என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொல்லியல் துறை"

    • மத்திய கலாச்சார துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்துள்ளார்.
    • தமிழ்நாட்டின் மாமல்லபுரம் நினைவுச்சின்னக் குழுவும், கோனார்க் சூரியக் கோயிலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தன.

    மத்திய அரசின் தொல்லியல்துறை (ASI) கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களில் டிக்கெட் விற்பனை மூலம் கிடைத்த வருவாய் எவ்வளவு? என்று நேற்று மாநிலங்களவையில் உறுப்பினர் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய கலாச்சார துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்துள்ளார்.

    அதன்படி டிக்கெட் மூலம் அதிக வருவாய் ஈட்டியுள்ள சுற்றுலா தலங்களில் கடந்த 5 ஆண்டுகளாக ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் முதலிடத்தில் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் டிக்கெட் விற்பனை மூலம் தாஜ்மஹால் ரூ.297 கோடி வருவாய் எட்டியுள்ளது.

    2019-20 நிதியாண்டில், ஆக்ராவில் உள்ள ஆக்ரா கோட்டை மற்றும் டெல்லியில் உள்ள குதுப் மினார் ஆகியவை இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் இருந்தன.

    2020-21 நிதியாண்டில், தமிழ்நாட்டின் மாமல்லபுரம் நினைவுச்சின்னங்களும், கோனார்க் சூரியக் கோயிலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தன.

    2023-24 நிதியாண்டில், டெல்லியின் குதுப் மினார் மற்றும் செங்கோட்டை இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தன. 

    • சோழர் கால பாசி அம்மன் கோவில் புனரமைப்பு தொல்லியல் துறை நிபுணர்கள் அறிக்கையின்படி முடிவு எடுக்கப்படும்.
    • மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

    மதுரை

    தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில வழக்கறிஞர் அணி செய லாளர் கலந்தார் ஆசிக் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாசிபட்டினம் கி.பி. 875 முதல் கி.பி. 1090 வரையில் துறைமுகமாக இருந்துள்ளது. இங்குள்ள கடற்கரை அருகில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட பாசி அம்மன் கோவில் மற்றும் மண்டபம் இருந்துள்ளது.

    இங்கு சோழர்களின் வெற்றியின் அடையாளமாக 8 கைகளுடன் அமர்ந்த நிலையில் பாசி அம்மன் சிலை இருந்துள்ளது. இந்தநிலையில் இந்த கோவில் தற்போது எந்தவித பராமரிப்புமின்றி சிதில மடைந்து காணப்படுகிறது. எனவே பல நூற்றாண்டுகள் பழமையான இந்த கோவிலை பாதுகாத்து மக்கள் வழிபாடு செய்வதற்கு புனரமைக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் அவர் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விக்டோ ரியா கவுரி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோவிலின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வரு கிறது.

    இந்த கோவில் கட்டுமானங்கள் கருங்கற்களால் அமைந்துள்ளது. கோவில் உள் மண்டபம் பழுதடைந்த நிலையில் உள்ளது. எனவே இந்த கோவிலை புனரமைப்பு செய்வதற்கு தொல்லியல் வல்லுநர்களிடம் ஆலோ சனை பெற வேண்டியுள்ளது. எனவே அதற்கு உரிய கால அவகாசம் வேண்டும் என தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தனர்.

    • 2800 ஆண்டுகள் பழமையான உலகில் மிக உயரமான சுமார் 32 அடி உயரம் கொண்ட நடுக்கல்லை ஆய்வு செய்தனர்.
    • பொதுமக்கள் மற்றும் விவசாய அமைப்புகள் சார்பாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

    பெருமாநல்லூர்:

    விருதுநகர் முதல் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அடுத்த குன்னத்தூர் அருகே உள்ள காவுத்தம்பாளையம் வரை அமைய உள்ள 765/ 400 கிலோ வாட் உயர் மின் கோபுர துணை மின் நிலைய திட்டத்தினால் ஏற்படும் ஆபத்திலிருந்து பொதுமக்களையும், விவசாயிகளையும் காப்பாற்ற கோரியும், இத்திட்டத்தை முழுவதுமாக ரத்து செய்யக் கோரியும் காவுத்தம்பாளையம் பகுதியில் பொதுமக்கள் மற்றும் விவசாய அமைப்புகள் சார்பாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

    மேலும் அப்பகுதியில் உள்ள குமரிக்கல் பகுதியை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று திருப்பூர் மற்றும் ஈரோடு தொல்லியல் துறை ஆய்வு அதிகாரி காவியா காவுத்தம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட குமரிக்கல்பாளையத்தில் அமைந்துள்ள 2800 ஆண்டுகள் பழமையான உலகில் மிக உயரமான சுமார் 32 அடி உயரம் கொண்ட நடுக்கல் என்ற குமரி கல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நிலத்தில் கிடந்த பானை ஓடுகள் ,முதுமக்கள் தாழி ,இரும்பு கசடுகள், தர்மசக்கரக்கல் என்னும் போர் நினைவுகள், ப்ரியல் சைட் எனப்படும் வட்டக் கல், கூடலூர் பத்ரகாளியம்மன் கோவிலில் உள்ள கல்வெட்டுகள் ,மீன் சின்னம் ,சுவாமி சிலைகளை ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது அவருடன் ஊத்துக்குளி தாசில்தார் தங்கவேல்,வருவாய் ஆய்வாளர் ரியானா மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இருந்தனர்.மேலும் 9-ந் தேதி சாம்ராஜ் பாளையம் பிரிவு பகுதியில் கோரிக்கை மாநாடு நடத்த உள்ளனர்.

    • ஒரு சில தங்க நாணயங்களின் விளிம்பில் டெல்லி நாணயத்தின் சித்தரிப்பு உள்ளது.
    • ஆந்திர மாநில தொல்லியல் துறை தங்க நாணயங்களை இன்னும் கைப்பற்றவில்லை.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம், சித்தேபள்ளி கிராமத்தில் அங்காளம்மா கோவில் உள்ளது.

    இந்த கோவில் அருகே உள்ள மலையில் பாறாங்கல் ஒன்றின் அடியில் நேற்று தங்க புதையல் கண்டெடுக்கப்பட்டது. இதில் 450-க்கும் மேற்பட்ட தங்கக் காசுகள் இருந்தன.

    இதுகுறித்து இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) இயக்குனர் கே முனிரத்தினம் ரெட்டி கூறுகையில்:-

    புதையலில் இருந்த தங்க காசுகள் 15 மற்றும் 17-ம் நூற்றாண்டுகளில் இருந்த தங்க நாணயங்கள், விஜயநகர மன்னர் I மற்றும் II ஹரிஹரர் மற்றும் டெல்லி சுல்தான்களுக்கு சொந்தமானது.

    ஒரு சில தங்க நாணயங்களின் விளிம்பில் டெல்லி நாணயத்தின் சித்தரிப்பு உள்ளது. இப்பகுதியில் உள்ள பழமையான கோவிலுக்கு அருகிலேயே இந்த நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டது.

    இடைக்காலங்களில், முறையான வங்கி முறை இல்லாததால், மக்கள் தங்கள் பணத்தை கோவில்களில் டெபாசிட் செய்தனர்.

    ஆந்திர மாநில தொல்லியல் துறை தங்க நாணயங்களை இன்னும் கைப்பற்றவில்லை.

    இந்த நாணயங்களை அருங்காட்சியகங்களில் வைத்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    • உடுமலை, மடத்துக்குளம் தாலுகா வழியாக செல்லும் அமராவதி ஆற்றின் கரையில், பல்வேறு பழமையான தொல்லியல் சின்னங்கள், நாணயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
    • தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என்ற வரலாற்று ஆய்வாளர்களின் கோரிக்கை கண்டுகொள்ளப்படாமல் உள்ளது.

    உடுமலை:

    கோவை, ஈரோடு மாவட்டங்களில் இருந்து 6 தாலுகாவை பிரித்து திருப்பூர் மாவட்டம் 2009ல், உருவாக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பழமையான கோவில்கள், வரலாற்றுச்சின்னங்கள் அதிக அளவு உள்ளன. குறிப்பாக உடுமலை, மடத்துக்குளம் தாலுகா வழியாக செல்லும் அமராவதி ஆற்றின் கரையில், பல்வேறு பழமையான தொல்லியல் சின்னங்கள், நாணயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

    சங்க காலத்திலிருந்தே சிறப்பு பெற்றிருந்த கோவில்கள், நொய்யல் மற்றும் அமராவதி ஆற்றங்கரையில் தற்போது வரை வரலாற்றுச்சின்னங்களாக உள்ளன. இக்கோவில்களில் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டு ஆவணப்படுத்த ப்பட்டுள்ளன.

    இதே போல் உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலும், வரலாற்று ஆய்வாளர்களால் பெருங்கற்காலத்தைச்சேர்ந்த கல்திட்டைகள் மற்றும் அக்கால மனிதர்கள் பயன்படுத்திய ஆபரணங்கள், பொருட்கள், மேற்பரப்பு ஆய்வில் கிடைத்துள்ளது. கடத்தூர், கொழுமம், கண்ணாடிப்புத்தூர், சோமவாரப்பட்டி, கொங்கல்நகரம், குடிமங்கலம், கோட்ட மங்கலம் உட்பட பல இடங்களில் நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுகளும், கல்திட்டை உட்பட பெருங்கற்காலத்தை சேர்ந்த வரலாற்று சின்னங்களும் உள்ளன.

    சமீபத்தில் மடத்துக்குளம் ஒன்றியம், மெட்ராத்தி கிராமத்தில் குளத்தின் கரையில் இருந்த பாறை கல்வெட்டு, போதிய விழிப்புணர்வு இல்லாமல் சிதைக்கப்பட்டு, முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டது.இதே போல் கல்வெட்டுகளை அழித்தல், நடுகற்கள் மற்றும் சிற்பங்களை சேதப்படுத்துதல் தொடர் கதையாக உள்ளது.

    பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என்ற வரலாற்று ஆய்வாளர்களின் கோரிக்கை கண்டுகொள்ளப்படாமல் உள்ளது.தற்போது திருப்பூர் மாவட்டத்துக்குட்பட்ட தொல்லியல் சார்ந்த பணிகளில் கோவை மாவட்டத்தைச்சேர்ந்த மாவட்ட தொல்லியல்துறை அலுவலர்களே மேற்கொண்டு வருகின்றனர்.

    எனவே திருப்பூர் மாவட்டத்துக்கு தனியாக மாவட்ட தொல்லியல்துறை அலுவலகத்தை துவக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் தொழில்சார்ந்த மாவட்ட மக்களுக்கு, முக்கிய சுற்றுலா தலமாகவும், அருங்காட்சியகம் அமைய வாய்ப்புள்ளது.

    இது குறித்து வரலாற்று ஆய்வாளர்கள் தரப்பில் அரசுக்கு மீண்டும் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

    • தஞ்சை அரண்மனை வளாகம் மராட்டி தர்பார் மண்டபத்தில் நடந்து வரும் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.
    • பழமை மாறாமல் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரில் தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவன மாணவர்களுக்கு களப்பயிற்சி நடந்து வருகிறது.

    இந்த பயிற்சியை தமிழ்நாடு தொல்லியல் துறை இணை இயக்குநர் சிவானந்தம் பார்வையிட்டார். பின்னர் தஞ்சை அரண்மனை வளாகம் மராட்டி தர்பார் மண்டபத்தில் நடந்து வரும் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.

    அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-மதுரை திருமலை நாயக்கர் மகால், தரங்கம்பாடி கோட்டை, கவர்னர் மாளிகை என தமிழ்நாட்டில் மொத்தம் சுமார் ரூ. 25 கோடி மதிப்பில் புராதன கட்டிடங்கள் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    தஞ்சை அரண்மனை வளாக மராட்டா தர்பார் மண்டபம், சர்ஜா மாடி ஆகிய இடங்களில் பழமை மாறாமல் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை மேம்பாலம் அருகே சோழர் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான பணி நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் இந்த பணி தொடங்கியது. போலீஸ் பாதுகாப்புடன் இந்த பணிகள் நடைபெற்றது.
    • வடலூரில் சர்வதேச மையம் அமைப்பதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    வடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் சத்யஞானசபை உள்ளது.

    இங்கு உள்ள பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து சர்வதேச மையம் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் இந்த பணி தொடங்கியது. போலீஸ் பாதுகாப்புடன் இந்த பணிகள் நடைபெற்றது.

    வடலூரில் சர்வதேச மையம் அமைப்பதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் வருகிற 10-ந்தேதி வரை பணி நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டனர். மேலும் சர்வதேச மையம் அமைக்கும் இடத்தை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கோர்ட் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து தொல்லியல் துறை துணை இயக்குனர் டாக்டர் சிவானந்தம் தலைமையிலான அதிகாரிகள் 6 பேர் இன்று வடலூர் வந்து வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் இடத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.

    • தக்கலை போன்ற தொல்பொருள் பொருட்கள் கண்டுபிடிக்கபட்டது.
    • பண்டைய காலத்தில் விவசாயம் மேற்கொள்ள ஏர் கலப்பையில் பயன்படுத்தப்பட்ட பொருளாக தெரிகிறது.

    சிங்காரப்பேட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள சென்னானூர் கிராமத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில் புதிய கற்கால கருவி, சூடு மண்ணால் ஆன முத்திரை, சங்கு வளையல் துண்டுகள், வட்டசில்லுக்கள், கண்ணாடி வளையல் துண்டுகள், தக்கலை போன்ற தொல்பொருள் பொருட்கள் கண்டுபிடிக்கபட்டது.

    இந்த நிலையில் மேலும் ஏ 2 அகழாய்வு குழியில் 75 செ.மீ ஆழத்தில் இரும்பிலான கலப்பையின் கொலுமுனை கிடைக்கப் பெற்றுள்ளது. இதன் எடை 1.292 கிகி, நீலம் 32 செ.மீ, அகலம் 4.5 செ.மீ, தடிமன் 3 செ.மீ உள்ளது. இக்கொழுமுனை பண்டைய காலத்தில் விவசாயம் மேற்கொள்ள ஏர் கலப்பையில் பயன்படுத்தப்பட்ட பொருளாக தெரிகிறது.

    தொல்லியல் சூழ்நிலை கொண்டு இவற்றின் காலம் இடைக்கால வரலாறு காலமாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

    • 5300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு தமிழ்நிலத்தில் அறிமுகம் ஆகிவிட்டது
    • பொய் வரலாறு புனைந்து வந்தோரின் பொய்களை எல்லாம் அறிவியல் ஆய்வு மூலம் சுக்கு நூறாக்கிவிட்டார்.

    சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் நடைபெற்ற தொல்லியல் துறை நிகழ்ச்சியில் பங்கேற்று 'இரும்பின் தொன்மை' எனும் நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

    அப்போது பேசிய அவர், "தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் இரும்பின் காலம் தொடங்கியது. தமிழகத்தில் 5300 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இரும்பு தொழில்நுட்பம் இருந்தது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இரும்பு தாதுவை பிரித்து எடுக்கும் தொழில்நுட்பம் தமிழ் நிலப்பரப்பில் தான் தொடங்கி உள்ளது" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதை குறிப்பிட்டு அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் பக்கத்தில் பெருமிதமாக பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "5300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு தமிழ்நிலத்தில் அறிமுகம் ஆகிவிட்டது என்ற வரலாற்று சிறப்புமிக்க ஆய்வு முடிவுகளை இன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உறுதி செய்துள்ளார்.

    தமிழர் நாகரிகத்தையும், பண்பாட்டு வரலாற்றையும் மறைக்க துடித்து பொய் வரலாறு புனைந்து வந்தோரின் பொய்களை எல்லாம் அறிவியல் ஆய்வு மூலம் சுக்கு நூறாக்கிவிட்டார் நமது முதலமைச்சர் அவர்கள்.

    இந்திய வரலாறு தெற்கில் தமிழ் நிலத்தில் இருந்தே இனி எழுதப்படும் அதை உலகிற்கு உணர்த்திய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு ஆயிரம் நன்றிகள்" என்று தெரிவித்துள்ளார்.

    • திருப்பரங்குன்றம் சமண மத நடவடிக்கைகளுக்கான ஒரு தளமாகும்.
    • திருப்பரங்குன்றம் மலையை பிறர் உரிமை கொண்டாடுவது ஏற்கத்தக்கது அல்ல.

    மதுரை:

    மதுரை ஐகோர்ட்டில் விழுப்புரம் ஸ்வஸ்தி லட்சுமி சேன சுவாமி தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் மலையில் சமணர் நினைவுச்சின்னங்கள் பல உள்ளன. திருப்பரங்குன்றம் கோவில் சமண சமயத்திற்கான பல கட்டமைப்புகளை கொண்டுள்ளது. ஆனால் தற்போது திருப்பரங்குன்றம் மலை இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமானது என பல இந்து அமைப்புகள் கூறிவருகின்றன.

    திருப்பரங்குன்றம் மலையிலும், அதைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் உள்ள தமிழ்-பிராமி எழுத்துக்கள், அவை சமண காலத்தைச் சேர்ந்தவை என்பதை உறுதிபடுத்துகிறது.

    திருப்பரங்குன்றம் சமண மத நடவடிக்கைகளுக்கான ஒரு தளமாகும். திருப்பரங்குன்றம் மலையின் ஒரே இடத்தில் பாறையின் சுமார் 1 அடி உயரத்தில் இரண்டு சமண பாறைகள் செதுக்கப்பட்டுள்ளன.

    இந்த மலைகள் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட பதட்டம் காரணமாக, மற்ற மதங்களைச் சேர்ந்த சிலர் இந்த மலைகளில் உள்ள சமணர் குகைகளை சீர்குலைப்பது போன்ற பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர்.

    இது அவமரியாதை செய்யும் வகையில் உள்ளது. இது சமண மக்களின் மத உணர்வுகளை பாதித்துள்ளது. இந்த சட்ட விரோத செயல்களால் திருப்பரங்குன்றம் பகுதியில் மத நல்லிணக்கம் பாதிக்கப்பட்டுள்ளது.

    அதோடு சமண சமயத்தினருக்கு சொந்தமான திருப்பரங்குன்றம் மலையை பிறர் உரிமை கொண்டாடுவது ஏற்கத்தக்கது அல்ல.

    ஆகவே திருப்பரங்குன்றம் மலையை சமணர் குன்று என அறிவித்து, சமண கொள்கைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள தடை விதிப்பதோடு, திருப்பரங்குன்றம் மலையை மீட்டெடுத்து, பராமரிக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு, விக்டோரியா கவுரி அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா மற்றும் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் மற்றும் ரவீந்திரன் ஆகியோர் ஆஜராகி, திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதோடு, அரசு யாரிடமும் மதபாகுபாட்டை காட்ட விரும்பவில்லை, நல்லிணக்கத்தையே விரும்புகிறது என தெரிவிக்கப்பட்டது.

    மேலும், தமிழக தொல்லியல் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், தமிழக தொல்லியல் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவும், இந்த வழக்கை நிலுவையில் உள்ள அணைத்து வழக்குகளோடு சேர்த்து பட்டியலிடவும் உத்தரவிட்டு வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

    • சத்ரபதி சம்பாஜிநகர் (அவுரங்காபாத்) மாவட்டத்தில் உள்ள குல்தாபாத் பகுதியில் கல்லறை உள்ளது.
    • ஒளரங்கசீப்பின் கல்லறை அகற்றப்பட வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம்

    400 வருடத்திற்கு முன் வாழ்ந்த முகலாய மன்னர் அவுரங்கசீப்பை முன்வைத்து மகாராஷ்டிரா அரசியல் அல்லோலகல்லோலப்பட்டு வருகிறது. சத்திரபதி சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கையை தழுவி சாவா என்ற பெயரில் விக்கி கௌஷல் நடிப்பில் இந்தி படம் ஒன்று வெளியானது.

    அதில் வில்லனாக வரும் அவுரங்கசீப் இந்து மன்னர் சாம்பாஜிக்கு பல்வேறு சித்திரவதைகளை செய்யும் நெஞ்சைப் பிழியும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதை சமாஜ்வாதி எம்எல்ஏ அபு அஸ்மி மறைமுகமாக பேட்டி ஒன்றில் விமர்சித்தார்.

    அவர் கூறியதாவது, ஔரங்கசீப்பை நான் ஒரு கொடூரமான, சகிப்புத்தன்மையற்ற ஆட்சியாளராகக் கருதவில்லை. இப்போதெல்லாம் திரைப்படங்கள் மூலம் அவுரங்கசீப் பிம்பம் சிதைக்கப்படுகிறது.

    அவுரங்கசீப் பல கோயில்களைக் கட்டினார் என்றும், அவரது படையில் பல இந்துக்கள் தளபதிகளாக இருந்தனர் என்று தெரிவித்தார்.

     

    இந்த புகழ்ச்சி மகாராஷ்டிர ஆளும் பாஜக கூட்டணி இடையேயும், இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற சிவசேனா இடையேயேயும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அபு அஸ்மி சட்டமன்ற கூட்டத்தொடரில் இருந்தே இடைநீக்கம் செய்யப்பட்டார்.

    இதைத்தொடர்ந்தும் சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. சத்ரபதி சம்பாஜிநகர் (அவுரங்காபாத்) மாவட்டத்தில் உள்ள குல்தாபாத் பகுதியில் தொல்லியல் துறையால் பராமரிக்கப்பட்டுவரும் அவுரங்கசீப்பின் கல்லறையை இடித்து அகற்ற வேண்டும் என்று பாஜக கூட்டணி தலைவர்கள், ஆர்எஸ்எஸ்காரர்கள், இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் அவுரங்கசீப் கல்லறையை அகற்ற தானும் விரும்புவதாக மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தனது ஆசையை வெளிப்படுத்தி உள்ளார்.

    நேற்று அவர் பேசுகையில், ஒளரங்கசீப்பின் கல்லறை அகற்றப்பட வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம். ஆனால் இதில் ஒரு சட்டத் சிக்கல் உள்ளது. அதாவது, காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது ஔரங்கசீப்பின் கல்லறையை இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையிடம் (ASI) ஒப்படைத்திருந்தது.

    இப்போது, சட்டத்தின்படி, ASI பாதுகாப்பின் கீழ் உள்ள எந்த இடத்தையும் அகற்றுவது குறித்து நாங்கள் முடிவெடுக்க முடியாது. எனவே கல்லறையை அகற்றுவதானால் அதை சட்டத்தின் கட்டமைப்பிற்குள் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். 

    • மீனாட்சி அம்மன் கோவிலை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என கலெக்டரிடம் பா.ஜ.க.வினர் கோரிக்கை வைத்தனர்.
    • இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    மதுரை

    மதுரை பா.ஜ.க. பொருளாதார பிரிவு மாவட்ட தலைவர் முத்துக்குமார் தலைமையில் நிர்வாகிகள் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

    அப்போது கலெக்டர். அனீஷ்சேகரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. 15 வருடங்களுக்கு முன்பு கோவில் கோபுரங்களில் விரிசல் ஏற்பட்டது. தொல்லியல் துறை பரிந்துரைப்படி கனரக வாகனங்கள் வந்து செல்ல தடை விதிக்கப்பட்டது. கோவில் கோபுரத்தை சுற்றி இருந்த காவல் ஆணையர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டன.

    கோபுரத்தை சுற்றி 9 மீட்டர் உயரத்துக்கு கூடுதலாக கட்டிடங்கள் கட்டக்கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆனால் கட்டிட உரிமையாளர்கள் பூமிக்கு அடியில் பல மீட்டர் ஆழத்திற்கு பள்ளம் தோண்டி கட்டிடங்களை கட்டி வருகின்றனர். இதனால் கோவில் கோபுரத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

    கட்டிடங்களை உயர்த்து வதால், பிரகாரத்துக்குள் மழை நீர் தேங்கி, கோவிலின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படுகிறது. இதனால் கோவில் பொலிவை இழந்து வருகிறது. கோவிலுக்குள் வாடகை கடைகள் தற்போது அகற்றப்பட்டு உள்ளன.

    ஆனால் தமிழக அற நிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இந்து அறநிலைய துறையின் கீழ் உள்ள கோவில் சொத்துகளை குத்தகைக்கு விட புதிய உத்திரவு பிறப்பித்து உள்ளார். இதன் மூலம் அரசியல் செல்வாக்கு உள்ள வேறு நபர்களுக்கு கோவில் இடத்தை பல ஆண்டுகளுக்கு குத்தகை விட முயற்சிகள் நடக்கிறது.

    கோவிலுக்குள் பலத்த பாதுகாப்பு இருந்தும் தீ விபத்து ஏற்பட்டு தூண்கள், மண்டபங்கள் இடிந்து சேதம் அடைந்தது. எனவே மீனாட்சி அம்மன் கோவிலின் பழமையை பேணி காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொல்லி யல் துறை அறிவுறுத்தியது. அங்குள்ள சேதம் அடைந்த மண்டபம், தூண்கள் இதுவரை சீரமைக்கப்பட வில்லை.

    உலக புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலின் பழமை, பொலிவை பேணி காக்கும் வகையில், அதனை மத்திய அரசின் தொல்லியல் துறை வசம் ஒப்படைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிபா.ஜ.க.வித்தார்.

    ×