என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பைனான்சியர் உள்பட 6 பேர் கைது"
- தொழில் போட்டி காரணமாக டெய்லர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பைனான்சியர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
- கைதான 6 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.
பழனி:
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் ஜெயந்த்சமந்தா(34). இவர் பழனியில் பல வருடங்களாக எம்பிராய்டரிங் வேலை பார்த்து வந்தார். இவர் தனது நண்பர்களுடன் வள்ளியப்பா கார்டன் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். கடந்த 21-ந்தேதி அதிகாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல் வீட்டில் இருந்த ஜெயந்த்சமந்தாவை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பிஓடினர்.
இதுகுறித்து பழனி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். டி.எஸ்.பி சிவசக்தி அறிவுறுத்தலின்பேரில் டவுன் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காமிராக்களில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் உருவங்களை சோதனை மேற்கொண்டனர்.
மேலும் ஜெயந்த்சமந்தாவின் செல்போன் எண்ணுக்கு வந்த அழைப்புகளை வைத்தும் விசாரணை நடத்தப்பட்டது. இதில் தொழில்போட்டி காரணமாக ஜெயந்த்சமந்தா குத்தி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் தர்மராஜ், அவரது நண்பரான தட்டான்குளத்தை சேர்ந்த ராமதுரை(32), ஈரோட்டை சேர்ந்த மணிகண்டன்(26), சந்தனபிரகாஷ்(22), தினேஷ்குமார்(22), நவீன்குமார்(26) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
இதில் தர்மராஜ் மற்றும் ராமதுரை ஆகியோர் பைனான்ஸ் தொழில் செய்து வருவதும், மற்ற 4 பேரும் இவர்களிடம் வேலை பார்த்து வந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. கைதான 6 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்