search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விநாயகர் சிலைகள்"

    • சென்னையில் பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.
    • கிரேன் மற்றும் டிராலி வசதிகளும் கடற்கரை பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன

    சென்னை:

    தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 7-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டன.

    சென்னையில் 1,500-க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு தினமும் பூஜைகள் நடைபெற்றன.

    கடந்த 11-ந் தேதி அன்று 100-க்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்டன. நேற்றும் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப் பட்டது. இந்த நிலையில் இன்று சென்னையில் பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.

    சென்னை மாநகர் முழு வதும் வைக்கப்பட்டிருந்த சிலைகளில் இதுவரை கரைத்தது போக 1,300 சிலைகள் இன்று 17 வழித் தடங்கள் வழியாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.

    பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை, நீலாங்கரை பல்கலை நகர், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை, காசிமேடு மீன்பிடி துறை முகம் ஆகிய 4 இடங்களில் சென்னை மாநகர பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் அனைத்தும் ஊர் வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.

    சென்னை புறநகர் பகுதிகளான ஆவடி பகுதியில் வைக்கப்பட்டிருந்த 600-க்கும் மேற்பட்ட சிலைகள் எண்ணூர் கடற்கரை பகுதியில் கரைக்கப்பட்டன. இதேபோன்று தாம்பரம் சுற்று வட்டாரத்தில் வைக்கப்பட்டிருந்த 600 சிலைகளும் கடலில் கரைக்கப்பட்டன.

    இதையொட்டி கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருந்தது. பெரிய விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக கிரேன் மற்றும் டிராலி வசதிகளும் கடற்கரை பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

    விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பவர்கள் தண்ணீரில் மூழ்காமல் இருப்பதற்காக முன்னேற்பாடுகளையும் போலீசார் மேற்கொண்டு இருந்தனர்.

    நன்கு நீச்சல் தெரிந்த வீரர்களும், மீனவர்களும் சிலைகள் கரைக்கப்பட்ட இடங்களில் கண்காணிப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். மெரினா கடற்கரை பகுதி முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டு இருந்தது.

    சென்னை மாநகர் முழுவதும் 16,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டிருந்தனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணிகளை கவனித்தார்கள். சென்னை போலீஸ் கமிஷனர் அருண் மேற் பார்வையில் கூடுதல் கமிஷனர்கள் கண்ணன், நரேந்திரன் நாயர் ஆகியோரும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு இருந்தனர்.

    ஊர்வல பாதைகள் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. உயர் போலீஸ் அதிகாரிகள் தாங்கள் இருக்கும் இடங்களில் இருந்து ஊர்வலத்தை கண்காணிப்பதற்கான வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.

    இன்று காலை 10 மணியில் இருந்தே விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. பல்வேறு இடங்களில் பிற்பகலில் சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.

    இந்து முன்னணி, பாரத் இந்து முன்னணி உள்பட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த அனைத்து சிலைகளுமே கடைசி நாளான இன்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.

    பாரத் இந்து முன்னணி சார்பில் புளியந்தோப்பு, பட்டாளம் ஆஞ்சநேயர் கோவில் அருகில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பாரத் இந்து முன்னணி மாநில தலைவர் ஆர்.டி. பிரபு ஜி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

    இதேபோன்று அனைத்து இந்து இயக்க நிர்வாகிகளும் தங்களது பகுதியில் விநாய கர் ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். விநாயகர் ஊர் வலம் மற்றும் சிலை கரைப்பை யொட்டி சென்னை மாநகர் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு இருந்தனர்.

    • இன்று மாலை ஊர்வலமாக எடுத்துச்சென்று காவிரி ஆற்றில் கரைக்கப்பட உள்ளன.
    • 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    திருச்சி:

    நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. திருச்சி மாவட்டத்திலும் பக்தர்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை கோலாகலமாக கொண்டாடினர்.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி மாநகரில் 242 இடங்களிலும், புறநகர் பகுதிகளில் 932 இடங்களிலும் என திருச்சி மாவட்டத்தில் மொத்தம் ஆயிரத்து 174 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது.

    இதை தொடர்ந்து விநாயகர் சிலைகள் அனைத்தும் இன்று மாலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்பட உள்ளன.


    விநாயகர் சிலை கரைப்பதற்கு எடுத்து செல்லும் போது சிலை அமைப்பாளர்கள் மற்றும் சிலை அமைப்பு இயக்கத்தினர் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்.

    சிலை அமைப்பாளர்கள் ஊர்வலத்தில் எடுத்துச் செல்லும் விநாயகர் சிலைக்கு உரிய பாதுகாப்பு அளிக்க தனிப்பட்ட தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    ஊர்வலத்தின் போது ஒலிப்பெருக்கிகளின் சத்தம் குறிப்பிட்ட டெசிபலுக்கு மிகாமல் ஒலிக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். ஊர்வலம் மாலை 3, 4 மணிக்குள் புறப்பட வேண்டும். இரவு 10 மணிக்குள் ஊர்வலத்தை கண்டிப்பாக முடித்துவிட வேண்டும்.

    ஊர்வலம் செல்லும் பாதையில் எந்தவொரு இடத்திலும், எக்காரணத்தைக் கொண்டும் ஊர்வலத்தை இடைநிறுத்தம் செய்யாமல், விரைந்து நடத்தி சிலை கரைக்கும் இடம் சென்று சேர வேண்டும்.

    ஊர்வலத்தின் போது அமைப்பாளர்கள் அவர்களது குழுவினரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். ஊர்வலத்தில் அரசியல் கோஷங்கள், பிற மதத்தினரை புண்படுத்தும் வகையிலான கோஷங்கள் மற்றும் செயல்களில் ஈடுபடக்கூடாது.

    மது அருந்தியவர்கள் ஊர்வலத்தில் கலந்து கொள்ளாமல் இருப்பதை விழாக்குழுவினர் உறுதி செய்ய வேண்டும். எந்த ஒரு சிறு பிரச்னையும் இன்றி ஊர்வலம் செல்ல உறுதுணையாக இருக்க வேண்டும்.

    சிலைகளை கரைக்க கொண்டு செல்லும்போது நான்கு சக்கர வாகனங்களில் மட்டுமே கொண்டு செல்ல வேண்டும்.

    3 சக்கர வாகனம் மற்றும் மாட்டு வண்டிகளில் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லக்கூடாது. பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விசர்ஜன நிகழ்ச்சியில் பின்பற்ற வேண்டும் என திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி தெரிவித்துள்ளார்.

    மேலும் விநாயகர் சிலை கரைக்கப்படும் திருச்சி காவிரி பாலத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இரவு 10 மணி வரை சிலைகள் கரைப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால், சிலை கரைக்கப்படும் இடத்தில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ஒலி, ஒளி அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    பொதுமக்கள் பாலத்தின் கைப்பிடி சுவர் பகுதிக்கு சென்றுவிடாதபடி சவுக்கு மரங்களை கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

    சிலை கரைப்பதற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் பகுதியில் பாலத்தின் கைப்பிடி சுவரை ஒட்டியவாறு மேடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்களில் ஊர்வலமாக கொண்டு வரும் வாகனத்தை மேடையின் அருகே திருப்பி நிறுத்தி, சிலையை அந்த மேடைக்கு மாற்றி, அங்கிருந்து காவிரி ஆற்றில் கரைக்கும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.

    திருச்சி மாநகரத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் சிலை கரைப்பு நிகழ்வை முன்னிட்டு, திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி தலைமையில், 3 காவல் துணை ஆணையர்கள், 1 கூடுதல் காவல் துணை ஆணையர், 8 காவல் உதவி ஆணையர்கள், 41 காவல் ஆய்வாளர்கள், 101 உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் என மொத்தம் 1700 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள்.

    ஊர்வலத்தின்போது முக்கிய சாலை சந்திப்புகள் மற்றும் பிரச்சனைக்குரிய இடங்கள் ஆகியவை கண்டறியப்பட்டு, அவ்விடங்களில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறா வண்ணம் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது.

    மேலும் விநாயகர் ஊர்வலத்தின்போது பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் எவ்வித இடையூறின்றி விநாயகர் சிலை ஊர்வலம் செல்வதற்காக, போக்குவரத்து வழித்தடங்களில் சிறிய மாற்றம் செய்யப்பட்டு, விநாயகர் சிலை ஊர்வலமானது அமைதியான முறையில் நடைபெற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    திருச்சி புறநகர் மாவட்ட பகுதிகளில் நேற்று முதல் விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று புத்தாநத்தம் இடையபட்டி விநாயகர் குளத்தில் 17 சிலைகள் கரைக்கப்பட உள்ளது.

    பதட்டமான பகுதிகளாக கருதப்படும் துவரங்குறிச்சி மற்றும் புத்தாநத்தம் ஆகிய போலீஸ் சரகத்துக்கு உட் பட்ட பகுதிகளில் கூடுதல் போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டுத்தப்பட உள்ளனர்.

    மேலும் ஊர்வலத்தில் பிரச்னை ஏற்படுத்தும் நபர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண் குமார் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக புத்தாநத்தம் காளியம்மன் கோவில் பகுதியில் இருந்து புத்தாநத்தம் பஜார், ஜும்மா மசூதி வழியாக ஊர்வலமாக சென்று அந்தக் குளத்தில் சிலைகள் விஜர்சனம் செய்யப்படுகிறது.

    இதையடுத்து அங்கே 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    • வருகிற செப்டம்பர் 7-ந் தேதி விநாயகர் சதுர்த்தி.
    • 12 அடி உயர சிலைகள் தயாரிக்க தற்போது அனுமதி இல்லை.

    கோவை:

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற செப்டம்பர் 7-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

    அன்று காலை விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறும். பின்னர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படும்.

    விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் சுண்டக்காமுத்தூர், செல்வபுரம், தெலுங்குபாளையம் உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

    சிலை தயாரிப்பு, வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பணிகளில் தொழிலாளர்கள் விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து தெலுங்கு பாளையத்தில் விநாயகர் சிலைகளை தயாரித்து வரும் சக்திவேல் முருகன் என்பவர் கூறியதாவது:-

    சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் கிழங்கு மாவு, ஓடக்கல் மாவு, பேப்பர் கூழ் உள்ளிட்ட கலவைகளை கலந்து 2 அடி முதல் 10 அடி வரையிலான உயரம் மற்றும் அகலங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. 12 அடி உயர சிலைகள் தயாரிக்க தற்போது அனுமதி இல்லை.

    எலியின் மீது விநாயகர் அமர்ந்து இருப்பது, டிராகன் வடிவ வாகனத்தில் விநாயகர், 2 மாடுகளை கொண்டு ஏர் கலப்பையுடன் உழவுப்பணியை மேற்கொள்ளும் விவசாயி வடிவம், நந்தி, மான், மயில், குதிரையில் அமர்ந்திருக்கும் விநாயகர், சிவன் சிலையை கையில் உயர்த்தி பிடித்திருக்கும் விநாயகர் என பல்வேறு வடிவங்களில் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

    இந்த ஆண்டு ஒரு பக்கம் குபேரன், மறுபக்கம் லட்சுமி, நடுப்பகுதியில் விநாயகர் அமர்ந்து இருப்பது போன்ற குபேர லட்சுமி விநாயகர் சிலை, சிங்கங்கள் பறப்பது போல விநாயகருடன் கூடிய சிலை, 6 கைகளுடன் கூடிய ரத்தின விநாயகர் சிலை, 5 முகம், மூன்று முகங்களுடன் கூடிய விநாயகர் சிலைகள் புதிய வரவாகும். மாசு ஏற்படுத்தாத வாட்டர் கலர் சிலைக்கு பூசப்படுகிறது.

    மூலப்பொருட்களின் விலை உயர்வால் தயாரிப்பு செலவும் உயர்ந்துள்ளது. இதனால் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது நடப்பாண்டு விநாயகர் சிலைகளின் விலை உயர்ந்துள்ளது.

    அதிக உயர் கொண்ட சிலைகளின் விலை கடந்தாண்டை விட ரூ.500 முதல் ரூ.1500 வரை உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு விநாயகர் சிலைக்கான ஆர்டர்கள் ஓரளவுக்கு வந்துள்ளன. சதுர்த்தி விழா நெருங்கும்போது விற்பனை மேலும் அதிகரிக்கும்.

    இந்த ஆண்டு 2 அடி சிலை ரூ.1000, 3 அடி சிலை ரூ.2500, 4 அடி சிலை ரூ.4 ஆயிரம், 5 அடி சிலை ரூ.6500, 7 அடி சிலை ரூ.11 ஆயிரம், 8 அடி சிலை ரூ.18 ஆயிரம், 9 அடி சிலை ரூ.20 ஆயிரம், 10 அடி சிலை ரூ.27 ஆயிரம் முதல் விற்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • வேன்களில் ஊர்வலமாக கொண்டு சென்றதால் பலத்த பாதுகாப்பு
    • 300-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் இந்து அமைப்புகள் சார்பில் பிரதிஸ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், கடந்த 3 நாட்களாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு விஜர்சனம் செய்யப்பட்டு வருகின்றன.

    அகஸ்தீஸ்வரம் ஒன்றிய இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த 108 விநாயகர் சிலைகள் அனைத்தும் நேற்று பிற்பகல் சுசீந்திரத்து க்கு கார், வேன், லாரி, மினிலாரி, டெம்போ, ஜீப், டிரக்கர் போன்ற வாக னங்கள் மூலம் கொண்டு வரப்பட்டது.

    அதன் பிறகு தாணுமாலய சுவாமி கோவில் முன்பு இருந்து இந்த சிலைகள் கன்னியாகுமரிக்கு அலங்கரிக்கப்பட்ட வாகன ங்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ஊர்வலத்தில் இந்து முன்னணி அமைப்பினர் திரளாக பங்கேற்றனர். வழுக்கம்பாறை, ஈத்த ங்காடு, பொற்றையடி, மந்தாரம்புதூர், அச்சங்கு ளம், கொட்டாரம், பெருமா ள்புரம், மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பு,

    பரமார்த்தலிங்கபுரம், பழத்தோட்டம் சந்திப்பு, விவேகானந்தபுரம் சந்திப்பு, ரெயில் நிலைய சந்திப்பு வழியாக கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கி லித்துறை கடற்கரையை ஊர்வலம் சென்றடைந்தது.

    அங்கு 108 விநாயகர் சிலைகளுக்கும் மகா தீபாரதனை நடந்தது. அதன் பின்னர் முக்கடல் சங்கமத்தில் சிலைகள் கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது. வீடுகளில் பூஜையில் வைத்திருந்த விநாயகர் சிலைகளையும் சிலர் குடும்பத்துடன் எடுத்து வந்து கன்னியாகுமரி கடலில் கரைத்தனர்.

    நெல்லை மாவட்டம் அம்பலவானபுரத்தில் இருந்து விநாயகர் சிலை அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஊர்வலமாக எடுத்து வந்து நேற்று மாலை கன்னியாகுமரி கடலில் கரைக்கப்பட்டது.

    விநாயகர் சிலை கரைப்பை யொட்டி கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    மேலும் கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கடலுக்குள் இறங்கி நின்று விநாயகர் சிலையை பாதுகாப்பாக கரைப்பதற்கு ஏற்பாடு செய்தனர். கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமையில் தீயணைக்கும் படைவீரர்களும் பாதுகா ப்பில் பங்கேற்றனர்.

    குருந்தன்கோடு, இர ணியல், இரணியல்கோணம், திங்கள்நகர், பிலாக்கோடு, ஊற்றுக்குழி, தலக்குளம், கீழவிளை உட்பட சுற்று வட்டார கோயில்களில் வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைகள் திங்கள் நகர் இராதாகிருஷ்ணன் கோவில் முன்பிருந்து மண்டைக்காடு நோக்கி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. காலை 11 மணியில் இருந்தே பல்வேறு இடங்களில் இருந்தும் வந்த 120-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் மேள தாளத்துடன் அலங்கரி க்கபட்ட வாகனங்களில் கொண்டு வரப்பட்டன.

    பின்னர் திங்கள்நகர் ராதாகிருஷ்ணன் கோவில் முன்பிருந்து பக்தர்கள் ஆடிப்பாட ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மண்டைக்காடு பகுதியில் உள்ள கடலில் கரைக்க ப்பட்டது. ஊர்வலத்தை யொட்டி ஏராளமான போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    கிள்ளியூர் ஒன்றிய இந்து முன்னணி சார்பில் ஒன்றியத்திற்குட்பட்ட கரு ங்கல், பாலப்பள்ளம், கிள்ளியூர், நல்லூர், உண்ணாமலைக்கடை, கீழ்குளம் பேரூராட்சிகள் மற்றும் பாலூர், மத்திகோடு, திப்பிரமலை, கொல்லஞ்சி, மிடாலம், நட்டாலம் போன்ற ஊராட்சி பகுதிகளில் கடந்த வாரம் 116 விநாயகர் சிலைகள் பூஜையில் வைக்கப்பட்டு இருந்தன.

    அவை வாகனங்கள் மூல மாக ஊர்வலமாக கருங்கல் கூனாலுமூடு தர்ம சாஸ்தா கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.

    அங்கிருந்து பாலூர், திருஞானபுரம், மா ங்கன்றுவிளை, மங்கலக்கு ன்று, தேவிகோடு, உதயமா ர்த்தாண்டம் வழியாக மிடா லம் கடற்கரைக்கு சென்றது. அங்கு பஜனை மற்றும் பூஜைக்கு பின் கடலில் விசர்ஜனம் செய்யப்பட்டது.

    இவ்வ ஊர்வலத்தை யொட்டி அசம்பாவிதங்கள் ஏற்படாதவகையில் கருங்கல் காவல் ஆய்வாளர் இசக்கி துரை தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர் காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • இன்று காலை மீண்டும் கரைப்பு
    • கரையில் ஒதுங்கிய விநாயகர் சிலைகளை விசுவ ஹிந்து பரிஷத் பொறுப்பாளர்கள் கடலில் கரைத்து உழவாரப்பணி செய்யப்பட்டது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் பல்வேறு இந்து அமைப்பு கள் சார்பிலும், பல்வேறு ஊர் கோவில் சார்பாகவும், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. ஏராளமான விநாயகர் சிலைகளை வீடுகளிலும், வீதிகளிலும் பிரதிஷ்டை செய்து, பூஜைக்கு வைத்து அதனை கடந்த வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களாக கடற்கரைகளில் கொண்டு பூஜைக்கு வைத்திருந்த விநாயகரை கரைக்கும் நிகழ்ச்சி நடந்து முடிந்தது.

    அப்படி கடற்கரையில் கரைப்பதற்காக விநாயகர் சிலைகளை கரைத்து விட்டு சென்ற பிறகும், அலை களின் சீற்றத்தால் மீண்டும் கடற்கரைக்கு திரும்பி ஏராளமான விநாயகர் சிலைகள் சங்குத்துறை கடற்கரையில் மிதந்து கொண்டும், கடற்கரை ஓரத்தில் ஒதுங்கியும் இருந்த விநாயகர் சிலைகளை இன்று காலை விஷ்வ ஹிந்து பரிஷத் மாநகர தலைவர் நாஞ்சில் ராஜா தலைமையில் சங்குதுறை கடற்கரையில் கரையில் ஒதுங்கிய விநாயகர் சிலை களை விசுவ ஹிந்து பரிஷத் பொறுப்பா ளர்கள் மீண்டும் அதை கடலில் கரைத்து உழவாரப்பணி செய்யப் பட்டது.

    • நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு
    • தொடக்க பூஜைக்குப்பின் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் ஏற்றப்பட்டது.

    மணவாளக்குறிச்சி :

    மணவாளக்குறிச்சி பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டடிருந்த விநாயகர் சிலைகள் சின்னவிளை கடலில் விஜர்சனம் செய்யப்பட்டது. மணவாளக்குறிச்சி ஜங்சன், புதுக்கடை தெரு, பம்மத்து மூலை, வடக்கன்பாகம், பிடாகை, சேரமங்கலம், பெரியகுளம் ஜங்ஷன் ஆகிய 7 இடங்களில் வைக்கப்பட்டிருந்த 8 சிலைகளும் மணவாளக்குறிச்சி யானை வரவழைத்த பிள்ளையார் கோவில் வந்து, அங்கு நடந்த தொடக்க பூஜைக்குப்பின் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் ஏற்றப்பட்டது.

    இந்து முன்னணி மாவட்ட ஆலோசகர் மிசா சோமன் துவக்க உரையாற்றினார். மணவாளக்குறிச்சி பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து கோவிலுக்கும் ஊர்வலம் சென்று மாலை ஜங்ஷன் வந்தடைந்தது. பின்னர் சின்னவிளை கடலில் விஜர்சனம் செய்யப்பட்டது.

    விஜர்சன விழாவிற்கு அசம்பாவிதங்கள் நடக்காமலிருக்க மாவட்ட உதவி துணை சூப்பிரண்டு மதியழகன் மற்றும் குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கல்குளம் தாசில்தார் கண்ணன், சிறப்பு தாசில்தார் ரமேஷ், குளச்சல் ஆர்.ஐ. முத்து பாண்டி, மணவாளக்குறிச்சி வில்லேஜ் ஆபீசர் பாலமுருகன், மணவாளக்குறிச்சி பஞ்சாயத்துக்கு செயல் அலுவலர் ஏசுபாலன் ஆகியோர்கள் சம்பவ இடத்தில் முகாமிட்டிருந்தனர்.

    • நேற்றும் இன்றும் கரைப்பதற்கு போலீசார் அனுமதி வழங்கி இருந்தனர்.
    • சென்னையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது.

    சென்னை:

    சென்னையில் விநாயகர் சதுர்த்தியை யொட்டி கடந்த 18-ந்தேதி அனைத்து இடங்களிலும் விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டன.

    சென்னை மாநகர பகுதிகளில் 1,519 சிலைகளும் தாம்பரம் கமிஷனர் அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதியில் 425 சிலைகளும், ஆவடி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 214 சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டு கடந்த ஒரு வாரமாக பூஜை செய்யப்பட்டு வந்தது. இதன்மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2,148 சிலைகள் பூஜை செய்யப்பட்டு வந்தன.

    இந்த சிலைகளை நேற்றும் இன்றும் கரைப்பதற்கு போலீசார் அனுமதி வழங்கி இருந்தனர். இதற்காக பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை, நீலாங்கரை பல்கலைநகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை ஆகிய நான்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தன. இந்த இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முதல் சென்னையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. முதல் நாளான நேற்று சுமார் ௩௦ சதவீதம் அளவுக்கு விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. இன்று 2-வது நாள் நடைபெற்ற ஊர்வலத்தில் சென்னை மாநகரில் உள்ள 1500-க்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளன. 2,148 சிலைகளும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படுகிறது.

    இந்த சிலைகளை கரைப்பதற்காக வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை என தனித்தனியாக ஊர்வலம் பாதைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழியாக மட்டுமே சிலைகளை எடுத்துச்செல்ல அனுமதிக்கபட்டிருந்தது. இதன்படி இன்று காலை முதலே விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. பகலில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் திருவல்லிக்கேணியில் இருந்து பிரமாண்ட ஊர்வலம் நடைபெற்றது.

    அதேபோன்று பாரத் இந்த முன்னணி அமைப்பின் சார்பில் சூளை பகுதியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையும் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது விநாயகர் சிலைகள் எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி கடலில் கரைக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் ஊர்வலம் பாதைகள் முழுவதிலும் போலீசார் கண்காணித்து வந்தனர்.

    பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு, திருவொற்றியூர் ஆகிய கடற்கரை பகுதிகளில் சிலை களை கரைப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பட்டினப்பாக்கம் கடற்கரையில் சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    தென் சென்னை கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா மேற்பார்வையில் பட்டினப்பாக்கத்தில் முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. சிலைகளை கடலில் எடுத்துச் சென்று கரைப்பதற்கு ராட்சத கிரேன்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

    அதன் மூலமாக விநாயகர் சிலைகளை கடலுக்குள் தூக்கிச் சென்று கரைத்தனர். கண்காணிப்பு கோபுரங்களும் கடற்கரை பகுதிகளில் அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். ஊர்வலம் செல்லும் பாதைகளை யொட்டி உள்ள வழிபாட்டு தலங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    குறிப்பாக திருவல்லிக்கேணியில் ஒவ்வொரு ஆண்டும் அனுமதிக்கப்படாத இடம் வழியாக இந்து முன்னணி சார்பில் ஊர்வலம் நடத்தப்படும். இந்த ஆண்டும் அது போன்று ஊர்வலம் நடத்தப்பட்டது.

    பின்னர் ஊர்வலத்தில் சென்றவர்கள் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து திருவல்லிக்கேணி ஐஸ்அவுஸ் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 25 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு தினந்தோறும் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் ஒவ்வொரு வருடமும் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு தினந்தோறும் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. பின்னர் 5-ம் நாள் விநாயகர் சிலை கள் ஊர்வலமாக எடுத்து சென்று பரமத்தி வேலூர் காசி விஸ்வநாதர் கோவில் காவிரி கரையில் உள்ள காவிரி ஆற்றில் கரைப்பது வழக்கம்.

    அதேபோல் இந்த வருட மும் நாமக்கல் மாவட்டம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் 118 விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு ஆங்காங்கே நீர் நிலைகளில் கரைக்கப்பட்டது. 5-ம் நாளான நேற்று மாலை வேலூரில் இருந்து காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியில் கடைவீதி, காத்தாக்கண்டர் பிரிவு சாலையில் இந்து முன்னணி சார்பில் இந்து எழுச்சி ஒற்றுமை பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவிற்கு பரமத்தி ஒன்றிய தலைவர் ராஜவேல் தலைமை வகித்தார். பரமத்தி ஒன்றிய கேசவன் முன்னிலை வகித்தார். பரமத்தி ஒன்றிய ரமேஷ் வரவேற்றார். இந்து முன்னணி சேலம் கோட்ட தலைவர் சந்தோஷ்குமார் எழுச்சியுரையாற்றினார். மாவட்ட பொதுச்செய லாளர் கோபிநாத், மாவட்ட செயலாளர்கள் சரவணன், ஜெகதீசன், மாவட்ட பொருளாளர் பிரபாகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார் நன்றி கூறினார்.

    அதனை தொடர்ந்து பரமத்தி வேலூர் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் செந்தில்குமார் கொடியசைத்து விநாயகர் சிலை ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

    கடைவீதி பகுதியில் இருந்து தொடங்கிய விநா யகர் விசர்ஜன ஊர்வலம் திருவள்ளுவர் சாலை, பழைய பை- பாஸ் சாலை, சந்தை பகுதி, பேட்டை பஞ்சமுக ஹேரம்ப விநாயகர் கோயில், பஸ்நிலையம், அண்ணா சாலை மற்றும் காவிரி சாலை வழியாக சென்று காசிவிஸ்வநாதர் கோவில் அருகில் உள்ள காவிரியாற்றில் விநாயகர் சிலைகள் நேற்று இரவு ஒவ்வொரு சிலையாக வரிசையாக கரைக்கப்பட்டது. பாதுகாப்பு கருதி நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தலைமையில், பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமுரளி மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • நாகர்கோவிலில் போக்குவரத்தை மாற்றிவிட ஏற்பாடு
    • 24-ந்தேதி இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை நீர் நிலைகளில் கரைக்கப்படு கிறது.

    நாகர்கோவில் :

    விநாயகர் சதுர்த்தியை யொட்டி குமரி மாவட்டம் முழுவதும் 4000-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலை கள் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கு காலை, மாலை நேரங்களில் பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது.

    சிவசேனா சார்பில் பிர திஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் நாளை (22-ந்தேதி) ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்படுகிறது. நாகர்கோவில் நாகராஜா கோவிலில் இருந்து புறப்ப டும் ஊர்வலம் கோட்டார், இடலாக்குடி, சுசீந்திரம், ஈத்தன்காடு, கொட்டாரம் வழியாக கன்னியாகுமரி கடலுக்கு கொண்டு செல்லப் பட்டு கரைக்கப்படுகிறது.

    23-ந்தேதி இந்து மகா சபா சார்பில் வைக்கப் பட்டுள்ள சிலைகளும், 24-ந்தேதி இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளும் நீர் நிலைகளில் கரைக்கப்படு கிறது.

    குமரி மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை கரைக்க 10 இடங்களில் போலீசார் அனுமதி அளித்துள்ளனர். விநாயகர் சிலை ஊர்வலத்திற்கும் போலீசார் பல்வேறு கட்டுப் பாடுகளை விதித்துள்ளனர்.

    இந்தநிலையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை யொட்டி போக்குவரத்தை மாற்றி விடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுவதையடுத்து போக்குவரத்தை சீர் செய்வது குறித்து போக்கு வரத்து போலீசார் ஆலோசனை மேற்கொண்ட னர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

    நாளை (22-ந்தேதி), 23-ந்தேதி, 24-ந்தேதிகளில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலமானது நாகராஜா கோவில் திடலில் இருந்து ஆரம்பித்து நாகர்கோவில் மாநகரின் முக்கிய சாலை களான ஒழுகினசேரி, வட சேரி, டவர் சந்திப்பு, வேப்ப மூடு, அண்ணா பேருந்து நிலையம், கோட்டார், செட்டிகுளம், சவேரியார் சந்திப்பு, கம்பளம், பீச் ரோடு, ஈத்தாமொழி பிரிவு வழியாக சொத்தவிளை மற்றும் சங்குத்துறை கடற் கரைக்கு செல்வதால் மாலை 3 மணி முதல் 6 மணி வரை மேலே குறிப்பிடப்பட்ட சாலைக ளில் போக்குவரத்து நெரி சல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

    எனவே வெளியூர் பயணம் செல்பவர்கள், ரெயில் நிலையம், விமான நிலையம் செல்பவர்கள் மற்றும் குடும்ப நிகழ்ச்சி களுக்கு செல்பவர்கள் தங்களது பயணநேரத்தை முன்கூட்டியே மாற்றம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் கன்னியாகுமரி பஸ் நிலையத்திலிருந்து அண்ணா பஸ் நிலையம் செல்லும் அரசு பஸ்கள் அனைத்தும் இடலாக்குடி, நாயுடு மருத்துவமனை, ரெயில்வே ரோடு வழியாக கோட்டார் ரெயில் நிலை யத்திலிருந்து இயக்கப்படும்.

    மேலும் ராஜாக்கமங்க லம், ஆசாரிப் பள்ளம், பார்வதிபுரம் மார்க்கமாக அண்ணா பஸ் நிலையம் செல்லும் அனைத்து அரசு பஸ்களும் வடசேரி பஸ் நிலையத்தி லிருந்து இயக்கப்படும்.

    மேலும் தக்கலை, மார்த்தாண்டம், களியக்காவிளை மார்க்க மாக அண்ணா பஸ் நிலை யம் செல்லும் அனைத்து அரசு பஸ்களும் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என பொதுமக்களுக்கு தெரி வித்துக்கொள்ளபடுகிறது. வழித்தடம் மாற்றம் செய்யப்பட்ட நேரம் மாலை 3 மணி முதல் 6 மணி வரை (சிலை கரைப்பு ஊர்வல மானது நாகர்கோவில் மாநகரை கடந்து செல்லும் வரை) வழித்தடமாற்றம் தொடர்ந்து செயல்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நீச்சல் தெரிந்த மாமல்லபுரம் மீனவ இளைஞர்கள் மூலம் ஒவ்வொரு சிலையாக தூக்கி செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.
    • கடல் சீற்றம் காரணமாக சிலைகள் எடுத்து வந்த சிலை அமைப்பாளர்கள் யாரையும் கடலில் இறங்கி கரைக்க போலீசார் அனுமதிக்கவில்லை.

    மாமல்லபுரம்:

    விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 18-ந்தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி தெருக்கள், வீடுகளில் விநாயகர் சிலைகள் வைத்து பூஜைகள் செய்யப்பட்டன. செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் நேற்றும் வருகிற 24 ந்தேதி (ஞாயிற்றுகிழமை) மாமல்லபுரம் கடலில் கரைக்க போலீசார் அனுமதி வழங்கினர்.

    இந்த நிலையில் காஞ்சிபுரம் நகரம், பாலுசெட்டிசத்திரம், வாலாஜாபாத், செவிலிமேடு, கருக்குபேட்டை, முத்தியால்பேட்டை, சிங்கபெருமாள்கோவில், திம்மாவரம், பாலூர், படாளம், கூடுவாஞ்சேரி, மாமல்லபுரம் நகரம் உள்பட பல்வேறு இடங்களில் 6 அடி, 10 அடி, உயரமுள்ள விநாயகர் சிலைகள் இந்து முன்னணி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

    முதல் கட்டமாக நேற்று காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை மாமல்லபுரம் கடலில் கரைக்க போலீசார் அனுமதி வழங்கினார்கள். இதையடுத்து ஒவ்வொரு சிலையாக கிழக்கு கடற்கரை சாலை வழியாக பல்வேறு இடங்களில் இருந்து மாட்டு வண்டிகள், டிராக்டர், வேன்களில் ஏற்றி மாமல்லபுரம் கடற்கரைக்கு ஊர்வலமாக கொண்டு வந்தனர். அங்கு தேங்காய் உடைத்து தீபாராதனை செய்து வழிபட்டார்கள். பின்னர் நீச்சல் தெரிந்த மாமல்லபுரம் மீனவ இளைஞர்கள் மூலம் ஒவ்வொரு சிலையாக தூக்கி செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.

    கடல் சீற்றம் காரணமாக சிலைகள் எடுத்து வந்த சிலை அமைப்பாளர்கள் யாரையும் கடலில் இறங்கி கரைக்க போலீசார் அனுமதிக்கவில்லை. மேலும் பொதுமக்கள் வீடுகளில் வைத்து வழிபட்ட நூற்றுக்கணக்கான களிமண் விநாயகர் சிலைகளும் நேற்று மாமல்லபுரம் கடலில் கரைக்கப்பட்டன. கடற்கரையில் எந்த வித அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்பிரனீத் தலைமையில், மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் உள்ளிட்ட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • கரைப்பதற்கு கடும் கட்டுப்பாடு
    • நாகராஜா கோவிலில் இருந்து கொண்டு செல்லப்படும் சிலைகள் சங்குதுறை பீச்சிலும் கரைக்கப்படுகிறது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகள் பிர திஷ்டை செய்யப்பட்டு உள்ளது. பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகளுக்கு காலை, மாலை இரு வேளைகளிலும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.

    விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணி யை மேற்கொண்டு வரு கிறார்கள். பூஜைக்கு வைக்கப்பட்டுள்ள விநாய கர் சிலைகள் குமரி மாவட்டத்தில் மூன்று நாட்கள் ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. நாளை மறுநாள் (22-ந் தேதி) சிவ சேனா சார்பில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் நாகர்கோவில் நாகராஜா கோவிலில் இருந்து ஊர்வல மாக எடுத்துச் செல்லப்பட்டு கன்னியாகுமரி கடலில் கரைக்கப்படுகிறது.

    23-ந் தேதி இந்து மகா சபா சார்பில் வைக்கப் பட்டுள்ள விநாயகர் சிலை கள், நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சொத்த விளை பீச்சில் கரைக்கப்படு கிறது. மணவாளகுறிச்சி பகுதியில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் அங்கிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மணவாளக்குறிச்சி கடலில் கரைக்கப்படுகிறது.

    24-ந் தேதி இந்து முன்னணி சார்பில் வைக்கப் பட்டுள்ள சிலைகள் 11 இடங்களில் இருந்து ஊர்வல மாக கொண்டு செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சுசீந்திரத்தில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வல மாக எடுத்துச் செல்லப்பட்டு கன்னியாகுமரி கடலில் கரைக்கப்படுகிறது. தோவா ளையில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்படும் சிலைகள், பள்ளி கொண்டான் அணையிலும், நாகர்கோவில் நாகராஜா கோவிலில் இருந்து கொண்டு செல்லப்படும் சிலைகள் சங்குதுறை பீச்சிலும் கரைக்கப்படுகிறது.

    தக்கலையில் இருந்து கொண்டு செல்லப்படும் சிலைகள் மண்டைக் காட்டிலும், குலசேகரத்தில் இருந்து கொண்டு செல்லப் படும் சிலைகள் திற்பரப்பு அருவியிலும், கருங்கலில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்படும் விநாயகர் சிலைகள் தேங்காய் பட்டனம் கடலி லும் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது போல் மேலும் ஒரு சில இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகிறது. விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் பகுதிகளில் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளும் மேற்கொண்டு வருகின்றன.

    விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண்பிரசாத் உத்தரவின் பேரில் மாவட் டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. விநாயகர் சிலைகள் கரைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள் ளது. மினிலாரி போன்ற 4 சக்கர வாகனங்களில் மட்டுமே சிலைகளை கொண்டு செல்ல வேண்டும். விநாயகர் சிலை நிறுவப்பட்ட இடத்திலோ, கரைப்பதற்கு கொண்டு செல்லும் ஊர்வலத்திலோ, சிலையை கரைக்கும் இடத்திலோ கண்டிப்பாக பட்டாசுகள் வெடிப்பது தடை செய்யப்படுகின்றது.

    விநாயகர் சிலைக்கு அணிவிக்கப்பட்ட பூ மற்றும் மாலைகள், துணிகள் அழகு சாதன பொருட்கள் கரைக்கப்ப டுவதற்கு முன்பு பிரிக்கப்பட வேண்டும். விநாயகர் சிலை ஊர்வலம் குறிப்பிட்ட நேரத்திற்குள் சிலைகள் கரைப்பதற்கு அறி விக்கப்பட்ட இடத்துக்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.

    சிலை கரைப்புக்கான ஊர்வலம் காவல் துறை யினர் வரையறுத்துக் கொடுத்த பாதை வழியாக மட்டுமே கொண்டு செல்லப் பட வேண்டும். சூரியன் மறைவதற்குள் அனைத்து சிலைகளும் கரைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கட்டுப்பா டுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    • விநாயகர் சதுர்த்தி விழா கடலூர் மாவட்டத்தில் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
    • பெரியவர்கள் தங்கள் குடும்பத்துடன் ஆர்வமாக சாலை ஓரங்களில் விற்பனை செய்யப்பட்ட வண்ண வண்ண விநாயகர் சிலையை வாங்கி சென்றனர்.

    கடலூர்:

    விநாயகர் சதுர்த்தி விழா கடலூர் மாவட்டத்தில் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.இந்த நிலையில் பெரியவர்கள் தங்கள் குடும்பத்துடன் ஆர்வமாக சாலை ஓரங்களில் விற்பனை செய்யப்பட்ட வண்ண வண்ண விநாயகர் சிலையை வாங்கி சென்றனர். மேலும் சாலை ஓரங்களில் விற்பனை செய்யப்பட்ட பூஜை பொருட்கள், பழ வகைகள், அவல்,பொறி, எருக்கம் பூ மாலை அருகம்புல் மாலை போன்றவற்றை ஆர்வமாக வாங்கி சென்றனர்.இதனைத் தொடர்ந்து அவர்கள் வீட்டிற்கு விநாயகர் சிலையை கொண்டு சென்று அபிஷேகம் செய்து மற்றும் தீபாராதனை காண்பித்து கொழுக்கட்டை, நாவல் பழம் போன்றவற்றை படைத்து குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். மேலும், கடலூர் மாவட்டத்தில் 1300 இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து சிறப்பு பூஜைகள் செய்ய அனுமதி கோரினர்.

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், தமிழக அரசின் விதிகளுக்கு உட்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கினார்.அதன்படி, விநாயகர் சதுர்த்தி வழிபாடு நடத்த பல்வேறு பதிகளை சேர்ந்தவர்கள் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்றனர்.மேலும், விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடும் இடங்களில் விழா குழுவினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதனைத் தொடர்ந்து போலீசார் அனுமதியுடன் 3 அல்லது 5-ம் நாள் விநாயகர் சிலையை அரசு அனுமதி வழங்கிய இடத்தில் கரைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

    ×