என் மலர்
நீங்கள் தேடியது "செல்போன்கள்"
- ரூ.1½ கோடி மதிப்புள்ள செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
- பல்வேறு வகையில் பணம் இழக்க நேர்ந்தால் சைபர் கிரைம் எண் 1930 என்ற இலவச அழைப்பில் அழைக்கவும்.
மதுரை
மதுரை மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையம் கூடுதல் போலீஸ் சூப்பி ரண்டு மேற்பார்வையில் செயல்பட்டு வருகிறது. இங்கு மதுரை மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பதிவான செல்போன்கள் திருட்டு தொடர்பான புகார்கள் விசாரிக்கப்பட்டு வந்தன.
மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சிவபிரசாத் உத்தர வின்பேரில் மாவட்டத்தில் திருட்டுப்போன செல்போன் கள் குறித்து தீவிர விசா ரணை நடத்தப்பட்டது. இதன் மூலம் கடந்த 2 மாதங்களில் திருட்டுப்போன ரூ.13 லட்சத்து 81 ஆயிரத்து 750 மதிப்புள்ள செல்போன் கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சிவபிரசாத் துரித நடவடிக்கையால் இதுவரை ரூ.1 கோடியே 58 லட்சத்து 42 ஆயிரம் மதிப்புள்ள 1107 செல்போன்கள் கைப்பற்றப் பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் வங்கி மோசடி தொடர்பான புகாரில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு கடந்த 2 மாதத்தில் 2 லட்சத்து 82 ஆயிரத்து 406 ரூபாய் வாடிக்கையாளர் வங்கி கணக்கில் திரும்ப செலுத்தப்பட்டுள்ளது. இது வரை ரூ.44 லட்சத்து 28 ஆயிரத்து 805 உரியவர்க ளுடைய வங்கி கணக்கில் திரும்ப கிடைக்குமாறு நட வடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
வங்கியில் இருந்து பேசுவ தாக கூறி ஏமாற்றும் நபர்க ளிடம் விழிப்புணர்வோடு இருக்கவும், வங்கி கணக்கு எண், சிவிவி மற்றும் ஓடிபி போன்ற விபரங்களை முன் பின் தெரியாதவர்களிடம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும், பணம் இரட்டிப்பு வாக்குறுதி அளிக்கும் மொபைல் ஆப்களை நம்பி யும், ஆன்லைன் வேலை வாய்ப்பு வாக்குறுதியை நம்பியும், முன்பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் பல்வேறு வகையில் பணம் இழக்க நேர்ந்தால் சைபர் கிரைம் எண் 1930 என்ற இலவச அழைப்பு எண்ணிற்கும், https://www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியிலும் 24 மணி நேரமும் புகார். அளிக்கலாம் என்று மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சிவபிரசாத் தெரி வித்துள்ளார்.
- பொதுமக்கள் தங்கள் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட செல்போனை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
- தங்களிடம் செல்போன்களை காணவில்லை என்று வந்த புகார்களை ஆய்வு செய்தனர்.
கும்பகோணம்:
கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக சாலையில் செல்பவர்கள் செல்போன்களை தவற விட்டு சென்றனர். இதையடுத்து பொதுமக்கள் தங்கள் பகுதியில் கண்டெடு க்கப்பட்ட செல்போனை கும்பகோணம் போலீ சாரிடம் ஒப்படைத்தனர்.
இதை தொடர்ந்து கும்பகோணம் குற்றப்பிரிவு போலீசார், தங்களிடம் செல்போன்களை காணவில்லை என்று வந்த புகார்களை ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட செல்போன் குறிப்புகளோடு ஒத்துப்பார்த்ததில் 15 பேருக்கு சொந்தமான செல்போன் பற்றிய விவரங்கள் ஒத்துப்போனது. பின்னர், புகார்தாரர்கள் மேற்கு போலீஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர். 15 செல்போன்களை உரியவ ர்களிடம் கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு கீர்த்திவாசன் ஒப்படைத்தார்.
இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு கீர்த்திவாசன் நிருபர்களிடம் கூறுகையில்:-
செல்போன் வைத்திருப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். கும்பகோணம் சரக பகுதியில் செல்போன் மட்டுமல்லாது திருட்டு போன அனைத்து பொருட்களையும் விரைவில் மீட்கப்படும் என்றார்.
- கிரிக்கெட் மட்டுமின்றி அனைத்து விளையாட்டுகளிலும் பயிற்சி பெற்றால் நல்ல வேலை கிடைக்கும்.
- நான் படிக்கும்போது நல்ல ஷூ கிடையாது, நல்ல சாப்பாடு இல்லை. பெற்றோர்கள் கூலி வேலை செய்தனர். மிகவும் கஷ்டப்பட்டு தான் முன்னேறினேன்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் விமேக்ஸ் என்ற பெயரில் கிரிக்கெட் பயிற்சி அகாடமி துவக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் இந்திய வேகபந்து வீச்சாளர் நடராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
அந்நிகழ்ச்சியில் பேசிய நடராஜன், "கிராமப்புறங்களில் இருக்கும் வாய்ப்பைக் கொண்டு மாணவ மாணவிகளுக்கு விளையாட்டுத் துறையில் ஊக்கத்தை ஏற்படுத்த வேண்டும். கிரிக்கெட் மட்டுமின்றி அனைத்து விளையாட்டுகளிலும் பயிற்சி பெற்றால் நல்ல வேலை கிடைக்கும்.
"எந்த துறையை தேர்வு செய்தாலும் அதற்காக கடினமாக உழைக்க வேண்டும். 20 வயதில் ஒரு லட்சியம் வைத்து முன்னேறினால் 30 வயதில் இலக்கை அடைய முடியும். லட்சியம் இல்லாமல் இருந்தால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியாது. நான் படிக்கும்போது நல்ல ஷூ கிடையாது, நல்ல சாப்பாடு இல்லை. பெற்றோர்கள் கூலி வேலை செய்தனர். மிகவும் கஷ்டப்பட்டு தான் முன்னேறினேன். கிரிக்கெட் விளையாடும் பொழுது மூத்தவனான நீ எந்த வேலைக்கும் போகாமல் ஊர் சுற்றுகிறார்கள் என்று பேசினார்கள்.
இன்று சாதித்த பிறகு எனக்கு அப்பவே தெரியும் என்று சொல்கிறார்கள். இதுதான் உலகம் மற்றவர்களுக்காக வாழ வேண்டாம். உங்களுக்கு பிடித்த விஷயத்தை நோக்கி பயணம் செய்ய வேண்டும். இப்பொழுது கிராமப்புறம் மட்டுமன்றி அனைத்து இடங்களிலும் செல்போன்கள் வைத்து விளையாடுகின்றனர். உடலுக்கு ஆரோக்கியமாக நல்ல காற்றில் குறைந்தது நடைப்பயிற்சியாவது மேற்கொள்ள வேண்டும்" என கேட்டுக் கொண்டார்.
அனைத்து விளையாட்டுகளும் அவசியம். அதேபோல் படிப்பும் அவசியம். ஆனால் படிப்பிற்கும் எனக்கும் தூரம். படிப்பு இல்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன் என்ற நடராஜன், இப்போதும் எனக்கு மொழி பிரச்சனை இருக்கு என்றார். படிக்கும் பொழுது செங்கல் சூளையில் வேலை செய்து இருக்கிறேன், கட்டிட வேலையை செய்து இருக்கின்றேன். அதை ஒரு தடையாக நினைக்காமல் உழைத்ததால் தான் முன்னேற முடிந்தது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து விளையாட்டுகளிலும் அனைவரும் சாதிக்க வேண்டும். தன்னம்பிக்கையுடன் தன்னடக்கமும் முக்கியம் என்றும் நடராஜன் பேசினார்.
இதனையடுத்து நிகழ்ச்சியில் பங்கேற்ற கிரிக்கெட் வீரர் நடராஜனுடன் மாணவர்கள், இளைஞர்கள் ஆர்வமுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
- நோட் 40 ப்ரோபிளஸ் 100W wired பாஸ்ட் சார்ஜிங்கிற்கு சப்போர்ட் செய்யும்.
- ஸ்டேன்டர்டு வெர்சன் செல்போன்களுக்கு பயன்படுத்தப்படும் ஹெட்செட்களை பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இன்பினிக்ஸ் நிறுவனம் நோட் 40 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது. நோட் 40, நோட் 40 5ஜி, நோட் 40 ப்ரோ, நோட் 40 ப்ரோ 5ஜி மற்றும் நோட் 40 பிரோ பிளஸ் 5ஜி ஆகிய புதிய டிசைன் கொண்ட செல்போன்களை வெளியிட்டுள்ளது.
இந்த போன்கள் பிஎம்டபிள்யூ குரூப் உடன் இணைந்து தயாரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில்வர் பினிஷஸ், வெர்டிகிள் ரிட்ஜெஸ், ரெட் மற்றும் ப்ளூ கலருடன் வெளியாகி உள்ளது. இந்த செல்போன்கள் ஸ்டேன்டர்டு வெர்சன் செல்போன்களுக்கு பயன்படுத்தப்படும் ஹெட்செட்களை பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இன்பினிக்ஸ் நோட் 40 சுமார் 17,400 ரூபாய் அளவில் விற்பனையாகிறது. நோட் 40 5ஜி 21,600 ரூபாய்க்கும், நோட் 40 ப்ரோ (4ஜி) 23,300 ரூபாய்க்கும், நோட் 40 ப்ரோ (5ஜி) 25,800 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இதில் இருக்கும் சிறப்பம்சம் என்னவென்றால் உலகளவில் தற்போது மார்க்கெட்டில் கிடைக்கும் அனைத்து ஹெட்போன்களையும் இந்த புதிய டிசைன் செல்போன்களில் பயன்படுத்தலாம்.
நோட் 40 சீரிஸ் போன்கள் இந்த வருடம் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட போன்களில் இருந்து எந்த மாற்றமும் பெறவில்லை. அவற்றின் டிசைன் மட்டும் மாற்றப்பட்டுள்ளது. இது, விங் ஆஃப் ஸ்பீடு டிசைன் உடன் சில்வர் கலரை கொண்டுள்ளது.
இன்பினிக்ஸ் நோட் 40, நோட் 40 ப்ரோ MediaTek Helio G99 SoCs-ஐ கொண்டுள்ளது. நோட் 40 மற்றும் நோட் ப்ரோ போன்கள் 5,000mAh பேட்டரிகளை கொண்டுள்ளது. ப்ரோ பிளஸ் 4,600mAh பேட்டரியை கொண்டுள்ளது. நோட் 40 ப்ரோபிளஸ் 100W wired பாஸ்ட் சார்ஜிங்கிற்கு சப்போர்ட் செய்யும்.
- மின்சார சாதனங்களை ஈரமான கைகளுடனோ அல்லது தண்ணீருக்கு அருகிலேயோ பயன்படுத்த கூடாது.
- மின்கம்பிகளுக்கு அருகே பட்டங்களை பறக்கவிட கூடாது.
சென்னை:
தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறையின் கீழ் இயங்கும் மின் ஆய்வுத்துறை சார்பில் கடந்த மாதம் 26-ந்தேதி முதல் ஜூலை 2-ந்தேதி (இன்று) வரை தேசிய மின்சார பாதுகாப்பு வாரம் மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள், பள்ளியில் இருந்து பாதுகாப்பு தொடங்குகிறது' என்பதாகும். இதையொட்டி பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அரசு தலைமை மின் ஆய்வாளர் ஞா.ஜோசப் ஆரோக்கியதாஸ் கூறியதாவது:-
இந்த ஆண்டு தேசிய மின்சார பாதுகாப்பு வாரம் கொண்டாட்டமாக, பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பாக மின்சாரத்தை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வீடு, பள்ளி மற்றும் பொது இடங்களிலும் பாதுகாப்பான மின்சார பயன்பாட்டுக்கு பங்களிக்க இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி மின்சார சாதனங்களை ஈரமான கைகளுடனோ அல்லது தண்ணீருக்கு அருகிலேயோ பயன்படுத்த கூடாது. சுவிட்சை ஆப் செய்த பிறகே பிளக்கினை சொருகவோ, எடுக்கவோ வேண்டும். மின்கம்பங்கள் மீதோ, அதன் அருகேயுள்ள மரங்களின் மீதோ ஏறவேண்டாம். எச்சரிக்கை பலகைகள் இருக்கும் இடங்கள், மின்கம்பங்கள், மின்மாற்றிகள், கம்பி வேலிகள், மின் பெட்டிகளை தொடக்கூடாது.
மின்கம்பிகளுக்கு அருகே பட்டங்களை பறக்கவிட கூடாது. அறுந்து கிடக்கும் மின்கம்பிகளில் இருந்து விலகி இருக்கவேண்டும். ஒரே சாக்கெட்டில் அதிக சாதனங்களை சொருகுவதின் மூலமாக மின்சுமை ஏற்றுவதை தவிர்க்கவும். மேல்நிலை மின்கம்பிகளுக்கு அருகில் வேலைசெய்யும் கிரேன்கள் மற்றும் மொபைல் பிளான்ட்களில் இருந்து விலகி இருக்கவேண்டும்.
எலக்ட்ரிகல் சாக்கெட்டுகளில் விரல்களையோ, கம்பி, குச்சி போன்ற பொருள்களையோ சொருகவேண்டாம். சார்ஜ் செய்யும்போது செல்போனை பயன்படுத்தக்கூடாது. இடியுடன் கூடிய மழையின்போது திறந்தவெளிகள், மரங்கள் மற்றும் மின்கம்பி பாதைகளை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அனைத்துத் பகுதிகளையும் ஒரே நேரத்தில் சோதனையிட்டனர்.
- 150 போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் அனுபம்அகர்வால் தலைமையில் இன்று அதிகாலை 4 மணியளவில் மங்களூரு நகர சிறை வளாகத்தில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் 2 துணை கமிஷனர்கள், 3 உதவி கமிஷனர்கள், 15 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 150 போலீசார் ஈடுபட்டனர். அவர்கள் சிறைச்சாலையின் அனைத்துத் பகுதிகளையும் ஒரே நேரத்தில் சுற்றிவளைத்து சோதனையிட்டனர்.
இந்த சோதனையின் போது கைதிகளிடம் இருந்து 25 செல்போன்கள், 1 புளூடூத் கருவி, 5 இயர்போன்கள், 1 பென் டிரைவ், 5 சார்ஜர்கள், 1 கத்தரிக்கோல், 3 கேபிள்கள் மற்றும் கஞ்சா பாக்கெட்டுகள் மற்றும் பிற போதைப்பொருள் பாக்கெட்டுகள் சிக்கியது.
இந்த பொருட்கள் எப்படி சிறைக்குள் கொண்டு வரப்பட்டது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. சிறையில் அதிகாரிகள் நடத்திய சோதனை கடைசிவரை வெளியே தெரியாமல் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது.
- பெரும்பாலானோருக்கு வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை சம்பளம் வழங்கப்படுகிறது.
- வெளியில் பிராண்டட் மொபைல் போன் போல இருந்தாலும் உள்ளே விலை குறைவான அல்லது போலியான உதிரிபாகங்கள் பொருத்தப்பட்டுள்ளது.
திருப்பூர்:
பின்னலாடை தொழில் நிறைந்த திருப்பூரில் 20க்கும் மேற்பட்ட வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சொந்த மாநிலங்களை காட்டிலும் அதிக சம்பளம், எப்போதும் வேலை என்ற காரணத்தால் குடும்பத்துடன் குடிபெயர்ந்து திருப்பூரில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோருக்கு வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை சம்பளம் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை திருப்பூரின் புது மார்க்கெட், அனுப்பர்பாளையம், காதர்பேட்டை, பழைய மார்க்கெட் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்படும் தற்காலிக சந்தைகளில் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வர்.
வடமாநில தொழிலாளர்களின் வருகையை குறிவைத்து ஏராளமான வணிகர்கள் சாலையோர கடைகளையும் அமைத்து தங்கள் பொருட்களை விற்பனை செய்வது வழக்கம்.
இதுபோன்று வரும் வடமாநில தொழிலாளர்களிடம் ஒரு சிலர் தங்களிடம் விலை உயர்ந்த செல்போன்கள் இருப்பதாகவும், அவசர தேவை காரணமாக குறைந்த விலைக்கு விற்பதாக கூறி 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்களை 5 முதல் 10 ஆயிரம் ரூபாய்க்கு தருவதாக கூறி விற்பனை செய்து வருகின்றனர்.
வெளியில் பிராண்டட் மொபைல் போன் போல இருந்தாலும் உள்ளே விலை குறைவான அல்லது போலியான உதிரிபாகங்கள் பொருத்தப்பட்டுள்ளது. கேமராக்கள் இருக்க வேண்டிய இடத்தில் கண்ணாடிகளை வைத்தும், விலை குறைந்த கேமரா லென்ஸ்களை வைத்தும் போலியாக தயாரித்து பிராண்டட் மொபைல் என்ற பெயரில் விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுப்பர்பாளையம் அருகே தற்காலிக சந்தையில் இது போன்ற செல்போன் வாங்கிய வடமாநில வாலிபர் அதில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய செல்போன் கடையில் கொடுத்த போது போலியான உதிரி பாகங்களுடன் செல்போன் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. நாடோடி நபர்கள் போல ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பகுதியில் செல்போன் விற்பனை செய்யும் இவர்களிடம் மீண்டும் இதுகுறித்து கேட்க முடியாததால் ஏமாற்றமடைந்த வடமாநில தொழிலாளர்கள் தற்போது புகார் கொடுக்க முடியாமலும், ஏமாந்த பணத்தை திரும்ப பெற முடியாமலும் தவித்து வருகின்றனர்.
- இந்தியாவில் 6 மடங்கு அதிகமாக செல்போன்களை உற்பத்தி செய்கிறோம்.
- சர்வதேச தொலைத்தொடர்பு கண்காட்சியை பிரதமர் மோடி இன்று பார்வையிட்டார்.
புதுடெல்லி:
டெல்லி பாரத் மண்டபத்தில் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் கண்காட்சியை பிரதமர் மோடி இன்று பார்வையிட்டார். உலக தொலைத்தொடர்பு தரப்படுத்துதல் சபையையும் அவர் தொடங்கி வைத்து பார்த்தார்.
இந்தியா மொபைல் காங்கிரஸ் 2024-ன் 8-வது பதிப்பையும் மோடி தொடங்கி வைத்தார். இதில் 190-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 3 ஆயிரம் தொழில்துறை தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் பங்கேற்றனர்.
2014-ல் இந்தியாவில் 2 செல்போன் தயாரிப்பு யூனிட்டுகள் மட்டுமே இருந்தன. இன்று 200-க்கும் அதிகமானவை உள்ளன.
முன்பெல்லாம் வெளிநாடுகளில் இருந்து அதிக அளவு போன்களை இறக்குமதி செய்து வந்த நாம் இன்று முன்பைவிட 6 மடங்கு அதிகமாக செல்போன்களை இந்தியாவில் உற்பத்தி செய்து வருகிறோம்.
மொபைல் போன்களை ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா இருக்கிறது. மேட்-இன்-இந்தியா போன்களை உலகிற்கு வழங்குவதில் ஈடுபட்டுள்ளோம்.

பூமிக்கும், சந்திரனுக்கும் இடையேயான தூரத்தை விட 8 மடங்கு அதிகமான ஆப்டிக் பைபரை இந்தியா அமைத்தது. உலகின் 2-வது பெரிய 5ஜி தொலைத்தொடர்பு சந்தையாக இந்தியா மாறியுள்ளது.
டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை வெற்றிகரமாக உருவாக்குவதில் இந்தியா தனது அனுபவத்தை உலகின் பிற நாடுகளுடன் பகிர்ந்து கொள்கிறது
டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் உலகளாவிய கட்டமைப்பின் பொருள், உலகளாவிய வழிகாட்டுதல்கள், உலகளாவிய நிறுவனங்கள் உலகளாவிய நிர்வாகத்திற்கான முக்கியத்துவத்தை ஏற்றுக்கொள்ளும் நேரம் வந்துவிட்டது.
உலக அளவில் தொழில்நுட்பத்திற்காக செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை. அனைத்து டிஜிட்டல் கருவிகளும் மற்றும் இன்று கிடைக்கும் பயன்பாடுகள் எல்லைக்கு அப்பாற்பட்டவை, எனவே, எந்தவொரு நாடும் அதன் குடிமக்களை இணைய அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்க முடியாது.
விமானப் போக்குவரத்துத் துறைக்கான உலகளாவிய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைக் கட்டமைப்பை நாங்கள் உருவாக்கியது போல், டிஜிட்டல் உலகத்திற்கும் இதேபோன்ற கட்டமைப்பைத் தேவை.
இந்தியாவின் தரவுப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் தேசிய சைபர் பாதுகாப்பு உத்தி ஆகியவை பாதுகாப்பான டிஜிட்டல் சுற்றுச்சூழலை உருவாக்குவதற்கான எங்கள் அர்ப்பணிப்பைக் காட்டுகின்றன.
மோதலில் இருந்து உலகை இணைப்பதில் இந்தியா ஈடுபட்டுள்ளது.
இவ்வாறு மோடி பேசினார்.
- செந்தில்குமார் செட்டிப்பாளையத்தை அடுத்த தேங்கனி பகுதியில் குவாரி வைத்துள்ளார்.
- 3 வாலிபர்களை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர்கள் மடக்கி பிடித்தனர்.
கோவை
கோவை கிணத்துக்கடவு வாலி தோட்டத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 47). இவர் செட்டிப்பாளையத்தை அடுத்த தேங்கனி பகுதியில் குவாரி வைத்துள்ளார்.
இங்கு வடமாநிலத்தை சேர்ந்த சிக்கந்தர், சாகானி, பங்கச் சாகானி, நித்திஷ் ஆகியோர் கூலி வேலை செய்து வருகின்றனர். சம்பவத்தன்று அவர்கள் வழக்கம் போல வேலைகளை முடித்து குவாரியில் உள்ள தங்களாது அறைக்கு தூங்க சென்றனர்.
மறுநாள் அதிகாலை வடமாநில தொழிலாளர்கள் வேலைக்கு செல்வதற்காக எழுந்தனர். அப்போது அறையில் இருந்த அவர்களது 3 செல்போன்கள் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தேடி பார்த்து கிடைக்காததால் அவர்கள் சென்று செந்தில்குமாரிடம் தெரிவித்தனர்.
அவர் குவாரியில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி காமிராக்களை ஆய்வு செய்தார். அதில் 3 வாலிபர்கள் குவாரியில் இருந்து வெளியே செல்வது பதிவாகி இருந்தது. உடனே செந்தில்குமார் அவர்களை அழைத்து கொண்டு விரைந்தார்.
அப்போதுஅங்கு சென்று கொண்டு இருந்த 3 வாலிபர்களை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர்கள் மடக்கி பிடித்தனர். பின்னர் அந்த வாலிபர்களை செட்டிப்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீஸ் விசாரணையில் அவர்கள் விருதுநகரை சேர்ந்த மாரிஸ்வரன் (19), ஈச்சனாரியை சேர்ந்த குனசேகரன் (19), செட்டிப்பாளையத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் (19) என்பதும், நண்பர்களான அவர்கள் செட்டிப்பாளையத்தில் தங்கி கூலி வேலை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- 121 செல்போன்கள் மீட்கப்பட்டது.
- உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் நடந்தது.
vசெல்போன்கள் ,recovery, மீட்பு, cell phones
மதுரை
மதுரை நகரில் மீனாட்சி அம்மன் கோவில் (7), தெற்கு வாசல் (2), திடீர்நகர் (17), திலகர் திடல் (10), திருப்பரங்குன்றம் (5), தல்லாகுளம் (39), செல்லூர் (10), அண்ணாநகர் (31) ஆகிய இடங்களில் தொலைந்து போன ரூ.12.10 லட்சம் மதிப்பு உடைய 121 செல்போன்கள் போலீசாரால் மீட்கப்பட்டன. அவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் நடந்தது. போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.
மதுரை மாவட்டத்தில் 2 ஆண்டுகளில் மட்டும் ரூ.82.10 லட்சம் மதிப்பு உடைய மொத்தம் 821 செல்போன்கள் கைப்பற்றப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
- செல்போன் திருடர்கள் கைது செய்யப்பட்டு, ஏராளமான செல்போன்கள் மீட்கப்பட்டன
- வழிப்போக்கு நபரிடமோ, தெரியாத நபரிடமோ செல்போன்களை கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றார்.
கன்னியாகுமரி :
குமரி மாவட்டத்தில் அடிக்கடி செல்போன்கள் திருட்டு போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிர ண்டு ஹரிகிரண் பிரசாத் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். அவரது உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதன் பலனாக செல்போன் திருடர்கள் கைது செய்யப்பட்டு, ஏராளமான செல்போன்கள் மீட்கப்பட்டன. அவை உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த சூழலில் தக்கலை பகுதியில் மாயமான செல்போன்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் 211 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன.
அவற்றை உரியவர்க ளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி தக்கலையில் இன்று நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மீட்கப்பட்ட செல்போன்களை உரிய வர்களிடம் ஒப்படைத்தார்.
துணை சூப்பிரண்டு கணேசன், இன்ஸ்பெக்டர்கள் செந்தில்வேல் முருகன், எழிலரசு ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட னர். பின்னர் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறுகையில், வழிப்போக்கு நபரிடமோ, தெரியாத நபரிடமோ செல்போன்களை கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றார்.