search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்து முன்னணி நிர்வாகிகள் கைது"

    • 3 பேரும் மதுகுடித்துவிட்டு போதை தலைக்கேறிய நிலையில் சென்று மாட்டு இறைச்சி கடையில் இருந்த வாலிபரிடம் தகராறில் ஈடுபட்டு கடையை மூட சொல்லியதும் விசாரணையில் தெரியவந்தது.
    • போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை பிரஸ் காலனி பி.எஸ்.ஜி.கார்டன் பகுதியை சேர்ந்தவர் முகமது சிக்கந்தர்(வயது32).

    இவர் பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் மாட்டு இறைச்சி கடை நடத்தி வருகிறார்.

    நேற்று காலை முகமது சிக்கந்தர் வழக்கம்போல் கடையை திறந்து வியாபாரம் செய்தார்.

    மதியம் முகமது சிக்கந்தர் வீட்டிற்கு சென்று விட்டார். இதையடுத்து கடையில், வேலைபார்க்கும் ஒரு வாலிபர் மட்டுமே இருந்தார்.

    அப்போது 35 வயது மதிக்கத்தக்க 3 பேர் கடைக்கு வந்தனர். அவர்கள் கடையில் இருந்த வாலிபரிடம் இன்று ஏன் கடையை திறந்து வைத்துள்ளாய். கடையை மூடி விட்டு வீட்டிற்கு செல் என்று கூறி அவரிடம் தகராறில் ஈடுபட்டனர்.

    அதற்கு வாலிபர் இன்னும் சிறிது நேரத்தில் கடையை பூட்டி விடுவோம் என்றார். ஆனால் 3 பேரும் அவர் சொல்வதை கேட்காமல் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டனர்.

    மேலும் கடையின் ஷட்டரை பிடித்து கீழே இழுத்தனர். இதனால் பயந்து போன அந்த வாலிபர் கடையில் இருந்து வெளியில் ஓடி வந்தார்.

    பின்னர் இதுகுறித்து கடையின் உரிமையாளரான முகமது சிக்கந்தருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து அவர் பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    இதையடுத்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    அப்போது கடையில் 3 பேர் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். பின்னர் அவர்களை போலீசார் பிடித்து பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

    விசாரணையில், மாட்டு இறைச்சி கடையை மூட சொல்லி தகராறு செய்தது இந்து முன்னணி பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய பொது செயலாளர் சண்முகம்(40), ஜோதிபுரம் ஒன்றிய செயற்குழு உறுப்பினர் வினோத்(32), ஜோதிபுரம் ஒன்றிய தலைவர் முருகன்(48) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    இவர்கள் 3 பேரும் நேற்று மதுகுடித்துவிட்டு போதை தலைக்கேறிய நிலையில் சென்று மாட்டு இறைச்சி கடையில் இருந்த வாலிபரிடம் தகராறில் ஈடுபட்டு கடையை மூட சொல்லியதும் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    • பாறைப்பட்டி காளியம்மன் கோவில் முன்பு விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தவோ, ஊர்வலமாக செல்லவோ அனுமதி கிடையாது என போலீசார் தெரிவித்திருந்தனர்.
    • அனுமதியின்றி சிலை வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் 25-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து அமைப்பினர் பல்வேறு இடங்களில் சிலைகளை வைத்து வழிபாடு நடத்த அனுமதி கேட்டனர். இதுதொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் திண்டுக்கல் பாறைப்பட்டி காளியம்மன் கோவில் முன்பு விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தவோ, ஊர்வலமாக செல்லவோ அனுமதி கிடையாது என போலீசார் தெரிவித்திருந்தனர்.

    வழக்கமாக குடைபாறைப்பட்டி காளியம்மன் கோவிலில் விநாயகர் சிலை வைத்து பின்னர் ஊர்வலமாக எடுத்துச்செல்லும் நடைமுறை உள்ள நிலையில் போலீசார் அனுமதி மறுத்ததால் இந்துமுன்னணி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இன்று காலை பாறைப்பட்டி காளியம்மன் கோவிலில் விநாயகர் சிலையை வைத்து வழிபட இந்துமுன்னணி நிர்வாகிகள் எடுத்து வந்தனர்.

    அதற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர்.சிலையை வைத்து வழிபாடு மட்டும் செய்து கொள்வதாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால் போலீசார் அனுமதி அளிக்காத இடத்தில் சிலை வைக்ககூடாது என்று தெரிவித்தனர். இதனால் போலீசாருக்கும், இந்து முன்னணியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி தலைைமயில் போலீசாரும், வருவாய்த்துறையினரும் விரைந்து வந்தனர். அவர்கள் அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலையை கைப்பற்றி ஒரு வேனில் ஏற்றி கோட்டை குளத்தில் உள்ள தொட்டியில் கரைத்தனர். அனுமதியின்றி சிலை வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் 25-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

    இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது. தொடர்ந்து அங்கு அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க டி.எஸ்.பி கோகுலகிருஷ்ணன் தலைமையில் நகர் தெற்கு இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    ×