என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புதிய குளம்"
- 75 புதிய நீர்நிலைகள் உருவாக்க திட்டம்
- சு.ரவி எம்.எல்.ஏ. பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தார்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த அருகில் பாடி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பாலயன்கோட்டை பகுதியில் அம்ருத் சரோவர் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 புதிய நீர்நிலை குளம் குட்டைகள் உருவாக்க திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் அருகில் பாடி ஊராட்சியில் புதிய குளம் வெட்ட அரக்கோணம் ரவி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
ஒன்றிய கவுன்சிலர் வினோத் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் அருகில் பாடி ஊராட்சி மன்ற தலைவர் வல்லிக்கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- புதிய குளம் அமைக்க இந்துஅறநிலையத்துறை அமைச்சர், அதிகாரிகளிடம் அனுமதி பெற்று விரைந்து குளம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.
- மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் அதிகாரிகளிடம் ஆலோசனை செய்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
உடன்குடி:
உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் தமிழக மீனவர்நலம், மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதாராதா கிருஷ்ணனிடம் கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
புதிய குளம்
விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ளஉடன்குடி வட்டார பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தில் கடல்நீர் உட்புகுந்துள்ளதால் உப்பு நீராக மாறியுள்ளது.நிலத்தடி நீரின் தன்மையை மாற்றிட புதிய குளம் அமைத்து தண்ணீரை தேக்கி வைக்க வேண்டும்.
உடன்குடி யூனியனுக்குட்பட்ட வாகைவிளையில் 122.54 ஏக்கர் பரப்பளவு திருச்செந்துர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்குச் சொந்தமான நிலம் உள்ளது.
நிலத்தடி நீர்
இந்த நிலத்தில் குளம் அமைத்து மீன் வளர்த்து, சுற்றியுள்ள கிராமபகுதிகளில் நிலத்தடி நீரை உயர்த்தி குடிநீர் பிரச்சனை, விவசாயத்தை மேம்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேலும் புதிய குளம் அமைக்க இந்துஅறநிலையத்துறை அமைச்சர், அதிகாரிகளிடம் அனுமதி பெற்று விரைந்து குளம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அப்போது அவருடன் செட்டியாபத்து பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி மகேஷ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள், அதிகாரிகளிடம் கலந்து ஆலோசனை செய்து விரைவில் புதிய குளம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்