search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணக்கெடுப்பு"

    • முன்னாள் படைவீரர்கள் மற்றும் விதவையர்களின் சொத்துகள் பற்றி குறித்த கணக்கெடுப்பு செய்யப்பட உள்ளது
    • அனைத்து விபரங்களும் அலுலக முகவரிக்கு நேரிலோ, தபால் மூலமாகவோ வருகிற 8-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

     திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் விதவையர்களின் சொந்த வீடு, அடுக்குமாடி போன்றவற்றின் சொத்துவரி குறித்த கணக்கெடுப்பு செய்யப்பட உள்ளது. எனவே திருப்பூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் விதவையர்கள் சர்வே படிவத்தை திருப்பூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து தங்கள் வீட்டுக்கு கடைசியாக செலுத்திய சொத்துவரி ரசீது நகலை இணைக்க வேண்டும்.

    பின்னர் உதவி இயக்குனர், மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகம், அறை எண்.23, 5-வது தளம், கலெக்டர் அலுவலக வளாகம், திருப்பூர் -641 604 என்ற முகவரிக்கு நேரிலோ, தபால் மூலமாகவோ வருகிற 8-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு 0421 2971127 என்ற தொலைபேசி எண்ணுக்கோ, exweltup@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்று கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    • சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை அங்கிருந்து இடமாற்றம் செய்வதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
    • பயோமெட்ரிக் முறையில் கணக்கெடுப்பு பணியை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கினர்.

    சென்னை:

    சென்னையில் பக்கிங்காம் கால்வாயை சீரமைக்க அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக பக்கிங்காம் கால்வாயில் நீர்வழிப்பாதையில் கரையோரம் வசிப்பவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முடிவு செய்துள்ளனர். இதற்கான முதல்கட்ட திட்ட அறிக்கையை நீர்வளத் துறையினர் தயாரித்து உள்ளனர்.

    இதைத் தொடர்ந்து முதல் கட்டமாக சிவானந்தா சாலை-டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலை இடையே 2.9 கி.மீட்டர் தூரத்திற்கு பக்கிங்காம் கால்வாயை சீரமைக்க முடிவு செய்து ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

    இதேபோல் நீர்வளத் துறையின் 2023-24 ம் ஆண்டின் கொள்கை குறிப்பின்படி பக்கிங்காம் கால்வாய் மற்றும் அதனுடன் தொடர்புடைய கால்வாய், அடையாறு கூவம் ஆறுகளில் பாயும் வடிகால் வாய்களில் சீரமைப்பு மற்றும் விரிவான மறுசீரமைப்புக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    இதற்கு ரூ.1,281 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இதில் நீர்வழிப்பாதையை தூர் வாரி சீரமைத்தல், படகு போக்குவரத்து மையம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற இருக்கின்றன.

    இதற்கிடையே பக்கிங்காம் கால்வாய் கரையோரம் வசிக்கும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை அங்கிருந்து இடமாற்றம் செய்வதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனால் கால்வாய் கரையோரத்தை சீரமைக்கும் பணி தொடங்குவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

    மேலும் பக்கிங்காம் கால்வாய் கரையோரம் வசிப்பவர்கள் காலி செய்யும் போது அவர்களுக்கு அதே பகுதியில் மாற்று இடம் கொடுத்து குடியமர்த்த வேண்டும் அல்லது ஏற்கனவே வசித்த இடத்தில் இருந்து 5 கி.மீட்டர் தூரத்திற்குள் குடிய மர்த்த வேண்டும் என்பது பொதுமக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

    ஆனால் கால்வாய் கரையோரம் வசிப்பவர்களை அப்புறப்படுத்தும் போது அவர்களுக்கு மாற்று இடம் அருகில் ஒதுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

    இதன் காரணமாக பக்கிங்காம் கால்வாய் கரையோரம் வசிப்பவர்கள் அப்புறப்படுத்துவது தொடர்பாக என்ன மாதிரியான முடிவு எடுப்பது என்று அதிகாரிகள் தவித்து வருகிறார்கள்.

    பக்கிங்காம் கால்வாய் கரையோரம் உள்ள முக்கிய இடங்களான விக்டோரியா ஹாஸ்டல், சிவராஜபுரம், சுங்குவார் தெரு, மட்டன் குப்பம், ரோட்டரி நகர், நீலம்பாஷா தர்கா உள்ளிட்ட இடங்களில் பல ஆண்டுகளாக ஏராளமானோர் வசித்து வருகிறார்கள். இந்த இடமாற்றம் அவர்களை கவலை அடையச் செய்து உள்ளது. இதுவரை எத்தனை குடும்பங்கள் இதில் பாதிக்கப்பட உள்ளது என்று உறுதியாக அறிவிக்கப்படவில்லை.

    கடந்த 2020-ம் ஆண்டு அரசின் அறிவிப்பின்படி 15 ஆயிரம் குடும்பத்தினர் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது. கடந்த 2020-21- ம் ஆண்டிற்கான தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கொள்கை குறிப்பில் இந்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 564 என்று குறிப்பிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் பக்கிங்காம் கால்வாய் கரையோரம் வசிப்பவர்கள் பற்றி பயோமெட்ரிக் முறையில் கணக்கெடுப்பு பணியை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கினர். ஆனால் இதற்கு அங்கு வசிப்பவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பயோமெட்ரிக் கணக்கெடுப்புக்கு தகவல்கள் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

    இதைத் தொடர்ந்து இந்த கணக்கெடுப்பும் இப்போது கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறும்போது "மறு குடியமர்த்தலுக்கு ஒதுக்கப்பட்ட இடம் எங்கே? என்று அதிகாரிகள் இதுவரை தெரிவிக்கவில்லை. நாங்கள் தற்போது வசிக்கும் இடம் அருகே அல்லது 5 கி. மீட்டர் தூரதிற்குள் குடியமர்த்த வேண்டும். அப்படியானால்தான் எங்களது வாழ்வாதாரம் பாதிக்காது" என்றனர்.

    லாக் நகரை சேர்ந்த தொழிலாளி ஒருவர் கூறும் போது, "எனது குடும்பம் பல தலைமுறைகளாக இங்கு வசிக்கிறது. எனக்கும் எனது மனைவிக்கும் வாழ் வாதாரம் இந்த பகுதியை சுற்றியே உள்ளது. குழந்தைகள் அருகில் உள்ள பள்ளியில் படிக்கிறார்கள். நாங்கள் எப்படி நீண்ட தூரத்திற்கு செல்ல முடியும். மேலும் மறு குடியமர்த்துதல் தொடர்பாக அதிகாரிகள் இதுவரை எந்த தெளிவான முடிவும் எங்களுக்கு தெரிவிக்கவில்லை" என்றனர். சிவராஜபுரத்தை சேர்ந்த சரவணன் என்பவர் கூறும் போது, "பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு வீடு கட்டி கொடுக்க அருகிலேயே அரசுக்கு சொந்தமான காலி இடம் உள்ளது. ஆனால் அது வேறு துறைக்கு சொந்தமானது என்று கூறுகிறார்கள். மறுகுடியமர்த்தும் இடங்கள் எர்ணாவூர் மற்றும் கார்கில் நகர் என்று தெரிகிறது. அங்கு நாங்கள் செல்ல நிர்பந்திக்கப்படலாம் என்பதால் பயப்படுகிறோம்" என்றார்.

    அப்பகுதியை சேர்ந்த மற்றொருவர் கூறும்போது, "மறுகுடியமர்த்தலுக்கு தேவையான இடத்தை முடிவு செய்ய குடும்பங்களின் எண்ணிக்கை மட்டும் போதுமானது. ஆனால் பயோமெட்ரிக் பதிவு மற்றும் படிவங்களில் கையெழுத்திட ஏன் வற்புறுத்த வேண்டும் மறுகுடியமர்த்தலுக்கான இடங்கள் குறித்து அதிகாரிகள் எந்த தகவலையும் தெரிவிக்காத நிலையில் இது சந்தேகத்தை எழுப்பி உள்ளது" என்றார்.

    இதற்கிடையே பக்கிங்காம் கால்வாய் கரை யோரத்தில் வசிப்பவர்கள் காலி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

    இதுதொடர்பாக சென்னை மத்திய மாவட்ட மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் செல்வம் கூறும்போது, "பரம்பரை, பரம்பரையாக பக்கிங்காம் கால்வாய் கரையோரம் வசிப்பவர்கள் இடமாற்றம் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன? இது அவர்களுக்கான இடம் கிடையாதா?"

    கால்வாய் அருகில் வசிக்கும் மக்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்களிடம் பயோமெட்ரிக் தகவல்களை அதிகாரிகள் சேகரிக்க தொடங்கி உள்ளனர். பொது மக்களும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் லாக் நகர் பகுதியில் பயோமெட்ரிக் தகவல்கள் சேகரிக்கும் பணியை அதிகாரிகள் கைவிட்டனர். காலம், காலமாக வாழும் மக்களின் வாழ்விட உரிமையை பறிக்கக் கூடாது. அவர்களை மாற்று இடத்தில் நீண்ட தூரத்தில் குடியமர்த்தும் போது வாழ்வாதாரம் பாதிக்கும்" என்றார்.

    • கடந்த 23-ந் தேதி கோடை கால வனவிலங்கு கணக்கெடுப்பு தொடங்கியது.
    • ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மொத்தம் 6 வனச்சரகங்கள் உள்ளன.

    பொள்ளாச்சி,

    ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் கோடை கால வனவிலங்கு கணக்கெடுப்பு பணி நிறைவடைந்தது. பதிவு செய்தவைகளை ஒருங்கிணைக்கும் பணி தீவிரமாக நடப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொள்ளாச்சி வனக்கோட்டம், உடுமலை வனக்கோட்டம் என இரண்டு கோட்டங்களிலும் மொத்தம் 6 வனச்சரகங்கள் உள்ளன.

    இங்கு சிறுத்தை, புலி, யானை, சிங்கவால் குரங்கு, மான், வரையாடு, காட்டு பன்றி உள்ளிட்ட அரிய வகை வனவிலங்குகள் வசிக்கின்றன. இதில், ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பொள்ளாச்சி கோட்ட வனப்பகுதிற்குட்பட்ட பொள்ளாச்சி, வால்பாறை, டாப்சிலிப், மானாம்பள்ளி உள்ளிட்ட வனச்சரக பகுதிகளில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் குளிர் கால வனவிலங்கு கணக்கெடுப்பு நடந்தது. அந்த நேரத்தில் புலிகள் கணக்கெடுப்பு மட்டுமின்றி, கண்ணில் தென்பட்ட விலங்குகளின் கணக்கெடுப்பும் நடந்தது.

    அதன்பின், இந்தாண்டில் நடப்பு மாதத்தில் இரண்டு வாரத்துக்கு முன்பு தொடர்ந்து 3 நாட்கள், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் யானைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது. இதைத் தொடர்ந்து, கடந்த 23-ந் தேதி கோடை கால வனவிலங்கு கணக்கெடுப்பு தொடங்கியது. ரோந்து சென்ற பகுதி மற்றும் நேர்கோடு பகுதிகளிலும் இப்பணி நடைபெற்றது.

    பொள்ளாச்சி வனக்கோட்டத்தில பொள்ளாச்சி வனத்தில் வனச்சரகர் புகழேந்தி முன்னிலையிலும், டாப்சிலிப் வனத்தில் வனச்சரகர் சுந்தரவேல் முன்னிலையிலும் நடந்த வனவிலங்கு கணக்கெடுப்பில், வனக்காப்பாளர், வேட்டைத்தடுப்பு காவலர் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் பலர் தனித்தனி குழுவாக கலந்து கொண்ட னர்.

    அவர்கள் திசைகாட்டும் கருவி, நிலைமானி, தூரம் அளக்கும் கருவி கயிறு உள்ளிட்டவைகள் பயன்பாட்டுக்கு வைத்திருந்தனர். வனவிலங்கு கணக்கெடுப்பின் போது யானை மற்றும் கடமான்கள் அதிகம் கண்ணில் தென்பட்டுள்ளது. டாப்சிலிப், போத்தமடை உள்ளிட்ட இடங்களில் சிறுத்தைகளின் கால் தடயம், எச்சம் இருந்துள்ளது.

    வனவிலங்கு கணக்கெடுப்பை, இணை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று கண்காணித்தனர்.கோடை கால வனவிலங்கு கணக்கெடுப்பு பணி, நேற்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து விலங்குகளின் கால்தடயம், முடி உதிர்தல், எச்சம் உள்ளிட்டவைகளை ஆராய்ந்து எடுக்கப்பட்ட கணக்கெடுப்பை சேகரித்து, ஆய்வுக்கு உட்படுத்தும் பணி நடப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கணக்கெடுப்பு நிறைவில் தகவல்
    • குமரி மாவட்டத்தில் 80 வனப்பணியாளர்கள், 20 தன்னார்வலர்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி:

    தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்பட்டன. கடந்த 17-ந்தேதி முதல் 3 நாட்கள் இந்த பணிகள் நடந்தன.

    குமரி மாவட்டத்தில் 80 வனப்பணியாளர்கள், 20 தன்னார்வலர்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். வண்ணாத்திப்பாறை, களியல், கோதையார், மாறாமலை, தாடகை மலை, அசம்பு உள்ளிட்ட பல்வேறு வனப்பகுதிகளில் இந்த கணக்கெடுப்பு பணி நடந் தது.

    முதல் நாள் யானைகளை நேரில் பார்த்து கணக்கெடுக்கப்பட்டது. இதில் 3 யானைகள் வனத்தில் கண்டறியப்பட்டது. 2-வது நாள் சாணம் மற்றும் லத்தி மூலம் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. 3-வது நாளான நேற்று நீர்நிலை பகுதிகளில் யானைகள் வருவதை பார்த்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. பணியில் ஈடுபட்டவர்கள், பைனாகுலர் மூலம் யானைகளை பார்த்து கணக்கெடுத்தனர்.

    அப்போது வனப்ப குதிக்குள் யானைகள் கூட்டம் கூட்டமாக இருப்பது தெரியவந்துள்ளது. அசம்பு வனத்தில் 7 யானை கள் கூட்டமாக நின்றதை கணக்கெடுத்துள்ளனர். இதேபோல வேறு சில பகுதிகளிலும் யானைகள் கூட்டமாக நின்றுள்ளது. கணக்கெடுப்பின் மூலம் குமரி மாவட்ட வனப்பகுதியில் 15 யானைகள் இருப்பது தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து மாவட்ட வன அதிகாரி இளையராஜா கூறுகையில், 3 நாட்கள் நடைபெற்ற யானைகள் கணக்கெடுப்பு பணி நிறைவு பெற்றுள்ளது. இதில் 15 யானைகள் வனத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. ஏற்கனவே எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 20 யானைகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது என்றார்.

    கணக்கெடுப்பில் பெறப்பட்ட தகவல்கள், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். தமிழகம் முழுவதும் உள்ள தகவல்கள் கிடைக்கப்பெற்றதும், முதுமலை புலிகள் காப்பக இயக்குநரால் ஆய்வு செய்யப்பட்டு, இறுதி எண்ணிக்கை அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    • 32 இடங்களில் செல்போன் செயலி மூலம் கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • கணக்கெடுப்பு குழுவினருக்கு நேற்று தலையணையில் சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.

    களக்காடு:

    களக்காடு புலிகள் காப்பகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு யானைகள் கணக்கெ டுக்கு பணி நடந்தது.

    யானைகள் கணக்கெடுக்கும் பணி

    அதன்பின் யானைகள் குறித்த ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) தொடங்கி, 19-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.

    களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட களக்காடு, திருக்குறுங்குடி, கோதையாறு வனசரகங்களில் 32 இடங்களில் செல்போன் செயலி மூலம் கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுகிறது. இதில் வனத்துறை ஊழியர்கள், தன்னார்வலர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட உள்ளனர். இவர்கள் யானைகளை நேரில் காண்பது, அவைகள் எச்சங்களை சேகரித்தல், நீர்நிலைகளை சார்ந்து செல்லுதல் உள்ளிட்ட 3 முறைகளில் கணக்கெடுப்பில் ஈடுபடுகின்றனர். இதையொட்டி கணக்கெடுப்பு குழுவினருக்கு நேற்று தலையணையில் சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது. புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார்.

    அதனை தொடர்ந்து சூழலியலாளர் ஸ்ரீதரன் கணக்கெடுப்பு குழு வினருக்கு கணக்கெடுப்பது பற்றியும், சேகரிக்கப்படும் புள்ளி விபரங்களை செல்போனில் பதிவு செய்வது குறித்தும் பயிற்சி அளித்தார்.

    முகாமில் வனசரகர்கள் களக்காடு பிரபாகரன், கோதையாறு சிவலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். கணக்கெடுப்பு முடிந்தவுடன் சேகரிக்கப்படும் புள்ளி விபரங்கள் சென்னை வனத்துறை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    அங்கு நடைபெறும் ஆய்வுக்கு பின் களக்காடு மலையில் வாழும் யானைகளின் எண்ணிக்கை தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • தென்மாநில அளவிலான யானைகள் கணக்கெடுப்பு பணி நாளை முதல் 3 நாட்கள் நடக்கிறது.
    • விபரங்கள் முதுமலை காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகத்தில் ஆண்டு தோறும் பொது வன விலங்குகள் கணக்கெடுப்பு நடத்தும் போது, யானைகளின் எண்ணிக்கையும் கணக்கெடுப்பு செய்யப்படுகிறது. இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய தென் மாநிலங்களில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் மே 17, 18, 19 ஆகிய 3 நாட்கள் யானைகள் கணக்கெடுப்பு நடைபெறுகிறது.

    கடந்த 2017-ம் ஆண்டு நடந்த தேசிய யானைகள் கணக்கெடுப்பில் கர்நாடகம் முதல் இடத்தையும், கேரளம் 3-ம் இடத்தையும், தமிழகம் 4-ம் இடத்தையும் பிடித்திருந்தது. தற்போது நடைபெற உள்ள கணக்கெடுப்பில் தென்மாநிலங்களில் யானைகளின் எண்ணிக்கை கனிசமான அளவு உயர்ந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த கணக்கெடுப்பு பணியில் வனத்துறையினர், தன்னார்வலர்கள் என 120 பேர் கலந்து கொள்கின்றனர். இவர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் ஸ்ரீவில்லிபுத்தூர் வன விரிவாக்க மையத்தில் நடந்தது. இந்த பயிற்சி முகாமை புலிகள் காப்பக துணை இயக்குநர் திலீப்குமார் தொடங்கி வைத்தார். அப்போது அவர், யானைகள் கணக்கெடுப்பில் ஜி.பி.எஸ். கருவி திசை காட்டும் கருவி, வாக்கி டாக்கி உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் துல்லியமாக யானைகள் குறித்த தகவல்களை அறிய முடியும். கணக்கெடுப்பு பணி முடிந்ததும், விபரங்கள் முதுமலை காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்படும், என்றார்.

    • தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி சமூகநீதி காக்க வேண்டும் என நடிகர் கருணாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
    • புள்ளி விவரங்கள் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

    கமுதி

    முக்குலத்தோர் புலிப்ப டை கட்சியின் நிறுவனரும், நடிகருமான கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக் கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையிலேயே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று 2016 -ல் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட நாளில் இருந்து பலமுறை சட்ட பேரவையில் வலியுறுத்தி வந்துள்ளேன்.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 10.5 சதவீத உள்இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கூடாது என முக்குலத்தார் புலிப்படை கட்சி, முக்குலத்தோர் முன்னேற்ற சங்கம் உள்பட 13 மேற்பட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரனையில் 2021 நவம்பரில் உச்சநீதிமன்றம் 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை நிறுத்தி வைத்தது. தமிழகத்தில் ஒரு ஜாதிக்கு தனியாக இட ஒதுக்கீடு கொடுக்கும்போது இன்னொரு ஜாதியினர் தங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோருகின்றனர். ஆனால் அரசிடம் ஜாதி தொடர்பாக எந்த புள்ளி விபரமும் கிடையாது. எனவே நாங்கள் ஜாதிவாரியாக கணக் கெடுப்பை நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்.

    கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்புகளில் அனைத்து ஜாதியின ருக்கும் சமூக நீதி கிடைக்க வேண்டும் என்றால் தமிழ கத்தில் ஜாதிவாரி கணக்கெ டுப்பு நடத்தி புள்ளி விவரங்களை வெளிக் கொண்டு வந்தால் தான் அனைவருக்குமான சமூக நீதி காக்கப்படும்.

    எனவே முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக ஜாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப் பிற்கான ஆணையம் அமைத்து புள்ளி விவரங்கள் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கணக்கெடுப்புப்பணிக்கு பொது மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
    • விவரங்களை dpckanchi@Yahoo.co.in அல்லது 1098 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, ஊராட்சி, பேரூராட்சிகளின் குடியிருப்புகளிலும் பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்பு களப்பணி ஏப்ரல் முதல் இரண்டு வாரங்களிலும் மற்றும் மே இறுதி வாரத்திலும் நடைபெற உள்ளது.

    இந்த கணக்கெடுப்பு பணியில், பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள்(பொ) ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், கல்வி தன்னார்வலர்கள், ஆகியோர் ஈடுபடுகிறார்கள். எனவே கணக்கெடுப்புப்பணிக்கு பொது மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    மேலும் பொது மக்கள் எவரேனும் பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் குறித்த விவரங்களை dpckanchi@Yahoo.co.in அல்லது 1098 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பல்வேறு இடங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பறவைகள் வருவது வழக்கம்
    • மொத்தம் 23 இடங்களில் கணக்கெடுப்பு பணிகள் நடை பெற்றன

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் ஆண் டுதோறும் 2 பருவ மழைகள் பெய்வதால் இங்குள்ள நீர்நி லைகளில் எப்போதும் தண் ணீர் நிறைந்து காணப்படு கிறது. இதனால் உணவு, இனப்பெருக்கம் மற்றும் புக லிடம் தேடி இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந் தும், வெளிநாடுகளில் இருந் தும் பறவைகள் வருவது வழக் கம். பொதுவாக அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் இறுதி வரை பறவைகள் வருகின்றன.

    அவ்வாறு வரும் பறவை களில் எத்தனை இனங்கள் உள்ளன? பறவைகளின் எண்ணிக்கை எந்த அளவு உள்ளது? என்பது குறித்து வனத்துறை சார்பில் ஆண்டுதோறும் கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கணக்கெடுப்பை 3 கட் டமாக நடத்த வனத்துறையினர் முடிவு செய்தனர். அதன் படிமுதற்கட்டமாக நீர் வாழ் பறவைகள் கணக்கெடுப்பு புத்தளம், தேரூர், சுசீந்திரம், மேம்பனூர், அச்சன்குளம், இறச்சகுளம், ராஜாக்கமங்கலம் உள்பட 20 இடங்களில் கடந்த ஜனவரி மாதம் 29-ந்தேதி நடந்தது.

    இதனைதொடர்ந்து காடு கள் மற்றும் நிலங்களில் வாழும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு நேற்று நடந்தது. மாவட்ட வன அதிகாரி இளையராஜா மேற்பார்வையில் 47 பறவையியலாளர்கள், 50 வனப்பணியாளர்கள் மூலம் கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டது. இந்த பணி நேற்று காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை வனப்பகுதிகள், கிராமப் புறப்பகுதிகள் மற்றும் நகர்ப்புறப்பகுதிகள் என 3 வகையான இடங்களில் நடந்தது.

    மாவட்டத்தில் அசம்பு, கோதையார், மாறாமலை, பாலமோர், தெற்குமலை உள் பட 14 வனப்பகுதிகளிலும், உதயகிரி, ஆரல்வாய்மொழி, ஆசாரிபள்ளம், கோணம் போன்ற 9 நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகள் உள்பட மொத்தம் 23 இடங்களில் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்றன.

    இதில் சுமார் 173 இனங்களைச்சேர்ந்த 3,864 பறவைகள் கண்டறியப்பட்டன. இது கடந்த ஆண்டு கண்டறியப்பட்ட 2,002 பறவைகளை விட அதிக மாகும்.

    நேற்று நடைபெற்ற கணக்கெடுப்பில் மலை இருவாட்சி, தீக்காக்கை, பூமன் ஆந்தை, கள்ளிக்குயில் போன்ற பறவைகள் காணப்பட்டன. வனப்பகுதிகளில் காணப்படும் அரிய வகையான இந்தியபொன்னுத்தொட்டான் நகர்ப்புறப்பகுதியான ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • பறவைகள் கணக்கெடுப்பானது இரு நாட்கள் நடந்தது.
    • கணக்கெடுப்பு பணி காலை, 6.30 மணி முதல், 11.00 மணி வரை நடைபெற்றது.

    திருப்பூர் :

    தமிழகத்தில் ஒருங்கிணைந்த நில வாழ் பறவைகள் கணக்கெடுப்பா னது, வனப்பகுதி மற்றும் வனத்தை ஒட்டிய கிராமங்கள் மற்றும் நகரங்கள் போன்ற பகுதிகளில், இரு நாட்கள் நடந்தது. நில வாழ் பறவைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உடுமலை பகுதியில் நடந்த, கணக்கெடுப்பு பணியில் வனத்துறை பணியாளர்கள், தன்னார்வு தொண்டு நிறுவனத்தினரின் குழுவும் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

    கணக்கெடுப்பு பணி காலை, 6.30 மணி முதல், 11.00 மணி வரை நடைபெற்றது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள், வனப்பகுதி களுக்கு அருகிலுள்ள கிராமப்பகுதிகளில் மற்றும் சிறிய மற்றும் பெரிய நகரங்கள் போன்றவற்றிலும் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

    திருப்பூர் வனக்கோட்ட உதவி வன பாதுகாவலர் கணேஷ்ராம் தலைமையில், உயிரியலாளர் மகேஷ்கு மார்,- பறவைகள் ஆர்வலர் பிளஸ்சோயேசுடியான்-, வனக்காவலர் லட்சுமணன்-, வேட்டை தடுப்பு காவலர் பிரகாஷ்- ஆகியோர் கொண்ட குழு திருமூர்த்திமலை முதல் பொன்னாலம்மன் சோலை வரை உள்ள பகுதியில் கணக்கெடுப்பு மேற்கொண்டனர்.

    இதில், 31 வகையான நிலவாழ் பறவைகள் பதிவு செய்யப்பட்டது. செந்தலைப்பஞ்சுருட்டான், நீலவால் பஞ்சுருட்டான், பச்சை பஞ்சுருட்டான், வெள்ளைப்புருவ சின்னான், வால் காகம், பட்டாணி குருவி, நீல முக செண்பகம், கொண்டை பாம்பு கழுகு, வல்லூறு, பனை உழவாரன், மைனா, வெண்புருவ வாலாட்டி, வெண் கண்ண குக்குறுவான், பச்சை சிட்டு, மரம் கொத்தி, காட்டு சிலம்பன்கள், தையல்காரி, செண்பகம், தேன் சிட்டு, அக்காகுயில் மற்றும் தேன் பருந்து ஆகிய பறவையினங்கள் பதிவு செய்யப்பட்டன.

    • அரசு நேரடி நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யப்படுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • கணக்கெடுப்பு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியத்தில் கடந்த மூன்று நாட்களாக பெய்த கனமழையால் ஒன்றிய பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் மழை நீரில் சாய்ந்து சேதமடைந்து உள்ளது.

    இதைத்தொடர்ந்து கோட்டூர், மேலப்பூதனூர், பெருநாட்டாந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர்

    பி.ஆர்.பாண்டியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

    அதனைத் தொடர்ந்து மேலப்பூதனூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யப்படுவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    கடந்த சில நாட்களாக பெய்த கனமழையில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளது. இதனால் விவசாயிகள் அறுவடை பணிகள் செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.

    எனவே அரசு கூடுதல் ஈரப்பதத்துடன் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும், மாவட்ட நிர்வாகம் நேரடியாக கணக்கெடுப்பு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கூறினார்.

    இந்த ஆய்வின் போது விவசாய சங்க நிர்வாகிகள், விவசாயிகள், பொதுமக்கள் உடன் இருந்தனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழ்விட- வலசை வரும் நீர்வாழ் பறவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
    • 13 இடங்களில் நடந்த கணக்கெடுப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு அரசு வனத்துறையின் மூலம் மாநில அளவிலான ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு பணி ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்து வருகிறது. இதற்காக 13 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜெகதீஷ் சுதாகர் ஆலோசனையின் படி பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.

    ஈரம் சார் நிலங்களான சித்திரங்குடி, காஞ்சி ரங்குளம், மனோலி தீவு, அரிச்சல் முனை, பிள்ளைமடம், முனைக்காடு, காரங்காடு, சக்கரக்கோட்டை தேர்த்தங்கால், வாலி நோக்கம், மேல-கீழ செவ்வனூர் பகுதிகளில் மேற்கொண்ட பறவைகள் கணக்கெடுப்பில் சுமார் 7000-க்கும் அதிகமான வாழ்விட மற்றும் வலசை வரும் நீர் வாழ் பறவைகள் கண்டறியப்பட்டன.

    அவற்றில் குறிப்பி டத்தக்கவை சைபீரியா, மங்கோலியாவில் இருந்து வலசை வரும் வரித்தலை வாத்து, மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து வரும் பூ நாரைகள், வட துருவ பகுதிகளை சார்ந்த எண்ணற்ற உள்ளான் வகை பறவை இனங்கள், கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் இருந்து வரும் படைக்குருவிகள், அரிய வகை கழுகு இனங்கள் கண்டறியப்பட்டன.

    இக்கணக்கெடுப்பு பணியில் உதவி வன பாதுகாவலர்கள் சுரேஷ், சுரேஷ் பிரதாப் மற்றும் வனப்பாதுகாப்பு படை உதவி வனப்பாதுகாவலர் கணேசலிங்கம், மண்டபம் வனச்சரக அலுவலர் மகேந்திரன், கீழக்கரை, ராமநாதபுரம் கூடுதல் பொறுப்பு வனச்சரக அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

    இவர்களுடன் பறவை ஆர்வலர்களான மதுரை இறகுகள் அம்ரிதா இயற்கை அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பில், வேடி டோக் கல்லூரியை சேர்ந்த மாணவிகளும், கமுதி நம்மாழ்வார் வேளாண்மைக் கல்லூரி மாணவர்களும் பங்கேற்றனர்.

    ×