search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மார்க் ஆண்டனி"

    • விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’.
    • இப்படம் வசூலை குவித்து வருகிறது.

    இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    இந்நிலையில், 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் ரூ.65 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் 'மார்க் ஆண்டனி' திரைப்படம் பிளாக் பஸ்டர் வெற்றியை பெற்றுள்ளதால் விஷால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பல நாட்களுக்கு பிறகு விஷால் படம் ரூ.100 கோடி கிளப்பில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

    • ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    இந்நிலையில், 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வெளியான நான்கு நாட்களில் ரூ.50 கோடியே வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    • நடிகர் விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் 'மார்க் ஆண்டனி'.
    • இப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.

    இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் நேற்று (செப்டம்பர் 15) திரையரங்குகளில் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


    இந்நிலையில், ரசிகர்கள் இப்படத்திற்கு அளித்த வரவேற்பைத் தொடர்ந்து நடிகர் விஷால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "மார்க் ஆண்டனி திரைப்படம் பிளாக் பஸ்டர் என்ற வார்த்தை கேட்கும் போதும் அனைவரும் பாராட்டும் போதும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ரசிகர்கள் கொடுத்த காசிற்கு ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பார்கள் என்று நம்புகிறேன்.


    தமிழ்நாடு மக்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒன்றரை வருட உழைப்பிற்கு பலன் கிடைத்தது போல இருக்கு. நான் முன்பே கூறியிருந்தது போல என் படத்தின் ஒவ்வொரு டிக்கெட்டிலிருந்தும் ஒரு ரூபாயை விவசாயிகளுக்கு கொடுக்க கடமைப்பட்டுள்ளேன்" என்று கூறினார்.



    • விஷால் நடிப்பில் இன்று வெளியான திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் இன்று (செப்டம்பர் 15) திரையரங்குகளில் வெளியானது.


    மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், 'மார்க் ஆண்டனி' திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்து இயக்குனர் வெங்கட் பிரபு சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "மார்க் ஆண்டனி படம் குறித்து நல்ல செய்திகள் வருகிறது. சகோதரர் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா சாரை நினைத்து சூப்பர்.. டூப்பர்.. ஹேப்பியாக இருக்கிறது. படக்குழுவிற்கு வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.


    • விஷால் நடிப்பில் இன்று வெளியான திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’.
    • எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் இன்று (செப்டம்பர் 15) திரையரங்குகளில் வெளியானது.


    மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் முதல் காட்சியை நடிகர் எஸ்.ஜே. சூர்யா, சென்னையில் உள்ள தனியார் திரையரங்கில் ரசிகர்களுடன் பார்த்தார்.

    • நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’.
    • இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் நாளை (செப்டம்பர் 15) திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.


    திருப்பதியில் சாமி தரிசனம் செய்த விஷால்

    இந்நிலையில், நடிகர் விஷால் 'மார்க் ஆண்டனி' திரைப்படம் வெற்றி பெற வேண்டி திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • லைகா நிறுவனம் தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க விஷாலுக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், அவர் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தை வெளியிட தடை விதித்தும் உத்தரவிட்டிருந்தது.
    • விஷால் தரப்பில் இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்க ஒரு மத்தியஸ்தர் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

    நடிகர் விஷால் தன்னுடைய 'விஷால் பிலிம் பேக்டரி' பட தயாரிப்பு நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்பு செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து 21 கோடியே 29 லட்சம் கடனை பெற்றிருந்தார். இந்த கடனை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டதுடன் கடனை திருப்பி செலுத்தும் வரை விஷால் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமையையும் லைகா நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.

    ஆனால், கடனை செலுத்தாமல் வீரமே வாகை சூடும் என்ற படத்தை வெளியிட விஷாலுக்கு தடை விதிக்க கோரி லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 15 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டும் என விஷாலுக்கு உத்தரவிட்டிருந்தது.


    இந்த வழக்கை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த இருநீதிபதிகள் அமர்வு 15 கோடியை செலுத்தாவிட்டால் தனி நீதிபதி முன்பு உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை விஷால் தயாரிக்கும் படங்களை வெளியிடக் கூடாது என்று தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி 15 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்தாமல் இருந்தது, சொத்து விவரங்களை தாக்கல் செய்யாதது குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்க விஷாலுக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், அவர் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தை வெளியிட தடை விதித்தும் உத்தரவிட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, நடிகர் விஷால் நேரில் ஆஜராகியிருந்தார். அப்போது உயர் நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகளின்படி சொத்து விவரங்கள் குறித்து மனுத்தாக்கல் செய்யவில்லை, 15 கோடி ரூபாயை இதுவரை உயர் நீதிமன்றத்துக்கு செலுத்தவில்லை, தன்னிடம் நிதி ஆதாரம் இல்லை எனத் தெரிவித்த அதே நாளில் ஒரு கோடி ரூபாயை விஷால் வங்கி கணக்கில் பெறப்பட்டுள்ளது, இது நீதிமன்றத்துக்கு தவறான தகவலை தெரிவிப்பது என, நடிகர் விஷாலின் செயல்பாடு குறித்து நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.



    இதற்கு பதிலளித்த விஷால் தரப்பு வழக்கறிஞர், தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டதால் சொத்து விவரங்களை தாக்கல் செய்யவில்லை என்றும், நிதி ஆதாரம் இல்லை எனக் கூறிய நாளில் விஷாலின் வங்கிக் கணக்கில் 91 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்தது என்றும் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, உயர் நிதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு கடந்த ஏப்ரலில் 15 கோடி ரூபாய் செலுத்த வேண்டிய உத்தரவை உறுதி செய்த பிறகும், சொத்து விவரங்கள் குறித்து மனுத்தாக்கல் செய்யாதது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.

    விஷால் தரப்பில் இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்க ஒரு மத்தியஸ்தர் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து லைகா நிறுவனத்திற்கு செலுத்தப்படும் தொகை எப்படி செலுத்தப்படும் என்றும் நீதிபதி உத்தரவுபடி 15 கோடி ரூபாய் செலுத்தாவிட்டால் படங்கள் வெளியிட தடை விதிக்கப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இறுதியாக விஷால் கடந்த 2021-ஆம் ஆண்டு ஜனவரி முதல் கடந்த 13-ஆம் தேதி வரை அவரது நான்கு வங்கி கணக்கு பரிவர்த்தனைகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் அவரது சொத்துகள் குறித்த ஆவணங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

    அதுமட்டுமல்லாமல், 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் தயாரிப்பிற்கும் விஷாலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதால் இப்படத்தை வெளியிடுவதற்கு அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


    • நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’.
    • இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ளார்.

    காந்த கண்கள், இளைஞர்கள் மட்டுமல்ல எல்லோரையும் மயக்கும் பார்வை, சொக்க வைக்கும் நளினமான நடனம், 90-களில் திரை உலகை கலக்கிய பிரபலம், அவர் ஒரு பாட்டுக்கு ஆடினாலே அதுபாட்டுக்கு படம் ஓடும் என்றால் அவர் தான் சில்க் சுமிதா.

    சில்க் சுமிதா மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும் திரை உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்து இன்றைய இளைஞர்கள் மனதிலும் இடம்பிடித்தவர். சில்க் சுமிதா இப்போது இல்லையே என்று எண்ணிய அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் விதமாக விஷால் நடித்துள்ள 'மார்க் ஆண்டனி' படத்தில் அவர் தோன்றிய காட்சி அதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தி உள்ளது எனலாம்.


    விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும், ரிதுவர்மா நாயகியாகவும் நடித்துள்ளனர். முதலில் டிரைலரை பார்த்த பலரும் ஏதோ கிராபிக்சில் சில்க் சுமிதாவின் உருவத்தை கொண்டுவந்துள்ளனர் என்றுதான் எண்ணினர். ஆனால் அதன்பிறகுதான் தெரிந்தது அவர் அச்சு அசலாக சில்க்கின் தோற்றத்தில் உள்ள இன்ஸ்டாகிராம் மாடல் என்பது.

    அவரது பெயர் விஷ்ணுபிரியா காந்தி. இன்ஸ்டாகிராமில் கலக்கிய அவர் முதன்முறையாக மார்க் ஆண்டனி படத்தில் நடித்துள்ளதோடு சில்க்கின் முக பாவனைகள் அனைத்தையும் கண்முன் கொண்டுவந்திருப்பது சற்று ஆச்சரியமானதுதான்.


    நடிகர் தியாகராஜன் நடித்து 1984-ல் வெளியான நீங்கள் கேட்டவை படத்தில் சில்க் சுமிதாவின் ஆட்டம் இன்றும் பலருக்கு நீங்கா நினைவாக உள்ளது. அதே பாடலின் ரீமிக்சில் 'மார்க் ஆண்டனி' படத்தில் சில்க் சுமிதா தோற்றத்தில் விஷ்ணுபிரியா காந்தி கலக்கியுள்ளார். அதே கண்கள், அதே பார்வை, அதே நளினம் என நிஜத்தில் சில்க் சுமிதாவாகவே மாறியுள்ளார்.

    இதுகுறித்து, மார்க் ஆண்டனி படத்தின் மேக்கப் மேன் கிருஷ்ண வேணி பாபு தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிடும் போது, "சில்க் சுமிதாவை மீண்டும் திரையில், எனது கைவண்ணத்தில் காண ஆவலோடு உள்ளேன்" எனக்குறிப்பிட்டு இருந்தார். அந்த பதிவிற்கு விஷால், மற்றும் விஷ்ணுபிரியா காந்தி இருவரையும் டேக் செய்து, அவர்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவித்திருந்தார்.


    சில்க் வேடத்தில் நடித்தது விஷ்ணுபிரியா காந்தி என்பது மேக்கப் மேன் கிருஷ்ணவேணி பாபு பதிவிட்டபிறகே திரை உலகினருக்கே தெரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.விஷ்ணு பிரியாகாந்தி இன்ஸ்டாகிராமில் போட்டுள்ள பதிவுகளுக்கு பலரும் " நீ சில்க் சுமிதா போலவே இருக்கிறாய்" என கருத்துக்களை கூறியிருந்தனர். இதை பார்த்தே திரைப்பட குழு விஷ்ணு பிரியா காந்தியை மார்க் ஆண்டனி படத்தில் நடிக்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மார்க் ஆண்டனி படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
    • மார்க் ஆண்டனி படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

     

    ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், 'மார்க் ஆண்டனி' படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டு இருக்கிறது. டைம் மெஷின் சார்ந்த கதையம்சம் கொண்ட படமாக மார்க் ஆண்டனி உருவாகி இருப்பது டிரைலரில் தெரியவந்துள்ளது.

    ஆக்ஷன், காமெடி கலந்த காட்சிகள் அடங்கிய மார்க் ஆண்டனி படத்தின் டிரைலர் ரசிகர்களை கவர்ந்து இருப்பதோடு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    • நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’.
    • இந்த திரைப்படம் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.


    மார்க் ஆண்டனி போஸ்டர்

    இந்த படத்தில் விஷால் இரட்டை வேடத்தில் நடித்து இருக்கிறார். இப்படத்தின் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது, 'மார்க் ஆண்டனி' படத்தின் டிரைலர் நாளை ( செப்டம்பர் 3) வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.


    • விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் மார்க் ஆண்டனி படம் செப்டம்பர் 15-ம் தேதி வெளியாகிறது.
    • மார்க் ஆண்டனி படத்தில் விஷால் இரண்டு வேடங்களில் நடித்து இருக்கிறார்.

    திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார்.

    மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஷால் இரட்டை வேடத்தில் நடித்து இருக்கிறார்.

    இந்த படத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி இருக்கிறது. மார்க் ஆண்டனி படத்தின் இரண்டாவது பாடல், "ஐ லவ் யு டி" வெளியிடப்பட்டது. இந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.



    • ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’.
    • இப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    மார்க் ஆண்டனி போஸ்டர்

    இந்நிலையில், 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 'மார்க் ஆண்டனி' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. விஷால் இரட்டை வேடத்தில் இருக்கும் இந்த போஸ்டரில் செப்டம்பர் 15-ஆம் தேதி 'மார்க் ஆண்டனி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


    ×