search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விநாயகர் சதுர்த்தி விழா"

    • விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபாடு, விசர்ஜனம் ஊர்வலம், பொதுக்கூட்டம் நடக்க உள்ளது.
    • முன்னேற்பாடு பணிகள் குறித்து போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.

    திருப்பூர் :

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 5 நாட்களுக்கு இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து இயக்கங்களின் சார்பில், விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபாடு, விசர்ஜனம் ஊர்வலம், பொதுக்கூட்டம் நடக்க உள்ளது.

    இதுதொடர்பாக, முன்னேற்பாடு பணிகள் குறித்து போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக விசர்ஜனம் ஊர்வலம் வரும் பகுதிகளான கொங்கு மெயின் ரோடு, வெள்ளியங்காடு, செல்லம்நகர் மற்றும் ஒன்று திரளும் இடமான புதிய பஸ் நிலையம் ஆகிய இடங்களை திருப்பூர் போலீஸ் கமிஷனர் பிரபாகரன் ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதியில் உள்ள மத வழிபாட்டு தலங்கள் குறித்த விபரம், இதற்கு முன் அந்த எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர்கள், பதட்டமான பகுதிகள் என அனைத்தையும் கேட்டறிந்தார். 

    • இந்து முன்னணி சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • விநாயகர் சதுர்த்தி கமிட்டியினர் பங்கேற்றனர்.

    உடுமலை :

    திருப்பூர் தெற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் உடுமலை வடக்கு, தெற்கு, நகர் மற்றும் தெற்கு ஒன்றியம் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம் உடுமலையில் நடந்தது. இதில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் கிருஷ்ணன் பேசினார்.

    நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் வீரப்பன் மற்றும் பபீஸ், மாவட்ட துணைத்தலைவர் ராஜேஷ் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள், நகர ஒன்றிய பொறுப்பாளர்கள், விநாயகர் சதுர்த்தி கமிட்டியினர் பங்கேற்றனர்.

    ×