search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தசரா திருவிழா"

    • கர்நாடகாவில் தசரா விழாவை ஜனாதிபதி தொடங்கி வைப்பது இதுவே முதல் முறை ஆகும்.
    • இதற்கு முன்பு எழுத்தாளர்கள், கவிஞர்கள் போன்றோரே தொடங்கி வைத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பெங்களூரு:

    கர்நாடகத்தின் அடையாளமாக கருதப்படும் மைசூர் தசரா விழா கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலால் கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் தளர்ந்த நிலையில் தசரா விழா உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது.

    காவல் தெய்வமாக கருதப்படும் சாமுண்டீஸ்வரி அம்மன் விஜயதசமி அன்று மகிஷாசூரன் எனும் அரக்கனை வதம் செய்த வெற்றி கொண்டாட்டத்தையே தசரா விழாவாக கர்நாடக மக்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த தசரா விழா 'நாட ஹப்பா'(கர்நாடகத்தின் பண்டிகை) என்றும் அழைக்கப்படுகிறது.

    பாரம்பரியம் மிக்க இந்த விழா இன்று தொடங்கியது. விழாவை இன்று காலை ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடங்கி வைத்தார். விழாவை தொடங்கி வைக்கவும், மேலும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று காலை ஜனாதிபதி திரவுபதி முர்மு தனி விமானம் மூலம் மைசூரு மண்டஹள்ளியில் உள்ள விமான நிலையத்துக்கு வந்தார். அவரை கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் வரவேற்றனர். இதையடுத்து ஜனாதிபதி திரவுபதி முர்மு அங்கிருந்து சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு சென்றார். அங்கு விசேஷ பூஜைகள் செய்து வழிபட்டார். இதையடுத்து அங்கு வெள்ளித் தேரில் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து பூக்களால் அர்ச்சனை செய்து உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவை தொடங்கி வைத்தார். விழாவில் கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மத்திய மந்திரிகள் பிரகலாத் ஜோஷி, நிர்மலா சீதாராமன், ஷோபா, மாவட்ட பொறுப்பு மந்திரி எஸ்.டி.சோமசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்.

    கர்நாடகாவில் தசரா விழாவை ஜனாதிபதி தொடங்கி வைப்பது இதுவே முதல் முறை ஆகும். இதற்கு முன்பு எழுத்தாளர்கள், கவிஞர்கள் போன்றோரே தொடங்கி வைத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    10 நாட்கள் நடக்கும் தசரா விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. தசரா விளையாட்டு தீப்பந்த ஊர்வலம், தொழில் கண்காட்சி, மலர் கண்காட்சி, உணவு திருவிழா, தசரா விளையாட்டு போட்டிகள், குஸ்தி போட்டி, பொருட்காட்சி, யோகா பயிற்சி, அரண்மனை வளாகத்தில் 75-வது சுதந்திர தினவிழாவையொட்டி மலர் கண்காட்சி, சிற்பம் மற்றும் ஓவிய கண்காட்சி, சிறப்பு மின்னொளி காட்சி, மகளிர் தசரா, குழந்தைகள் தசரா, திரைப்பட விழா இப்படி எண்ணற்ற நிகழ்ச்சிகள் தொடங்கி நடைபெற உள்ளன.

    தசரா விழாவையொட்டி மைசூரு அரண்மனையில் நவராத்திரி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல் விழாவின் 9 நாட்களும் அரண்மனையில் சிறப்பு பூஜைகள், நவராத்திரி கொலு உள்பட பல்வேறு சம்பிரதாயங்கள் நடைபெறும். அதுபோல் இளைய மன்னர் யதுவீர் தங்க, வைர, நவ ரத்தினங்களால் ஆன சிம்மாசனத்தில் ராஜ உடையில் அமர்ந்து தனியார் தர்பார் நடத்துவார். இதுதவிர மைசூரு நகரம் முழுவதும் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு நகரமே மின்னொளியில் ஜொலிக்கிறது.

    தசரா விழாவில் பங்கேற்க இதுவரை 290 கலைக்குழுக்கள் கர்நாடகா வந்துள்ளன. அம்பா விலாசில் நடைபெறும் கலை நிகழ்ச்சியில் புகழ்பெற்ற மற்றும் தேசிய அளவிலான குழுவினர் பங்கேற்பது சிறப்பம்சம் ஆகும்.

    தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்பு சவாரி ஊர்வலம் அடுத்த மாதம் 5-ந் தேதி விஜயதசமி அன்று தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக ஜாட்டி சமூகத்தினர் ரத்தம் சொட்டும் மல்யுத்த போட்டி அரண்மனை வளாகத்தில் நடைபெற உள்ளது. அந்த மல்யுத்த போட்டி முடிந்ததும் நந்தி மலையில் கொடியேற்று பூஜை நடத்தப்படும். அதையடுத்து 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்க அபிமன்யு யானை தங்க அம்பாரியை சுமந்தபடி யானைகள் புடைசூழ வந்து நிற்கும். அப்போது அம்மன் மீது மலர்கள் தூவி ஜம்பு சவாரி ஊர்வலம் தொடங்கி வைக்கப்படும். இந்த முறை ஜம்பு சவாரி ஊர்வலத்தை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என்று கூறப்படுகிறது. ஆனால் அதுபற்றி உறுதியான தகவல் வெளியாகவில்லை.

    தசரா ஊர்வலம் வழக்கம்போல் மைசூரு அரண்மனையில் தொடங்கி பன்னிமண்டபம் வரை 6 கிலோ மீட்டர் தூரம் நடைபெறும். பன்னிமண்டபத்தை சென்றடைந்ததும் சாமுண்டீஸ்வரி அம்மன் மகிஷாசூரனை வதம் செய்ததை நினைவூட்டும் விதமாக பிரமாண்ட வாணவேடிக்கை நடைபெறும். அத்துடன் தசரா விழா நிறைவுபெறுகிறது.

    ஜம்பு சவாரி ஊர்வலத்தில் இம்முறை மாநில அரசின் அனைத்து துறைகள் சார்பிலும், மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்ட நிர்வாகம் சார்பிலும் அலங்கார வண்டிகள் இடம்பெறும்.

    இந்திய ஜனாதிபதியாக திரவுபதி முர்மு கடந்த ஜூலை மாதம் 25-ந்தேதி தான் பொறுப்பேற்றார். அதன்பின்னர் முதல் வெளிமாநில நிகழ்ச்சியாக அவரது கர்நாடக சுற்றுப்பயணம் அமைந்துள்ளது. தசாரா விழாவை தொடங்கிவைத்த ஜனாதிபதி திரவுபதி முர்மு பின்னர் உப்பள்ளிக்கு சென்று உப்பள்ளி-தார்வார் மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'பவுர சன்மானா' என்ற பாராட்டு விழாவில் கலந்துகொள்கிறார். பின்னர் தார்வாரில் உள்ள ஐ.ஐ.டி.யில் (இந்திய தகவல் தொழில்நுட்ப கழகம்) புதிய வளாகத்தை திறந்து வைக்கிறார்.

    பின்னர் நாளை (செவ்வாய்க்கிழமை) பெங்களூரு இந்துஸ்தான் ஏரோநாட்டிக்சின் ஒருங்கிணைந்த கிரையோஜெனிக் என்ஜின் உற்பத்தியை அவர் தொடங்கி வைக்க உள்ளார். பின்னர் தெற்கு மண்டல வைராலஜி நிறுவனத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அடிக்கல் நாட்டுகிறார். அதனைத்தொடர்ந்து செயின்ட் ஜோசப் பல்கலைக்கழகத்தின் தொடக்கவிழாவில் பங்கேற்கிறார். மேலும் கர்நாடக அரசு சார்பில் நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கவுரவிக்கப்படுகிறார்.

    இதையடுத்து நாளை மறுநாள் (28-ந்தேதி) பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்கு செல்ல உள்ளார்.

    ஜனாதிபதி வருகையையொட்டி மைசூருவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நகரில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் பெங்களூரு, தார்வாரிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து காலை 11 மணி அளவில் மைசூரு மண்டஹள்ளி விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு செல்கிறார்.

    • தினசரி காலை முதல் இரவு வரை பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடக்கும்.
    • 5-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறும்.

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பெருந்திருவிழா தமிழகத்தில் முதல் இடம் வகிக்கும் திருவிழாவாகும்.

    தசரா திருவிழா தொடங்குவதையொட்டி நேற்று நண்பகல் காளி பூஜை நடந்தது. இரவு 9 மணிக்கு அன்னை முத்தாரம்மன் மற்றும் ஞானமூர்த்தீஸ்வரருக்கு காப்பு கட்டப்பட்டது.

    இன்று காலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிபட்டம் வைத்து கொடிஊர்வலம் முக்கிய தெருக்கள் வழியாக சென்றது. கொடிபட்டம் கோவிலுக்கு வந்ததும், காலை 9 மணிக்கு கோவில் முன்புள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.

    தொடர்ந்து கொடிமரத்திற்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜையும் தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. கோவில் கொடி ஏறியதும், விரதமிருந்து வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கோவிலில் காப்பு வாங்கி தங்களது வலது கையில் கட்டினர். சிலர் பூசாரி கையினாலும் காப்பு கட்டினர்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கொடியேற்றம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் கட்டுப்பாடுகளுடன் நடந்தது.

    இந்நிலையில் இந்த ஆண்டு தொற்று பரவல் நீங்கியதையடுத்து தசரா திருவிழாவில் எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. இதனால் தசரா திருவிழா கோலகலத்துடன் தொடங்கி உள்ளது.

    தசரா திருவிழா தொடங்கியதையொட்டி கோவிலில் தினசரி காலை முதல் இரவு வரை பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடக்கும். தினசரி மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை சமய சொற்பொழிவு மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து வரும்.

    ஒவ்வொரு நாளும் இரவு 9 மணிக்கு ஒவ்வொரு திருக்கோலத்தில் அன்னை முத்தாரம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    வருகிற 5-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையுடன் அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கடற்கரைக்கு சென்று மகிஷாசுரனை சம்ஹாரம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறும்.

    இதில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். முன்னதாக வேடம் அணிந்து வந்த பக்தர்கள் ஆடல், பாடல், தப்பாட்டம் கரகாட்டம், போன்ற பல்வேறு கலைஞர்களுடன் ஊர் ஊராகச் சென்று கலை நிகழ்ச்சி நடத்தி அம்மன் பெயரில் காணிக்கை வாங்குவது மிகவும் சிறப்பாகும்.

    மாவட்ட காவல்துறை, போக்குவரத்து துறை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை உட்பட பல்வேறு துறை அதிகாரிகள், குலசேகரன்பட்டினத்தில் முகாமிட்டு பக்தர்களுக்கான அனைத்து வசதிகளையும் செய்து வருகின்றனர்.

    திருச்செந்தூர் குலசேகரன்பட்டினம் உடன்குடி பகுதி முழுவதும் ஆங்காங்கே தசரா பக்தர்களாகவே காட்சி தருகின்றனர்.

    பக்தர்கள் வந்து செல்ல வசதியாக முக்கியமான ஊர்களில் இருந்து குலசேகரன் பட்டினத்திற்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    • இன்று காலை 9 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது.
    • 5-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது.

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா இன்று (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி நேற்று காலையில் காளி பூஜை, மதியம் அன்னதானம், மகுட இசை, சகஸ்ரநாம அர்ச்சனை, புஷ்பாஞ்சலி, மாலையில் வில்லிசை நடந்தது. இரவில் அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டது.

    இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. மதியம் முதல் இரவு வரையிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். இரவு 10 மணிக்கு சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

    விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நேற்று காலை முதலே திரளான பக்தர்கள் செவ்வாடை அணிந்து கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். கடலில் புனித நீராடிய பக்தர்கள், தாங்கள் விரதம் இருக்கும் தசராபிறையில் தெளிப்பதற்காக புனிதநீரை எடுத்து கோவிலுக்கு வந்து வழிபட்டனர்.

    இன்று கொடியேற்றத்தை தொடர்ந்து, பல்வேறு நாட்களாக விரதம் இருக்கும் பக்தர்கள் தங்களது கைகளில் மஞ்சள் கயிற்றாலான காப்பு அணிகின்றனர். பின்னர் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து, ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்து, விழா நிறைவில் கோவிலில் செலுத்துகின்றனர்.

    விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 10-ம் திருநாளான வருகிற 5-ந்தேதி (புதன்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு நடக்கிறது.

    விழாவையொட்டி கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு ஊர்களில் இருந்தும் குலசேகரன்பட்டினத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    • சூரசம்ஹாரம் வருகிற 5-ந்தேதி நடக்கிறது.
    • 6-ந்தேதி அதிகாலை 1 மணிக்கு கடற்கரை மேடைக்கு அம்மன் எழுந்தருள்கிறார்.

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும். இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். லட்சக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுகின்றனர்.

    கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா நாளை (திங்கட்கிழமை) காலையில் தொடங்குகிறது. இதையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் மகுட இசை, இரவு 9 மணிக்கு அம்மனுக்கு காப்புக்கட்டுதல் நடக்கிறது.

    தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

    தினமும் காலை முதல் இரவு வரையிலும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, மாலையில் மாலையில் சமயசொற்பொழிவு, பட்டிமன்றம், பரதநாட்டியம், இன்னிசை நிகழ்ச்சி போன்றவை நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 5-ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது. அன்று காலை 10.30 மணிக்கு மகா அபிஷேகம், இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் சிம்மவாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவில் முன்பாக எழுந்தருளி மகிசாசூரசம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.

    6-ந் தேதி அதிகாலை 1 மணிக்கு சூரசம்ஹாரம் முடிந்த பின் கடற்கரை மேடைக்கு அம்மன் எழுந்தருள்கிறார். அங்கு அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. 2 மணிக்கு அம்மன் சிதம்பரேஷ்வரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளி சாந்தாபிஷேக ஆராதனையும், அதிகாலை 3 மணிக்கு அம்மன் சிதம்பரேஸ்வரர் கோவில் அபிஷேக மேடையில் அபிஷேக ஆராதனையும், காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்பிகை வீதி உலா புறப்படுதலும் நடக்கிறது.

    மாலை 4.30 மணிக்கு காப்பு களைதல், நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம், 7-ந் தேதி மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடக்கிறது.

    விழாவையொட்டி பல்வேறு ஊர்களில் இருந்தும் குலசேகரன்பட்டினத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    • 26-ந்தேதி முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • தீராத புற்றுநோய் குணமாகியதால் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. முத்தாரம்மனை வழிபட பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு வேடம் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள சங்கனாங்குளம் ஊரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சந்திரன் (வயது46). இவர் சுமார் 35 ஆண்டுகளாக விதவிதமான வேடமணிந்து அம்மனை தரிசித்து வருகிறார்.

    கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு தொண்டை பகுதியில் கேன்சர் ஏற்பட்டு சிகிச்சைக்கு உள்ளானார். சிகிச்சையில் முன்னேற்றம் கிடைக்கப்பெறாத நிலையில் அம்மனை மனம் உருகி வழிபட்டு வந்தார். அதன் பலனாக அவருக்கு ஏற்பட்ட கேன்சர் நோயின் பாதிப்பு வெகுவாக குறைய தொடங்கியது.

    அதற்கு அம்மனுக்கு நன்றி கடன் செலுத்தும் விதமாக 4 ஆண்டுகளாக சுடுகாட்டு காளி வேடம் அணிந்து விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறார்.

    இந்த ஆண்டு வருகிற 26-ந்தேதி முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி பக்தர் சந்திரன் சங்கனாங்குளத்தில் உள்ள சுடுகாட்டில் 6 அடி அளவில் நீளமான பள்ளம் தோண்டி குடில் அமைத்து 21 நாட்கள் விரதம் இருந்து வருகிறார்.

    விரதத்தை முன்னிட்டு சுடுகாட்டு காளி வேடம் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக விரதத்தை கடைபிடித்து வருகிறார். உணவு எதுவும், உட்கொள்ளாமல் காலை மாலை வேளைகளில் பால் கலக்காத காபியும் மற்ற வேளைகளில் தண்ணீர் மட்டும் குடித்து விரதம் கடைபிடிக்கிறார். இருவேளை பூஜை நடத்தும் இவர் பூஜைக்கு முன்னதாக குளிப்பதற்காக மட்டுமே வெளியே வருகிறார்.

    பகல்- இரவு வேளைகளில் வெளியே வருவதில்லை. தொடர்ச்சியாக அம்மனின் அருள் கிடைத்ததாக கூறும் சந்திரனுக்கு ஏற்பட்ட கேன்சர் நோய் தற்போது மருத்துவ சிகிச்சை இன்றி முற்றிலும் குணமடைந்து இருப்பதாக கூறுகிறார்.

    இது குறித்து சுடுகாட்டு காளி சந்திரன் கூறியதாவது:-

    எனக்கு வந்த தீராத நோய் கேன்சர் என்னை மரண வாசலில் கொண்டு போய் விட்டது. அந்த நேரத்தில் மருத்துவர்களும் உறவினர்களும் என்னை கைவிட்ட நேரத்தில் என்னை காப்பாற்றியது குலசை முத்தாரம்மன் தான். நான் 35 ஆண்டுகளாக குலசை முத்தாரம்மனின் பக்தர் தான். ஆனால் நான் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட போது முத்தாரம்மன்னை மட்டுமே நம்பி இருந்தேன். என் நம்பிக்கை வீண் போகவில்லை.

    அதனால் தான் உயிருடன் இருக்கும் போதே இறந்து விட்டதாக நினைத்து சுடுகாடு வரை சென்று உயிருடன் திரும்பியதால் முத்தாரம்மனின் ஒரு அவதாரமான சுடுகாட்டு காளி ஆகவே நான் கடந்த 4 ஆண்டுகளாக சுடுகாட்டு காளி வேடமணிந்து 21 நாட்கள் அன்ன ஆகாரம் உண்ணாமல் சுடுகாட்டில் உடல் அடக்கம் செய்ய தோண்டப்படும் குழி போன்று குழி தோண்டி அந்த குழியில் தங்கி இரவு பகல் வசித்து வருகிறேன் என்று கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது.
    • அக்டோபர் 5-ந்தேதி மகிஷாசூரசம்ஹாரம் நடைபெறும்.

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா பிரசித்தி பெற்ற திருவிழாவாகும்.

    பல லட்சம் பக்தர்கள் வேடமணிந்து தங்களது வேண்டுதலை செலுத்தும் இத்திருவிழா வருகின்ற 26-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இந்த நிலையில் தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மீன்வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அறநிலைய துறை கமிஷனர் குமரகுருபரன் மற்றும் அறநிலை துறை அதிகாரிகள் நேற்று இரவு 9 மணி அளவில் திடீரென குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு வருகை தந்தனர். பின்னர் அமைச்சர்கள், பக்தர்கள் மற்றும தசரா குழுக்கள் வரும் பாதை, போக்குவரத்து வசதி எப்படி செய்யப்பட்டு இருக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

    பக்தர்கள் எந்த இடையூறும் இல்லாமல் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனைத்து வசதிகளையும் செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் அமைச்சர்கள் கூறினர்.

    அப்போது உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங், கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் ஊழியர்கள் உடன் இருந்தனர். தசரா திருவிழா 26-ந்தேதி தொடங்கியவுடன் பக்தர்கள் கோவிலுக்கு வந்து காப்பு கட்டி தங்களுக்கு பிடித்தமான வேடங்களை அணிந்து ஊர் ஊராக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்வார்கள்.

    மேலும் கோவிலில் சமய சொற்பொழிவு, கலை நிகழ்ச்சி சுவாமி எழுந்தருளல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் தினசரி நடைபெறும்.

    வருகிற அக்டோபர் மாதம் 5-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையுடன் அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள கடற்கரைக்குச் சென்று அங்கு மகிஷாசூரசம்ஹாரம் நடைபெறும். இதை காண பல லட்சம் பக்தர்கள் கூடுவார்கள்.

    காளி வேடம் மற்றும் சுவாமி வேடம் அணிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அம்மனை பின்தொடர்ந்து செல்வது இதன் சிறப்பாகும். இத்திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தூத்துக்குடி மாவட்ட அறநிலையத்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்த் துறையினர் செய்து வருகின்றனர்.

    • தசரா திருவிழா வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது.
    • பக்தர்கள் வேண்டுதலுக்கு ஏற்ப 61 நாள், 41 நாள், 31 நாள் என விரதமிருந்து வருகின்றனர்.

    உடன்குடி :

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகிற 26-ந் தேதி(திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் அக். 5-ந்தேதி மகிசாசூரசம்காரம் நடைபெறுகிறது.

    இத்திருவிழாவை முன்னிட்டு பல ஆயிரம் பக்தர்கள் வேண்டுதலுக்கு ஏற்ப 61 நாள், 41 நாள், 31 நாள் என விரதமிருந்து வருகின்றனர். மற்ற பக்தர்கள் தங்களது வசதிக்கேற்ப விரதத்தை தொடங்கியுள்ளனர்.

    மேலும், விரதம் இருந்து வந்த பக்தர்கள் தாங்கள் அணிவதற்கு சுவாமிகள் உள்ளிட்ட பல்வேறு வேடங்களுக்கான தசரா பொருட்களை வாங்குவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக உடன்குடி, குலசேகரன்பட்டினம் பகுதியிலுள்ள கடைகளில் பக்தர்கள் வேடமணியும் பொருட்களை விற்பனைக்கு குவித்து வைத்துள்ளனர்.

    இந்த பொருட்களை பக்தர்கள் குவிந்து போட்டி போட்டுக் கொண்டு வாங்கி வருவதால், கடைவீதிகளில் கூட்டம் அலைமோதுகிறது. இதேபோன்று மாவட்டம் முழுவதும் தூத்துக்குடி, திருச்செந்தூர், குரும்பூர், சாத்தான்குளம், ஆத்தூர், ஏரல் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும் பக்தர்களின் வேட பொருட்கள் விற்பனை களைகட்டி வருகிறது.

    • தசரா திருவிழா 26-ந்தேதி தொடங்குகிறது.
    • அக்டோபர் 5-ந்தேதி நள்ளிரவு சூரசம்ஹாரம் நடக்கிறது.
    • பயணிகள் www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்

    சென்னை

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது.

    தசரா திருவிழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவர்.

    இந்த ஆண்டு தசரா திருவிழா வருகிற 26-ந்தேதி காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அக்டோபர் 5-ந்தேதி நள்ளிரவு சூரசம்ஹாரம் நடக்கிறது.

    நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் சென்னை, கோவை போன்ற இடங்களில் தொழில் செய்து வருகின்றனர்.

    தசரா திருவிழாவில் பங்கேற்பதற்காக இவர்கள் குடும்பத்துடன் தங்களது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இவர்களில் சிலர் திருவிழாவின் 10 நாட்களும், பலர் கடைசி 5 நாட்களும் என தங்களது வசதிக்கு ஏற்றாற்போல் சொந்த ஊரில் இருந்தபடி அம்மனுக்கு வேடமணிந்து தசரா குழுக்களில் பங்கேற்று விட்டு திருவிழா முடிந்ததும் தாங்கள் தொழில் செய்து வரும் ஊர்களுக்கு திரும்புவர்.

    இதனை கருத்தில் கொண்டு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவுறுத்தலின்படி சென்னை, கோவை போன்ற நகரங்களில் இருந்து திருச்செந்தூர், குலசேகரபட்டினம் ஆகிய ஊர்களுக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 1-ந்தேதி முதல் 4-ந்தேதி வரை சிறப்பு பஸ்களை இயக்க அரசு விரைவு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

    தசரா திருவிழா முடிந்து சொந்த ஊரில் இருந்து சென்னை, கோவை போன்ற நகரங்களுக்கு திரும்பும் வகையில் அக்டோபர் 6-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை, குலசேகரபட்டினத்துக்கு ஏற்கனவே இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதல் பஸ்களாக இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாகவும், பயணிகள் www.tnstc.in என்ற இணையதளம் மூலமும், tnstc எனப்படும் செல்போன் செயலி மூலமும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அரசு விரைவு போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனர் தெரிவித்து உள்ளார்.

    • இந்த திருவிழா 12 நாட்கள் நடைபெறுகிறது.
    • சூரசம்ஹாரம் அக்டோபர் 5-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு நடக்கிறது.
    • 7-ந்தேதி சிறப்பு பாலாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தசரா திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா வருகிற 26-ந்தேதி (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 12 நாட்கள் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு வருகிற 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு காளி பூஜை, இரவு 9 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    முதலாம் திருநாளான 26-ந்தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணிக்கு யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா, காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9.30 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. பின்னர் கொடிமர பீடத்துக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறும்.

    தொடர்ந்து விரதம் மேற்கொள்ளும் பக்தர்களின் கைகளில் திருக்காப்பு அணிவிக்கப்படுகிறது. காப்பு அணியும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து, ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்து கோவிலில் செலுத்துகின்றனர்.

    விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். காலை முதல் இரவு வரையிலும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. மாலையில் சமய சொற்பொழிவு, பட்டிமன்றம், பரதநாட்டியம், இன்னிசை நிகழ்ச்சி போன்ற பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 10-ம் திருநாளான வருகிற 5-ந்தேதி (புதன்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு நடக்கிறது.

    11-ம் திருநாளான 6-ந்தேதி (வியாழக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு சூரசம்ஹாரம் முடிந்த பின்னர் கடற்கரை மேடையில் எழுந்தருளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது.

    12-ம் திருநாளான 7-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மதியம் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

    • தசரா திருவிழாவையொட்டி பக்தர்கள் வேடம் அணிவதற்கு முன்பு விரதம் தொடங்கி உள்ளனர்.
    • பக்தர் தங்களது வசதிக்கு ஏற்ப மாலைகள் அணிந்து, குறிப்பிட்ட நாளை கணக்கிட்டு விரதம் தொடங்குவார்கள்.

    உடன்குடி:

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது.

    இதையொட்டி பக்தர்கள் வேடம் அணிவதற்கு முன்பு விரதம் தொடங்கி உள்ளனர்.

    மேலும் பக்தர்கள் கடலில் நீராடி விட்டு, சிகப்பு, பச்சை அல்லது காவி நிற ஆடைகள் அணிந்து, பலவகையான மாலைகள், மற்றும் உத்ராட்ச மாலைகள் வாங்கி அதை கடல் நீரில் சுத்தம் செய்து விட்டு, கோவிலுக்கு வந்து சுவாமியின் பாதங்களில் வைத்து வழிபாடு செய்து விட்டு, பூசாரி கையினால் மாலை அணிந்து விரதம் தொடங்குவார்கள்.

    தங்களது வசதிக்கு ஏற்ப மாலைகள் அணிந்து, குறிப்பிட்ட நாளை கணக்கிட்டு விரதம் தொடங்குவார்கள்.

    கோவிலில் கொடியேறியதும் கோவிலில் வழங்கப்படும் திருக்காப்பை வாங்கி வலது கையில் கட்டி தங்களுக்கு பிடித்தமான வேடம் அணிந்து ஒவ்வொரு ஊராக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து கோவிலில் சேர்ப்பது தான் தசராவின் சிறப்பாகும்.

    பக்தர்கள் விதவிதமான மாலைகள் வாங்கி விரதம் தொடங்குவதற்கு வசதியாக குலசேகரன்பட்டினம் கடற்கரையில் தற்போது 100-க்கும் மேற்பட்ட கடைகள் உருவாகி உள்ளன.

    பக்தர்களுக்கு வேடப்பொருட்கள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்

    உடன்குடி

    தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பெருந்திருவிழா தமிழகத்தில் முதலிடம் வசிக்கும் தசரா திருவிழாவாகும்.

    திருவிழாவில் வேடம் அணியும் பக்தர்களுக்கு வேண்டுதல்கள் எல்லாம் நிறைவேறும் என்பது ஐதீகம். 2 வருடமாக கொரோனா தாக்கத்தால் கோவில் முன்பு நடந்த சூரசம்ஹாரம் இந்த ஆண்டு முதல் மீண்டும் கடற்கரையில் நடக்கிறது.

    காளி வேடம் அணியும் பக்தர்கள் 61 நாள், 41 நாள் என கடும் விரதம் இருந்து காளி வேடமணிவது மிகவும் சிறப்பாகும். மேலும் 100-க்கும் மேற்பட்ட சுவாமி வேடங்களை அணிந்து 10-ம் திருநாளான சூரசம்ஹாரம் அன்று ஓம் காளி, ஜெய் காளி என்ற கோஷத்துடன் அன்னை முத்தாரம்மன்னை பின்தொடர்ந்து சென்று சூரனை சம்ஹாரம் செய்யும் காட்சி காண முடியாத ஒரு அரும்பெரும் காட்சியாகும். இப்படி சுவாமி வேடங்கள் அணியும் பக்தர்களுக்கு மிகமிக முக்கியமானது தலைமுடிதான்.

    உடன்குடி மற்றும் சுற்று வட்டார பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் சடைமுடி, அலங்கார முடி, சுவாமி முடி, முனிவர்கள் முடி இப்படி விதவிதமான முடிகளை தயாரிப்பது தீவிரம் காட்டி வருகின்றனர். சிலர் தலையின் சுற்றளவு கொடுத்து அதற்கு தகுந்தார் போல் முடிகளை தயார் செய்ய முன் ஆர்டர் கொடுக்கின்றனர்.

    ரூ.1000 முதல் ரூ.3500 வரை தரம்வாரியாக முடிகள் உள்ளதாக தயாரிப்பவர்கள் கூறுகிறார்கள். கோவிலில் கொடி ஏறியதும் கோவிலில் திருகாப்பு வாங்கி வலது கையில் கட்டி தங்களுக்குப் பிடித்தமான வேடங்கள் அணிந்து ஊர் ஊராக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து 10-ம் திருநாள் ஆன சூரசம்ஹாரம் அன்று கோவிலில் காணிக்கையை சேர்ப்பார்கள்.

    தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் பல்வேறு அனைத்து மாநிலங்களிலும், வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் தசரா திருவிழாவில் கலந்து கொள்வதற்காகவே வந்து அம்மனுக்கு வேடம் அணிவது சிறப்பாகும்.

    சுமார் 10 நாட்களாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே குலசேகரன்பட்டினம் தசரா பக்தர்கள் அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்வது மேலும் சிறப்பாகும். சிறுவர்களுக்கு பிடித்தமான குரங்கு, கரடி, புலி என்று பல்வேறு மிருகங்கள் வேடம் அணிவதும் பெண் வேடம் மற்றும் மாடல் அழகிகள் உட்பட எண்ணிக்கையில் அடங்காத வேடங்கள் அணிந்து, வேடங்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்ற சொல்லுக்கு ஏற்ப வேடம் அணிவார்கள்.

    சுவாமி வேடம்அணியும் சில பக்தர்களை பார்க்கும்போது அந்த சுவாமியே நேரடியாக வந்து காட்சி கொடுப்பதாக தெரியும், இப்படி வேடம் அணிந்தவர்கள், பழங்கால தமிழர் பண்பாட்டை நினைவுபடுத்தும் கரகம், காவடி, நையாண்டி, கோலாட்டம், சிலம்பாட்டம், களியாட்டம் போன்ற கலைநிகழ்ச்சியுடன் ஊர் ஊராகராக சென்று தசரா குழு உடன் இணைந்து கலை நிகழ்ச்சி நடத்தி, அம்மன் பெயரின் காணிக்கை வசூல் செய்வது ஒரு பெரிய வரப்பிரசாதம் ஆகும்.

    தசரா திருவிழாவிற்கான ஆரம்ப கட்ட பணிகள் குலசேகரன்பட்டினத்தில் வேகமாக நடந்து வருகிறது, வாகனங்கள் வந்து செல்லும் ஒரு வழிப்பாதை, இருசக்கரம் வாகனங்கள் நிறுத்துமிடம், நான்கு சக்கர வாகனங்களை எதுவரை அனுமதிப்பது? அவசர தேவையான வாகனங்கள் எந்த வழியாக வருவது?போவது இப்படி பல்வேறு நடவடிக்கைகளை கோவில் நிர்வாகத்தினர் எடுத்து வருகின்றனர்.

    உடன்குடி, குலசை, திருச்செந்தூர், பகுதியில் ஏராளமான கடைகளில் தசரா வேடம் போடும் பக்தர்களுக்கு தேவையான பொருட்களும் மலை போல் விற்பனைக்கு குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    • பக்தர்கள் விரதத்தை தொடங்கினார்கள்.
    • தசரா திருவிழா செப்டம்பர் மாதம் அமாவாசையன்று தொடங்குகிறது.

    பாளையங்கோட்டை அம்மன் கோவில்களில் ஆண்டுதோறும் தசரா விழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு தசரா திருவிழா வருகிற செப்டம்பர் மாதம் அமாவாசை தினத்தன்று பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவிலில் கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது.

    இதையொட்டி கால்நாட்டுதல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ஆயிரத்தம்மன் கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் மற்றும் அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது.

    கால்கோள் விழாவுக்கான கொடிகம்பம் அர்ச்சனை செய்யப்பட்டு ரதவீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. காலை 10.40 மணி அளவில் கால் நாட்டப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து பக்தர்கள் விரதத்தை தொடங்கினார்கள்.

    இதேபோல் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள மற்ற அம்மன் கோவில்களிலும் நேற்று கால் நாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    ×