என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பிரசவத்தின் போது உயிரிழப்பு"
- நிறை மாத கர்ப்பிணியாக இருந்ததும் தெரிய வந்தது பிரசவ வலியால் தவித்த அந்த யானை குட்டியை ஈன்ற முடியாமல் இறந்து போனது தெரிய வந்தது.
- பெண் யானையும், குட்டியையும் பொக்லைன் எந்திரத்தின் மூலம் குழி தோண்டி அங்கேயே அடக்கம் செய்தனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனசரகம் அய்யூர் வனப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. இந்த யானைகள் உணவு, தண்ணீர் தேடி அடிக்கடி கிராமங்களை நோக்கி வந்து செல்கின்றன.
இந்நிலையில் நேற்று முன்தினம் தேன்கனிக்கோட்டை வன சரகம் பெல்லட்டி அடுத்து கோவை பள்ளம் என்ற இடத்தில் ஒரு பெண் யானை இறந்து கிடப்பதாக தேன்கனிக்கோட்டை வனத்துறைகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் மாவட்ட வன அலுவலர் கார்த்திகாயினி, தேன்கனிக்கோட்டை வன சரக அலுவலர் முருகேசன், கால்நடை மருத்துவர் பிரகாஷ் மற்றும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அதில் இருந்து கிடந்த பெண் யானைக்கு 30 வயது இருக்கும் என்பதும், நிறை மாத கர்ப்பிணியாக இருந்ததும் தெரிய வந்தது பிரசவ வலியால் தவித்த அந்த யானை குட்டியை ஈன்ற முடியாமல் இறந்து போனது தெரிய வந்தது.
அதன் பின்னர் கால்நடை மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் மூலம் இறந்த யானையின் உடலை அந்த இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது வயிற்றில் இருந்து குட்டி யானையும் இறந்து கிடந்தது.
இதையடுத்து பெண் யானையும், குட்டியையும் பொக்லைன் எந்திரத்தின் மூலம் குழி தோண்டி அங்கேயே அடக்கம் செய்தனர்.
பிரசவ வலியால் குட்டியை ஈன்ற முடியாமல் யானை இருந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யானை இறந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்