என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பஞ்சாப் கிங்ஸ்"
- பஞ்சாப் அணி 4 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.
- மும்பை அணி 2 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.
சண்டிகர்:
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 33-வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
பஞ்சாப் கிங்ஸ் ஆறு போட்டிகளில் இரண்டு வெற்றி, நான்கு தோல்விகளைச் சந்தித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடிய ஆறு போட்டிகளில் 2 வெற்றி, 4 தோல்விகளைச் சந்தித்துள்ளது.
இரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் பின்தங்கியுள்ள நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகின்றன.
- இரு அணிகளும் இதுவரை 31 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
- இதில் 16 ஆட்டத்தில் மும்பையும், 15 ஆட்டத்தில் பஞ்சாப்பும் வெற்றி பெற்று இருக்கின்றன.
முல்லாப்பூர்:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று முல்லாப்பூரில் நடைபெறும் 33-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் சந்திக்கின்றன.
பஞ்சாப் அணி இதுவரை 6 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி (டெல்லி, குஜராத் அணிக்கு எதிராக), 4 தோல்வி (பெங்களூரு, லக்னோ, ஐதராபாத், ராஜஸ்தான் அணிகளிடம்) தோல்வி கண்டுள்ளது. உள்ளூர் மைதானமான முல்லாப்பூரில் நடந்த முந்தைய 2 ஆட்டங்களில் அந்த அணி தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்துள்ளது.
பஞ்சாப் அணியின் கேப்டனும், தொடக்க ஆட்டக்காரருமான ஷிகர் தவான் தோள்பட்டை காயத்தால் ஓய்வில் இருக்கிறார். அவர் முழு உடல் தகுதியை எட்ட குறைந்தது ஒரு வாரம் பிடிக்கும் என்பதால் இன்றைய ஆட்டத்திலும் ஆடமுடியாது. இது அந்த அணிக்கு பெரிய இழப்பாகும். கேப்டன் பொறுப்பை சாம் கர்ரன் கவனிப்பார்.
பேட்டிங்கில் கடைசி கட்டத்தில் ஷசாங்க் சிங், அஷூதோஷ் ஷர்மா அதிரடியாக செயல்பட்டு அசத்துகிறார்கள். ஆனால் பேர்ஸ்டோ, பிரப்சிம்ரன் சிங், ஜிதேஷ் ஷர்மா போதிய பங்களிப்பை அளிக்க முடியாமல் தடுமாறுகிறார்கள். ஆல்-ரவுண்டர்கள் சாம் கர்ரன், லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோரும் ஏற்றம் காண வேண்டியது அவசியமாகும். பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், ரபடா, ஹர்ஷல் பட்டேல் வலுசேர்க்கிறார்கள்.
5 முறை சாம்பியான மும்பை இந்தியன்ஸ் இந்த சீசனில் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. முதல் 3 ஆட்டங்களில் (குஜராத், ஐதராபாத், ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக) தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்த மும்பை அணி அடுத்த 2 ஆட்டங்களில் (டெல்லி, பெங்களூரு அணிகளுக்கு எதிராக) வெற்றி பெற்றது. ஆனால் சொந்த மண்ணில் நடந்த முந்தைய ஆட்டத்தில் 20 ரன் வித்தியாசத்தில் சென்னையிடம் பணிந்தது. 207 ரன் இலக்கை நோக்கி ஆடிய அந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா கடைசி வரை ஆட்டமிழக்காமல் சதம் (105 ரன்) அடித்த போதிலும், மற்ற வீரர்களிடம் இருந்து போதிய ஒத்துழைப்பு கிடைக்காததால் வெற்றி வாய்ப்பை கோட்டை விட்டது.
பேட்டிங்கில் ரோகித் சர்மா, இஷான் கிஷன், திலக் வர்மா நல்ல நிலையில் உள்ளனர். நம்பர் ஒன் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவின் வாணவேடிக்கை இன்னும் முழுமையாக வெளிப்படவில்லை. கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவின் செயல்பாடு மெச்சும் வகையில் இல்லை. பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவையே அந்த அணி அதிகம் நம்பி இருக்கிறது. ஜெரால்டு கோட்ஜீ, ஆகாஷ் மத்வால் உள்ளிட்ட பவுலர்கள் கட்டுக்கோப்பாக பந்து வீச வேண்டியது முக்கியமாகும். ரோகித் சர்மாவுக்கு இது 250-வது ஐ.பி.எல். போட்டியாகும். இதன் மூலம் டோனிக்கு (256 ஆட்டம்) அடுத்தபடியாக இந்த மைல்கல்லை எட்டும் வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெறுகிறார்.
தங்களது முந்தைய ஆட்டத்தில் தோல்வியை சந்தித்து இருக்கும் இவ்விரு அணிகளும் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் இருக்கின்றன.
இரு அணிகளும் இதுவரை 31 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 16 ஆட்டத்தில் மும்பையும், 15 ஆட்டத்தில் பஞ்சாப்பும் வெற்றி பெற்று இருக்கின்றன.
கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி வீரர் அர்ஷ்தீப் சிங் சிறப்பாக பந்து வீசி முக்கிய நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி அணிக்கு வெற்றியை பெற்று தந்தார். மேலும் இந்த போட்டியில் அர்ஷ்தீப் சிங் பந்து வீசி 2 ஸ்டெம்புகளை உடைத்தார். அந்த நேரத்தில் அது தொடர்பான வீடியோ, புகைப்படம் வைரலானது. அதற்கு இந்த போட்டியில் மும்பை அணி பழிதீர்க்குமா என மும்பை அணி ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
பஞ்சாப்: அதர்வா டெய்ட் அல்லது பிரப்சிம்ரன் சிங், ஜானி பேர்ஸ்டோ, சாம் கர்ரன் (கேப்டன்), ஜிதேஷ் ஷர்மா, ஷசாங்க் சிங், லியாம் லிவிங்ஸ்டன், அஷூதோஷ் ஷர்மா, ஹர்பிரீத் பிரார், ஹர்ஷல் பட்டேல், ரபடா, அர்ஷ்தீப் சிங்.
மும்பை: ரோகித் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்டு, முகமது நபி, ஸ்ரேயாஸ் கோபால், ஜஸ்பிரித் பும்ரா, ஜெரால்டு கோட்ஜீ.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- ஆர்சிபி ஆறு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று கடைசி இடம்.
- பஞ்சாப், மும்பை, டெல்லி அணிகள் தலா இரண்டு வெற்றிகள் மூலம் முறையே 7 முதல் 9 இடங்களை பிடித்துள்ளன.
ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணைகளைத் தவிர மற்ற எட்டு அணியிகள் தலா 6 போட்டிகளில் விளையாடி முடித்து விட்டன.
நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே 20 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியே வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
இதுவரை நடந்துள்ள போட்டிகள் முடிவில் ஒவ்வொரு அணிகளும் புள்ளிகள் பட்டியலில் எந்த இடத்தில் உள்ளன என்பதை பார்ப்போம்...
ராஜஸ்தான் ராயல்ஸ் 6 போட்டியில் ஐந்தில் வெற்றி பெற்று பத்து புள்ளிகளுடன் முதல் இடம் வகிக்கிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐந்து போட்டியில் நான்கில் வெற்றி பெற்று எட்டு புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் ஆறு போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று 8 புள்ளிகள் உடன் 3-வது இடம் வகிக்கிறது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் தலா மூன்று வெற்றிகள் பெற்றுள்ளன. ரன் ரேட் அடிப்படையில் சன் ரைசர்ஸ் 4-வது இடத்தையும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஐந்தாவது இடத்தையும், குஜராத் ஆறாவது இடத்தையும் பிடித்துள்ளன.
பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய மூன்று அணிகள் தலா இரண்டு வெற்றிகள் பெற்று ரன்ரேட் அடிப்படையில் முறையே 7 முதல் 9 இடங்களை பிடித்துள்ளன.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆறு போட்டியில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று இரண்டு புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.
ஐபிஎல் தொடரில் ஒரு அணி பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால், 10 இடங்களில் வெற்றி பெற வேண்டும். ஒன்பது அல்லது எட்டு இடங்களில் வெற்றி பெற்றால் மற்ற அணிகளின் ரன்ரேட், வெற்றித் தோல்வி ஆகியவற்றை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்.
தற்போதைய நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆறில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இன்று சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டியில் இருந்து அந்த அணி மீதமுள்ள 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றே தீர வேண்டும்.
இன்றைய போட்டியில் தோல்வியடைந்தால் ஏறக்குறைய போட்டியிலிருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்படும். ஆகவே ஆர்.சி.பி. அணிக்கு இன்றைய போட்டியிலிருந்து அனைத்து போட்டிகளும் சால்வா? சாவா? போட்டிகள் போன்றே கருதப்படும்.
பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்னும் ஒரு போட்டியில் தோல்வியடைந்தால் கூட பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியும்.
- பஞ்சாப் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.
- ஒரு கேப்டனை மட்டுமே நாங்கள் இழக்கிறோம்.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி தொடர்ந்து சொதப்பி வருகிறது. அந்த அணி கடைசியாக எதிர்கொண்டு விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் தோல்வியை தழுவியது. இதன் மூலம் அந்த அணி புள்ளி பட்டியலில் 8 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
கடந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவன் காயம் காரணமாக விலகியதால், அந்த அணியின் தற்காலிக கேப்டனாக சாம் கர்ரன் நியமிக்கப்பட்டார். நடப்பு ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருவதை அடுத்து அந்த அணியின் உரிமையாளரும், நடிகையுமான பிரீத்தி ஜிந்தா பேட்டியளித்தார்.
பேட்டியின் போது பேசிய அவர் பஞ்சாப் அணியில் தற்போது நிலைத்தன்மை மற்றும் சாம்பியன் மனநிலை கொண்ட ஒருவர் இல்லாமல் தவிக்கிறோம் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஐ.பி.எல். மெகா ஏலத்தில் ரோகித் சர்மா இடம்பெறும் பட்சத்தில் அவரை அணியில் எடுப்பதற்கு என் வாழ்க்கையை கூட பந்தயம் கட்டுவேன். எங்களது அணியில் நிலைத்தன்மை, சாம்பியன் மனநிலையை கொண்டுவரும் ஒரு கேப்டனை மட்டுமே நாங்கள் இழக்கிறோம்," என்று தெரிவித்தார்.
- கடைசி ஓவரின் முதல் இரண்டு பந்தில் ஹெட்மையர் ரன் எடுக்கவில்லை.
- 3-வது மற்றும் 5-வது பந்தை சிக்சருக்கு விரட்டி அணியை வெற்றி பெற வைத்தார்.
பஞ்சாப் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சண்டிகரில் நடைபெற்றது. முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி ஜித்தேஷ் சர்மா (24 பந்தில் 29 ரன்), லிவிங்ஸ்டன் (14 பந்தில் 21 ரன்), இம்பேக்ட் பிளேயர் அஷுடோஷ் ஷர்மா (16 பந்தில் 31 ரன்) ஆகியோரின் ஆட்டத்தால் பஞ்சாப் கிங்ஸ் 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் ஆவேஷ் கான், மகராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜெய்ஸ்வால், தனுஷ் கோட்டியன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜெய்ஸ்வால் வழக்கத்திற்கு மாறாக நிதானமாக விளையாடினார். அதேசமயம் ரபடா அபாரமாக பந்து வீச ராஜஸ்தான் அணியால் அதிரடியாக ரன்கள் அடிக்க முடியவில்லை. ஆகவே, தேவைப்படும் ரன் ரேட் அதிகரித்து கொண்டே சென்றது.
பவர் பிளேயில் ராஜஸ்தான் ராயல்ஸ் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் சேர்த்தது. அந்த அணி 9-வது ஓவரில் முதல் விக்கெட்டை இழந்தது. கோட்டியன் 31 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து சஞ்சு சாம்சன் களம் இறங்கினார். ஜெய்ஸ்வால் 28 பந்தில் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் 12 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் எடுத்திருந்தது. சாம்சன் 14 பந்தில் 18 ரன்கள் எடுத்து வெளியேறினார். ராஜஸ்தான் அணி 14 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்திருந்தது.
கடைசி 6 ஓவரில் 58 ரன்கள் தேவைப்பட்டது. 15 மற்றும் 16-வது ஓவரில்களில் முறையே 9 மற்றும் 6 ரன்கள் கிடைத்தது. 17-வது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். இந்த ஓவரில் ரியான் பராக் 18 பந்தில் 23 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் 9 ரன்கள் கிடைத்தது.
கடைசி 3 ஓவரில் 34 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரில் ஜுரேல் 11 பந்தில் 6 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இதனால் ராஜஸ்தான் அணி 17.2 ஓவரில் 115 ரன்கள் எடுத்து நெருக்கடிக்கு உள்ளாகியது.
16 பந்துக்கு 33 ரன்கள் என்ற நிலையில் ஹெட்மையர் உடன் ரோவன் பொவேல் ஜோடி சேர்ந்தார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தை ஹெட்மையர் பவுண்டரிக்கு விரட்டியதுடன், கடைசி பந்தில் சிக்ஸ் விளாசினார். இதனால் 18-வது ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 14 ரன்கள் கிடைத்தது.
கடைசி இரண்டு ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை சாம் கர்ரன் வீசினார். இந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளையும் பொவோல் பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் 9 பந்தில் 12 ரன்கள் தேவைப்பட்டது.
கடைசி 3 பந்தில் இரண்டு ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். ராஜஸ்தான் 19-வது ஓவரில் 10 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது.
இதனால் கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது. ஆர்ஷ்தீப் பந்து வீச ஹெட்மையர் எதிர்கொண்டார். முதல் இரண்டு பந்துகளில் ஹெட்மையர் ரன்ஏதும் அடிக்கவில்லை. 3-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார் ஹெட்மையர்.
இதனால் கடைசி 3 பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டது. 4-வது பந்தில் 2 ரன் அடித்த ஹெட்மையர் 5-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் 19.5 ஓவரில் 152 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- ஜித்தேஷ் சர்மா 24 பந்தில் 29 ரன்களும், லிவிங்ஸ்டன் 14 பந்தில் 21 ரன்களும் அடித்தனர்.
- இம்பேக்ட் பிளேயர் அஷுடோஷ் ஷர்மா 16 பந்தில் 31 ரன் விளாசி கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.
பஞ்சாப் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சண்டிகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் தவான் விளையாடவில்லை. இதனால் சாம் கர்ரன் கேப்டனாக செயல்படுகிறார்.
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச்சை தேர்வை செய்தார். அதன்படி பஞ்சாப் அணியின் அதர்வா தைடே, பேர்ஸ்டோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அதர்வா 15 ரன்கள் எடுத்த நிலையில் ஆவேஷ் கான் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து பிரப்சிம்ரன் சிங் களம் இறங்கினார்.
பவர் பிளேயில் பஞ்சாப் அணி 38 ரன்கள் எடுத்தது. பிரப்சிம்ரன் சிங் 14 பந்தில் 10 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து பேர்ஸ்டோ 19 பந்தில் 15 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் பஞ்சாப் அணி சரிவை நோக்கிச் சென்றது.
கேப்டன் சாம் கர்ரன் 10 பந்தில் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் பஞ்சாப் அணியின் ஸ்கோர் 120 ரன்னை தாண்டுமா? என்ற சந்தேகம் எழுந்தது.
ஆனால் ஜித்தேஷ் சர்மா 24 பந்தில் 29 ரன்களும், லிவிங்ஸ்டன் 14 பந்தில் 21 ரன்களும், இம்பேக்ட் பிளேயர் அஷுடோஷ் ஷர்மா 16 பந்தில் 31 ரன்களும் அடிக்க பஞ்சாப் கிங்ஸ் 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் ஆவேஷ் கான், மகராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
- பஞ்சாப் தரப்பில் ஷஷாங்க் சிங் 46 ரன்னிலும் அசுதோஷ் சர்மா 33 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- ஐதராபாத் அணி தரப்பில் புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
முல்லாப்பூர்:
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 23-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி ஐதராபாத் அணியில் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா களமிறங்கினர். ஹெட் 21 மற்றும் 16 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்துவந்த ஏய்டன் மார்க்ரம் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்த சன்ரைசர்ஸ் அணிக்கு நிதிஷ் குமார் ரெட்டி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டார். இவர் 64 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இம்பேக்ட் வீரராக களமிறங்கிய ராகுல் திரிபாதி 11 ரன்களிலும் கிளாசன் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த அப்துல் சமத் சிறப்பாக ஆடி 25 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களை குவித்துள்ளது. பஞ்சாப் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய அர்தீப் சிங் 4 விக்கெட்டுகளையும், ஹர்ஷல் பட்டேல் மற்றும் சாம் கர்ரன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர் பேர்ஸ்டோவ் 0, பிரப்சிம்ரன் சிங் 4, தவான் 14 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து ராசா - சாம் கரண் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம் கரண் 29 ரன்னில் வெளியேறினார். அடுத்த சிறிது நேரத்தில் ராசா 28 ரன்னில் அவுட் ஆனார். இதனையடுத்து ஷஷாங்க் சிங் - அசுதோஷ் சர்மா ஜோடி சேர்ந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். பரப்பரப்பாக சென்ற இந்த போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் துரதிஷ்டவசமாக தோல்வியை தழுவியது. ஷஷாங்க் சிங் 46 ரன்னிலும் அசுதோஷ் சர்மா 33 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஐதராபாத் அணி தரப்பில் புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- ஏய்டன் மார்க்ரம் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
- அப்துல் சமத் சிறப்பாக ஆடி 25 ரன்களை குவித்தார்.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 23 ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
சன்ரைசர்ஸ் அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா முறையே 21 மற்றும் 16 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்துவந்த ஏய்டன் மார்க்ரம் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்த சன்ரைசர்ஸ் அணிக்கு நிதிஷ் குமார் ரெட்டி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டார். இவர் 64 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இம்பேக்ட் வீரராக களமிறங்கிய ராகுல் திரிபாதி 11 ரன்களிலும் கிளாசன் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த அப்துல் சமத் சிறப்பாக ஆடி 25 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
போட்டி முடிவில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களை குவித்துள்ளது. பஞ்சாப் சார்பில் சிறப்பாக பந்துவீசிய அர்தீப் சிங் 4 விக்கெட்டுகளையும், ஹர்ஷல் பட்டேல் மற்றும் சாம் கர்ரன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ரபாடா 1 விக்கெட் வீழ்த்தினார்.
- இவ்விரு அணிகளும் இதுவரை 21 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
- இதில் 14 ஆட்டங்களில் ஐதராபாத்தும், 7 ஆட்டங்களில் பஞ்சாப்பும் வென்று இருக்கின்றன.
முல்லாப்பூர்:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் 23-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இவ்விரு அணிகளும் இதுவரை 21 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 14 ஆட்டங்களில் ஐதராபாத்தும், 7 ஆட்டங்களில் பஞ்சாப்பும் வென்று இருக்கின்றன.
- ஷசாங் வந்து ஒரு அபாரமான ஆட்டத்தை ஆடினார்.
- அசுதோஷும் ஆட்டத்தை நன்றாக எடுத்து சென்றார்.
அகமதாபாத்:
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று இரவு அகமதாபாத்தில் நடந்த ஆட்டத்தில் குஜராத் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வீழ்த்தியது.
முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய பஞ்சாப் அணி 70 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்தது.
அதன்பின் ஷசாங்சிங். அஷுதோஸ் சர்மா ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றி பெற வைத்தனர். ஷசாங் சிங் 29 பந்தில் 61 ரன்ம், அஷுதோஸ் 17 பந்தில் 31 ரன்னும் எடுத்தனர். பஞ்சாப் 19.5 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 200 ரன்கள் எடுத்தது.
வெற்றி குறித்து பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவான் கூறியதாவது:-
இது ஒரு அற்புதமான ஆட்டம்.மிக மிக நெருக்கமாக இருந்தது.வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஒரு நல்ல தொடக்கத்தை கொடுக்க திட்டமிட்டோம். ஆனால் நான் சீக்கிரமே அவுட் ஆனேன் சில விக்கெட்டுகளை ஆரம்பத்தில் இழந்தோம்.
அதன்பின் ஷசாங் வந்து ஒரு அபாரமான ஆட்டத்தை ஆடினார். பெரிய இலக்கை துரத்தும்போது நீங்கள் உத்வேகத்தை தொடர வேண்டும். ஷசாங் தனது திறமையை வெளிப்படுத்தினார்.
அவர் பந்தை மிக நேர்த்தியாக விளையாடினார். அவர் பதற்றம் அடையாமல் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்தார். அவர் 7-வது வரிசையில் இருந்து ஆரம்பித்து தற்போது தனது நேர்மறை மனநிலையை வெளிப்படுத்தி வருகிறார்.
அசுதோஷும் ஆட்டத்தை நன்றாக எடுத்து சென்றார். இரண்டு இளம் வீரர்களும் அமைதி காத்து, அழுத்தத்தை குறைத்தனர். இவ்வாறு தவான் கூறினார்.
குஜராத் கேப்டன் சுப்மன் கில் கூறும்போது, நாங்கள் சில கேட்சுகளை தவற விட்டோம். ரன் சேசிங்கில் கேட்சுகளை தவற விடும் போது வெற்றி கடினமாகி விடும். 15-வது ஓவர் வரை ஆட்டத்தில் இருந்தோம். ஆனால் கேட்சுகளை கைவிடும் போது நீங்கள் சிக்கலில் இருப்பீர்கள். நாங்கள் சில பகுதிகளில் முன்னேற்றம் காண வேண்டும் என்றார்.
- மும்பை இந்தியன்ஸ் ஐந்து முறை சேஸிங் செய்துள்ளது.
- பஞ்சாப் கிங்ஸ் ஆறு முறை சேஸிங் செய்து முதலிடம்.
குஜராத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 200 ரன்கள் வெற்றி இலக்காக பஞ்சாப் அணிக்கு நிர்ணயித்தது குஜராத் டைட்டன்ஸ் அணி. பஞ்சாப் அணி 19.5 ஓவரில் இலக்கை எட்டி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
200 மற்றும் அதற்கு மேல் உள்ள இலக்கை வெற்றிகரமாக துரத்தியதில் பஞ்சாப் அணி ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை சேஸிங் செய்த அணிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. அந்த அணி நேற்றைய சேஸிங் உடன் இதுவரை ஆறு முறை 200 ரன்ககளுக்கு மேலான இலக்கை எட்டி முதலிடம் பிடித்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் ஐந்து முறை இலக்கை எட்டி 2-வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தலா மூன்று முறை 200 ரன்களுக்கு மேலான இலக்கை எட்டி மூன்றாவது இடத்தை வகிக்கின்றன.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக கடந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 205 இலக்கை எட்டி இருந்தது. இதுதான் அந்த அணிக்கு எதிராக சேஸிங் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆகும். தற்போது பஞ்சாப் அணி 200 இலக்க எட்டியுள்ளது.
கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 178 ரன்னையும், சென்னை சூப்பர் கிங்ஸ் 15 ஓவர் நிர்ணயிக்கப்பட்ட போட்டியில் 171 ரன்னையும் எட்டி இருந்தது அதிகபட்ச சேஸிங் ஆகும்.
- அதிரடியாக விளையாடிய ஷஷாங்க் சிங் அரை சதம் விளாசினார்.
- குஜராத் தரப்பில் ரூர் அகமது 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஐபிஎல் தொடரின் 17-வது லீக் போட்டியில் குஜராத்- பஞ்சாப் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கில் கடைசி வரை அவுட் ஆகாமல் 89 ரன்கள் எடுத்திருந்தார். பஞ்சாப் அணி தரப்பில் ரபாடா 2 விக்கெட்டும் ஹர்ப்ரீத் ப்ரார், ஹர்சல் படேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தவான் - பேர்ஸ்டோவ் களமிறங்கினர். தவான் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பிரப்சிம்ரன் சிங் மற்றும் பேர்ஸ்டோவ் பவர்பிளேயில் சிறப்பாக ரன்களை சேர்த்தனர்.
பவர் பிளே முடிந்த முதல் ஓவரின் முதல் பந்தில் பேர்ஸ்டோவ் 22 ரன்னில் போல்ட் ஆனார். அடுத்து வந்த சாம் கரண் 5 ரன்னில் வெளியேறினார். அதனை தொடர்ந்து பிரப்சிம்ரன் சிங் 35 ரன்னிலும் ராசா 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து ஜிதேஷ் சர்மா- ஷஷாங்க் சிங் ஜோடி சேர்ந்து அணியின் வெற்றிக்காக போராடினார். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 39 ரன்கள் குவித்தது. ரஷித்கான் ஓவரில் தொடர்ந்து 2 சிக்சர்களை விளாசிய ஜிதேஷ் சர்மா 16 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய ஷஷாங்க் சிங் அரை சதம் விளாசினார்.
அடுத்து வந்த அசுதோஷ் சர்மா- ஷஷாங்க் சிங் ஜோடி பஞ்சாப் வெற்றிக்கு போராடினர். இறுதியில் 12 பந்துக்கு 25 ரன்கள் தேவை என்ற நிலைக்கு கொண்டு வந்தனர். 19-வது ஓவரில் இந்த ஜோடி 18 ரன்கள் எடுத்தது. இதனால் கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை தர்ஷன் நல்கண்டே வீசினார். முதல் பந்தில் அசுதோஷ் சர்மா கேட்ச் ஆனார். அடுத்த பந்தை அகல பந்தாக வீசினார். 3-வது பந்தில் ஹர்ப்ரீத் 1 ரன் எடுத்தார்.
இதனால் கடைசி 3 பந்துக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. அந்த பந்தை ஷஷாங்க் சிங் பவுண்டரி அடித்து ஸ்கோரை சமன் செய்தார். அடுத்த பந்தில் பஞ்சாப் வெற்றி பெற்றது.
இறுதியில் பஞ்சாப் அணி 19.5 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் எடுத்தது. குஜராத் தரப்பில் ரூர் அகமது 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்