என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மாணவர்கள் சாதனை. Students achievement"
- 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றும் சாதனை படைத்துள்ளனர்.
- 2 பிரிவிலும் வெற்றி பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் குறுமைய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் மூத்தோர் மற்றும் மிகமூத்தோர் ( 17 வயதிற்கு உட்பட்டவர்கள், 19 வயதிற்கு உட்பட்டவர்கள்) பிரிவிற்கு உண்டான எறிபந்து விளையாட்டு போட்டியில் 2 பிரிவிலும் வெற்றி பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். மூத்தோர் பிரிவில் இறுதி ஆட்டத்தில் எஸ்.வி.ஜி.வி மெட்ரிக் பள்ளியை 2-0 கணக்கில் வெற்றி பெற்றும், மிக மூத்தோர் பிரிவில் கே.ஜி.மெட்ரிக் பள்ளியை 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றும் சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களையும் வெற்றிக்கு வித்திட்ட உடற்கல்வி ஆசிரியர் ஜெயராஜையும் பள்ளி தலைமை ஆசிரியர் பெள்ளி, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் திரு ராம்தாஸ் மற்றும் நிர்வாகிகள் பாராட்டினர்.
- சபரி வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் சாதனைபடைத்துள்ளது
- மாநில அளவிலான மல்லர் கம்பப்போட்டி:
திருச்சி:
விழுப்புரத்தில் ஆறாவது மாநில அளவிலான மல்லர் கம்ப போட்டி நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட மல்லர் கம்ப கழகம் மற்றும் தொட்டியம் ஸ்ரீ சபரி வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ, மாணவிகள் பங்குபெற்று மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்றனர்.
30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து பல்வேறு மல்லர் கம்ப வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்ட இந்த மாநில அளவிலான போட்டியில் பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றது.
இதில் திருச்சி மாவட்ட அணி பல்வேறு பதக்கங்களை வென்று மீண்டும் மூன்றாம் இடத்தை தக்க வைத்துக் கொண்டது. தமிழரின் பாரம்பரிய விளையாட்டை முன்னெடுத்து பல சாதனைகளை புரிந்து வரும் தொட்டியம் ஸ்ரீ சபரி வித்யாலயா பள்ளி மாணவர்களை விளையாட்டுத் துறை ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டினர்.
மாநில அளவிலான மல்லர் கம்ப போட்டியில் பரிசு வென்ற திருச்சி மாவட்ட மல்லர் கம்ப அணியினர் முசிறி மாவட்ட கல்வி அலுவலர் அவர்களை நேரில் சந்தித்து பாராட்டு பெற்றனர். உடன் பள்ளி தலைமை ஆசிரியர் விளையாட்டு ஆசிரியர் மற்றும் திருச்சி மாவட்டம் மலர் கம்பக் கழகத்தின் தலைவர் பிரசாந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.
- நடப்பு கல்வி ஆண்டில் 25 ம் ஆண்டில் அடிஎடுத்து வைக்கும் இந்த கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவ மாணவிகள் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார்கள்.
- தற்போது எல்.கே.ஜி. முதல் பிளஸ் 1வரை மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம் கீழப்புலியூர் ஸ்ரீ விவேகானந்தா நகரில் சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் 25 ம் ஆண்டில் அடிஎடுத்து வைக்கும் இந்த கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவ மாணவிகள் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார்கள்.
இந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் என். நவமியா என்ற மாணவி 500க்கு 486 மதிப்பெண்களும், பவதாரணி 482 மதிப்பெண்களும், தரிசனா , ஜனனி , ஸ்ரீராம் ஆகியோர் 480 மதிப்பெண்களும், ஆதித்யா 477 மதிப்பெண்ணும், ஹரிப்ரியா 474 மதிப்பெண்ணும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.
பிளஸ் 2பொதுத் தேர்வில் ஆர்.நிசாந்தினி 600 க்கு 592 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். இவர் தமிழில் 99, ஆங்கிலத்தில் 98, இயற்பியலில் 97, வேதியலில் 100, உயிரியலில் 100, கணிதத்தில் 98 மதிப்பெண்கள் பெற்றார். இவருக்கு அடுத்தபடியாக பிரதீபா 587 மதிப்பெண்கள் வாங்கினார். அது மட்டுமல்லாமல் தர்ஷினி 564 ,நல்லுசாமி 563, தர்ஷினி ,ஈஸ்வர் ஆகியோர் 554, வைஷ்ணவி 552 மதிப்பெண்கள் பெற்று அபார சாதனை படைத்தனர்.
இந்த பள்ளிக்கூடத்தில் அறிவியல் பாடத்தில் 7பேரும், கணித பாடத்தில் ஒருவரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றனர்.
பள்ளியின் தாளாளர் டாக்டர் பி.முருகேசன் கூறும் போது கடந்த 25 ஆண்டுகளாக சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புலமைப் பெற்ற ஆசிரியர்கள் வாயிலாக கல்வி போதிக்கப்படுகிறது. இதனால் ஆண்டுதோறும் மாணவர்கள் கல்வியில் சாதனை படைத்து வருகின்றனர். தற்போது எல்.கே.ஜி. முதல் பிளஸ் 1வரை மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த கல்வி நிறுவனத்தில் படித்த பல மாணவ மாணவிகள் டாக்டர்கள், இன்ஜினியர்கள் மற்றும் அரசு துறைகளில் உயர் பொறுப்புகளை வகுத்து வருகின்றனர் என பெருமையுடன் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்