என் மலர்
நீங்கள் தேடியது "தீவிர கண்காணிப்பு"
- கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தொற்று கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட் டுள்ளது.
- கோவை மாவட்டத்தில் தற்போது பெரியளவில் கொரோனா பாதிப்பு இல்லை
கோவை,
அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதிய வகை கொரோனா நோய்த் தொற்று மிக தீவிரமாக பரவி வருவதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் குஜராத், ஒடிசா ஆகிய மாநிலங்களில் புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தொற்று கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட் டுள்ளது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் சமீரன் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் தற்போது பெரியளவில் கொரோனா பாதிப்பு இல்லை. வெளிநாடுகளில் தொற்று அதிகரித்துள்ளதால் மாவட்டத்தில் கண்காணிப்பு தீவிரப்ப டுத்தப்பட்டுள்ளது.
கொரோனா சிகிச்சை மையங்கள் உள்ளிட்டஅனைத்து வசதிகளும் ஏற்கெனவே தயார் நிலையில் உள்ளன. நோய்த் தொற்று பரவல் அதி கரிக்கும்போது அனைத்தும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர்அருணா கூறியதாவது:-
புதிய வகை கொரோனா தொற்று பாதிப்பைகண்டறிவதற்காக புதிதாக கொரோனா ெதாற்று உறுதி செய்யப்படுபவர்களின் சளி மாதிரிகள் சென்னையில் உள்ள மாநில பொது சுகாதாரத் துறை ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2 நாள்களாக கோவையில் ஒருவருக்குகூட நோய்த் தொற்று பாதிப்பு உறுதி செய் யப்படவில்லை. தொடர்ந்து கொரோனா பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.வெளிநாடுகளில் இருந்து கொரோனா தொற்று அறிகுறி களுடன் வருபவர்களுக்கு பரிசோதனைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையம் சார்பில் தெர்மல் ஸ்கேனர் மூலம் வெளி நாட்டுப் பயணிகளுக்கு பரிசோ தனை செய்யப்படுகிறது.
காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் உள்ளவர்களுக்கு சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத் தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த சில மாதங்களாக பன்றிகள் உயிரிழந்து வந்தன.
- கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பிறகே வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் உள்பட நீலகிரி வனக்கோட்ட பகுதியில் கடந்த சில மாதங்களாக பன்றிகள் உயிரிழந்து வந்தன.
ஆய்வில், கா்நாடக மாநிலம் பந்திப்பூா் புலிகள் காப்பகம் மற்றும் முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில் ஆப்ரிக்கன் பன்றிக்காய்ச்சலால் பன்றிகள் உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் நடைபெற்ற ஆய்வில், வளா்ப்பு பன்றிகள் ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்படவில்லை என உறுதியானது.
எனினும், கேரள, கா்நாடக மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் கக்கநல்லா, தாளூா், சேரங்கோடு, நாடுகாணி உள்ளிட்ட 8 சோதனை சாவடிகளில் கால்நடை மருத்துவ குழு மூலம் முழுமையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பிறகே, நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன.
வெளி மாநிலங்களில் இருந்து இறைச்சிப் பன்றிகளை நீலகிரிக்கு கொண்டுவரவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. 2-வது நாளாக கால்நடை மண்டல இயக்குநா் பகவத்சிங், கூடலூா் கோட்டாட்சியா் முகமது ஆகியோா் தலைமையில், மசினகுடி, கூடலூா், தொரப்பள்ளி ஆகிய பகுதிகளில் உள்ள வளா்ப்பு பன்றிக்கூடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வளா்ப்பு பன்றிக்கூடங்களில் உள்ள பன்றிகளை விற்க கூடாது என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ள நிலையில், ஆப்ரிக்கன் பன்றிக்காய்ச்சலால் வனவிலங்குகள், கால்நடைகள், மனிதா்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என கால்நடை மண்டல இயக்குநா் பகவத்சிங் தெரிவித்துள்ளாா்.
- பறவைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- 1,206 கோழி பண்ணைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
கோவை,
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் ஆழுர் மற்றும் கோட்டயம் பகுதியில் பறவைக்காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.
அதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள கோழி பண்ணைகள் தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திடீரென கோழி இறப்பு அதிகளவில் இருந்தால் உடனடியாக கால்நடை பராமரிப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என பண்ணை உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கால் நடை பராமரிப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கேரளாவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கோவை மாவட்டத்தில் உள்ள 1,206 கோழி பண்ணைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
கோவையில் ஒரு பன்முக கால்நடை ஆஸ்பத்திரி, 96 மருந்தகம், 15 கால்நடை ஆஸ்பத்திரிகள், 25 கிளை சென்டர்கள், ஒரு கிளினிக்கல் சென்டர் ஆகியவை உள்ளன. இவற்றில் பணியாற்றும் டாக்டர்கள் மூலம் அருகே உள்ள கோழிப் பண்ணைகளில் தொடர்ந்து சென்று கண்காணிக்கப்பட்டு வருகின்றது. திடீரென ஏராளமான கோழிகள் இறந்தால் உடனடியாக கால்நடை துறையினருக்கு தகவல் தெரிவிக்க பண்ணை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.நீர் நிலைகள் மற்றும் பிற இடங்களில் இடம் பெயர்ந்து வரும் பறவைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
மேலும், கோவையில் இருந்து கேரளாவிற்கு கோழிகள் கொண்டு செல்ல தடையின்மை சான்றிதழ் அளிக்கப்படுகிறது. கோழி பண்ணைகளை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு வந்தால் 6 மாத காலம் அதன் தாக்கம் இருக்கும்.
இதனால், முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வாளையாறு, மீனாட்சி புரம் உள்ளிட்ட 12 இடங்களில் உள்ள சோதனைச் சாவடிகளில் வாகன கண்காணிப்பு பணிகள் நடந்து வருகிறது. தற்போது வரை கோவையில் எந்த பகுதியிலும் பறவைக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேட்டி அளித்தார்.
- மோப்ப நாய்கள் கொண்டு சோதனை செய்யப்படுகிறது.
கோவை
குடியரசு தின விழா நாளை மறுநாள் (வியாழக்கி ழமை) கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை மாநகரில் குடியரசு தின விழா நடைபெறும் வ.உ.சி. மைதானம் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் வழிபா ட்டுத் தலங்கள் ரெயில் நிலையங்கள், பஸ் நிலைய ங்கள் விமான நிலையம் ஆகியவற்றில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ரெயில் நிலையத்தில் போடப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் எவ்வாறு பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறா ர்கள் என கேட்டறிந்தார். மேலும் ரெயில் நிலைய த்திற்கு வரும் பயணிகளின் உடமைகளை சோதனை செய்யும் ஸ்கேனர் கருவிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.பின்னர் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது
கோவை மாநகரில் குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.மத்திய ரெயில் நிலையம், போத்தனூர், சிங்கா நல்லூர், வடகோவை ரெயில் நிலையங்கள், காந்திபுரம், சிங்காநல்லூர் பஸ் நிலையங்கள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் மற்றும் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ரெயில் நிலையத்தில் 24 மணி நேரமும் மோப்ப நாய்கள் கொண்டு சோதனை செய்யப்படுகிறது. பயணிகளின் உடைமைகளும் சோத னை செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்க ப்படுகிறார்கள். பயணிகள் பாதுகாப்புக்கு எந்தவித சுணக்கம் இல்லாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.பார்சல்கள் அனைத்தும் திறந்து பார்த்த பின்னர் தான் அனுப்பு அறிவுறு த்தப்பட்டுள்ளது. குடியரசு தினம் முடியும் வரை இந்த நடைமுறைகள் இருக்கும்.பாதுகாப்பு தொடர்பா ன வழக்குகளில் சம்மந்தப்ப ட்டவர்கள் கண்காணிப்பில் உள்ளார்கள்.மாநகரில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.
லாட்ஜ்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அங்கு தங்குபவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. விபரங்களை சேகரிக்காத லாட்ஜ் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாநகர எல்லைகளில் உள்ள 11 சோதனை சாவடிகளில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மாநகர முக்கிய இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து வாகன சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மதுரை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் எழுதினர்.
- பறக்கும் படைகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
மதுரை
தமிழகம் முழுவதும் இன்று 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த தேர்வை சுமார் 9 லட்சத்து 76 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். இதற்காக மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வு இன்று (6-ந் தேதி) தொடங்கி வருகிற 20-ந்தேதி வரை நடக்கிறது. முதல் தேர்வாக இன்று தமிழ் மொழி பாட தேர்வு நடந்தது.
மதுரை மாவட்டத்தில் 38 ஆயிரத்து 945 மாணவ, மாணவிகள் இன்று 10-ம் வகுப்பு தேர்வை எழுதினர். இதற்காக மாவட்டம் முழு வதும் 145 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டி ருந்தன. காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. தேர்வு பணியில் ஆசிரியர்கள், அலுவலர்கள் என ஆயிர த்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட தனிப் படைகள் அமைக்கப்பட்டு தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று கண்காணித்த னர்.
முன்னதாக தேர்வு மையங்களை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர், முதன்மை கல்வி அதிகாரி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். தேர்வு மையங்க ளில் மாணவ, மாணவிகளுக்கு தேவைான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டி ருந்தன.
விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 12,755 மாணவர்களும், 12,791 மாணவிகளும் மற்றும் தனித்தேர்வர்கள் உள்பட மொத்தம் 25 ஆயிரத்து 776 பேர் 10-ம் வகுப்பு தேர்வை எழுதுகின்றனர். இதற்காக மாவட்டத்தில் 116 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டி ருந்தன.
இன்று காலை சரியாக 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. ஆனால் மாணவ- மாணவிகள் 20 நிமிடம் முன்பே தேர்வு அறைக்குள் தீவிர சோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர். முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறை கண்காணிப்பா ளர்கள் என 1200-க்கும் மேற்பட்டோர் தேர்வு பணியில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்டத்தில் 8,890 மாணவர்களும், 9,123 மாணவிகள் என மொத்தம் 18 ஆயிரத்து 13 பேர் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினர். இதற்காக அமைக்கப்பட்டி ருந்த 101 தேர்வு மையங்களில் இன்று காலை தேர்வு தொடங்கியது. தேர்வு பணியில் 1,500க்கும் மேற்பட்டோர் ஈடு படுத்தப்பட்டிருந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று 84 தேர்வு மையங்களில் 8,359 மாணவர்களும், 8,480 மாணவிகளும், 497 தனி தேர்வர்கள் என மொத்தம் 17 ஆயிரத்து 501 பேர் பத்தாம் வகுப்பு தேர்வை எழுதினர். 1264 கண்கா ணிப்பாளர்கள், 84 முதன்மை கண்காணிப்பா ளர்கள், 84 துறை அலு வலர்கள், மற்றும் 148 பணியாளர்கள் தேர்வு பணிக்கு நியமிக்கப்பட்டி ருந்தனர்.
முதல்முறையாக இன்று அரசு பொதுத்தேர்வை எதிர்கொண்ட பத்தாம் வகுப்பு மாணவ-மாணவி கள் தமிழ் மொழிப்பாட தேர்வை உற்சாகமாக எழுதினர். தேர்வு மையங்க ளுக்கு முன்கூட்டியே வந்தி ருந்த அவர்கள் கடைசி நேர தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டனர். மேலும் ஆசிரியர் ஆசிரியர்களும் மாணவ-மாணவிகளுக்கு தேர்வு எழுதுவது குறித்து விளக்கியதை நேரில் காண முடிந்தது.
தேர்வு எழுதுபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததால் மாணவ மாணவிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். துண்டு தாள் வைத்துக்கொள்வது, பிறரை பார்த்து எழுதுவது, ஆள் மாறாட்டம் போன்ற செயல்களில் ஈடுபட்டால் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், 3 ஆண்டுகள் தேர்வு எழுத நிரந்தர தடை விதிக்கப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை எச்ச ரித்திருந்தது.
எனவே 3 மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டிருந்த பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட னர்.
- அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- சோதனைச்சாவடி பகுதிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று வருகிறது.
அந்தியூர்:
கர்நாடகா சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (மே) 10-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அங்கு வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது. மேலும் அரசியல் கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனைசாவடிகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அதே போல் தமிழக- கர்நாடகா மாநில எல்லை பகுதிகளிலும் சோதனைச் சாவடிகள் அமைத்து அந்த வழியாக வரும் வாகனங்களை தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கிறார்கள்.
இதே போல் ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி, பண்ணாரி மற்றும் அந்தியூர் அடுத்த பர்கூர் வழியாக கர்நாடகா மாநில எல்லை பகுதியில் சோதனைச் சாவடிகள் உள்ளது. இந்த வழியாக வாகனங்களை போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பாதை வழியாக கர்நாடக மாநிலம் மைசூருக்கு செல்லக்கூடிய பிரதான சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் லாரி, பஸ், வேன், சரக்கு வாகனங்கள், 2 சக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த நிலையில் கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தலையொட்டி அந்தியூர் அருகே தாமரைக்கரை, பர்கூர், கர்கேகண்டி வழியாக தமிழக-கர்நாடகா எல்லை பகுதியான நால்ரோடை அடுத்து கூடலூர், மாட்டலி, ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்தியூர், பர்கூர் வழியாக கர்நாடகாவுக்கு செல்லும் வாகனங்கள் எல்லை பகுதியில் தீவிர வாகன சோதனைக்கு பிறகே கர்நாடகாவிற்குள் செல்ல அனுமதிக்கபட்டு வருகின்றது. இதனால் கர்நாடகா சோதனைச்சாவடி பகுதிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது.
- போலீசார் ரோந்து செல்ல வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டார்.
- கடும் நடவடிக்கையால், குற்ற செயல்களில் ஈடுபடுவோர் முடங்கி உள்ளனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக ஜவகர் பொறுப்பேற்ற பின் பல்வேறு அதிரடி நடவ டிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். போலீசாருக்கு விடுமுறை, சாதாரண காரணத்துக்காக மாற்றப்ப ட்டவர்களுக்கு மீண்டும் பழைய பணியிடம் ஒதுக்கீடு, மனு மற்றும் கோரிக்கைக்காக பார்க்க வருவோரை காக்க வைக்காமல் உடனுக்குடன் பார்ப்பது உள்பட பல்வேறு மாற்றங்கள் அமலாகி உள்ளது.
குறிப்பாக பாதுகாப்பு, சட்டம் – ஒழுங்கு, போக்கு வரத்து நெரிசலை தவிர்த்தல் போன்றவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்ப டுகிறது. திருட்டு, கொள்ளை, வழிப்பறி, மிரட்டல், ரவுடிகள் நடமாட்டம், தேவையற்ற வகையில் சுற்றித்திரிபவர்களை கட்டுப்படுத்துதல் போன்ற வற்றுக்காக, தெருக்கள், கடை வீதிகள், பிரதான சாலைகளில் போலீசார் ரோந்து செல்ல வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டார்.
இதனை ஏற்று மோட்டார் சைக்கிள் மற்றும் ஜீப்களில் மக்கள் நடமாட்டம் உள்ள மற்றும் நடமாட்டம் இல்லாத தெருக்கள், கடை வீதிகள், பிரதான சாலைகள், பஸ் நிறுத்தங்கள் போன்ற இடங்களில் போலீசார் ரோந்துப்பணி செல்கின்ற னர். குறிப்பிட்ட போலீசார், குறிப்பிட்ட பகுதிக்கு ரோந்து சென்று குறிப்புகள் அனுப்பி வருகின்றனர்.
போக்குவரத்து நெரிசல் உள்ள இடங்களில், விரைவாக போக்குவரத்தை சீர்செய்யவும், தேவை யானால் கூடுதல் போலீ சாரை பயன்படுத்த உத்தர விட்டதால் கடந்த ஒரு வாரமாக கூடுதல் போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
குறித்த நேரம் தவிர மற்ற நேரங்களில் டாஸ்மாக் கடைகள், அதனுடன் இணைந்த பார்களை கண்காணிக்கின்றனர். இரவு குறிப்பிட்ட நேரத்துக்கு ப்பின் தேவையற்ற கடை களை மூடவும், நடமா ட்டங்களை கட்டுப்படுத்த வம், அனுமதியற்ற சட்ட விரோத மது விற்பனை, லாட்டரி, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வோர் மீதும் கடும் நடவடிக்கையால், குற்ற செயல்களில் ஈடுபடு வோர் முடங்கி உள்ளனர்.
- அருவியின் பாதுகாப்பு கம்பிகளின் மீது ஏறிய போது நிலை தடுமாறி காவிரி ஆற்றில் விழுந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
- தொங்கு பாலத்தின் அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பரிசல் ஓட்டிகள் சுற்றுலாப் பயணியை ஆற்றில் அடித்து வருவதை கண்டதும் உடனடியாக அவரை மீட்டனர்.
ஒகேனக்கல்,
தமிழகத்தின் முதன்மை சுற்றுலாத் தலமான தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று விடுமுறை நாள் என்பதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்தனர்.
சுற்றுலாப் பயணிகள் எண்ணை தேய்த்து மெயின் அருவி, காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனர். கடந்த ஆண்டு காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் மெயின் அருவியின் ஒரு பகுதி முற்றிலுமாக சேதம் அடைந்ததால், மறுப்பகுதி மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் சிலர் தனியார் பார்களில் இருந்து மது பாட்டில்களை வாங்கி கொண்டு தடை செய்யப்பட்ட இடங்களில் மது குடித்து விட்டு காவிரி கரையோரத்தில் ஆபத்தான இடங்களில் குளித்தனர்.
இந்த நிலையில் நேற்று ஒகேனக்கல்லுக்கு வந்திருந்த சுற்றுலா பயணி ஒருவர் மது போதையில் மெயின் அருவியில் குளித்துக் கொண்டிருக்கும்போது, அருவியின் பாதுகாப்பு கம்பிகளின் மீது ஏறிய போது நிலை தடுமாறி காவிரி ஆற்றில் விழுந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
அப்போது தொங்கு பாலத்தின் அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பரிசல் ஓட்டிகள் சுற்றுலாப் பயணியை ஆற்றில் அடித்து வருவதை கண்டதும் உடனடியாக அவரை மீட்டு கரையோரப் பகுதிக்கு எடுத்துச் சென்று முதலுதவி செய்து அவசர சிகிச்சைக்காக ஊட்டமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்ற சுற்றுலாப் பயணி குணமடைந்து வீடு திரும்பினார்.
வார விடுமுறை நாட்க–ளில் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டுமே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு–படுத்தப்பட்டு வருவதாலும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்ப–டும் மெயின் அருவி, தொங்கு பாலம் உள்ளிட்ட பகுதிகளில் போதுமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படாத–தாலும், தனியார் பார்களில் விற்கப்படும் மது–பானங்களை சில பயணிகள் வாங்கி குடித்துவிட்டு இதுபோன்று தவறான செயல்களில் ஈடுபடுவதால் உயிரிழப்பு நிகழ்வுகளுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, அதனை தடுக்கும் விதமாக மெயின்அருவியில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான முறையில் குளிப்பதற்காக கடினமான தடுப்புகளை ஏற்படுத்த வேண்டும்.
மேலும், மெயின்அருவி, சினிபால்ஸ் மற்றும் காவிரி ஆற்றங்கரை–யோரம் ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பின் போது போலீ–சார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சுதந்திர தினத்தையொட்டி முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
- 2 ஷிப்டுக்களாக போலீசார் இரவு நேரத்தில் ரோந்து பணி ஈடுபடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாகர்கோவில் :
குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் நாகர்கோவில் அண்ணா விளையாட்ட ரங்கத்தில் நடக்கிறது. விழா வில் கலெக்டர் ஸ்ரீதர் கொடியேற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிடு கிறார்.
பின்னர் நலத்திட்ட உதவி களையும் வழங்குகிறார். சுதந்திர தின விழாவை யொட்டி போலீசாரின் அணி வகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி கடந்த 2 நாட்களாக ஆயுதப் படை மைதானத்தில் நடந்தது. இன்று நாகர்கோ வில் அண்ணா விளையாட்ட ரங்கத்தில் நடந்தது. மேலும் மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி ஒத்திகை நிகழ்ச்சியும் நடந்து வருகிறது. சுதந்திர தின விழா நடைபெறும் அண்ணா விளையாட்டரங்கத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சுதந்திர தின விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதைய டுத்து மாவட்டம் முழுவதும் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் பாதுகாப்பு பலப்படுத்தப பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1200 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 2 ஷிப்டுக்களாக போலீசார் இரவு நேரத்தில் ரோந்து பணி ஈடுபடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி, நாகர்கோ வில், தக்கலை, குளச்சல் சப்-டிவிஷன்களுக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.
மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளின் பாதுகாப்பை பலப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆரல்வாய்மொழி, அஞ்சு கிராமம், களியக்கா விளை சோதனை சாவடி களில் போலீசார் வெளியூர்க ளில் இருந்து வரும் வாகனங்களை தீவிரமாக சோதனை செய்து வருகி றார்கள்.
நாகர்கோவில், கன்னியா குமரி, நாங்குநேரி, வள்ளியூர், இரணியல், குழித்துறை ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்க ளிலும் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.
சுசீந்திரம் தாணுமாலையன் சாமி கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில் உட்பட அனைத்து கோவில்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். கடலோர கிராமங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட் டுள்ளது.
கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள அனைத்து கடற்கரை கிரா மங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். கடலோர காவல்துறையினர் நவீனபடகுகளில் ரோந்து சுற்றி வருகிறார்கள்.
- கூடலூர் சோதனைச்சாவடிகளில் மருத்துவ பரிசோதனை
- வாகனங்களில் வருவோரிடம் தொ்மல் ஸ்கேனா் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை
ஊட்டி,
கேரளத்தில் நிபா வைரசுக்கு 2 பேர் பலியாகி விட்டனர். அங்கு மேலும் 2 பேர் நோய்த்தொற்றுடன் உள்ளனர். அவர்களுக்கு கோழிக்கோடு ஆஸ்பத்தி ரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் மற்ற மாவட்ட ங்களை சேர்ந்தவர்கள் கோழிக்கோடு பகுதிக்கு வர தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கேரள மாநிலத்தில் இருந்து தினமும் 1000-க்கும் மேற்பட்டோர் வாக னங்கள் மூலம் தமிழகத்துக்கு வந்து செல்கின்றனர். எனவே கேரளாவின் அண்டை மாவட்டமாக உள்ள நீலகிரியில் மருத்துவ அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக கூடலூரில் உள்ள நாடுகாணி, சோலாடி, தாளூா், நம்பியாா்குன்னு, பாட்டவயல் ஆகிய சோதனைச் சாவடிகளில் சுகாதார அதிகாரிகள் தற்காலிக மருத்துவ முகாம்களை அமைத்து மருத்துவ பரிசோதனை செய்து பார்க்கும் பணிகளை செய்து வருகின்றனர். அங்கு 24 மணி நேரமும் சுகாதார ஊழியர்கள் பணியில் இருக்க வேண்டும் என அறிவு றுத்தப்பட்டு உள்ளது.கேரளாவில் இருந்து புறப்பட்டு வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனைக்குப் பிறகே தமிழகத்துக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக வாகனங்களில் பயணிக்கும் பொதுமக்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளதா என்பது தொடர்பாக தொ்மல் ஸ்கேனா் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து வருகின்றனர். அப்படி வருவோருக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
- போலீசார் சென்னிமலை பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் ரோந்து செல்கின்றனர்.
- வயதான தம்பதிகளை போலீசார் பாதுகாத்து வருகிறார்கள்
சென்னிமலை:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 2 இடங்களில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடந்தது.
இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு கிறார்கள். ஆனால் இந்த சம்பவங்களின் ஈடுபட்டவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.
இதனால் சுற்று வட்டார கிராம பகுதகளில் உள்ள பொதுமக்கள் மத்தியில் ஒரு வித அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்த அச்சத்தை போக்கும் வகையில் சென்னிமலை அருகே கே.ஜி. வலசு, ஈங்கூர், சிறு க்களஞ்சி உள்பட பல்வேறு இடங்களில் இரவு முழு வதும் போலீசார் ரோந்து சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் 15-க்கும் மேற்பட்ட போலீசார் சென்னிமலை பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் ரோந்து செல்கின்றனர்.
தொடர்நது கிராமப்பு ற ங்களில் தனி யாக உள்ள வீடுகள், வய தான தம்பதி கள் வசிக்கும் வீடுகள் மற்று ம் ஆற்றங்கரை பகுதியில் உள்ள வீடுகள் உள்ள பகுதிகளிலும் இரவு நேரங்களில் போலீசார் சென்று பாது காப்பு பணியில் ஈடு பட்டு வருகின்றனர்.
இதற்காக ''ஸ்மார்ட் காவலர்'' என்ற செல்போன் செயலி போலீசாரால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் அந்தந்த பகுதியில் இருந்து போட்டோ எடுத்து செயலியில் பதிவேற்ற வேண்டும்.
இதன் மூலம் எந்த போலீசார் எந்த இடத்தில் இருந்து எத்தனை மணிக்கு ரோந்து பணியின் போது போட்டோ எடுத்து உள்ளார் என்பதை உயர் அதிகாரிகள் கண்காணிக்க முடியும்.
வயதான தம்பதிகளை போலீசார் பாதுகாத்து வருகிறார்கள் என்பதை அறிய நள்ளிரவு நேரத்திலும் அவர்களை எழுப்பி புகைப்படம் எடுத்து செயலி மூலம் பதிவேற்றி வருகின்றனர்.
கிராமப்புறங்க ளில் போலீஸ் ரோந்து பணி அதிகரிக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- தித்திக்கும் தீபாவளி தினத்தை புத்தாடைகள் உடுத்தி பட்டாசு வெடித்து இனிப்பு சாப்பிட்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள்.
- தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் சேலம் கடை வீதியில் பொதுமக்கள் தற்போதே அதிக அளவில் குவிந்து வருகின்றனர்.
சேலம்:
தீபாவளி பண்டிகை என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது புத்தாடை, இனிப்பு, பட்டாசுகள் தான். தித்திக்கும் தீபாவளி தினத்தை புத்தாடைகள் உடுத்தி பட்டாசு வெடித்து இனிப்பு சாப்பிட்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள்.
ஜவுளி கடைகளில் கூட்டம்
தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் சேலம் கடை வீதியில் பொதுமக்கள் தற்போதே அதிக அளவில் குவிந்து வருகின்றனர். குறிப்பாக ஜவுளிக்கடையில் தங்களுக்கு பிடித்த ஆடைகளை தேர்வு செய்து வாங்கி செல்கின்றனர். இதனால் சேலம் கடை வீதி முதல் அக்ரகாரம், புதிய பஸ் நிலையம், நான்கு ரோடு, 5 ரோடு பகுதியில் உள்ள ஜவுளி கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.
அலுவலக வேலைக்கு செல்பவர்கள், தனியார் தொழில் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், சிறு, குறு நிறுவனங்களில் தொழில் செய்பவர்களுக்கு 1-ந் தேதிக்கு மேல் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. அதனால் கடந்த 1-ந் தேதி முதல் ஜவுளி எடுக்க வருபவரின் எண்ணிக்கை வழக்கத்தை காட்டிலும் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் ஜவுளி விற்பனை களை கட்டி உள்ளது.
விற்பனைக்கு குவிப்பு
பெண்களுக்கு தேவையான சேலை, சுடிதார், ஆண்களுக்கான பேண்ட், சர்ட், குழந்தைகளுக்கான ஆடை உள்ளிட்டவைகள் சூரத்தில் இருந்தும், வேஷ்டி, துண்டு, டவல், பனியன், ஜட்டி உள்ளிட்டவை திருப்பூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட இடங்களில் இருந்தும் கொள்முதல் செய்து அதிக அளவில் விற்பனைக்கு வைத்துள்ளனர். பட்டு சேலை ரகங்கள் காஞ்சிபுரம் திருப்புவனத்தில் இருந்தும் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது.
இனிவரும் நாட்களில் தீபாவளி விற்பனை களை கட்டுமென்பதால் அதற்கான ஏற்பாடுகளில் கடை உரிமையாளர்களும் தீவிரமாக இறங்கி உள்ளனர். இதே போல தீபாவளி ஜவுளி விற்பனை ஒட்டி சேலத்தில் உள்ள ஐஸ்கிரீம் கடைகள், ஜூஸ் கடைகள், ஓட்டல்கள் நிரம்பி வழிகிறது. பழ வகைகள் விற்பனையும் அதிகரித்துள்ளது.
போலீஸ் பாதுகாப்பு
சேலம் மாநகரின் முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசலை சீர்செய்யவும், திருட்டு சம்பவங்களை தடுக்கவும் மாநகர போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதற்காக மக்கள் கூடும் முக்கிய இடங்களில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சேலம் மாநகரில் ஏற்கனவே 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவுபடி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருட்டை தடுக்க பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான அருணாச்சல ஆசாரி தெரு, முதல் அக்ரகாரம், 2-வது அக்ரஹாரம், பழைய, புதிய பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகள், 4 ரோடு, 5 ரோடு, சொர்ணபுரி ஏ.வி.ஆர் ரவுண்டானா, சாரதா கல்லூரி சாலை உள்பட பல பகுதிகளில் 500 சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
10 கோபுரங்கள்
கடைவீதி, 4 ரோடு, 5 ரோடு உள்பட 10 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து தீபாவளி திருடர்களை கண்டுபிடிக்கும் வகையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நாளை (5-ந் தேதி) முதல் தீபாவளி பாதுகாப்பு பணியில் 300-க்கும் மேற்பட்ட போலீசாரும், ஊர் காவல் படையை சேர்ந்தவர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். சேலம் மாநகரம் முழுவதும் ஸ்பீக்கர் செட் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களும் விழிப்புணர்வுடன் இருந்து போலீசாருக்கு ஒத்துழைத்து அளித்து அசம்பாவிதங்களை தடுக்க வேண்டும் என போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.