search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் மரணம்"

    • பஸ்நிறுத்தத்தில் பஸ் நின்றதும் அஜித் குமாரை கீழே இறக்கி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர்.
    • உடல் கிடந்த பஸ் நிறுத்தத்தில் இருந்து சுமார் 50 அடி தூரத்திலேயே செம்மஞ்சேரி போலீஸ் நிலையம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    சோழிங்கநல்லூர்:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே உள்ள சேத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது28) கொத்தனார்.

    இவர் சென்னை செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறும் கட்டுமான பணிக்காக தனது தம்பி பிரேம் குமார் மற்றும் நண்பர்கள் என மொத்தம் 5 பேர் ரெயில் மூலம் இன்று காலை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வந்தனர்.

    பின்னர் அஜித்குமார் உள்பட 5 பேரும் அங்கிருந்து மாநகர பஸ்சில் செம்மஞ்சேரிக்கு சென்று கொண்டிருந்தனர். காலை 9 மணியளவில் சோழிங்கநல்லூர் சிக்னல் அருகே மாநகர பஸ்வந்து கொண்டு இருந்த போது திடீரென அஜித் குமாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் பஸ்சிலேயே சுருண்டு விழுந்தார். இதனை கண்டு உடன் வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர்.

    அங்குள்ள பஸ்நிறுத்தத்தில் பஸ் நின்றதும் அஜித் குமாரை கீழே இறக்கி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். இதற்குள் அஜித்குமார் பரிதாப இறந்துபோனார். இதனால் அவரது உடல் பஸ்நிறுத்தத்தில் இருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த உடன் வந்தவர்கள் போலீசுக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர். ஆனால் போலீசார் உடனடியாக வரவில்லை.

    இதன் காரணமாக பஸ் நிறுத்தத்திலேயே அஜித் குமாரின் உடல் கிடந்தது. காலை நேரம் என்பதால் ஏராளமான பயணிகள் அந்த பஸ்நிறுத்தத்தில் காத்திருந்தனர். அவர்களும் அருகில் இறந்தவர் உடல் கிடப்பதை கண்டு எந்த சளனமும் இல்லாமல் அருகிலேயே நின்றபடி வரும் பஸ்களில் ஏறிச்சென்றனர். சிலர் வேடிக்கை பார்த்த படி சென்றனர். அருகில் அழுது கொண்டிருந்த அஜித்குமாரின் தம்பி பிரேம் குமார் மற்றும் உடன் வந்தவர்களுக்கு உதவயாரும் முன்வரவில்லை என்று தெரிகிறது.

    இதற்கிடையே சுமார் 2 மணி நேரத்திற்கு பின்னர் காலை 11 மணியளவில் செம்மஞ்சேரி போலீசார் வந்து இறந்த அஜித்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    உடல் கிடந்த பஸ் நிறுத்தத்தில் இருந்து சுமார் 50 அடி தூரத்திலேயே செம்மஞ்சேரி போலீஸ் நிலையம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இறந்தவர் உடலை மீட்க போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். அஜித்குமார் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்து இருக்கலாம் என்று தெரிகிறது. அவரது இறப்புக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது முத்துக்குமார் மயங்கிய நிலையில் கிடந்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே உள்ள குரும்பலமகாதேவி,

    வடுகபாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 30). கட்டிட மேஸ்திரி.

    நேற்று முன்தினம் முத்துக்குமாரை குரும்பல மகாதேவி ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர் சாக்கடை சுத்தம் செய்யும் பணிக்காக அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு வந்த முத்துக்குமார் குளியல் அறைக்கு சென்றுள்ளார். வெகு நேரமாகியும் முத்துக்குமார் வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது மனைவி கிருபா(26) குளியலறைக்கு சென்று கணவரை அழைத்துள்ளார். கதவை திறக்காததால் சந்தேகமடைந்த கிருபா ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார்.

    அப்போது அவரது கணவர் சுவர் ஒரத்தில் குப்புற விழுந்து கிடந்ததை பார்த்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து குளியல் அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது முத்துக்குமார் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை காப்பாற்றி ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே முத்துக்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமார் எப்படி இறந்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேர்தலில் வாக்கு செலுத்துவதற்காக கடந்த 26-ந்தேதி கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார்.
    • உறவினர்கள் சிலர் முதலில் அருகில் இருந்த மருத்துவரிடம் அழைத்துச் சென்று இருக்கிறார்கள்.

    உத்தரபிரதேசத்தின் புலன்சாகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜஹாங்கிராபாத் பகுதியில் 20 வயது வாலிபரான மோகித் என்பவர் கல்லூரியில் பிகாம் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார்.

    தேர்தலில் வாக்கு செலுத்துவதற்காக கடந்த 26-ந்தேதி கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார். வாக்களித்ததற்கு பிறகு வயல்வெளிக்கு சென்றபோது பாம்பு கடிக்கு ஆளாகி இருக்கிறார்.

    உறவினர்கள் சிலர் முதலில் அருகில் இருந்த மருத்துவரிடம் அழைத்துச் சென்று இருக்கிறார்கள். ஆனால் மருத்துவத்தால் சரி ஆகாது, கங்கை நதியில் உடம்பை வைத்திருந்தால் பாம்பு கடியின் விஷம் தானாக இறங்கி விடும் என்று சிலர் கூற மூடநம்பிக்கையால் கயிறு கட்டி இரண்டு தினங்களாக மோகித்தின் உடலை கங்கை நதியில் போட்டு வைத்துள்ளனர்.

    ஆனால் இந்த மூடநம்பிக்கை எதுவும் அந்த வாலிபரை காப்பாற்றவில்லை. மாறாக பாம்பு விஷம் உடலில் ஏறி பரிதாபமாக அந்த வாலிபர் உயிரிழந்துள்ளார். உயிர் இருக்கிறதா என கூட சோதிக்காமல் நதியிலேயே போட்டு வைத்துள்ளனர்.

    • சிகிச்சை பெற்று வந்த கிஷோர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.
    • கிஷோரின் தந்தை பிச்சைமுத்து கோவில்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரனிடம் புகார் அளித்தார்.

    சரவணம்பட்டி:

    கரூர் மாவட்டம் காந்தி கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைமுத்து. இவர் டாக்டராக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மகன் கிஷோர் (வயது22). கிஷோர் போதை பழக்கத்திற்கு அடிமையானதாக தெரிகிறது. இதையடுத்து அவரது பெற்றோர் கிஷோரை கோவை அருகே கோவில்பாளையத்தில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு அவர் கடந்த பிப்ரவரி 28-ந் தேதி முதல் தங்கி சிகிச்சை எடுத்து வந்தார். இந்த நிலையில் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த அவர் அடிக்கடி அதிக அளவில் கூச்சல் போட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று கிஷோர் தன்னை வீட்டிற்கு அனுப்புமாறு அதிக அளவில் கூச்சல் போட்டுள்ளார். அங்கிருந்த வார்டன் சொல்லி பார்த்தும் அவர் கேட்கவில்லை என தெரிகிறது.

    இதையடுத்து அங்கு பணியில் இருந்த காப்பாளர் அரவிந்த்சாமி மற்றும் மனநல ஆலோசகர் பிரசன்னராஜ் ஆகியோர் அவர் சத்தம் போடாமல் இருப்பதற்காக அவரது வாயில் டேப் மற்றும் துணியால் கட்டியுள்ளனர். இதில் சிறிது நேரத்தில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினார்.

    இதனால் அதிர்ச்சியான அவர்கள், அவரை அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கிஷோர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த கிஷோர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக கிஷோரின் தந்தை பிச்சைமுத்து கோவில்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரனிடம் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் போதை மறுவாழ்வு மைய வார்டனான ஆலாந்துறையை சேர்ந்த அரவிந்த்சாமி, திருப்பூர் சூசைபுரத்தை சேர்ந்த உளவியல் நிபுணர் பிரசன்னராஜ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போதை மறுவாழ்வு மையத்தில் உள்ள சி.சி.டி.வி. பதிவு அழிக்கப்பட்டிருந்தது.
    • போதை மறுவாழ்வு மைய உரிமையாளர், கணக்காளர், பணியாளர் ஆகியோர் முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவித்தனர்.

    சென்னை:

    சென்னை வளசரவாக்கத்தில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்ட ஆதம்பாத்தைச் சேர்ந்த விஜய் என்பவர் திடீரென உயிரிழந்தார்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, போதை மறுவாழ்வு மையத்தில் உள்ள சி.சி.டி.வி. பதிவு அழிக்கப்பட்டிருந்தது. மேலும் போதை மறுவாழ்வு மைய உரிமையாளர் வினோத்குமார், கணக்காளர் க்ரூஸ், பணியாளர் அஜய் ஆகியோர் முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் நடத்திய கிடுக்கிப்படி விசாரணையில், போதைக்கு அடிமையான விஜயை கடுமையாக தாக்கியதன் காரணமாக உயிரிழந்தது தெரியவந்ததை அடுத்து போதை மறுவாழ்வு மைய உரிமையாளர் வினோத்குமார் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஆற்றுக்குள் கிடந்த பிணத்தை மீட்டனர்.
    • போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பிச்சம்பாளையம் நொய்யல் ஆற்றுப்பாலம் அடியில் 35வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவல் அறிந்ததும் அனுப்பர்பாளையம் இன்ஸ்பெக்டர் பிரேமா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஆற்றுக்குள் கிடந்த பிணத்தை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இறந்து கிடந்தவர் ஆடையின்றி கிடந்ததால் மர்மநபர்கள் கொலை செய்து ஆற்றில் வீசி சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் அனுப்பர்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நேற்று இரவு தாயும், மகளும் கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
    • போலீசார் 2பேரின் உடல்களை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள டோரிப்பள்ளியை அடுத்த உங்கட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கட்ட ராமப்பா (வயது 50). இவர் தனியார் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு மீனாட்சி(47) என்ற மனைவியும், கிரி (23) என்ற மகனும், காவ்யா (18) என்ற மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கிரி ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சப்படி அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த செப்டம்பர் மாதம் 7-ந்தேதி உயிரிழந்தார்.

    கிரிக்கும் வேறு நபருக்கும் தகராறு இருந்து வந்தது. எனவே, அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக தாய் மீனாட்சியும், தங்கை காவ்யாவும் சூளகிரி போலீசில் விபத்து நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை காண்பிக்குமாறு புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

    மேலும், கிரி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என உறுதியாக நம்பிய அவர்கள் நேற்றும் சூளகிரி போலீசாரை சந்தித்து விசாரித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளனர்.

    தனது மகன் சாவு குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்காததால், மீனாட்சியும், அவரது மகள் காவ்யாவும் மிகுந்த சோகத்தில் காணப்பட்டனர். மனமுடைந்து போன மீனாட்சியும், காவ்யாவும் தற்கொலை செய்துக் கொள்ள முடிவெடுத்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு தாயும், மகளும் கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டுத் தீப்போல் பரவியது.

    இதுகுறித்து தகவலறிந்த பேரிகை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு சென்று கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து தாய் மற்றும் மகளின் உடல்களை மீட்க முயன்றனர்.

    அப்போது அங்கு திரண்டிருந்த உறவினர்கள் மீனாட்சி, காவ்யா ஆகியோரின் உடல்களை எடுக்க விடாமல் தடுத்தனர். மேலும், அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதை அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாகூர், சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி, ஓசூர் டி.எஸ்.பி. பாபு பிரசாந்த், தாசில்தார் சக்திவேல், கிராம அலுவலர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பின்னர் மாவட்ட எஸ்.பி. சரோஜ்குமார் தாகூர் உறவினர்களிடம், உங்கள் சந்தேகங்களை புகாராக எழுதி கொடுங்கள், நான் விசாரித்து போலீசார் கவன குறைவாக செயல்பட்டிருந்தால் ஒரே நாளில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    அதன்பின்னர் உறவினர்கள் 2 பேரின் உடல்களை போலீசார் எடுத்து செல்ல அனுமதித்தனர். அதன்பின்பு போலீசார் 2பேரின் உடல்களை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மகன் விபத்தில் இறந்ததால் துக்கம் தாங்காமல் தாய், தங்கை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.

    • காதல் திருமணம் செய்த 15 நாளில் வாலிபர் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • யுவன்சங்கர்ராஜா எப்படி இறந்தார்? கிணற்றுக்குள் விழுந்தது எப்படி? கொலை செய்யப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருத்தணி:

    திண்டுக்கல்லை சேர்ந்தவர் யுவன்சங்கர் ராஜா (வயது22). இவர் அதே பகுதியைச் சேர்ந்த நவீனா(21) என்பவரை காதலித்தார். இவர்களது காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது.

    இதைத்தொடர்ந்து யுவன்சங்கர் ராஜாவும், நவீனாவும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

    பின்னர் இணையத்தளத்தில் வெளியான வேலைவாய்ப்பு மூலம் திருத்தணி அருகே உள்ள திருவாலங்காடு, பரேஸ்புரம் பகுதியில் உள்ள முயல் பண்ணையில் வேலைக்கு சேர்ந்தனர். கணவன்-மனைவி இருவரும் முயல் பண்ணையில் பராமரிப்பு பணி செய்து வந்தனர்.

    இந்தநிலையில் இன்று காலை அப்பகுதியில் உள்ள தரைக்கிணற்றில் உள்ள தண்ணீரில் யுவன் சங்கர் ராஜா பிணமாக மிதந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் திருவாலங்காடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கயிறு கட்டி யுவன் சங்கர்ராஜா உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    யுவன்சங்கர்ராஜா எப்படி இறந்தார்? கிணற்றுக்குள் விழுந்தது எப்படி? கொலை செய்யப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கிணற்றுக்குள் யுவன்சங்கர் ராஜா விழுந்தபோது அவரை காப்பாற்ற மனைவி நவீனா முயன்றதாக தெரிகிறது. கணவன்-மனைவி இருவரும் இரவு நேரத்தில் அவ்வழியாக வந்தது ஏன்? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காதல் திருமணம் செய்த 15 நாளில் வாலிபர் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பணத்தை பிரித்துக் கொள்வதில் மது போதையில் இருந்த நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
    • திருமணத்திற்கு சென்ற வாலிபர் மர்மமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் பெரிய கல்வராயன்மலை கீழ்நாடு பஞ்சாயத்து மேல்பூண்டி மலை கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவரது திருமணத்திற்காக நேற்று முன்தினம் இரவு நண்பர்களான அய்யனார், ராமர், ஆண்டி, பிரசாந்த், குமார் ஆகிய 5 பேரும் மாப்பிள்ளை தோழனாக சென்றுள்ளனர்.

    அப்போது 5 பேரும் மது குடித்துள்ளனர். இதனிடையே மாப்பிள்ளை வீட்டார் திருமண செலவுக்காக மாப்பிள்ளை தோழர்களுக்கு பணம் கொடுத்ததாக தெரிகிறது.

    இந்த பணத்தை பிரித்துக் கொள்வதில் மது போதையில் இருந்த நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் அய்யனார் என்பவர் மயக்கமடைந்து உள்ளார். இதையடுத்து அய்யனாரை நண்பர்கள் சேர்ந்து அதே பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு சென்று படுக்க வைத்து விட்டு சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

    இதனிடையே வீட்டில் மயங்கி கிடந்த அய்யனாரை அவரது உறவினர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அய்யனார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு உறவினர்கள் கதறி அழுதனர்.

    மேலும் இதுகுறித்து கரியகோவில் போலீசில் உறவினர்கள் புகார் அளித்தனர். அதன்பேரில் கருமந்துறை இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையிலான போலீசார் அய்யனாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அய்யனாருடன் தகராறில் ஈடுபட்ட அவரது நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணத்திற்கு சென்ற வாலிபர் மர்மமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சிறிது நேரத்தில் நெஞ்சு எரிச்சலாக இருக்கிறது என்று கூறிய ஸ்டாலின் மயங்கி விழுந்தார்.
    • ஸ்டாலின் உயிரிழப்புக்கு மது போதை காரணமா?அல்லது புரோட்டா காரணமா? என்பது குறித்த விவரம் பிரேத பரிசோதனை அறிக்கை முடிவுக்குப் பிறகு தெரிய வரும்.

    மடத்துக்குளம்:

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை அடுத்த துங்காவி ஆர். ஜி. புதூர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மகன் ஸ்டாலின் (வயது 27). இவர் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பாலை சேகரித்து பெரியபட்டி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு கொண்டு போய் சேர்க்கும் வேலை செய்து வந்தார்.

    இவருக்கு கடந்த ஒரு வருடத்துக்கு முன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லை. சம்பவத்தன்று ஸ்டாலின் தன்னுடன் வேலை செய்யும் நண்பர் சிவக்குமார் என்பவருடன் துங்காவி பகுதிக்கு சென்று மது அருந்தியுள்ளார். பின்னர் அங்குள்ள கடையில் புரோட்டா வாங்கி சாப்பிட்டுள்ளார். அப்போது குடிப்பதற்கு ஐஸ் வாட்டர் வேண்டும் என்று கேட்டு வாங்கி குடித்துள்ளார். இதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் நெஞ்சு எரிச்சலாக இருக்கிறது என்று கூறிய ஸ்டாலின் மயங்கி விழுந்தார்.

    உடனடியாக அவரை உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர்.அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து கணியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஸ்டாலின் உயிரிழப்புக்கு மது போதை காரணமா?அல்லது புரோட்டா காரணமா? என்பது குறித்த விவரம் பிரேத பரிசோதனை அறிக்கை முடிவுக்குப் பிறகு தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

    • வாலிபர் இறந்து கிடந்த ஏரியின் அருகே மொபட், துணிகள் கிடந்தது.
    • தற்கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் உடலை ஒப்படைத்தனர்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே கணவாய்புதூர் ஊராட்சியில் ஏரி உள்ளது. இந்த ஏரியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வாலிபர் ஒருவரின் உடலை மீட்ட தீவட்டிப்பட்டி போலீசார் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வாலிபர் இறந்து கிடந்த ஏரியின் அருகே மொபட், துணிகள் கிடந்தது.

    விசாரணையில் இறந்து கிடந்தவர் ஆந்திர மாநிலம் பாலசேரன் பகுதியை சேர்ந்த நாகராஜன் என்பவரது மகன் பாலசுப்பிரமணியன் (வயது 32) என்பது தெரியவந்தது. இதையடுத்து தற்கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் உடலை ஒப்படைத்தனர்.

    இந்த நிலையில் வாலிபர் இறப்பு குறித்து நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். வழக்கு தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்தனர். மேலும் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

    இது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து எங்களுக்கு புகார் வந்தது. அதன்பேரில் போலீஸ் நிலையத்திற்கு வந்து விசாரணை நடத்துகிறோம் என்றனர்.

    • போலீசார் வேடனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் தாக்கியதால் தான் வேடன் இறந்ததாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த எழுமலை அருகே உள்ள பீலநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வேடன். கட்டிட தொழிலாளியான இவர் நேற்று இரவு எம்.கல்லுப்பட்டி அருகே உள்ள ஒரு தியேட்டருக்கு படம் பார்க்க சென்றார்.

    பின்னர் படம் முடிந்ததும் அவர் தனியாக மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். வழியில் அவரை மறித்த போலீசார் எங்கு சென்று வருகிறாய் என்று கூறி விசாரணை நடத்தினர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று சோதனை நடத்தி உள்ளனர்.

    இதையடுத்து இன்று அதிகாலை அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். வீடு திரும்பிய அவர் காலை நீண்ட நேரம் ஆகியும் எழுந்திருக்கவில்லை. அவரது பெற்றோர் எழுப்பியபோது அவர் இறந்த நிலையில் கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் கதறி அழுதனர்.

    பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் வேடனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் தாக்கியதால் தான் வேடன் இறந்ததாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    ×