search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புலி"

    • கடந்த 15 நாட்களாக கால்நடைகள் மற்றும் நாய்களை சிறுத்தை புலி இரவு நேரங்களில் வேட்டையாடி வந்ததால் 50-க்கும் மேற்பட்ட வனத்து றையினர் கால் தடங்களை வைத்து கிராமங்களில் சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர்.
    • நேற்று இரவு வழக்கம்போல வீட்டிற்கு சென்று விட்டு காலையில் வந்து பார்த்த போது 2 ஆடுகளை காண வில்லை. சிறுத்தை புலி வேட்டையாடி இருக்குமோ என்ற சந்தேகத்தில் வனத்துறையினருக்கு காளி பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பொன்னுசாமி தகவல் கொடுத்தார்.

    பரமத்தி வேலூர்:

    பரமத்தி வேலூர் தாலுகா விற்கு உட்பட்ட இருக்கூர், செஞ்சுடையாம்பாளையம், சுண்டப்பனை,வெள்ளாளபாளையம்,ரங்கநாதபுரம் உள்ளிட்ட கிராமங்களில் ஆடுகள், கன்றுகள், நாய்கள் மற்றும் மயில்கள் உள்ளிட்டவைகளை கடந்த 15 நாட்களுக்கு மேலாக வேட்டையாடி வந்த சிறுத்தை புலி கடந்த நான்கு நாட்களாக இப்பகுதியில் எந்த கால்நடைகளையும் வேட்டையாடவில்லை.

    கடந்த 15 நாட்களாக கால்நடைகள் மற்றும் நாய்களை சிறுத்தை புலி இரவு நேரங்களில் வேட்டையாடி வந்ததால் 50-க்கும் மேற்பட்ட வனத்து றையினர் கால் தடங்களை வைத்து கிராமங்களில் சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர். இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமலும் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாத சூழ்நிலைக்கும் உள்ளாகியுள்ளனர்.

    செஞ்சுடையாம்பா ளையம் பகுதியில் உள்ள கல்குவாரியில் சிறுத்தை புலி வந்து சென்றதற்கான கால்தடங்கள் இருப்பது கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் இருந்து இரவில் 30 கிலோமீட்டர் தூரம் வெளியே சென்று வேட்டையாடிவிட்டு மீண்டும் அதன் இருப்பி டத்திற்கு திரும்பி வருவதும் தெரியவந்துள்ளது.

    இந்த நிலையில் மாவட்ட வனசரக அலுவலர் பிரவீன் குமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட வனத்து றையினர் சிறுத்தை புலி வந்து செல்லும் இடம் கண்டறியப்பட்ட பகுதியில் மொத்தம் 18 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி யும், இரண்டு கூண்டுகள் வைத்து சிறுத்தை புலியின்

    நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.மேலும் இரவு நேரங்களில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ட்ரோன் கேமராக்கள் மூலமும் சிறுத்தை புலியை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஆனால் கடந்த 4 நாட்களாக இப்பகுதியில் சிறுத்தை புலி எந்த கால்நடைகளையும் பிடிக்க வில்லை என்பதால் இடம் மாறி வேறு பகுதிக்கு சென்று விட்டதா? என வனத்துறையினர் தீவிர மாக கண்காணித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று பாண்டமங்கலம் அருகே உள்ள கொளக்காட்டுப்பு தூர் பகுதியில் உள்ள தோட்டப் பகுதியில் சிறுத்தை புலியின் கால் தடங்கள் பதிந்து இருப்பதாக வனத்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது.தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் கொளக்காட்டுப்புதூர் பகுதியை சேர்ந்த மணி கண்டன் மற்றும் ராமாயி ஆகியோரது தோட்டப் பகுதிக்கு சென்று சிறுத்தை புலியின் கால் தடங்களை ஆய்வு செய்ததில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு

    சிறுத்தை புலி வந்து சென்ற

    தற்கான பழைய கால்த டங்கள் என்பதை உறுதி செய்தனர். மேலும் சிறுத்தை புலியின் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் வனத்துறை யினர் தெரிவித்தனர்.

    இந்நிலையில் பரமத்தி

    அருகே காளிப்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது

    38).விவசாயி.அதே பகுதி யில் இவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் ஆடு களை வளர்த்து வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல வீட்டிற்கு சென்று விட்டு

    காலையில் வந்து பார்த்த போது 2 ஆடுகளை காண வில்லை. சிறுத்தை புலி வேட்டையாடி இருக்குமோ என்ற சந்தேகத்தில் வனத்துறையினருக்கு காளி பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பொன்னுசாமி தகவல் கொடுத்தார்.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனச்சரகர் பெருமாள் தலைமையிலான வனத்துறையினர் அப்பகுதி யில் பதிவான கால் தடங்கள்

    சிறுத்தை புலி கால் தடமா?

    என ஆய்வு செய்து வருகின்ற

    னர்.இந்நிலையில் பரமத்தி வேலூர் பகுதியில் கால்ந டைகளை தொடர்ந்து வேட்டையாடி வரும் சிறுத்தை புலி கடந்த நான்கு நாட்களாக சிறுத்தைப்புலியின் நட

    மாட்டம் பற்றிய எந்த தடை

    யும் இல்லை. இதனால் சிறுத்தை இடம் மாறி

    இருக்கலாம் என்று

    வனத்துறை நேற்று முன்தினம் தெரிவித்திருந்தனர்.

    அதை உறுதி செய்யும் வகையில் நேற்று கரூர் மாவட்டம் நொய்யல் அருகே அத்திப்பாளையம் புதூர் பகுதியில் சிறுத்த புலி ஆட்டை வேட்டையாடி உள்ளது. பரமத்தி வேலூரில் முகாமில் இருந்த வனத்துறையை சேர்ந்த மலைவாழ் மக்கள் நொய்யல் அருகே அத்திப்பாளையம் புதூர் பகுதிக்கு சென்றுள்ளனர்.இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

    கடந்த நான்கு நாட்களாக சிறுத்தைப்புலி பற்றிய எந்த தடையும் இல்லை. இருக்கூர் சுற்றுவட்டார பகுதியில் வனத்துறையினரின் தேடுதல் வேட்டை அதி கரித்திருப்பதால் பயந்து போன சிறுத்தை புலி இருக்கூர்பகுதியில் இருந்து காவிரி ஆற்றை கடந்து அக்கரையான கரூர் மாவட்டம் நொய்யல் வருகை அத்திப்பாளையம் புதூர் பகுதிக்கு சென்றுள்ளது. ஆனால் நீண்ட காலமாக தான் வசித்த கல்குவாரியை விட்டு போகாது. மீண்டும் இதே பகுதிக்கு திரும்ப வரலாம். அதனால் பொதுமக்கள் அலட்சியமாக இல்லாமல் எச்சரிக்கையுடன் தங்களது கால்நடைகளையும், குழந்தை

    களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

    இருக்கூர் பகுதி மற்றும் கல்குவாரிகளில் புலிகளின் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • புலியை கூண்டுக்குள் விட்டு அது வேட்டையாடுவதற்காக கோழி, முயல் போன்றவற்றை விட்டு வேட்டை பயிற்சி அளித்தனர்.
    • அறுவை சிகிச்சைக்கு பின்னர் மருத்துவ குழுவினர் புலியின் உடல்நிலையை சிறப்பாக கண்காணித்து வருகின்றனர்.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள முடீஸ் பஜார் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி உடல் நலமில்லாத நிலையில் புலிக்குட்டி ஒன்று நடமாடியது.

    இதுபற்றி அறிந்ததும் மானாம்பள்ளி வனத்துறையினர் வனக்குழுவினருடன் இணைந்து அந்த புலிக்குட்டியை பிடித்தனர். பின்னர் புலிக்குட்டியை அய்யர்பாடி எஸ்டேட் பகுதியில் இருக்கும் மனித-வனவிலங்கு மோதல் தடுப்பு மற்றும் மீட்பு மையத்தில் வைத்து பராமரித்து வந்தனர்.

    மேலும் அங்கு வைத்து புலிக்குட்டிக்கு மருத்துவ சிகிச்சையும் அளித்து வந்தனர். ஆனால் அங்கு வைத்து பராமரிப்பதில் சிரமம் ஏற்பட்டதால் புலியை மானாம்பள்ளி வனப்பகுதியில் உள்ள வனத்துறையினர் தங்கும் விடுதிக்கு கொண்டு சென்று பாதுகாத்து வந்தனர்.

    இந்த நிலையில் புலியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து புலிக்கு தானாகவே வேட்டையாடி சாப்பிடுவதற்கு தேவையான பயிற்சிகளை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.

    இதற்காக தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக மந்திரிமட்டம் என்ற பகுதியில் ரூ.75 லட்சம் மதிப்பில் அதிநவீன வசதிகளுடன் கூடிய கூண்டு அமைக்கப்பட்டது.

    புலியை கூண்டுக்குள் விட்டு அது வேட்டையாடுவதற்காக கோழி, முயல் போன்றவற்றை விட்டு வேட்டை பயிற்சி அளித்தனர். புலியும் அவைகளை வேட்டையாடி சாப்பிட்டு வந்தது.

    இதற்கிடையே புலியின் உடல்நிலையை கால்நடை டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்போது புலிக்கு பல் வலி மற்றும் பல் ஈறுகளில் தொற்று இருப்பது தெரியவந்தது.

    உடைந்த பல் துண்டு ஒன்று ஈறுகளில் சிக்கியிருந்ததும் தெரியவந்தது. இதனால் அந்த பல் துண்டை அகற்றுவதற்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

    அதன்படி முதன்மை வனவிலங்கு பாதுகாவலர் உத்தரவின் பேரில் வண்டலூர் உயிரியல் பூங்கா, கால்நடை டாக்டர் ஸ்ரீதரன், ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கால்நடை டாக்டர் விஜயராகவன், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கால்நடை டாக்டர் சதாசிவம், டாக்டர்கள் கோபிகிருஷ்ணா, ஞானவிபாக்கியம் ஆகியோர் அடங்கிய கால்நடை மருத்துவ குழுவினர் 5 மணி நேரத்திற்கு மேலாக புலிக்கு அறுவை சிகிச்சை செய்து உடைந்த பல் துண்டு அகற்றப்பட்டு அந்த இடத்தில் பையோன்டென்டைன் கொண்டு அடைக்கப்பட்டது.

    அறுவை சிகிச்சைக்கு பின்னர் மருத்துவ குழுவினர் புலியின் உடல்நிலையை சிறப்பாக கண்காணித்து வருகின்றனர். தொடர் கண்காணிப்புக்கு பிறகு மீண்டும் உடல்நிலை மற்றும் பல பரிசோதனை செய்யப்பட்டு மீண்டும் புலியை கூண்டில் விடுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.


    • தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் நடிகர் விஜய்.
    • வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை நீட்டிப்பு

    நடிகர் விஜய், கடந்த 2016-17-ம் நிதியாண்டிற்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்த போது அதில், அந்த ஆண்டிற்கான வருமானம் 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிபிட்டுள்ளார்.

    அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள், நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015-ம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்தது. அதன்படி, புலி படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என கண்டறிந்தது.


    இதையடுத்து, இந்த வருமானத்தை மறைத்ததற்காக நடிகர் விஜய்க்கு ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதித்து கடந்த ஜூன் 30-ஆம் தேதி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது. தனக்கு அபராதம் விதிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    அதுமட்டுமல்லாமல், அபராதம் விதிப்பதாக இருந்திருந்தால், 2019-ஆம் ஆண்டிலேயே உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும். காலதாமதமாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.


    இந்த மனுவை விசாரித்த நீதிபதி வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். இந்த நிலையில் இடைக்காலத் தடையை அக்டோபர் 26 வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் நடிகர் விஜய்.
    • இவர் மீது விதித்த அபராதத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நடிகர் விஜய், கடந்த 2016-17-ம் நிதியாண்டிற்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்த போது அதில், அந்த ஆண்டிற்கான வருமானம் 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிபிட்டுள்ளார்.

    அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள், நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015-ம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்தது. அதன்படி, புலி படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என கண்டறிந்தது.


    புலி

    இதையடுத்து, இந்த வருமானத்தை மறைத்ததற்காக நடிகர் விஜய்க்கு ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதித்து கடந்த ஜூன் 30-ஆம் தேதி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது. தனக்கு அபராதம் விதிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    அதுமட்டுமல்லாமல், அபராதம் விதிப்பதாக இருந்திருந்தால், 2019-ஆம் ஆண்டிலேயே உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும். காலதாமதமாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.


    புலி

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து மனுவுக்கு வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும்,  விசாரணையை செப்டம்பர் 16-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

    • எச்.பி.எப். குடியிருப்புப் பகுதி அருகில் உள்ள வனப்பகுதியில் புலி சுற்றித்திரிகிறது
    • கரடி கடந்த சில நாள்களாக அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது.

    ஊட்டி,

    ஊட்டி - கூடலூா் சாலையில் எச்.பி.எப்.பகுதியில் வளா்ப்பு எருமைைய கடந்த புதன்கிழமை வனவிலங்கு வேட்டையாடி, மீதமுள்ள உடலை குடியிருப்பை ஒட்டியுள்ள வனப் பகுதியில் விட்டு சென்றது. இதன் பேரில் அங்கு சென்று வனத் துறையினா் ஆய்வு நடத்தினா். பின்னா் கால்நடை மருத்துவா்கள் வரவழைக்கப்பட்டு எருமையின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

    இந்நிலையில், எச்.பி.எப். குடியிருப்புப் பகுதி அருகில் உள்ள வனப்பகுதியில் புலி சுற்றித்திரிவதை அந்த பகுதியைச் சோ்ந்த சிலா் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனா். இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதியில் நடமாட பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.

    மேலும், அப்பகுதியில் வனத் துறையினா் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனா்.

    ஊட்டி 27-வது வாா்டு தீட்டுக்கல் பகுதியில் பால் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் கரடி புகுந்து கடந்த சில நாள்களாக அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனா்.

    • மனித சங்கிலி அமைத்தும் புலிப் போன்று வேடமிட்டும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • காடுகளில் மரங்களை வெட்டாமல் இருந்தாலே போதும் புலிகளை காப்பாற்றலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக இன்று கல்லூரி நுழைவாயிலில் உலக புலிகள் தினத்தை முன்னிட்டு மனித சங்கிலி அமைத்தும் புலிப் போன்று வேடமிட்டும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் , தேசிய விலங்கான புலிகளின் முக்கியத்துவத்தை கூறி வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக மதுவிலக்கு அமலாக்க பிரிவு ‌காவல் ஆய்வாளர் பிரகாஷ் மற்றும் வடக்கு காவல் ஆய்வாளர் உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகையில் , மக்களிடம் புலிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்நாள் உலகம் முழுவதும் புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது .காடுகளின் காவலன் புலிகள் எனவும் , காடுகளில் மரங்களை வெட்டாமல் இருந்தாலே போதும் புலிகளை காப்பாற்றலாம். நாம் காடுகளை அழிப்பதன் மூலம் அதிக நகரங்களை உருவாக்குவதன் மூலம் வசிக்க இடம் இல்லாமல் உண்ண உணவு இல்லாமல் புலிகள் இறந்துவிடுகிறது .

    புலிகளின் எண்ணிக்கை முன்பு இருந்ததை விட இப்போது மிகவும் குறைவாக உள்ளது . இந்தியாவில் உள்ள 51 புலிகள் காப்பகங்களில், களக்காடு முண்டந்துறை, ஆனைமலை, முதுமலை மற்றும் சத்தியமங்கலம் ஆகிய 4 புலிகள் காப்பகங்கள் தமிழகத்தில் உள்ளன. புலிகளின் கண்கள் இரவில் மனிதர்களை விட ஆறு மடங்கு தெளிவாக தெரியும் என்றார்.

    நிகழ்ச்சியில் மாணவ செயலர்கள் அருள்குமார் , பாலசுப்பிரமணியம் , சுந்தரம் , பூபதி ராஜா ஆகியோர் தலைமையில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு புலி போன்று வேடமிட்டும் , பதாகைகளை ஏந்திக்கொண்டும் , புலிகளின் முககவசங்களை அணிந்தும், கைக்கட்டை விரல்களில் புலியின் நிறத்தை வரைந்தும் உலக புலிகள் தின விழிப்புணர்வு கொண்டாடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    • ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட பெளத்தூர் அருகே உள்ள ஒரு குளத்தின் அருகே புலி ஒன்று ஹாயாக படுத்திருந்தது.
    • புலிகள் நடமாட்டம் காரணமாக இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    தாளாவடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. குறிப்பாக இந்த வனச்சரகத்தில் மான், யானை, புலி, காட்டெருமை, செந்நாய், சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இந்த வனப்பகுதி வழியாகத்தான் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்ல வேண்டும்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த வனவிலங்குகள் கணக்கெடுப்பில் புலி மற்றும் சிறுத்தைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து உள்ளதாக தெரிய வந்து உள்ளது.

    இந்த மலைப்பாதையில் அவ்வப்போது இரவு நேரங்களில் சிறுத்தை மற்றும் புலிகள் நடமாடுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. அப்போது அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிறுத்தை நடமாட்டத்தை கண்டு அச்சமடைந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட பெளத்தூர் அருகே உள்ள ஒரு குளத்தின் அருகே புலி ஒன்று ஹாயாக படுத்திருந்தது. இதை குளத்தின் மறுபக்கம் இருந்து அப்பகுதியை சேர்ந்த சிலர் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். பின்னர் சிறிது நேரம் கழித்து புலி அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.

    இந்நிலையில் புலிகள் நடமாட்டம் காரணமாக இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×