search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஞ்சாப் கிங்ஸ்"

    • ஐ.பி.எல். தொடரில் ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் மிகவும் மிகவும் அதிக விலைக்கு ஏலம் போனார்.
    • சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அவரை 20.50 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.

    துபாய்:

    17-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் இன்று நடந்து வருகிறது. ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 214 பேர் இந்தியர்கள், 119 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.

    ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட் ஆகியோர் அதிக விலைக்கு ஏலம் போவார்கள் என முன்னணி வீரர்கள் கருத்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், இந்தியாவின் ஹர்ஷல் படேலை பஞ்சாப் கிங்ஸ் அணி 11.75 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. இவர் தான் நடப்பு சீசனில் அதிகம் ஏலத்துக்கு எடுக்கப்பட்ட இந்திய வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஐ.பி.எல். தொடரில் ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் மிகவும் மிகவும் அதிக விலைக்கு ஏலம் போனார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அவரை 20.50 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.

    • முதலில் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது.
    • அதிரடியாக ஆடிய ரூசோ, 37 பந்துகளில் 6 பவுண்டரி 6 சிக்சர் உள்பட 82 ரன்கள் குவித்தார்.

    தரம்சாலா:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று தரம்சாலாவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது.

    அதிரடியாக ஆடிய கேப்டன் டேவிட் வார்னர், 31 பந்துகளில் 46 ரன்களும், பிருத்வி ஷா 38 பந்துகளில் 54 ரன்களும் விளாசி வலுவான அடித்தளம் அமைத்தனர். அதன்பின்னர் ரூசோ அதிரடியாக ஆடி ரன் குவித்தார். பந்துகளை பவண்டரி, சிக்சர்களாக பறக்கவிட, அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. கடைசி வரை களத்தில் நின்ற ரூசோ, 37 பந்துகளில் 6 பவுண்டரி 6 சிக்சர் உள்பட 82 ரன்கள் குவித்தார். பில் சால்ட் 26 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்குகிறது.

    • இதுவரை நடந்த 15 சீசனில் 14 கேப்டன்கள் அந்த அணிக்கு தலைமை தாங்கியுள்ளனர்.
    • ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்லாத அணிகளுள் அந்த அணியும் ஒன்று.

    சென்னை:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

    இதுவரை 15 சீசன்கள் முடிவடைந்துள்ளன. இதில் மும்பை இந்தியன்ஸ் அதிக பட்சமாக 5 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக சென்னை சூப்பர் கிங்ஸ் 4 தடவை பட்டம் பெற்றுள்ளது.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் தலா 1 தடவையும் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளன. 16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை தொடங்குகிறது.

    இந்நிலையில் ஐபிஎல் தொடரில் அதிக கேப்டன்களை மாற்றிய அணியாக பஞ்சாப் புதுவிதமான சாதனை ஒன்றை படைத்துள்ளது. இதுவரை நடந்த 15 சீசனில் 13 கேப்டன்கள் அந்த அணிக்கு தலைமை தாங்கியுள்ளனர். ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்லாத அணிகளுள் பஞ்சாப் அணியும் ஒன்று. இந்தாண்டு பஞ்சாப் கேப்டனாக ஷிகர் தவான் செயல்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன்கள் பட்டியல்:-

    யுவராஜ் சிங் -இந்தியா

    குமார் சங்ககாரா -இலங்கை

    ஜெயவர்தனே -இலங்கை

    கில்கிறிஸ்ட் -ஆஸ்திரேலியா

    டேவிட் ஹசி -ஆஸ்திரேலியா

    பெய்லி -ஆஸ்திரேலியா

    சேவாக் - இந்தியா

    டேவிட் மில்லர் -தென் ஆப்பிரிக்கா

    முரளி விஜய் -இந்தியா

    மேக்ஸ்வெல் -ஆஸ்திரேலியா

    அஸ்வின் -இந்தியா

    கேஎல் ராகுல் - இந்தியா

    அகர்வால் -இந்தியா

    • 2019 முதல் 2021 வரை ஏற்கனவே பேட்டிங் பயிற்சியாளராக இருந்தார்
    • ஆஸ்திரேலியாவின் பிராட் ஹடின் துணை பயிற்சியாளராக செயல்பட இருக்கிறார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர். ரஞ்சி கோப்பையில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற பெருமைக்குரிய இவர், கடந்த 2019 முதல் 2021 வரை பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்தார். கடந்த 2022 தொடருக்கு முன் மெகா ஏலம் நடைபெற்றது. அப்போது பயிற்சியாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக மார்க் வுட் என்பவரை பயிற்சியாளராக நியமித்தது.

    இந்த நிலையில், தற்போது 2023 சீசனில் வாசிம் ஜாபர் மீண்டும் பேட்டிங் பயிற்சியாளராக செயல்படுவார் என பஞ்சாப் கிங்ஸ் அணி அறிவித்துள்ளது.

    ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் விக்கெட் கீப்பர் பிராட் ஹடின் துணை பயிற்சியாளராக செயல்படுவார் எனவும் அறிவித்தள்ளது.

    பஞ்சாப் அணி மயங்க் அகர்வால் உள்பட முக்கிய வீரர்களை ரிலீஸ் செய்தது. அந்த அணியிடம் தற்போது 32.20 கோடி ரூபாய் உள்ளது, மினி ஏலத்தின்போது தேவைப்பட்டால் மயங்க் அகர்வால் உள்பட ரிலீஸ் செய்ய வீரர்களை எடுத்துக் கொள்ள முடியும்.

    15 சீசனில் இதுவரை ஒரு முறை கூட பஞ்சாப் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது கிடையாது. கடந்த முறை 6-வது இடத்தை பிடித்தது.

    • பஞ்சாப் கிங்ஸ் பயிற்சியாளர் பதவியில் இருந்து கும்பிளேவை நீக்க முடிவு அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • கடந்த சீசனில் அந்த அணியின் கேப்டனாக இருந்த மயங்க் அகர்வால் மொத்தம் 196 ரன்கள் மட்டுமே எடுத்து சொதப்பினார்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்பிளே ஐ.பி.எல். தொடருக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த 2020-ம் ஆண்டு பொறுப்பேற்றார். அதன் பிறகு நடந்த 3 சீசன்களிலும் பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே-ஆப் சுற்றுக்கு கூட முன்னேறவில்லை.

    2020, 2021, 2022-ம் ஆண்டுகளில் அந்த அணி 6-வது இடமே பிடித்தது. அணியின் செயல்பாடு குறித்து கடும் அதிருப்தி அடைந்து இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகத்தினர், தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து கும்பிளேவை நீக்க முடிவு செய்துள்ளனர்.

    புதிய தலைமை பயிற்சியாளரை தேடும் வேட்டையில் இறங்கி இருக்கும் பஞ்சாப் அணி நிர்வாகம் விரைவில் புதிய பயிற்சியாளர் குறித்த அறிவிப்பை வெளியிடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அத்துடன் கடந்த சீசனில் அந்த அணியின் கேப்டனாக இருந்த மயங்க் அகர்வால் மொத்தம் 196 ரன்கள் மட்டுமே எடுத்து சொதப்பினார். எனவே அவரது பதவியும் பறிபோகும் என்று தெரிகிறது.

    ×