search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காட்டு யானைகள் முற்றுகை"

    • தொழிலாளர்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.
    • தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர்.

    ஊட்டி,

    பந்தலூர் அருகே சேரம்பாடி டேன்டீ ரேஞ்ச் எண்.1,2,3,4 பகுதிகளில் காட்டு யானைகள் புகுந்து வருகின்றன. மேலும் குடியிருப்புகளை தாக்குவதோடு, தொழிலாளர்கள், பொதுமக்களை துரத்தி வருகின்றன. இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு டேன்டீ தொழிலாளர்கள் குடியிருப்புகளை காட்டு யானைகள் முற்றுகையிட்டன. இதனால் தொழிலாளர்கள் வீடுகளுக்குள் முடங்கினர். மேலும் ரேஞ்ச் எண்.3-ல் தோட்ட பகுதியில் யானைகள் புகுந்ததால், அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர். இதை அறிந்த சேரம்பாடி வனச்சரகர் அய்யனார் உத்தரவின்படி, வனவர் ஆனந்த் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று காட்டு யானைகளை விரட்டினர்.

    • வனத்துறையினர் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
    • வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து, சிறிது தூரத்துக்கு முன்பு வாகனங்களை நிறுத்தினர்.

    ஊட்டி,

    சுற்றுப்புற பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இந்தநிலையில் தட்டாம்பாறையில் காட்டு யானை புகுந்தது. அங்கு பயிரிடப்பட்டு இருந்த பயிர்களை மிதித்து நாசம் செய்தது. அய்யன்கொல்லியில் இருந்து கொளப்பள்ளி செல்லும் சாலையில் உலா வந்த யானை வாகனங்களை வழிமறித்தது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து, சிறிது தூரத்துக்கு முன்பு வாகனங்களை நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பிதிர்காடு வனகாப்பாளர் ராஜேஸ்குமார் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று காட்டு யானையை விரட்டினர். பின்னர் அங்கிருந்து அய்யன்கொல்லி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே முகாமிட்டது. இதனால் அங்கு வந்த நோயாளிகள் பீதி அடைந்தனர். இதேபோல் கொளப்பள்ளி டேன்டீ ரேஞ்ச் எண்.2 அய்யப்பன் கோவில் அருகே தொழிலாளர்கள் குடியிருப்புகளை காட்டு யானைகள் முற்றுகையிட்டன. தகவல் அறிந்த சேரம்பாடி வனகாப்பாளர் குணசேகரன் மற்றும் வனத்துறையினர் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

    ×