் தற்பொழுது நிறை வடைந்துள்ளது. இன்னும் ஒரு வார காலத்திற்குள் தூர்வாரும் பணி நிறை பெறும். இதைத்தொடர்ந்து குளத்தின் கரைகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். பின்னர் இந்த குளத்தில் சுத்தமான தண்ணீர் விடுவதற்கு நட வடிக்கை மேற்கொள்ளப்படும். நாகர்கோவில் நகர பகுதியில் இறைச்சிகள் ஆங்காங்கே வெட்டப்படுவதாக புகார்கள் வந்துள்ளது. இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    பொது இடங்களில் இறைச்சிகளை வெட்டக் கூடாது. இறைச்சிகளை வெட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே இறைச்சிகளை வெட்ட வேண்டும். இறைச்சிகளை வெட்டுவதற்கு பல்வேறு வழிமுறைகள் உள்ளது.

    கால்நடைத்துறை அனுமதி அளித்த பிறகு அந்த இறைச்சிகளை வெட்ட முடியும். இதனை பின்பற்ற வேண்டும். பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை மேற் கொள்ளப்படும். வடசேரி ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. அந்த பணி விரைந்து முடிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது மண்டல தலைவர் ஜவகர், மாநகர செயலாளர் ஆனந்த், கவுன்சிலர் கலா ராணி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். தொடர்ந்து செட்டிகுளம் பகுதியில் மேயர் மகேஷ் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். சாலை ஓரங்களில் ஏற்கனவே இருசக்கர வாகனங்கள் நிறுத்தக் கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று அந்த பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளதா என்பது குறித்து அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    • வடசேரி சுப்பையார் குளத்தில் நேற்று தூர் வாரும் பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.
    • சுமார் 30-க்கு மேற்பட்ட வீடுகளில் கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினார்கள்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வடசேரி சுப்பையார் குளத்தில் நேற்று தூர் வாரும் பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    அப்போது நடந்த நிகழ்ச்சி யில் ஆணையாளர் ஆனந்த மோகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது சுப்பையார் குளம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற ஆணையர் ஆனந்த மோகன் உத்தர விட்டார். இன்று காலை சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் தலைமையிலான குழுவினர் சுப்பையார்குளம் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    ஜே.சி.பி. எந்திரங்கள் மூலமாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. அந்த பகுதியில் உள்ள வீடுகள் முன்பு கட்டப்பட்டிருந்த கூரைகள், தகர சீட்டுகள் ஜே.சி.பி. எந்திரம் மூலமாக அகற்றப்பட்டது. சுமார் 30-க்கு மேற்பட்ட வீடுகளில் கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. வடசேரி போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×