என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பல்கலைக்கழக மானியக் குழு"
- பல்கலைக்கழகங்கள் எந்தப் பட்டமும் வழங்க அதிகாரம் இல்லை.
- கர்நாடகா, மகாராஷ்டிரா, புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம், கேரளாவிலும் போலி பல்கலைக்கழகங்கள் உள்ளன.
பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நாட்டில் செயல்பட்டு வரும் போலி பல்கலைக்கழகங்கள் குறித்த பட்டியலை இன்று வெளியிட்டது. இதில், பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 20 பல்கலைக்கழகங்கள் போலியானவை என்றும் குறிப்பாக டெல்லியில் மட்டும் 8 கல்வி நிறுவனங்கள் எந்த பட்டமும் வழங்க அதிகாரமில்லாமல் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து யுஜிசி செயலாளர் மணீஷ் ஜோஷி கூறியதாவது:-
பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சட்டத்தின் விதிகளுக்கு மாறாக பல கல்வி நிறுவனங்கள் பட்டங்களை வழங்குவது யுஜிசியின் கவனத்திற்கு வந்துள்ளது. அத்தகைய பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்கள் உயர்கல்வி அல்லது வேலைவாய்ப்பு நோக்கத்திற்காக அங்கீகரிக்கப்படவோ செல்லுபடியாகவோ இல்லை. இந்தப் பல்கலைக்கழகங்கள் எந்தப் பட்டமும் வழங்க அதிகாரமும் இல்லை.
டெல்லியில் எட்டு போலி பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதில், அகில இந்திய பொது மற்றும் உடல் நல அறிவியல் நிறுவனம், தர்யகாஞ்சில் உள்ள கமர்ஷியல் யுனிவர்சிட்டி லிமிடெட், ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம்; தொழிற்கல்வி பல்கலைக்கழகம்; ஏடிஆர்- சென்ட்ரிக் ஜூரிடிகல் பல்கலைக்கழகம், இந்திய அறிவியல் மற்றும் பொறியியல் நிறுவனம், சுயவேலைவாய்ப்புக்கான விஸ்வகர்மா திறந்தநிலை பல்கலைக்கழகம், மற்றும் அத்யாத்மிக் விஸ்வவித்யாலயா (ஆன்மீக பல்கலைக்கழகம்) இடம்பெற்றுள்ளன.
உத்தரபிரதேசத்தில் நான்கு பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதில், காந்தி ஹிந்தி வித்யாபீத், எலக்ட்ரோ காம்ப்ளக்ஸ் ஹோமியோபதி தேசிய பல்கலைக்கழகம், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பல்கலைக்கழகம் (திறந்த பல்கலைக்கழகம்), மற்றும் பாரதிய சிக்ஷா பரிஷத் உள்ளன.
கர்நாடகா, மகாராஷ்டிரா, புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களிலும் போலியான பல்கலைக்கழகங்கள் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
- டெல்லி உள்பட நாடு முழுதும் செயல்படும் 21 பல்கலைக்கழகங்கள் போலியானவை.
- அவை பட்டம் வழங்க தகுதியற்றவை என யு.ஜி.சி. தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
மத்திய பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நாட்டில் செயல்படும் போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியக் குழுவிடம் அங்கீகாரம் பெறாமல் நடத்தப்படும் 21 போலி பல்கலைக்கழகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அதில், தலைநகர் டெல்லியில் சுமார் 8 போலி பல்கலைக்கழகங்களும், உத்தர பிரதேசத்தில் 7, ஒடிசா, மேற்குவங்காளம், ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா, புதுச்சேரியில் தலா ஒரு போலி பல்கலைக்கழங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
மேலும், இந்தப் போலி பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்கள் செல்லாது என யுஜிசி எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்