search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழுக்குமரம்"

    • அதன் உச்சியில் பரிசுப் பொருள்களாக பழங்கள், பணம் ஆகியவற்றைக் கட்டிவிடுவார்கள்.
    • வழுக்குமரத்தின் மீதேறி உச்சியில் இருக்கும் பரிசுப் பொருளை எடுக்க வேண்டும்.

    கிராமங்களில், கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழாவின்போது ஒரு மரத்தை நட்டு அதில் எண்ணெயைத் தடவிவிடுவார்கள்.

    அதன் உச்சியில் பரிசுப் பொருள்களாக பழங்கள், பணம் ஆகியவற்றைக் கட்டிவிடுவார்கள்.

    வழுக்குமரத்தின் மீதேறி உச்சியில் இருக்கும் பரிசுப் பொருளை எடுக்க வேண்டும்.

    இளைஞர்கள் வழுக்கு மரத்தில் ஏறி பரிசுப்பொருட்களைப் பிடிக்க முயலும்போது, பெண்கள் தண்ணீரை அவர்கள்மீது ஊற்றுவார்கள்.

    எண்ணெய் பூசப்பட்ட மரம் வழுக்கும்.

    தண்ணீரை ஊற்றும்போது மேலும் வழுக்கும். யாராவது ஒருவர் கஷ்டப்பட்டு வழுக்குமரத்தில் ஏறி பரிசுப்பொருளை அடைந்துவிடுவார்கள்.

    • வழுக்கு மரம் ஏறுதல் அதைத்தொடர்ந்து வழுக்கு மரத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டதையடுத்து உறியடி திருவிழா தொடங்கியது.
    • இளைஞர்கள் போட்டி போட்டுக்கொண்டு வழுக்குமரம் ஏறினர். அவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. இறுதியில் ஒரு வாலிபர் வழுக்குமரம் ஏறினார்.

    தஞ்சாவூர்:

    கிருஷ்ண ஜெயந்தியை யொட்டி தஞ்சை மேலவீதியில் 22-வது ஆண்டாக உறியடி திருவிழா கடந்த 16-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள், இசை நிகழ்ச்சிகள், பூச்சொரிதல்,கோபூஜை ஆகியவையும் நடைபெற்றது.

    இதன் முக்கிய நிகழ்ச்சி யான உறியடி திருவிழா நேற்று நடைபெற்றது. முன்னதாக கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    வழுக்கு மரம் ஏறுதல் அதைத்தொடர்ந்து வழுக்கு மரத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டதையடுத்து உறியடி திருவிழா தொடங்கியது.

    இதையடுத்து இளைஞர்கள் போட்டி போட்டு க்கொண்டு வழுக்குமரம் ஏறினர். அவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. இறுதியில் ஒரு வாலிபர் வழுக்குமரம் ஏறினார்.

    இதனை திரளான பொது மக்கள் கண்டு களித்தனர். முன்னதாக கிருஷ்ணன் 4 வீதிகளிலும் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதற்கான ஏற்பாடுகளை உறியடி குழு தலைவர் கோபால், செயலாளர் சரத்யாதவ் மற்றும் யாதவ கண்ணன் பக்த கோடிகள் மற்றும் தஞ்சை ராஜாக்கோட்டை யாதவர்கள் செய்திருந்தனர்.

    ×