என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர் திருவிழா"

    • பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவிலில் நடந்தது
    • மருத்துவ முகாம் அமைத்து தர வலியுறுத்தல்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவிலில் பிரம்மோற்சவ தேர் திருவிழா நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் தாசில்தார் வேண்டா தலைமையில் நடைப்பெற்றது.

    கோவில் செயல் அலுவலர் நரசிம்மமூர்த்தி அனைவரையும் வரவேற்றார்.இக்கூட்ட த்தில் நாளை (புதன்கிழமை )நடைபெறும் தேர் திரு விழாவின் போது தேர் செல்லும் வீதிகளில் தேர் புறப்படுவதற்கு முன்னதாக அனைத்து மின் வயர்களை அகற்றி தேரோட்டம் முடிந்தபின் இணைப்பு வழங்க வேண்டும் தேர் திருவிழா தவிர இதர திருவிழாவின் போது மும்முனை மின்சாரம் தடையின்றி சீராக வழங்க வேண்டும்.

    பள்ளிகொண்டா பேரூராட்சி சார்பில் தேர் செல்லும் வீதிகளில் பாதைகள் சீராக அமைத்தல், இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், கோவில் சு ற்றிலும் குடிநீர் குழாய் அமைத்து குடிநீர் வினி யோகம் செய்து தருதல், உயர்மின் கோபுர விளக்கு களை பழுது நீக்கி சீரமைத்து தர வேண்டும்.

    சுகாதாரத்துறை சார்பி ல் மருத்துவ முகாம் அ மைத்து தர வேண்டும். 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    தீயணைப்பு துறை சார்பில் தீயணைப்பு வாகனம் கோவில் முன்பு நிறுத்த வேண்டும். தேரோட்டத்தின் போது பொதுமக்கள் தேர் சக்கரத்தின் அருகே செல்லாமல் போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முடிவில் கணக்காளர் சரவணபாபு, கோவில் மணியம் ஹரி ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.

    இதில் அனைத்து துறை அரசு அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்
    • 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஜலநாதீஸ்வரர் கோவிலில் சித்திரை மாத பிரமோற்ச திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது இதனைத் தொடர்ந்து.

    ஜலநாதீஸ்வரர் தினம் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளினார். சித்திரை மாத பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்திற்கு இன்று அலங்கரிக்கப்பட்ட தேரில் ஜலநாதீஸ்வரர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இதனை தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    நான்கு மாத விதிகளில் தேர் வளம் வந்து மாலை மீண்டும் கோவிலை வந்தடைந்தது. வழி நெடுங்கிலும் பக்தர்கள் சாமியை தரிசனம் செய்தனர்.

    • பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்
    • முக்கிய வீதிகளில் வலம் வந்தது

    சோளிங்கர்:

    சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. விழாவின் 7-வது நாளான நேற்று தேர் திருவிழா நடைபெற்றது. திருவிழாவில் சோளிங்கர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வந்தி ருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் சோளிங்கர் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து மீண்டும் கோவிலை வந்தடைந்தது.

    கோவில் இணை ஆணையாளர் ஜெயா, சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.முனிரத்தினம், முன்னாள் எம்.பி. சி.கோபால், முன் னாள் எம்.எல்.ஏ.பார்த்திபன், சோளிங்கர் நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி அசோகன், துணைத் தலைவர் பழனி உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    • மகாகாளி அம்மனை வைத்து பூஜை செய்து பெண்களும் ஆண்களும் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
    • தேர் அசைந்தாடியபடி முக்கிய வீதிகள் வழியாக சென்று இறுதியில் கோவிலை வந்து அடைந்தது

     தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், இலக்கியம்பட்டி அருகே உள்ள செந்தில் நகரில் அமைந்துள்ள மகா காளியம்மன் கோவிலில் 123-வது ஆண்டு தேர் திருவிழா நடைபெற்றது.

    கடந்த 24- ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி திருவிழாவின் ஒரு பகுதியாக அக்னி குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும், திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் மகாகாளி அம்மனை வைத்து பூஜை செய்து பெண்களும் ஆண்களும் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

    தேர் அசைந்தாடியபடி முக்கிய வீதிகள் வழியாக சென்று இறுதியில் கோவிலை வந்து அடைந்தது.

    பக்தர்கள் தேர் திருவிழாவில் மாவிளக்கு எடுத்தும் ஆடுகள் பலியட்டும் தங்கள் நேர்த்திக்கடனை செய்தனர்.

    இந்த தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • கடந்த 3-ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
    • பவனி வந்த தேரின் மீது பக்தர்கள் உப்பு, மிளகு ஆகியவற்றினை தூவி தங்களது நேர்த்திகடனை செலுத்தினார்கள்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் வரட்டனப்பள்ளி அருகே புஷ்பகிரி புனித மலர்மலை மாதா திருத்தல தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த 3-ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

    இந்த தேர் திருவிழாவின் போது, நாள்தோரும் ஆலயத்தின் பங்கு தந்தையர்களால் ஜெபங்களுடன், சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    இவ்விழாவின் இறுதிநாளில் திருத்தேர் பவணி வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக ஆலயத்தில் தருமபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி பூஜையுடன் புது நன்மை மற்றும் உறுதிபூசூதல் ஆகிய அருட்கொடைகள் சிறுவர்களுக்கும், சிறுமிகளுக்கும் வழங்கப்பட்டது.

    பின்னர், புனித மலர்மலை மாதாவின் அலங்கரிக்கப்பட்ட தேர் பவனி நடைபெற்றது. வானவேடிக்கையுடன் தொடங்கிய தேர் பவணியை, மறைவட்ட முதன்மைக்குரு . ஜார்ஜ் புனித நீர் தெளித்து, மந்திரித்து தொடக்கி வைத்தார். பவனி வந்த தேரின் மீது பக்தர்கள் உப்பு, மிளகு ஆகியவற்றினை தூவி தங்களது நேர்த்திகடனை செலுத்தினார்கள்.

    இந்த திருவிழாவில், கிருஷ்ணகிரி, சுண்டம்பட்டி, எலத்தகிரி, கந்திகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான கிருஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.

    • இன்று காலை தேருக்கு சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது.
    • உலா செல்லக்கூடிய வாகனம் மற்றும் கோவில் வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது.

    கடலூ:

    கடலூர் திருப்பாதிரி ப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வருடம் தோறும் வைகாசி பெரு விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வைகாசி பெருவிழா வருகிற 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற உள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் அடுத்த மாதம் ஜூன் 2-ந்தேதி நடக்கிறது.

    இந்நிலையில் இன்று காலை தேருக்கு சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து திருவிழாவிற்கான பந்த கால் நடும் நிகழ்ச்சி நடை பெற்றன. பந்த காலுக்கு மஞ்சள், குங்குமம் பூசி சிறப்பு பூஜைகள் நடைபெற்று பந்தகால் நடப்பட்டது.இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். முன்னதாக பாடலீஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி தொடங்கப்பட்டு கோவில் கொடிமரம், கோவிலின் சுற்றுச்சுவர், சாமி வீதி உலா செல்லக்கூடிய வாகனம் மற்றும் கோவில் வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. இதில் கோவில் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • தருமபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில், ஆடம்பர கூட்டுத்திருபலி நடந்தது.
    • நகரின் முக்கிய வீதிகளில், சாலைகள் வழியாக நகர்வலம் வந்த தேர் பழையபேட்டையில் நிறைவடைந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னை திருத்தலத்தின் 50-ம் ஆண்டு திருத்தல தேர் திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் ஆலயத்தின் பங்கு தந்தையர்கள் தலைமையில் திருப்பலி பூஜைகளும், மறையுரைகளும் நிகழ்த்தப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து மாலை நேரங்களில், தேவாலயத்தை சுற்றி சிறிய தேர்பவனி நடந்தது. தேர்த்திருவிழாவின் கடைசி நாளான நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு தருமபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில், ஆடம்பர கூட்டுத்திருபலி நடந்தது.

    பின்னர் மாலை 7 மணியளவில், வண்ண விளக்குளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட அன்னையின் பெரிய தேரை அருட்திரு இருதயம் மந்திரித்து, தேர் பவனியை துவக்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகளில், சாலைகள் வழியாக நகர்வலம் வந்த தேர் பழையபேட்டையில் நிறைவடைந்தது.

    இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டைய மாநிலங்களான கர்நாடாக மற்றும் ஆந்திராவில் இருந்தும் ஏராளமான கிறிஸ்தவர்கள் கல்நது கொண்டனர்.

    • நாளை மாலை 6மணிக்கு கொடியேற்றம், சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
    • 2-ந் தேதி மதியம் 3-30மணிக்கு ஈஸ்வரன் கோவில் தேர் வடம் பிடித்தல் நடக்கிறது.

    திருப்பூர்  :

    திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி மற்றும் வீரராகவ பெருமாள் கோவில்களில் வைகாசி விசாக தேர் திருவிழா இன்று தொடங்கி வருகிற 8-ந்தேதி வரை நடக்கிறது. விழாவையொட்டி இன்று 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 6மணிக்கு கிராமசாந்தி அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. நாளை 27-ந்தேதி(சனிக்கிழமை) மாலை 6மணிக்கு கொடியேற்றம், சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. நாளை முதல் 1-ந்தேதி வரை காலை 10 மணி மற்றும் மாலை 6-30மணிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது.

    நாளை 27-ந்தேதி கற்பக விருட்ஷ வாகனம், சிம்ம வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. 2-ம் நாளான 28-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) பூத வாகனம், அன்ன வாகனத்திலும், 3-ம் நாளான 29-ந்தேதி(திங்கட்கிழமை) ராவணேஸ்வரர் வாகனம், காமதேனு, சேஷ வாகனத்திலும், 4-ம் நாளான 30-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) கற்பக விருட்சம், அதிகார வாகனம், யாழி வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. 5-ம் நாளான 31-ந்தேதி(புதன்கிழமை) பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, கருட சேவை புறப்பாடு நடக்கிறது.

    6-ம் நாளான 1-ந்தேதி(வியாழக்கிழமை) திருக்கல்யாண உற்சவம், வெள்ளை யானை வாகனம், அம்மன் பல்லக்கு சேவை, அனுமன் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான 7-ம் நாள் 2-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3-30மணிக்கு அபிஷேகம் நடக்கிறது. காலை 5மணியில் இருந்து 6மணிக்குள் சுவாமி ரதத்திற்கு எழுந்தருளல் நடக்கிறது. மதியம் 3-30மணிக்கு ஈஸ்வரன் கோவில் தேர் வடம் பிடித்தல் நடக்கிறது.

    8-ம்நாளான 3-ந்தேதி (சனிக்கிழமை) மதியம் 3-30மணிக்கு பெருமாள் கோவில் தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. 9-ம் நாளான 4-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை பரிவேட்ைட, குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. 10-ம்நாளான 5-ந்தேதி (திங்கட்கிழமை) தெப்பத்திருவிழா (பெருமாள் கோவில் ) நடக்கிறது.

    11-ம்நாளான 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மகா தரிசனம் , 12-ம்நாளான 7-ந்தேதி (புதன்கிழமை) மஞ்சள் நீரரட்டு விழா, மலர் பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. 13-ம் நாளான 8-ந்தேதி (வியாழக்கிழமை) விடையாற்றி உற்சவம் நடக்கிறது. 4-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை காலை 10மணி, மாலை 7மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

    விழாவையொட்டி நாளை 27-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை மாைல 6மணிக்கு கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. அதன்படி நாளை 27-ந்தேதி மாலை 6மணிக்கு மங்கள இசை நிகழ்ச்சி நடக்கிறது. 28-ந்தேதி ஜெயந்தி ஸ்ரீதரின் தெய்வீக பாடல் நிகழ்ச்சி,29-ந்தேதி திருப்பூர் கம்பன் கழகம் சார்பில் சிறப்பு பட்டிமன்றம், 30-ந்தேதி சவிதா ஸ்ரீராமின் நாம சங்கீர்த்தனம், 31-ந்தேதி நவீன் பிரபஞ்ச நடன குழுவின் கொங்கு நாட்டு பாரம்பரிய ஒயில் கும்மி நடனம் நிகழ்ச்சி, 1-ந்தேதி பரத நாட்டிய நிகழ்ச்சி, 2-ந்தேதி பரத நாட்டிய நிகழ்ச்சி, 3-ந்தேதி நரசிம்மர் தரண்டகம் என்ற தலைப்பில் நாட்டிய நாடகம், 4-ந்தேதி வீரமணி ராஜூ, அபிஷேக் ராஜூ குழுவினரின் பக்தி பாடல் நிகழ்ச்சி, 5-ந்தேதி மணிகண்டனின் மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு ,6-ந்தேதி தெய்வீக பாடல்கள் இசை நிகழ்ச்சி நடக்கிறது.

    • வைகாசி விசாக தேர் திரு விழாவை முன்னிட்டு 66ஆவது ஆண்டு கண்ணகி விழா கைலாசநாதர் கோவிலில் உள்ள சொக்கப்ப முத லியார் அரங்கத்தில் நடை பெற்றது.
    • திருச்செங்கோடு எம்.எல்.ஏவும் கண்ணகி விழா குழு தலைவருமான ஈஸ்வரன் தலைமை வகித்தார்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோட்டில் வைகாசி விசாக தேர் திரு விழாவை முன்னிட்டு 66ஆவது ஆண்டு கண்ணகி விழா கைலாசநாதர் கோவி லில் உள்ள சொக்கப்ப முத லியார் அரங்கத்தில் நடை பெற்றது. திருச்செங்கோடு எம்.எல்.ஏவும் கண்ணகி விழா குழு தலைவருமான ஈஸ்வரன் தலைமை வகித்தார்.

    திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு, முன்னாள் நகர் மன்ற தலைவர் நடே சன், வித்யா விகாஸ் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சிங்காரவேல், பி.ஆர்.டி. நிறுவனங்களின் மேலாண்மை இயக்குனர் பரந்தாமன் முன்னிலை வகித்தனர், சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி வாழ்த்தி பேசினார். அவர் பேசுகை யில், தி.மு.க. ஆட்சியில் திருச்செங்கோட்டில் விரைவில் கண்ணகி கோட்டம் அமைய உள்ளது. இங்கு அடுத்த வருடம் அர்த்தநாரீஸ்வரர் புதிய தேரில் வலம் வர உள்ளார் என்றார்.

    விழாவில் நாமக்கல் எம்.பி. சின்ராஜ், அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கோல்டன் ஹார்ஸ் ரவி, தென்னிந்திய மோட்டார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் அனி தாவேலு, திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் மூர்த்தி, திருச்செங்கோடு ரிக் உரிமை யாளர்கள் சங்கத் தலைவர் லட்சுமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட செயலாளர் நதி ராஜவேல் வரவேற்று பேசினார். நகர செயலாளர் அசோக் குமார் நன்றி கூறினார். நிகழ்ச்சியை கொள்கை பரப்புச் செயலாளர் நந்தகுமார் தொகுத்து வழங்கினார்.

    • இன்று ரத உற்சவம் நடக்கிறது
    • மாலை ஆடல் பாடல் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள அம்மாபாளையம் ஊராட்சியில் கிராம தேவதை சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று 13-ந் தேதி காலை தொடங்கியது.

    முன்னதாக கடந்த 30-ந் தேதி சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு காப்பு கட்டி தினமும் பாலாபிஷேகம் நடைபெற்றது. 6-ந் தேதி அப்பனூர் மாரியம்மனுக்கு மறுகாப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

    நேற்று காலை ஸ்ரீசாமுண்டீஸ்வரி அம்மன் ரத உற்சவம் தொடங்கியது. இன்று அப்பனூர் மாரியம்மனுக்கு ரத உற்சவம் நடக்கிறது.

    இரவு 10 மணி அளவில் நாடகமும், வாணவேடிக்கையும், மாலை ஆடல் பாடல் நடன நிகழ்ச்சியும் நடக்கிறது.இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்தனர்.

    • ஆடம்பர தேர் பல ஆயிரக்கணக்கான பக்தர்க ளுக்கு மத்தியில் பொம்மி டியின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளம், வான வேடிக்கையுடன் தேர் தூக்கிச் செல்லப்பட்டது.
    • இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட னர்.

    பாப்பிரெட்டிப்பட்டி, 

    தருமபுரி மாவட்டம் பொம்மிடியில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் கோடி அற்புதர் புனித அந்தோனியார் திருத்தலம் மிகவும் பிரபலமானது.

    இந்த ஆலயத்திற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல் கர்நாடகம், கோவா, ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்தும் கிறிஸ்தவ பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    இந்த ஆலயத்தின் வருடாந்திர திருவிழா கடந்த 4-ம்தேதி கொடியேற்ற த்துடன் தொடங்கியது.

    இந்த நிகழ்ச்சியில் போப்பாண்டவருக்கு அடுத்தபடியாக இருக்கும் இந்தியாவின் பிரதிநிதி ஆண்டனி புலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடி ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சி தொடர்ந்து கடந்த 10 நாட்களாக நாடகம், கலை நிகழ்ச்சி, திருப்பலி, ஆன்மீக பணி என கொண்டாடப்பட்டது.

    விழாவின் முடிவு நாளான நேற்று தருமபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட னர்.

    இறுதி நிகழ்ச்சியாக மாலை 7 மணி அளவில் ஆலங்கரிக் கப்பட்ட ஆடம்பர தேர் பல ஆயிரக்கணக்கான பக்தர்க ளுக்கு மத்தியில் பொம்மி டியின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளம், வான வேடிக்கையுடன் தேர் தூக்கிச் செல்லப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரம் பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை ஆரோக்கிய ஜேம்ஸ், ஊர் தலைவர் ரமேஷ் மற்றும் விழா குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • தேர் திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • சிறப்பு கூட்டு பாடற்பலியினை ஆயர் தாமஸ் அக்குவினாஸ் நடத்தினார்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் - ஊட்டி ரோட்டில் புனித அந்தோணியார் ஆலயம் செயல்பட்டு வருகிறது.

    இந்த ஆலய தேர் திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து ஆலயத்தில் தினந்தோறும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்று வந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நேற்று நடைபெற்றது. முன்னதாக சிறப்பு கூட்டு பாடற்பலியினை ஆயர் தாமஸ் அக்குவினாஸ் நடத்தினார்.

    தேர்த்திருவிழா சிறப்பு திருப்பலியை அருட்தந்தை.விக்டர் பால்ராஜ் நிறைவேற்றினர். பின்னர் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித அந்தோணியார் சொரூபம் வைத்து தீர்த்தம் தெளித்து அர்ச்சிக்கப்பட்டது.அதனைத்தொடர்ந்து தேர் பவனி ஆலயத்திலிருந்து புறப்பட்டு பஸ் நிலையம், அண்ணா மார்கெட், அண்ணாஜி ராவ் ரோடு, ஊட்டி ரோடு வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.அதைத்தொடர்ந்து நற்கருணை ஆசீர் வழங்கப்பட்டது.விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஹென்றி லாரன்ஸ் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர். 

    ×