search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதை பொருட்கள்"

    • ரவுடி தனத்தில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வுகூட்டம் திருவாரூர் மாவட்ட காவல் அலுவலத்தில் நடைபெற்றது.

    இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன், அனைத்து உட்கோட்ட மற்றும் சிறப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர்களும், மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் ஆய்வாளர்களும் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் ரௌடி தனத்தில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் , கஞ்சா, பான்மசாலா, குட்கா போன்ற தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும் எ, சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் வகையில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்ட பட்டது.

    கூட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட இன்ஸ்பெக்டர்கள் திருத்துறைப்பூண்டி கழனியப்பன், குடவாசல் ராஜ், பேரளம் சுகுணா மற்றும் ஆலிவலம் காவல் சரகத்தில் ஆடு திருட்டில் ஈடுபட்ட நபர்களை இரவு ரோந்தின் போது பிடித்து உரிய சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொண்ட ஆலிவலம் காவல் நிலைய காவலர்கள் சண்முகசுந்தரம் ராஜேஷ் ஆகிய 5 காவல் அலுவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினர். மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டி மற்றும் வெகுமதி அளிக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
    • இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்துகொண்டனர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும், ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது.

    கொலை வழக்குகள், வழிப்பறி குற்றவாளிகள் மற்றும் திட்டமிட்டு செயல்படும் குற்றவாளிகள் ஆகியோர்களை தொடர்ந்து கண்காணித்து முறையான நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் அறிவுறுத்தினார்.

    மேலும் மாவட்டத்தில் கொடுங்குற்ற வழக்குகளில் விரைவில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்தவர்கள், கொலை, கொள்ளை வழக்குகளில் விரைந்து செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த தனிப்படையினர் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளை நிறைவேற்றுவதில் சிறந்த பங்களிப்பை ஆற்றியவர்கள். நீதிமன்றத்தில் வழக்குகளை கோப்புக்கு எடுத்து விரைவில் முடித்திட திறம்பட செயல்பட்டவர்கள், சி.சி.டி. என்.எஸ். பிரிவில் சிறப்பாக செயல்பட்டவர்கள் ஆகியோருக்கு போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    பின்னர் சூப்பிரண்டு சுந்தரவதனம் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து காவல் வாகனங்களை மாதாந்திர ஆய்வு மேற்கொண்டார். காவல் வாகனங்களை ஆய்வு செய்து அதன் ஓட்டுநர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் ஒவ்வொரு உட்கோட்டத்தில் உள்ள இரு சக்கர வாகனங்களையும் ஆய்வு மேற்கொண்டு காவலர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    • ரோந்து பணியில் சிக்கினார்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தமிழ் நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் குட்கா ேபான்ற போைத பொருட்கள் விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது கடையில் குட்கா பான்மசாலா பக்கெட்கள் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் பெட்டிக்கடைக்காரர் இஸ்மாயில் ( வயது 59) என்பரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • கையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே இராஜகிரியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், புகையிலை மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்டவர்கள் போதைப் பொருள்களுக்கு எதிரான பதாகைகளை கைகளில் ஏந்தியபடி, இராஜகிரியில் அமைந்துள்ள முக்கிய வீதிகளின் வழியாக புகையிலை மற்றும் போதைப் பொருள்களுக்கு எதிராக கோசங்கள் எழுப்பியபடி, பேரணியாக சென்று, போதைகளின் தீமைகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் அந்த அமைப்பின் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • 17 மூட்டைகளில் இருந்த சுமார் ரூ.95 ஆயிரம் மதிப்பிலான 245 கிலோ போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே கே.ஆர்.தோப்பூர் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் தாரமங்கலம் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து 17 மூட்டைகளில் இருந்த சுமார் ரூ.95 ஆயிரம் மதிப்பிலான 245 கிலோ போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கடையில் போலீசார் சோதனை செய்வதை அறிந்து அதன் உரிமையாளர்களான சேலம் மணியனூர் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (37), லிங்கராஜ் (39) ஆகியோர் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதையடுத்து 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    • ஐதராபாத் சுங்க துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த 40 லட்சம் கடத்தல் சிகரெட்டு குச்சிகளும் அழிக்கப்பட்டன.

    ஐதராபாத்:

    தெலுங்கானாவில் ஐதராபாத் நகர சுங்க துறை மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் இணைந்து பல்வேறு தருணங்களில் போதை பொருட்களை பறிமுதல் செய்யும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    இதில், 27.9 கிலோ எடை கொண்ட ரூ.195.37 கோடி மதிப்பிலான ஹெராயின், ரூ.272.55 கோடி மதிப்பிலான மெபிடிரோன் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதனை தொடர்ந்து, மொத்தம் 216.69 கிலோ எடை கொண்ட போதை பொருட்கள் அதிகாரிகள் முன்னிலையில் நேற்று அழிக்கப்பட்டு உள்ளன.

    நைஜீரிய, பெனியனாய்ஸ், தான்சானியா, தென்ஆப்பிரிக்கா மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பயணிகளிடம் இருந்து இந்த போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

    இவற்றை தெலுங்கானாவின் மேச்சல் மல்காஜ்கிரி மாவட்டத்தின் தண்டிகல் கிராமத்தில் உள்ள ஐதராபாத் கழிவு மேலாண்மை திட்ட வசதி கொண்ட இடத்தில் வைத்து அழித்தனர்.

    இவற்றின் மதிப்பு ரூ.468.02 கோடி ஆகும். இவை தவிர, பல்வேறு நாடுகளில் இருந்து வந்த பயணிகளிடம் ஐதராபாத் சுங்க துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த 40 லட்சம் கடத்தல் சிகரெட்டு குச்சிகளும் அழிக்கப்பட்டன.

    • கார் ஆத்தூர் அருகே உள்ள கொத்தம்பாடி பஸ் நிறுத்தம் அருகே வந்த போது திடீரென கவிழ்ந்து விபத்தானது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் ஒரு கார் வந்து கொண்டு இருந்தது. அந்த கார் ஆத்தூர் அருகே உள்ள கொத்தம்பாடி பஸ் நிறுத்தம் அருகே வந்த போது திடீரென கவிழ்ந்து விபத்தானது.

    இதுப்பற்றி தெரியவந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் விபத்தான காரை சோதனை செய்தனர். அப்போது காரில் ஏராளமான மூட்டைகள் கிடந்தது. இதையடுத்து போலீசார் அதை பிரித்து பார்த்தனர். அப்போது அதில் ஏராளமான போதை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

    இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், காரில் போதை பொருள் கடத்தி வந்த போது விபத்தில் சிக்கியதால் டிரைவர் தப்பி ஓடியது தெரியவந்தது. காரில் மொத்தம் 42 மூட்டைகளில் போதை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து காரின் பதிவு எண்ணை வைத்து உரிமையாளர் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் தொப்பூர் வழியாக கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
    • சேலம்-தர்மபுரி மாவட்ட எல்லையான தொப்பூர் பகுதியில் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.

    சேலம்:

    சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கதிரவனுக்கு தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் தொப்பூர் வழியாக கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில் சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழு விரைந்து சென்று சேலம்-தர்மபுரி மாவட்ட எல்லையான தொப்பூர் பகுதியில் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.

    மினி சரக்கு லாரி

    அப்போது அவ்வழியாக வந்த ஒரு மினி சரக்கு லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் பான் மசாலா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை ஆய்வு செய்தபோது 700 கிலோ எடை கொண்ட ரூ.14 லட்சம் மதிப்பிலான குட்கா, ஹான்ஸ் உட்பட தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதை அடுத்து வாகனத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை ஓட்டி வந்த கர்நாடகவை சேர்ந்த அஜய்குமார் என்பவரையும் பிடித்து விசாரணை நடத்தினார்.

    டிரைவர் பெங்களூரில் இருந்து மேட்டூருக்கு போதை பொருட்களை கடத்தி செல்வதாக கூறினார். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
    • போதைப் பொருட்கள் விற்பதைக் குறித்து கேட்டால் அடியாட்களை வைத்து மிரட்டுகின்றனர்.

    கோவை,

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் மக்கள் குறைதீர்முகாம் நடந்தது.

    இதில் ஏராளமான பொது மக்கள், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் உள்ளிட்டோர் பங்கேற்று கோரிக்கை மனுக்களை வழங்கினர்.சூலூர் பதுவ ம்பள்ளியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் பகுதியில் செயல்படும் பெட்டிக்கடை ஒன்றில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள், கஞ்சா உள்ளிட்டவை விற்கப்படுகிறது. இதுகுறித்து அவரிடம் கேட்டால் அடியாட்களை வைத்து மிரட்டுகின்றனர்.

    போதை பொருட்கள் விற்கப்படுவதாலும், அதனை வாங்கி சாப்பிடுபவர்களாலும் அந்த வழியாக செல்லக்கூடிய பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் வெளியில் வரவே அச்சமாக உள்ளது. எனவே இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    கோவை மாநகராட்சி 20-வது வார்டு கவுன்சிலர் மரியராஜ், 26-வது வார்டு கவுன்சிலர் சித்ரா, 28-வது வார்டு கண்ணகி ஆகியோர் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

    திண்டுக்கல்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, கோவை சத்தி சாலையில் உள்ள எப்.சி.ஐ. குடோனுக்கு செல்லும் வழியில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் பாதை ஒன்று உள்ளது. தற்போது இந்த பாதையை சீரமைக்கும் பணியை இந்திய உணவுக் கழகம் செய்து வருகிறது.

    சத்தி சாலையில் இருந்து அந்த பாதை நுழையும் இடத்தில், நுழைவாயில் ஒன்று அமைத்து அதில் உணவுக் கழக வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட ஏதுவாக, வாயில் கதவு ஒன்றும் அமைக்கப்பட உள்ளதாக தெரிகிறது. அவ்வாறு அமைத்தால் மேற்கண்ட 3 வார்டுகளை சேர்ந்த மக்கள் தங்கள் குடியிருப்பு பகுதிக்கு செல்வதில் சிரமம் ஏற்படும்.

    மேலும் சத்தி சாலையிலிருந்து, அவினாசிக்கு செல்வோர் 6 கிலோமீட்டர் தூரம் வரை சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்படும். கலெக்டர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    • தங்கும் விடுதிகள், டெண்ட் குடிசைகள் புற்றீசல் போல் முளைத்து வருகின்றது. இங்கு விடுதிகளில் கஞ்சா, போதை காளான் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    • போதை காளான் தேடி வனப்பகுதியில் சிக்கிக் கொண்டார். மேலும் இதனால் உயிர் பலியும் ஏற்பட்டு வருகிறது.

    கொடைக்கானல்:

    சென்னையை சேர்ந்தவர் துரைராஜ் மகன் தனுஷ். இவரது நண்பர் சந்துரு. இவர்கள் 2 பேரும் கொடைக்கானல் மேல்மலை பூண்டிக்கு சுற்றுலா வந்தனர். தனியார் தங்கும் விடுதியில் தங்கி இருந்த இவர்கள் அப்பகுதியில் உள்ள ஏரியில் குளிக்க சென்றபோது தனுஷ் அடித்து செல்லப்பட்டார்.

    அவரை காப்பாற்ற முடியாததால் சந்துரு கொடைக்கானல் மற்றும் தீயணைப்புத்துறை யினருக்கு தகவல் கொடுத்தார். கடந்த 2 நாட்களாக படகு உள்ளிட்ட உபகரணங்களுடன் தீயணைப்புத்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் தனுஷ் பிணமாக மீட்கப்பட்டார். பூண்டி ஏரியில் ஆழமான பகுதியில் சென்றபோது சேற்றில் சிக்கி அவர் பலியாகி இருக்கலாம் என தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.

    இது குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேல்மலை கிராமங்களில் அனுமதி இல்லாமல் தங்கும் விடுதிகள், டெண்ட் குடிசைகள் புற்றீசல் போல் முளைத்து வருகின்றது. இங்கு விடுதிகளில் கஞ்சா, போதை காளான் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    போதை காளான் மோகத்தில் வாலிபர்கள் உயிரிழந்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளா வாலிபர் போதை காளான் தேடி வனப்பகுதியில் சிக்கிக் கொண்டார். மேலும் இதனால் உயிர் பலியும் ஏற்பட்டு வருகிறது. போதை வஸ்துக்கள் தேடி இளைஞர்கள் உடல் நலம் மற்றும் உயிரை இழப்பது தொடர் கதையாகி வருகிறது.

    எனவே அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு செய்து அனுமதியின்றி இயங்கும் தங்கும் விடுதிகள் மற்றும் போதை காளான், கஞ்சா விற்பனை செய்யும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • தனியாருக்கு சொந்தமான குடோனில் திடீர் சோ தனை மேற்கொண்டனர்.
    • ரூ.6 லட்சத்து 75 ஆயிரம் தொகையையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கடலூர்:

    சிதம்பரம் பகுதியில் போதை விற்பனை செய்வதை தடுக்க கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிதம்பரம் நகர எல்லையில் வீடு ஒன்றை குடோனாக வைத்து போதை பொருட்கள் சப்ளை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சிதம்பரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சு ரேஷ்முருகன் மற்றும் போலீசார் சிதம்பரம் 1-வது வார்டு சிங்காரத்தோப்பு பகுதியில் கண்ணுசாமி நகரில் தனியாருக்கு சொந்தமான குடோனில் திடீர் சோ தனை மேற்கொண்டனர்.

    அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 24 மூட்டைகளில் 277 கிலோ குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ரொக்கம் ரூ.6 லட்சத்து 75 ஆயிரம் தொகையையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சிதம்பரம் அருகே உள்ள சி.வீரசோழகன் டி.மண்டபம் துணிச்சிலமேடு பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் மகன் அருண்குமார் (34), சிதம்பரம் அருகே ஓமக்குளம் ஜமால்நகரைச் சேர்ந்த முகமது முஸ்தபா அப்பாஸ்அலி (42), புவனகிரி அருகே உள்ள வடக்குஆதிவராகநத்தம் வடக்கு மடவிளாக தெருவைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் சீனுவாசன் (35), சிதம்பரம் கொத்தவால் தெருவைச் சேர்ந்த ஜிஜந்தர்சிங் (33) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். விசாரணையில் கர்நாடகவில் இருந்து போதை பொருட்கள் கொண்டு வரப்பட்டதாக தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்கள் மதிப்பு ரூ.2 லட்சமாகும்.

    • குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
    • ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள்

    ராணிப்பேட்டை:

    வாலாஜா அடுத்த டோல்கேட் அருகே கடந்த 16-ந் தேதி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது 2 கார்களில் 4 டன் குட்கா கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த வர்ஷிராம் (25) , பிருஷா(22) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இவர்கள் 2 பேரின் குற்ற செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி பரிந்துரையின் பேரில் கலெக்டர் வளர்மதி,

    குட்கா கடத்தலில் ஈடுபட்ட வர்ஷிராம், பிருஷா ஆகிய 2பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.

    ×