search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அருள்"

    • இங்கு கணவன் மனைவியாக வந்து வழிபட்டால் இருவர் இடையே உறவு மேம்படும் என்பது ஐதீகம்.
    • உலகத்தை நல்வழிப்படுத்த வேண்டியது சான்றோர்கள் கடமை.

    கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் பாலாம்பிகா சமேத கார்கோடேஸ்வரர்

    இரு மனம் இணையும் திருமண நிகழ்வை யாராலும் மறக்க முடியாது.

    வாழ்கை துணையாக வாழ்வின் இறுதி வரை வரப்போகும் உறவை கைபிடிக்கும் உன்னதமான நாள் திருமண நாள்.

    கணவன் மனைவி என புது உறவுடன் வாழ்வை தொடங்கும் புது மணத் தம்பதியினரின் வாழ்வு வளம் பெற பல கோவில்களுக்கும் சென்று வழிபட வேண்டும் என பெரியவர்கள் கூறுகின்றனர்.

    தமிழகத்தில் அமைந்துள்ள பழமையான கோவில்கள் பல தனித்தன்மை வாய்ந்த சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளன.

    வரலாற்று ஆதாரங்களுடன், புராண நிகழ்வுகளை செவி வழிச் செய்தியாக கொண்ட கோவில்கள் பல இன்றும் மக்கள் வாழ்வில் வளங்களை தந்து கொண்டிருக்கின்றன.

    அந்த வகையில் கணவன் மனைவி உறவு மேம்பட அருள் தரும் கோவிலாக விளங்குகிறது அரியலூர் மாவட்டம், காமரசவல்லி கிராமத்தில் உள்ள பாலாம்பிகா சமேத கார் கோடேஸ்வரர் திருக்கோவில்.

    இங்கு கணவன் மனைவியாக வந்து வழிபட்டால் இருவர் இடையே பாசம் அதிகரிக்கும், உறவு மேம்படும் என்பது ஐதீகம்.

    இதற்கு அடிப்படை ஆதராத்தை இந்த கோவிலின் தலவரலாறே நமக்கு கூறுகிறது.

    கிடைத்தற்கு அரிய பேரின்பத்தைப் பலரும் தேடி அலைந்த காலத்தில், சிற்றின்ப வேட்கையில் நாட்டம் கொண்டு அதிலேயே மூழ்கிக் கிடந்தவர்களும் இருந்தார்கள்.

    காமம் அவர்களைப் படாத பாடு படுத்தியது. இதன் காரணமாக நித்தமும் தாங்கள் அனுஷ்டிக்க வேண்டிய வழிபாடுகளையும், நியதிகளையும் பலர் மறந்து போயினர்.

    இத்தகைய காலத்தில் உலகத்தை நல்வழிப்படுத்த வேண்டியது சான்றோர்கள் கடமை அல்லவா?

    எனவே, தேவர்களும் முனிவர்களும் சிவபெருமானிடம் சென்று மக்களின் இந்த நிலையை மாற்றுமாறு வேண்டினார்.

    இதனால்தான் காமன் என்கிற மன்மதன் ஈசனின் நெற்றிக் கண்ணால் எரிக்கப்பட்டான் என்ற கதை நாம் அனைவரும் அறிந்ததே.

    தன் கணவன் மன்மதனை மீண்டும் உயிர்பித்துத் தருமாறு ஈசனை நோக்கி தவம் இருந்தாள் அவனது துணைவியான ரதிதேவி.

    தன்னை வழிபட்ட ரதிக்கு மாங்கல்ய பிச்சை தருவதற்காகவும் அவள் பார்வைக்கு மட்டும் தெரியுமாறு மன்மதனை உயிர்பித்துத் தந்தார் ஈசன்.

    ரதிக்கு வரம் கொடுத்த ஊர் என்பதால் ரதிவரபுரம் என்றும் காமனின் தேவியான ரதி தவம் இருந்த தலம் என்பதால், காமரதிவல்லி எனவும் அழைக்கப்படலானது.

    இதுவே பின்னாளில் காமரச வல்லி ஆகி விட்டது.

    ஊர்ப் பெயருக்கான இந்தக் கதை புராணத்தோடு நின்று போய்விடவில்லை.

    இதை மெய்ப்பிக்கும் வகையில் ரதிதேவியின் செப்புத் திருமேனி ஒன்று இந்த ஆலயத்தில் உள்ளது.

    தன் கணவனை உயிர்ப்பிக்க வேண்டி, இறைவனிடம் இரு கரங்களை ஏந்தி, மாங்கல்ய பிச்சை கேட்கும் கோலத்தில் காணப்படுகிறது இந்தத் திரு மேனி.

    காமரசவல்லியில் ஒவ்வொரு மாசி மாதமும் பவுர்ணமி தினத்தன்று காமன் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    இந்த விழாவின்போது இரண்டாக வெட்டிய ஆமணக்குச் செடியை ஆலயத்தில் நட்டு வைப்பார்கள்.

    இறை பக்திக்கு உட்பட்டும், சத்தியத்துக்குக் கட்டுப்பட்டும் இந்தக் கிளை எட்டே நாட்களுக்குள் மீண்டும் உயிர் பெற்று வளர்கிறது.

    ரதிதேவியின் வாழ்க்கை இங்கே துளிர்த்தது போல், இங்கே நடப்படுகிறவை மீண்டும் துளிர்க்கும் என்பதற்கு உதாரணம் இது.

    குடும்பத்தில் தம்பத்திக்குள் பிரிவினை இருப்பவர்கள், கருத்து வேற்றுமை கொண்டவர்கள், விவாகரத்தைத் தடுக்க நினைப்பவர்கள், தம்பதியரின் அன்பு பெருக வேண்டுவோர் காமரசவல்லியை வந்து வணங்கினால் சிறப்பு.

    முறையாக இங்கு வந்து தரிசனம் செய்து விட்டுச் சென்றால், தம்பதியர்களின் வாழ்வில் புத்தொளி பரவும் என்பது ஐதீகம்.

    ரதிதேவிக்கே மாங்கல்ய பிச்சை அளித்த திருத்தலம் என்பதால், நிலைத்த மாங்கல்ய பேறு வேண்டுவோர், இங்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.

    ஆதி காலத்தில் நான்கு வேதங்களையும் கற்றுத் தேர்ந்த அந்தணர்கள் பெருமளவில் காமரசவல்லியில் வசித்து வந்தார்களாம் எனவே, சதுர்வேதி மங்கலம் என்கிற சிறப்புப் பெயருடன் இந்த ஊர் விளங்கி வந்துள்ளது.

    ஒரு காலத்தில் இந்தத் திருக் கோவிலை அந்தணர்கள் நிர்வகித்து வந்ததாகவும், அவர்களுக்காச் சில கிராமங்கள் தானமாகக் கொடுக்கப்பட்டன என்றும் கல்வெட்டுத் தகவல்கள் கூறுகின்றன.

    வேத பாராயணங்களும், சத்சங்கக் கூட்டங்களும் இங்கு அதிகம் நடந்துள்ளன.

    • இது சிவனும் முருகனும் ஒருவரே என்பதற்கு ஆதரமாக திகழ்கிறது.
    • பின்னர் மகன் முருகனை குருவாக ஏற்று அவரிடம் பிரணவ பொருளை உபதேசமாக பெற்றார்.

    தந்தை மகன் உறவை மேம்படுத்தும் சுவாமிமலை சுவாமி நாதசுவாமி

    ஆறுபடை முருகன் கோவில்களில் 4 வது படை வீடாக திகழ்வது சுவாமிமலை.

    இக்கோவில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சுவாமி மலையில் அமைந்துள்ளது.

    திருப்பரங்குன்றில் முருகன் ஒளிவடிவினன்.

    திருச்செந்தூரில் அருள் வடிவினன்.

    குன்றுகளில் எல்லாம் அவன் எளிமைக் கோலம் பூண்ட இறைவன்.

    பழமுதிர் ச்சோலையில் பரந்து தோன்றும் வியாழ பகவானின் உருவினன்,

    சுவாமி மலையில் வழிபடும் அன்பருக்கெல்லாம் வேண்டியது அருளும் வரகுணன்.

    சுவாமி நாதசுவாமி நின்றிருக்கும் பீடம் சிவலிங்கத்தின் ஆவுடையாராகவும், அதன் மேல் எழுந்தருளி உள்ள சுவாமிநாதமூர்த்தி பாணலிங்கமாகவும் காட்சி தருவதை காணலாம்.

    இது சிவனும் முருகனும் ஒருவரே என்பதற்கு ஆதரமாக திகழ்கிறது.

    சிவபெருமான் கோவில்களில் திருவிழா காலங்களில் பஞ்சமூர்த்திகளாக எழுந்தருளுவார்.

    அதேபோல் சுவாமி மலையில் உற்சவ காலங்களில் கணபதி வள்ளி தெய்வானையோடு சண்முகர், வள்ளி தெய்வானையோடு சுப்பிரமணியர், பாலசுப்பிரமணியர், சண்டிகேஸ்வரருடன் பஞ்சமூர்த்தி புறப்பாடு நடைபெறும்.

    படைக்கும் தொழில் செய்யும் பிரம்மன் பிரணவப் பொருளை அறியாமல் இருப்பதை கண்ட முருகப் பெருமான் அவரது தலையில் குட்டி சிறைப்படுத்தினார்.

    இதனை அறிந்த சிவபெருமான் முருகனிடம் கோபம் கொள்வது போல் நடித்து கண்டித்தார்.

    பின்னர் மகன் முருகனை குருவாக ஏற்று அவரிடம் பிரணவ பொருளை உபதேசமாக பெற்றார்.

    பின்னர் பிரம்மனுக்கும் முருகன் பிரவண பொருளை உபதேசித்ததாக சுவாமி மலை தலபுராணம் கூறுகிறது.

    சுவாமிமலையில் தந்தையும் மகனும் எந்தவித பாகுபாடும் இல்லாமல் ஒருவரை ஒருவர் உணர்ந்து இணக்கமாக நடந்து கொண்டதால் சுவாமிமலை சுவாமி நாதசுவாமியை தரிசனம் செய்தால் மனவேறுபாடு கொண்ட தந்தை மகன் உறவில் ஒற்றுமை ஏற்படும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

    அதனை பின்பற்றி வழிபாடு செய்து சென்றவர்கள் வாழ்வில் நல்ல பலனை கண்டு இந்த உண்மையை ஒப்பு கொண்டு உள்ளனர்.

    எனவே தந்தை மகன் உறவில் விரிசல் கண்டவர்கள் சுவாமிமலை முருகனை சேர்ந்து வந்து தரிசித்தும் தனியாக வந்து தரிசித்தும் நல்ல மாற்றத்தை காணலாம்.

    • இந்த கோவிலை வழிபட்டால மனதில் உள்ள குறைகள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை.
    • இதுபோல சுந்தரர், சேக்கிழார் ஆகியோரும் இந்த கோவிலை பற்றி பாடியுள்ளனர்.

    மனக்குறைகளை தீர்க்கும் இரும்பை மாகாளீஸ்வரர்

    புதுவையில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது இரும்பை மாகாளீஸ்வரர் கோவில்.

    புதுவை திண்டிவனம் சாலையில் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது.

    தேவார மூவர்களால் பாடல் பெற்ற 276 சிவ திருத்தலங்களில் 32வது திருத்தலமாக இரும்பை மாகாளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலை வழிபட்டால மனதில் உள்ள குறைகள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை.

    குடும்ப விருத்திக்கும், ஒற்றுமைக்கும் புகழ்பெற்ற தலமாகவும் இந்த கோவில் அமைந்துள்ளது.

    1300 ஆண்டுகளுக்கு முன்பு மாகாள மகரிஷியால் கோவில் ஸ்தாபிக்கப்பட்டு அவர் பூஜித்து அருள்பெற்ற ஸ்தலமாகவும் இது உள்ளது.

    இதனாலேயே இங்குள்ள இறைவன் மாகாளீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

    மாகாள மகரிஷி இதுபோல உஜ்ஜயினி மாகாளம், அம்பர் மாகாளம் ஆகிய கோவில்களையும் ஸ்தாபித்துள்ளார்.

    திருஞான சம்பந்தர் பாடல் பெற்ற சிறப்பு மிக்க கோவிலாகவும் இது அமைந்துள்ளது.

    இதுபோல சுந்தரர், சேக்கிழார் ஆகியோரும் இந்த கோவிலை பற்றி பாடியுள்ளனர்.

    கோவிலை சுற்றி இலுப்பை மரங்கள் அதிகம் இருந்ததால் அந்த பகுதி இலுப்பை என அழைக்கப்பட்டு பின்னர் அது மருவி இரும்பை என மாறியிருப்பதாக கூறுகிறார்கள்.

    கோவில் கருவறையில் உள்ள சிவலிங்கம் இரண்டாக பிளந்து பின்னர் ஒன்றாக சேர்ந்ததாக கூறப்படுகிறது.

    எனவே அந்த சிலை பிளந்ததற்கான அடையாளங்களுடன் இப்போதும் கருவறை சிலை உள்ளது.

    • நமது குடும்ப விழாக்களுக்கு உறவு குடும்பங்கள் கூடி வந்தால் தான் பெருமை.
    • கவுரவர்கள் சூழ்ச்சியால் வனவாசம் சென்றார்கள் பாண்டவர்கள்.

    சகோதரர் ஒற்றுமையை ஓங்க செய்யும் பெரம்பலூர் மதனகோபால சுவாமி

    தனிமரம் தோப்பாகாது என்பார்கள்.

    குடும்பங்கள் கூடி வாழ்வது தான் கோடி நன்மை தரும்.

    நமது குடும்ப விழாக்களுக்கு உறவு குடும்பங்கள் கூடி வந்தால் தான் பெருமை.

    வாழும் போது வாழ்த்துவதும், வீழும் போது தாங்கி பிடிப்பதும் சொந்த, பந்தங்கள்தான்.

    ஆனால் குடும்பங்களுக்குள் தான் எத்தனை பிரச்சனை. உறவு குடும்பங்களுக்குள் பிரச்சினை வருவது இன்று, நேற்று நடப்பது அல்ல.

    புராண காலத்தில் இருந்தே அது தொடர்கிறது.

    அதிலும் சகோதர குடும்பங்களுக்குள் எழுந்த பகையால் பஞ்ச பாண்டவர்கள் பட்ட பாடு அனைவரும் அறிந்ததே.

    அந்த பாண்டவர்களே தங்கள் குடும்பத்தில் அமைதி நிலவ, சகோதர ஒற்றுமை ஓங்கிட வேண்டி நின்ற ஒரு கோவில் தமிழகத்ததில் உள்ளது.

    பெரம்பலூர் மதன கோபால சுவாமி கோவில் தான் அது.

    சாபம் ஒன்றினால் புலியாகத் திரிந்த வியாக்ரம மகரிஷியின் சாபம் விலகிய தலம் வியாக்ரபுரம்...!

    யார் அந்த முனிவர்? அவருக்கு என்ன சாபம்?

    துர்வாசரின் சீடராக இருந்த ஒரு முனிவர், ஒரு சமயம் கவனக் குறைவால் தம் குருநாதரின் கமண்டலத்தில் இருந்த நீரைத் தட்டிவிட்டார்.

    அதனால் கோபமடைந்த துர்வாசர். அவரைப் புலியாக மாறும்படி சபித்தார்.

    பதறிப்போனார் சீடர். மன்னிக்கும்படி வேண்டினார்.

    சாபம் விட்டது விட்டதுதான் அதை மாற்ற முடியாது. ஆனால் விமோசனம் சொல்கிறேன்.

    புலியாக நீ உலாவும் பகுதிக்கு பஞ்சபாண்டவர்கள் வருவார்கள்.

    அப்போது பீமனின் கதை யால் நீ அடிபடுவாய்.

    அந்த சமயத்தில் உன் சாபம் விலகும் என்றார் துர்வாசர். சாபம் பலித்து சீடன் புலியாகித் திரிந்தான்.

    பூர்வ ஜென்ம வாசத்தால், அக்காட்டிலிருந்த பெருமாளைத் துதித்தான்.

    கவுரவர்கள் சூழ்ச்சியால் வனவாசம் சென்றார்கள் பாண்டவர்கள்.

    அப்போது ஒரு முனிவர் அவர்களைச் சந்தித்தார். உங்களின் இந்த நிலைக்குக் காரணம் தீவினை பாவம்தான்.

    அது தொலைய தீனரட்சகனான புருஷோத்தமனை பூஜிக்க வேண்டும் என்றார்.

    புருஷோத்தமனை பூஜிக்க தொடங்கினார்கள் பாண்டவர்கள்.

    ஒருநாள் பூஜைக்குத் தேவையான நீரை எடுக்க ஆற்றங்கரைக்கு சென்ற பாஞ்சாலி, தண்ணீர் எடுக்காமலே பதற்றத்துடன் ஓடிவந்தாள்.

    அவளை ஆசுவாசப்படுத்திய பீமன், அவளது அச்சத்திற்கு காரணம் கேட்டான்.

    பெரிய புலி ஒன்று துரத்துவதுதான் தன் கிலிக்குக் காரணம் என்றாள், பாஞ்சாலி. உடனே கதையுடன் புறப்பட்டான் பீமன்.

    தவறவிட்ட நோஞ்சானான பெண்ணுக்கு பதில், திடகாத்திரமான ஆண்... கொழுத்த வேட்டை என்று பாய்ந்தது புலி.

    அடுத்த கணம் அதன் தலையில் இடி போல் விழுந்தது ஓர் அடி. மரண ஓலம் எழுப்பிய புலி, கீழே விழுந்து துடித்தது, துவண்டது.

    சட்டென்று முனிவராக மாறி எழுந்தது. புலி பாய்ந்தபோது துணிவுடன் நின்ற பீமன், அது முனிவராக மாறியதும் அதிர்ந்தான்.

    பெரும் தவறு செய்துவிட்டதாக பயந்தான். மன்னிப்பு வேண்டிப் பணிந்தான்.

    கனிவுடன் அவனைப் பார்த்த முனிவர், தமது சாபம் விலகிய கதையை அவனுக்குச் சொன்னார்.

    தனக்கு நன்மை செய்த அவனுக்கு வீரம் பன்மடங்காகப் பெருக வரம் அளித்தார்.

    வியாக்ரம் என்றால் புலி என்று அர்த்தம். முனிவர் புலிவடிவில் இருந்ததால், அந்தத் தலம் வியாக்ரமபுரம் என்றானது.

    தமிழில் பெரும் புலிவனம் பெரும்புலியூர், அதுவே மருவி பெரம்பலூர் ஆகிவிட்டது.

    வழிபாடு செய்த பாண்டவர்களுக்கு வரம் தர வந்தார் வாசுதேவன். அவர்கள் துன்பம் தீர அருளினார்.

    வினை தீர்க்க வந்த வேணு கோபாலா, இத்தலத்தில் நீங்கள் நிரந்தரமாக வாசம் செய்திடவேண்டும்.

    எங்க ளுக்கு இந்தத் துன்பங்கள் வந்ததற்கு முக்கியமான கார ணம், உறவினர்களிடையே ஒற்றுமை இல்லாமல் போனது தான்.

    எனவே இங்கே வந்து உம்மை வணங்குவோரின் இல்லறம் நல்லறமாக அருள வேண்டும் என வேண்டினார்கள் பாண்டவர்கள்.

    பாண்டவர்களுக்கு அருளிய அதே வாசுதேவன், மதன கோபாலசுவாமியாக இன்றும் இங்கு அருள் பாலிக்கிறார்.

    தினமும் ஏராளமான மக்கள் தங்கள் சகோதர ஒற்றுமைக்கும், குடும்ப அமைதிக்கும் கோபாலனை வணங்கி செல்கின்றனர்.

    • தினமும் பைரவர் காயத்ரியை சொல்லி வந்தால் செல்வம் பெருகும்.
    • தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபட்டால் செல்வ வளம் பெறலாம்.

    பயம் போக்கும் பைரவர்

    சிவாலயங்களில் நீங்கள் சன்னதியை சுற்றி வரும் போது வட கிழக்குப் பகுதியில் பைரவர் வீற்றிருப்பதைப் பார்த்து இருப்பீர்கள்.

    சிவபெருமானின் முக்கிய அம்சமான இவரை ஒவ்வொருவரும் அவசியம் வழிபட வேண்டும்.

    ஏனெனில் பைரவரை மனம் உருகி வழிபடாவிட்டால், நீங்கள் சிவாலயத்துக்கு சென்று வழிபட்டதற்கான நோக்கமே பயன் தராமல் போய்விடக் கூடும்.

    அந்த அளவுக்கு பைரவர் மிக, மிக முக்கியத்துவம் வாய்ந்தவர். பைரவர் என்றால் நம் பயம், துன்பம், துயரம் எல்லாவற்றையும் போக்கி நம்மை காப்பவர் என்று பொருள்.

    வாழ்வில் உங்களுக்கு எப்போதாவது இக்கட்டான ஒரு சூழ்நிலை ஏற்பட்டால்... மனம் கலங்காமல், நம்பிக்கையுடன் "பைரவா... காப்பாற்று'' என்று அழைத்துப் பாருங்கள், காகம் விரட்டும் போது கோழி தன் குஞ்சுகளை எப்படி தன் இறக்கைக்குள் வைத்து காப்பாற்றுகிறதோ, அப்படி ஓடோடி வந்து பைரவர் உங்களை காப்பாற்றுவர்.

    பைரவரை நீங்கள் தொடர்ந்து தினமும் வணங்கினால், நவக்கிரக தோஷங்கள் விலகி, தீவினைகள் அழிந்து, பிறவிப் பயனை உணர்ந்து, சுப மங்களமாக, தலைகுனியா வாழ்க்கையை நிச்சயம் வாழ்வீர்கள்.

    8 மற்றும் 64 என்ற எண்ணிக்கையில் பல கோலங்களில் பைரவர் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். பைரவருக்கு சந்தன காப்பு அபிஷேகம் செய்து வழிபடுவது மிக, மிக பிடிக்கும்.

    தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, சந்தன மாலை அணிவித்து சர்க்கரை பொங்கல், தயிர்சாதம், தேன், அவல் பாயசம் மற்றும் பழ வகைகளை படைத்து பைரவரை வழிபட்டால் நாம் விரும்பியதை எல்லாம் பைரவர் தருவார்.

    தினமும் பைரவர் காயத்ரியை சொல்லி வந்தால் செல்வம் பெருகும். இது நிதர்சனமான உண்மை.

    செல்வத்தை நமக்கு வாரி வழங்கும் அஷ்ட லட்சுமிகள், ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டு தங்களது செல்வவள சக்தியை மேம்படுத்தி கொள்கிறார்கள்.

    எனவே நாமும் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று பைரவரை வழிபட்டால் மங்காத செல்வ வளத்தை பெறலாம் என்பது ஐதீகமாகும்.

    தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி செவ்வாய் தோறும் பைரவரை வழிபட்டு வந்தால் உங்கள் வாழ்வு சிறக்கும்.

    • ஆதிபைரவரிடம் இருந்து எட்டு பைரவர்கள் தோன்றினர்.
    • பைரவரின் கட்டளைப்படியே காலச்சக்கரம் சுழல்கிறது.

    கிரக தோஷத்தை நீக்கும் பைரவர்!

    ஆதிபைரவரிடம் இருந்துதான் முதலில் அசிதாங்க பைரவர், உருபைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கால பைரவர், பீஷண பைரவர், சம்ஹார பைரவர் எனும் அஷ்ட பைரவர்கள் தோன்றினர்.

    பின்னர் இந்த எட்டு பைரவர் திருமேனி ஒவ்வொன்றிலிருந்தும் எட்டு எட்டாக,

    ஒவ்வொரு காரணத்திற்கேற்ப 64 திருக்கோலங்களில் பைரவர்கள் வாகனத்துடனும், வாகனம் இல்லாமலும் எல்லாக் கோவில்களிலும் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்கள்.

    பைரவரை ஜோதிட நூல்கள் காலமே உருவாய் கொண்ட காலபுருஷனாக கூறுகின்றன.

    பன்னிரெண்டு ராசிகளும் அவரது உருவின் பகுதிகளாகின்றன.

    மேஷம்-சிரசு, ரிஷபம்-வாய், மிதுனம்-இரு கரங்கள், கடகம்-மார்பு, சிம்மம்-வயிறு, கன்னி-இடை, விருச்சிகம்-லிங்கம், தனுசு-தொடைகள், மகரம்-முழந்தாள், கும்பம்-கால்களின் கீழ்பகுதி, மீனம்-அடித்தளங்கள்.

    பைரவர் அரசர் என்றால், அவர் இட்ட கட்டளைகளை நிறைவேற்றும் சேவகர்களே கிரகங்கள்.

    பைரவரின் கட்டளைப்படியே காலச்சக்கரம் சுழல்கிறது.

    அவர் கட்டளைப்படியே எல்லா கிரகங்களும் செயல்படுகின்றன.

    அவரைச் சரணடைந்து நெஞ்சம் உருக வழிபட்டால் காலத்தின் கட்டுப்பாட்டையும் மீறி கிரக தோஷங்களை அகற்றி நன்மை புரிவார்.'

    • அனைத்து சிவாலயங்களில் பரிகார தெய்வமாக பைரவ வழிபாடு உள்ளது.
    • இந்த வழிபாடு உயரிய ஆற்றலையும் சக்தியையும் கொடுக்க வல்லது.

    பைரவருக்குரிய வழிபாட்டு நேரம்

    படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் ஆற்றும் பைரவரின் வழிபாடு வடக்கேயிருந்து வந்த கபாலிக வழிபாட்டின் ஒரு பகுதியாகும்.

    அனைத்து சிவாலயங்களில் பரிவார தெய்வமாக பைரவ வழிபாடு உள்ளது.

    இல்லங்களில் திரிசூல வழிபாடாக போற்றப்படுகிறது.

    வீடுகளில் காவல் தெய்வமான பைரவர் வடிவங்களை சிலைகளாகவோ படமாகவோ வைத்து வழிபடுவதற்கு பதில் வீட்டின் சுவரில் திரிசூலத்தை வரைந்து அதன் அருகில் திருவிளக்கேற்றி வழிபடுகின்றனர்.

    அனைத்து சிவாலயங்களிலும் வழிபாடு சூரியனிடம் இருந்து ஆரம்பித்து அர்த்தஜாமப் பூஜையாக பைரவருடன் முடிவடைகிறது.

    இரவு அர்த்தஜாமப் பூஜை முடிந்ததும் பைரவருக்கான சிறப்பு வழிபாடுகள் செய்து ஆலயத்தின் கதவுகளை மூடி ஆலய சாவிக்கொத்தை அவரின் காலடியில் வைப்பது வழக்கம்.

    பாதுகாப்பற்ற இந்நாளில் இப்படி சாவிகளை வைப்பதை தவிர்த்து பூஜை முடிந்ததன் அடையாளமாக கைமணியையும் அபிஷேக கலசம் அல்லது கைச்செம்பையும் வைக்கின்றனர்.

    ஆலயங்களில் நடைபெறும் வருடாந்திர பிரமோற்சவத்திற்கு முன்னும் பின்னும் பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

    விசேஷ தினங்களில் இவருக்கு நெய் அபிஷேகம் செய்யப்படுகிறது.

    அந்த விசேஷ தின பூசையில் எட்டுவித பட்சணங்களும், எட்டுவித அன்னங்களும், நைவேத்திய பொருட்களாக நிவேதிக்கப்படுகின்றன.

    மேலும் பைரவருக்கு எட்டு வித மலர்களால் அர்ச்சனை செய்து எட்டுவித ஆரத்திகளும் செய்யப்படுகின்றன.

    பைரவருக்குரிய வழிபாட்டு நேரம் நள்ளிரவாகும். இந்த அகால நேரத்தில் பராசக்தியானவள் பைரவி என்னும் பெயரில் நடமாடுகின்றாராம்.

    அவளுடன் இறைவனும் பைரவராக தலத்தை வலம் வருவாராம். அதனால் சித்தர்கள் அந்த நள்ளிரவு நேரத்தில் திரிபுர பைரவியையும் பைரவரையும் தியானிக்கின்றார்கள்

    இந்த வழிபாடு உயரிய ஆற்றலையும் சக்தியையும் கொடுக்க வல்லது. பைரவரை மனம் உருகி வழிபடுவர்களுக்கும், உரிய முறைப்படி தீபம் ஏற்றி வழிபடுபவர்களுக்கும் இந்த சக்தி கிடைக்கும்.

    • சர்வேஸ்வரனின் திருவடிவமான பைரவர் மாதம் ஒரு பைரவராகக் காட்சி தருகிறார்.
    • ஆவணி விஸ்வான் -ஸ்வர்ணாகர்ஷண பைரவர்

    ஒவ்வொரு மாதமும் வழிபட வேண்டிய பைரவர்கள்

    சர்வேஸ்வரனின் திருவடிவமான பைரவர் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பைரவராகக் காட்சி தருகிறார்.

    எந்தெந்த மாதத்தில் எந்த பைரவர் ஆட்சி புரிகிறாரோ அந்த பைரவரை வழிபட்டு நன்மை அடையலாம்.

    சித்திரை அம்சுமான் - சண்ட பைரவர்

    வைகாசி தாதா - ருரு பைரவர்

    ஆனி ஸவிதா - உன்மத்த பைரவர்

    ஆடி அரியமான் - கபால பைரவர்

    ஆவணி விஸ்வான் - ஸ்வர்ணாகர்ஷண பைரவர்

    புரட்டாசி பகன் - வடுக பைரவர்

    ஐப்பசி பர்ஜன்யன் - க்ஷத்ரபால பைரவர்

    கார்த்திகை துவஷ்டா - பீஷண பைரவர்

    மார்கழி மித்திரன் -அசிதாங்க பைரவர்

    தை விஷ்ணு - குரோதன பைரவர்

    மாசி வருணன் - ஸம்ஹார பைரவர்

    பங்குனி பூஷா - சட்டநாத பைரவர்.

    • பித்ரு தோஷத்தைப் போக்கவல்லது பைரவர் வழிபாடு
    • குற்றாலத்தில் குடி இருப்பவர் கால பைரவர். ஆறகழூரில் அஷ்ட பைரவர்கள்.

    பதவி, புகழ் தரும் பைரவ தரிசனம்

    குலதெய்வ கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செலுத்த முடியாதவர்களை, ஏதேனும் காரணத்தினால் தீர்த்த யாத்திரை, விரதம் போன்ற அனுஷ்டானங்களை கடைபிடிக்க முடியாதவர்களை, பித்ருக்களுக்கு உரிய நீத்தார் கடனை நிறைவேற்ற இயலாதவர்களை சில தோஷங்கள் பீடிக்கும் என்பார்கள்.

    இதற்கு பரிகாரமாக சித்தர்கள் சில வழிமுறைகளை கூறியுள்ளனர்.

    அந்த வகையில், அகத்தியர், ''சிதைந்திட்ட சிரார் தமது பெரும் பிணியீயுமப்பா பிண்டமதனை காலத்தீயாது விடின் வரும் வாட்டம் வம்சத்தையும் அழிக்குமாதலின் ஆதி சிவனவன் பைரவ வடிவேந்தி விளங்க யவரை யுரிய காலத்திலாராதித்து விமோசனங் காண்பீரே'' என்கிறார்.

    பித்ரு தோஷத்தைப் போக்கவல்லது பைரவர் வழிபாடு என்று சொன்ன அகத்தியர் அந்த பைரவர் கோயில் கொண்டிருக்கும் தலங்களையும் விவரிக்கிறார்.

    ''அஞ்சருவி சலத்தருகு யடுத்தே வரகலூராம் காரையான் பட்டியிலுமே நின்ற சோழ மண்டலத்துக் கோட்டை செங்கனூராம் முழு மண்டலமே.

    தோணியப்பனருள் கொண்ட விக்கிரமனும் சுங்காஸ்தமனத்தில் வந்திருந்து அருள் செய்ய சித்தங் கண்டோமே. ஈலுக்குடிவடம் பின்னே சட்டநாதனை கண்டோமே: குறுங்குடி பைரவனை அயனுந்தொழப் பார்த்தோமிது சத்தியமே'' என்கிறார்.

    இப்பாடலின் பொருள்:

    குற்றாலத்தில் குடி இருப்பவர் கால பைரவர். ஆறகழூரில் அஷ்ட பைரவர்கள். காரைக்குடியில் பைரவர்.

    சோழபுரத்தில் பைரவ சேசுவரர். அதியமான் கோட்டையில் கால பைரவர், திருச்செங்கோட்டில் பைரவ நாத மூர்த்தி, இலுப்பை குடியில் பைரவ மூர்த்தி, குண்டடத்தில் கொங்கு வடுகநாதன், சீர்காழியில் சட்டநாதர் என்று பக்தர்களுக்கு அருள்பரிபாலிக்கிறார் பைரவ மூர்த்தி.

    திருக்குறுங்குடி பைரவரை விஷ்ணுவும் பிரம்மனும் இந்திரனும் மற்றும் நவகோள் நாயகர்களும் பூஜித்து வருகின்றனர்.

    அனுதினமும் & கலியுகம் முற்றும் காலம் வரையிலும் வாயுபகவான் இந்த திருக்குறுங்குடி பைரவரை உபாசனை செய்து வருவார் என்கிறது சித்தர் வாக்கு.

    வெள்ளிக்கிழமை இரவு பைரவரை தொழுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

    அதுவும் சீர்காழியில், ஆடி வெள்ளி இரவு பைரவரை தொழுதால் பில்லி, சூனிய, ஏவல் பாதிப்புகள் அகலும்; தீராத பிணி போகும் என்கிறார் சிவவாக்கியர்.

    பைரவ பூஜை மகத்தானது. மகிமை வாய்ந்தது. பெரிய பதவிகளையும் புகழையும் அளிக்கவல்லது.

    செவ்வரளி அல்லது சிவப்பு நிற பூக்களினால் ஞாயிற்றுக்கிழமை ராகு காலங்களில் பைரவரை ஆராதனை செய்வதும் பைரவருக்குப் பிடித்த கோதுமை பாயசம் படைத்து, வினியோகம் செய்வதும், இழந்த பொருளை மீட்டுத்தரும் என்கிறது அகத்தியர் நாடி.

    ''போன பொருள் கை கூடும். பகையான உறவும் நட்பாகும்.

    பைரவர் படத்தை வீட்டில் வடக்குப்புறம் வைத்தால் & வாஸ்து தோஷத்தினால் வரக்கூடிய பீடை அகலும் என்கிறார் காக புஜண்டர்

    • பைரவர் வழிபாடு செய்வது பயத்தைப் போக்கி, வாழ்வில் தன்னம்பிக்கையைத் தரும்.
    • மாலை 4.30- 6 மணிக்குள் திருவிளக்கேற்றி வீட்டிலேயே இந்த போற்றியை சொல்லலாம்.

    ஸ்ரீ பைரவர் 108 போற்றி

    ஓம் பைரவனே போற்றி

    ஓம் பயநாசகனே போற்றி

    ஓம் அஷ்டரூபனே போற்றி

    ஓம் அஷ்டமித் தோன்றலே போற்றி

    ஓம் அயன்குருவே போற்றி

    ஓம் அறக்காவலனே போற்றி

    ஓம் அகந்தையழிப்பவனே போற்றி

    ஓம் அடங்காரின் அழிவே போற்றி

    ஓம் அற்புதனே போற்றி

    ஓம் அசிதாங்க பைரவனே போற்றி

    ஓம் ஆனந்த பைரவனே போற்றி

    ஓம் ஆலயக்காவலனே போற்றி

    ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி

    ஓம் இடுகாட்டில் இருப்பவனே போற்றி

    ஓம் உக்ர பைரவனே போற்றி

    ஓம் உடுக்கை ஏந்தியவனே போற்றி

    ஓம் உதிரம் குடித்தவனே போற்றி

    ஓம் உன்மத்த பைரவனே போற்றி

    ஓம் உறங்கையில் காப்பவனே போற்றி

    ஓம் ஊழ்வினை தீர்ப்பவனே போற்றி

    ஓம் எல்லை தேவனே போற்றி

    ஓம் எளிதில் இரங்குபவனே போற்றி

    ஓம் கபாலதாரியே போற்றி

    ஓம் கங்காளமூர்த்தியே போற்றி

    ஓம் கர்வ பங்கனே போற்றி

    ஓம் கல்பாந்த பைரவனே போற்றி

    ஓம் கதாயுதனே போற்றி

    ஓம் கனல்வீசும் கண்ணனே போற்றி

    ஓம் கருமேக நிறனே போற்றி

    ஓம் கட்வாங்க தாரியே போற்றி

    ஓம் களவைக் குலைப்போனே போற்றி

    ஓம் கருணாமூர்த்தியே போற்றி

    ஓம் கால பைரவனே போற்றி

    ஓம் காபாலிகர் தேவனே போற்றி

    ஓம் கார்த்திகையில் பிறந்தவனே போற்றி

    ஓம் காளாஷ்டமிநாதனே போற்றி

    ஓம் காசிநாதனே போற்றி

    ஓம் காவல்தெய்வமே போற்றி

    ஓம் கிரோத பைரவனே போற்றி

    ஓம் கொன்றைப்பிரியனே போற்றி

    ஓம் சண்ட பைரவனே போற்றி

    ஓம் சட்டை நாதனே போற்றி

    ஓம் சம்ஹார பைரவனே போற்றி

    ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி

    ஓம் சிவத்தோன்றலே போற்றி

    ஓம் சிவாலயத்து இருப்போனே போற்றி

    ஓம் சிக்ஷகனே போற்றி

    ஓம் சீர்காழித்தேவனே போற்றி

    ஓம் சுடர்ச்சடையனே போற்றி

    ஓம் சுதந்திர பைரவனே போற்றி

    ஓம் சிவ அம்சனே போற்றி

    ஓம் சுவேச்சா பைரவனே போற்றி

    ஓம் சூலதாரியே போற்றி

    ஓம் சூழ்வினை அறுப்பவனேபோற்றி

    ஓம் செம்மேனியனே போற்றி

    ஓம் ளக்ஷத்ரபாலனே போற்றி

    ஓம் தட்சனை அழித்தவனே போற்றி

    ஓம் தலங்களின் காவலனே போற்றி

    ஓம் தீது அழிப்பவனே போற்றி

    ஓம் துர்சொப்பன நாசகனே போற்றி

    ஓம் தெற்கு நோக்கனே போற்றி

    ஓம் தைரியமளிப்பவனே போற்றி

    ஓம் நவரச ரூபனே போற்றி

    ஓம் நரசிம்ம சாந்தனே போற்றி

    ஓம் நள்ளிரவு நாயகனே போற்றி

    ஓம் நரகம் நீக்குபவனே போற்றி

    ஓம் நாய் வாகனனே போற்றி

    ஓம் நாடியருள்வோனே போற்றி

    ஓம் நிமலனே போற்றி

    ஓம் நிர்வாணனே போற்றி

    ஓம் நிறைவளிப்பவனே போற்றி

    ஓம் நின்றருள்வோனே போற்றி

    ஓம் பயங்கர ஆயுதனே போற்றி

    ஓம் பகையளிப்பவனே போற்றி

    ஓம் பரசு ஏந்தியவனே போற்றி

    ஓம் பலிபீடத்து உறைவோனே போற்றி

    ஓம் பாபம் தீர்ப்பவனே போற்றி

    ஓம் பால பைரவனே போற்றி

    ஓம் பாம்பணிந்த தெய்வமே போற்றி

    ஓம் பிரளயகாலனே போற்றி

    ஓம் பிரம்ம சிரச்சேதனே போற்றி

    ஓம் பூஷண பைரவனே போற்றி

    ஓம் பூதங்களின் நாதனே போற்றி

    ஓம் பெரியவனே போற்றி

    ஓம் பைராகியர் நாதனே போற்றி

    ஓம் மல நாசகனே போற்றி

    ஓம் மகோதரனே போற்றி

    ஓம் மகா பைரவனே போற்றி

    ஓம் மலையாய் உயர்ந்தவனே போற்றி

    ஓம் மகா குண்டலனே போற்றி

    ஓம் மார்த்தாண்ட பைரவனே போற்றி

    ஓம் முக்கண்ணனே போற்றி

    ஓம் முக்தியருள்வோனே போற்றி

    ஓம் முனீஸ்வரனே போற்றி

    ஓம் மூலமூர்த்தியே போற்றி

    ஓம் யமவாதனை நீக்குபவனே போற்றி

    ஓம் யாவர்க்கும் எளியவனே போற்றி

    ஓம் ருத்ரனே போற்றி

    ஓம் ருத்ராட்சதாரியே போற்றி

    ஓம் வடுக பைரவனே போற்றி

    ஓம் வடுகூர் நாதனே போற்றி

    ஓம் வடகிழக்கு அருள்வோனே போற்றி

    ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி

    ஓம் வாரணாசி வேந்தே போற்றி

    ஓம் வாமனர்க்கு அருளியவனே போற்றி

    ஓம் விரும்பியதை அருள்வோனே போற்றி

    ஓம் விபீஷண பைரவனே போற்றி

    ஓம் வீழாமல் காப்பவனே போற்றி போற்றி!

    • வளர்பிறை அஷ்டமியில் இந்த பூஜையை செய்வதால் நிம்மதியாக வாழலாம்.
    • பைரவருக்கு ஏலக்காய் மாலை செலுத்தலாம்.

    பிரச்சனைகளை தீர்க்கும் ஞாயிற்றுக்கிழமை காலபைரவர் வழிபாடு

    ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில் அல்லது ராகு காலத்தில் ருத்திர அபிஷேகம், மிளகு வடை மாலை சாற்றி ஒரு பூசணி மிளகு தீபம் அல்லது மற்ற பழங்களில் மிளகு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணம் பாக்கியம் கிட்டும்.

    ஜாதக கர்ம வினைகள் அகலும், காரியத்தடைகள் நீங்கும், நினைத்தது கைகூடும், எதிரி வசியமாவார், மறைமுக எதிரிகளும் பைரவரை பூஜிப்பதால் மறைந்து விடுவார்கள்.

    கடன் தொல்லை தீர

    கடன் வாங்கி வட்டி, அசல் கட்ட இயலாதவர்கள் ஞாயிறு ராகு காலத்தில் காலபைரவருக்கு முந்திரி பருப்பு மாலை கட்டி, செந்தாமரை பூ அணிவித்து, கேரட் அல்வா, கோதுமை அரிசி பலகாரம், அவல், கேசரி, சிவப்பு ஆப்பிள் படையலிட்டு, புனுகு சாற்றி வெண்பொங்கல் நைவேத்யமிடவும்.

    ஒரு தலைவாழை இலை வைத்து அதன் மீது நெல் 1 படி பிரப்பி அதன் மீது ஒரு தலைவாழை இலை வைத்து பச்சரிசி 1 படி குங்குமம் சிறிதளவு மஞ்சள்பொடி, நெய் கலந்து பரப்பி அதைச்சுற்றிலும் ஐந்து எண்ணெய், சிறிதளவு மஞ்சள்தூள் கலந்து முப்பது பழங்களில் மிளகு தீபம் ஏற்றி ஸ்ரீ சொர்ண பரைவரை வழிபடலாம்.

    இந்த வழிபாட்டை செய்யும் போதுபைரவி தேவி காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபித்து, ஸ்ரீபைரவரை ஒன்பது வாரம் தொடர்ந்து அஷ்டோத்திர அர்ச்சனை செய்து வழிபட செல்வ செழிப்பைப்பெறலாம்.

    பணம் குவியும், அஷ்ட ஐஸ்வர்யமும் பெறலாம்.

    பெரிய பழங்களில் தீபம் ஏற்ற முடியவில்லை என்றால் சிறிய பழங்களில் ஏற்றலாம். அல்லது சிறிய வெங்கல கிண்ணத்தில் முப்பது மிளகைத்தூள் செய்து தீபம் ஏற்றலாம் அல்லது ஒரு பூசணியில் மிளகு தீபம் ஏற்றலாம்.

    இந்த விசேஷ பரிகாரத்தை மாதம் ஒரு முறை வரும் ஜனம அல்லது த்ரிஜன்ம நஷத்திரம் அன்றும் செய்வது சாலச்சிறந்தது.

    மற்றும் பவுர்ணமியும், வளர்பிறை அஷ்டமி நாளிலும் இந்தப் பூஜையை செய்வதால் நிம்மதியாக வாழலாம்.

    நமது கவலைகள் பிரச்சினைகள், ஏக்கங்கள், சோகங்கள், இப்படி அனைத்தையும் போக்குவதற்கு ஓர் அரிய உபாயம் இந்த பூஜை.

    ஸ்ரீ ஸ்வர்ணபைரவர் மந்திரம் ஜபிக்கும்போது, ஏலக்காய் சிறிதளவு குங்குமம், மஞ்சள், நெய் கலந்து முத்துக்களால்பைரவர் திருவடியில் அர்ச்சனை செய்யலாம்.

    பைரவருக்கு ஏலக்காய் மாலை செலுத்தலாம். ஒரு பிடி ஏலக்காயை பைரவர் பாதத்தில் வெற்றிலை மேல் வைக்கலாம் கடன் தீர்ந்து பலன் உடனே கைகூடும்.

    • குஜராத்தில் லட்சுமி பூஜை ஒரு விசேஷ நிகழ்ச்சியாகும்.
    • இந்தோ சீனாவிலும் திருமகளின் வழிபாடு நிலவுகிறது.

    இரு யானைகளுடைய லட்சுமி

    யானைகள் இரு புறமும் கலச நீராட்டும் லட்சுமியே எங்கும் சாதாரணமாகத் தென்படும் உருவம்.

    முதன் முதல் இந்த கஜலட்சுமியின் வடிவிலேயே சிற்பியின் கனவு எழுந்தது.

    ஸ்ரீசுக்தத்தின் வருணனையே இதற்கு அடிப்படையாகும்.

    வேத காலத்திலேயே வேரூன்றிப்போன இந்தக் கற்பனையை கல்லில் எங்கும் காணலாம்.

    லட்சுமி வழிபாடும் பூஜையும்

    பில்லர்கள் எனும் தொல்குடியினரின் தெய்வம் லட்சுமியே.

    தென்னாட்டில் மாலர் என்ற வகுப்பினர் ஆறு கலயங்களை அடுக்கி அவற்றைத் திருமகளாகப் பாவித்து கும்பிடுகின்றனர்.

    குஜராத்தில் லட்சுமி பூஜை ஒரு விசேஷ நிகழ்ச்சியாகும்.

    ஆனால் நம் ரீதியில் அன்று லட்சுமியின் கையில் வீணை இருக்கும்.

    சுக்ரநீதி சாரத்தில் வீணை ஏந்திய தியான ஸ்லோகம் வருகிறது.

    மகாராஷ்டிரத்தில் உழவர்கள் லட்சுமியைத் தொழுகின்றனர்.

    பயிர் வளத்தைக் காட்டும் தேவதை அவள். ஒரு மரத்தின் கீழ் ஐந்து கற்களை நிறுத்தி அதற்கு மஞ்சள் குங்குமம் இட்டுக் கோதுமை மாப்படையல் சாத்துவர்.

    மாலைப்பொழுது இளங்கதிர்களைக் கொய்து வீட்டுக்குக் கொண்டு வருவார்கள்.

    அத்துடன் துணியில் மறைத்து ஒரு விளக்கினையும் ஏந்தி வருவர். அதுவே அவர்களுடைய லட்சுமி.

    ராஜபுதனத்தில் லட்சுமியை அன்ன பூரணியாக உபசரிக்கின்றனர்.

    தாணியம் அளக்கும் "காரி" என்ற மரக்காலை லட்சுமி வடிவமாக அமைத்து தாமரைப் பூக்களால் அலங்கரிப்பார்கள்.

    இந்தோ சீனாவிலும் திருமகளின் வழிபாடு நிலவுகிறது.

    அவள் தலையில் முத்துக் கிரீடமும், கைகளில் வளையல்களும் அணிந்திருப்பாள்.

    மேற்புறக் கைகளில் சங்கு சக்கரம் இருக்கும். நாகக்குடை பூண்டிருப்பாள்.

    கல்லறைகள் மீது திருமகள் உருவைப் பொறிப்பது அந் நாட்டு வழக்கம்.

    தெலுங்கரும், தமிழகத்தில் ஸ்மார்த்த மரபினரும் வரலட்சுமி விரதத்தைக்கொண்டாடுவார்கள்.

    கோஜாகர பூர்ணிமை விரதம் வங்காளிகளிடையே நிலவும் லட்சுமி பூஜை.

    ×