என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நீரினை பயன்படுத்துவோர் சங்கம்"
- விவசாய வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய அவகாசம்
- கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் தகவல்
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கோதையாறு வடிநில கோட்டத்தில்46 நீரினைப் பயன்படுத்துவோர் சங்கங் களுக்கான மேலாண்மை குழுவின் தலைவர், உறுப்பி னர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். இதையொட்டி ஆட்சி மண்டல தொகுதி வாரியாக 18 வயது நிறைந்த அனைத்து நில உரிமையா ளர்களுமாகிய விவசாய வாக்காளர்களின் விவரம் படிவம் வி மற்றும் வி (ஏ) தமிழ்நாடு 2000-ம் ஆண்டு விவசாயிகள் நீர்ப்பாசன அமைப்பு முறை மேலாண்மை சட்டம் விதிகள் 4 (2)-ன்படி வருவாய் துறை கிராம அலுவலகங்களில் விவசாயிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. படிவம் வி மற்றும் வி (ஏ)-ல் மறுத்தல், சேர்த்தல் மற்றும் நீக்கல் போன்ற திருத்தங்கள் இருப்பின் அவற்றை சரி செய்வதற்கு ஏதுவாக விவசாயிகளுக்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) 15-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இறுதி வாக்காளர் பட்டியல் படிவம் 9-ல் வெளியிட ஏதுவாக படிவம் வி மற்றும் வி (ஏ)-ல் திருத் தங்கள் செய்ய வேண்டி இருப்பின் விவசாயிகள் சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அலுவலர்களையோ அல்லது வருவாய் துறை கிராம அலுவலர்களையோ அணுகி உரிய படிவத்தை பூர்த்தி செய்து வழங்கி சரி செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்