search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் அறிவுறுத்தல்"

    • பிளாஸ்டிக் பைகளை வடிகால் வாய்க்காலில் போடுபவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கள்ளக்குறிச்சி கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
    • கள்ளக்குறிச்சி பேருந்து நிலைய பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி நகராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் நடைபெற்ற தூய்மைப் பணிகளையும், கா.மாமனந்தல்சாலையில் தூய்மை பணியாளர்கள் வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரிப்பதையும் ஆய்வு செய்தார். பின்னர், கா.மாமனந்தல் சாலையில் டெங்கு கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ளப்பட்டுவரும் களப்பணியாளர்களின் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது வீடு வீடாக சென்று, டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு கொசு புழு ஒழிப்பு பணியாளர்களை மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகே உள்ள வடிகால் வாய்க்கால், கள்ளக்குறிச்சி பேருந்து நிலைய பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேருந்து நிலையத்தை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரித்திடவும், வடிகால் வாய்க்கால்களில் நெகிழிப் பைகளை போடுபவர்களை கண்டறிந்து போதிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்திட வேண்டும் என மாவட்ட கலெக்டர் நகராட்சி அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். தொடர்ந்து கள்ளக்குறிச்சி நகராட்சி சார்பில் ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பசுமை உரப்பூங்கா, மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை மறுசுழற்சி செய்தல் உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டு, அன்றாடம் சேகரிக்கும் குப்பைகளை அன்றே தரம் பிரித்து உரம் தயாரித்தல், மறுசுழற்சி செய்யும் பணிகளை மேற்கொள்ளவும் நகராட்சி பணியாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார். ஆய்வின்போது நகரமன்ற தலைவர் சுப்புராயலு, நகராட்சி ஆணையாளர் குமரன், நகராட்சி பொறியாளர் முருகன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கடலூர் கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

    கடலூர்:

    காவிரி டெல்டா பகுதியில் அதிக கனமழை பெய்வதால் மேட்டூர் அணை நீர் மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து உபரி நீரினை காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டு தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கல்லணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் வெளியேற்றப்பட உள்ளது. இவ்வறிப்பினை தொடர்ந்து வெள்ளநீர் கொள்ளிடம் ஆற்றின் வழியாக வெளியேற் றப்பட்டு வருகிறது. இதனால் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் மற்றும் அதனை சார்ந்த தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட வட்டாட்சியரின் உரிய அறிவுரைக்குப் பின் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும். மேலும், பொது மக்கள் உரிய பாதுகாப்பு ஏதுமின்றி கொள்ளிடம் ஆற்றில் குளித்தல், நீந்துதல், மீன் பிடித்தல், நீர்நிலைகளின் அருகே குழந்தைகளை அனுமதித்தல், கால்நடைகள் மேய்த்தல், பாதுகாப்பற்ற முறையில் புகைப்படங்களோ அல்லது செல்பி எடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் செய்திக் குறிப்பில் கூறியிருந்தார்.

    ×