search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 257589"

    • ஈரோடு மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
    • 6 பேர் கொரோனா பாதி ப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியது. பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக பாதிப்பு குறைய தொடங்கி யது. கடந்த சில மாதங்களா கவே கொரோனா தாக்கம் அதிக அளவில் இல்லாமல் இருந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.

    நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியலின்படி ஈரோடு மாவட்ட த்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

    இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 673 ஆக உயர்ந்துள்ளது.

    இதேபோல் கொரோனா பாதிப்பில் இருந்து ஒருவர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்.

    இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 933 பேர் கொரோனா பாதிப்பி லிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

    தற்போது மாவட்டம் முழுவதும் 6 பேர் கொரோனா பாதி ப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • வனச்சரகர் தினேஷ் தலைமையில் வன பகுதியில் சென்று வனத்துறையினர் ஆய்வு மேற்கொ ண்டனர்.
    • வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காக 2பேருக்கு 45 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனகோட்டத்திக்கு உட்பட்ட கேர்மாளம் வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்கு வசித்து வருகின்றன. வன விலங்குகள் அவ்வப்போது விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது.

    இந்த நிலையில் கோட்டமாளம் கிராமத்தைச் சேர்ந்த திம்மையன் (55) என்பவரை மாடு மேய்த்துக் கொண்டிருந்த போது கரடி தாக்கியதாக கூறி அதே பகுதியை சேர்ந்த நாராயணன் என்பவர் வனச்சரக அலுவகத்திக்கு நேரில் வந்து தகவல் தெரிவித்தார்.

    அதைத் தொடர்ந்து வனச்சரகர் தினேஷ் தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று வனத்து றையினர் ஆய்வு மேற்கொ ண்டனர். ஆய்வில் மாடு மேய்த்த திம்மையன் என்பவரை கரடி தாக்கவில்லை என்பது உறுதியானது.

    இதையடுத்து திம்மையன், நாராயணன் ஆகிய 2 பேரும் வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காக 45 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 

    ×