search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மல்லிகை பூ"

    • பூ வரத்து அதிகரிப்பால் விலை குறைவு
    • குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற பூச்சந்தை தோவாளையில் உள்ளது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற பூச்சந்தை தோவாளையில் உள்ளது. ஆரல்வாய்மொழி, காவல்கிணறு, புதியம்புத்தூர், ராதாபுரம், பழவூர் ஆகிய ஊர்களில் இருந்து பிச்சிப் பூ, சங்கரன்கோவில், கோவில்பட்டி, மதுரை, மானாமதுரை, வத்தலகுண்டு, கொடை ரோடு, திண்டுக்கல் ஆகிய ஊர்களில் இருந்து மல்லிகை பூவும். பெங்களூர், ஓசூர் ஆகிய ஊர்களில் இருந்து மஞ்சள் கேந்தி , பட்டர் ரோஸ், தென்காசி, அம்பாசமுத்திரம், புளியங்குடி, திருக்கனங்குடி ஆகிய பகுதியில் இருந்து பச்சையும் துளசியும் தோவாளை ஆவரை சுற்றியுள்ள பகுதியில் இருந்து கனகாம்பரம், அரளி, கோழி கொண்டை, தாமரை உள்ளிட்ட பூக்கள் தோவாளை பூச்சந்தைக்கு வந்து மாவட்டம் முழுவதும், மாநிலம் முழுவதும் விற்பனைநடைபெறுகிறது.

    தற்போது மல்லிகைப்பூ அதிக அளவில் தோவாளை பூச்சந்தைக்கு வருவதால் பூக்கள் விலை குறைந்து காணப்படுகிறது. மற்ற பூக்களும் பிச்சிப்பூ ரூ.1200, அரளி ரூ. 200, சம்பங்கி ரூ. 125, பட்டர் ரோஸ் ரூ. 220, பாக்கெட் ரோஸ் ரூ. 40, கேந்தி ரூ. 80, சேலத்து அரளி ரூ. 100, மரிக்கொழுந்து ரூ.100, பச்சை ரூ.7, தாமரை ரூ.5, கனகாம்பரம் ரூ. 500 விற்பனையாகி வருகிறது.

    மல்லிகைப்பூ விலை குறைந்து காணப்படுவதால் சில்லறை வியாபாரிகளும், மொத்த வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர் விவசாயிகள், பறிப்பு கூலி கூட கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.

    • மல்லிகைப்பூ விலை குறைந்து காணப்படுவதால் சில்லறை வியாபாரிகளும், மொத்த வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
    • விவசாயிகள் பறிப்பு கூலி கூட கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.

    ஆரல்வாய்மொழி:

    குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற பூச்சந்தை தோவாளையில் உள்ளது. ஆரல்வாய்மொழி, காவல்கிணறு, புதியம்புத்தூர், ராதாபுரம், பழவூர் ஆகிய ஊர்களில் இருந்து பிச்சிப் பூ, சங்கரன்கோவில், கோவில்பட்டி, மதுரை, மானாமதுரை, வத்தலகுண்டு, கொடை ரோடு, திண்டுக்கல் ஆகிய ஊர்களில் இருந்து மல்லிகை பூவும், பெங்களூர், ஓசூர் ஆகிய ஊர்களில் இருந்து மஞ்சள் கேந்தி , பட்டர் ரோஸ், தென்காசி, அம்பாசமுத்திரம், புளியங்குடி, திருக்கனங்குடி ஆகிய பகுதியில் இருந்து பச்சையும் துளசியும் தோவாளை ஆவரை சுற்றியுள்ள பகுதியில் இருந்து கனகாம்பரம், அரளி, கோழி கொண்டை, தாமரை உள்ளிட்ட பூக்கள் தோவாளை பூச்சந்தைக்கு வந்து மாவட்டம் முழுவதும், மாநிலம் முழுவதும் விற்பனை நடைபெறுகிறது.

    தற்போது மல்லிகைப்பூ அதிக அளவில் தோவாளை பூச்சந்தைக்கு வருவதால் பூக்கள் விலை குறைந்து காணப்படுகிறது. மற்ற பூக்களும் பிச்சிப்பூ ரூ.1200, மல்லிகைப்பூ ரூ.400, அரளி ரூ. 200, சம்பங்கி ரூ. 125, பட்டர் ரோஸ் ரூ. 220, பாக்கெட் ரோஸ் ரூ. 40, கேந்தி ரூ. 80, சேலத்து அரளி ரூ. 100, மரிக்கொழுந்து ரூ.100, பச்சை ரூ.7, தாமரை ரூ.5, கனகாம்பரம் ரூ. 500 விற்பனையாகி வருகிறது.

    மல்லிகைப்பூ விலை குறைந்து காணப்படுவதால் சில்லறை வியாபாரிகளும், மொத்த வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விவசாயிகள், பறிப்பு கூலி கூட கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.

    • பூ மார்க்கெட்டில் சேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் தினமும் பூக்கள் வாங்கி செல்கின்றனர்.
    • சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திருமணங்கள் நடைபெற்றது. இதையொட்டி இன்று அதிகாலை முதல் பூக்கள் வாங்க பொதுமக்கள் வழக்கத்தை விட அதிகளவில் திரண்டனர்.

    சேலம்:

    சேலம் பழைய பஸ் நிலையம் அருகே வ.உ.சி. பூ மார்க்கெட் உள்ளது.

    பூ மார்க்கெட்

    இதைத்தவிர பழைய பஸ் நிலையத்தை யொட்டி விசாலமாக மேலும் ஒரு பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டுகளுக்கு கன்னங்குறிச்சி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர், பனமரத்துப்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலவகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    இந்த பூ மார்க்கெட்டில் சேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் தினமும் பூக்கள் வாங்கி செல்கின்றனர்.

    மல்லிகை பூ கிலோவுக்கு ரூ.1400

    இன்று சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திருமணங்கள் நடைபெற்றது. இதையொட்டி இன்று அதிகாலை முதல் பூக்கள் வாங்க பொதுமக்கள் வழக்கத்தை விட அதிகளவில் திரண்டனர்.

    இதனால் பூக்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. குறிப்பாக இன்று ஒரு கிலோ மல்லிகை பூ கிலோ ரூ.1400-க்கு விற்கப்பட்டது.

    இதுபோல் ஜாதி மல்லிகை ரூ.1000-க்கும், காக்கட்டான் ரூ.400-க்கும், கலர் காக்காட்டான் ரூ.400, மலை காக்கட்டான் - ரூ.320, அரளி -ரூ.140, வெள்ளை அரளி ரூ.140, மஞ்சள் அரளி- ரூ140, செவ்வரளி ரூ.180, நந்தியாவட்டம் ரூ.120, சி.நந்தியாவட்டம் ரூ.400, சம்பங்கி ரூ.30, சாதா சம்மங்கி ரூ.50 என்கிற விலையில் விற்பனை செய்யப்பட்டது.

    • ஆலங்குளம் பூ மார்க் கெட்டில் மல்லிப்பூ இன்று ரூ.4 ஆயிரத்திற்கு விற்பனையானது.
    • விலை அதிகரித்து காணப்பட்டாலும் பொது மக்கள் பூக்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

    ஆலங்குளம்:

    முகூர்த்த நாட்கள் நாளை முதல் தொடர்ந்து 2 நாட்கள் வருவதை யொட்டி தென்காசி மாவட்டத்திலும் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்திருந்தது. ஆலங்குளம் பூ மார்க் கெட்டில் நேற்று ரூ.1,500-க்கு விற்கப்பட்ட மல்லிப்பூ இன்று ரூ.4 ஆயிரத்திற்கு விற்பனையானது.

    இதே போல் கிலோ ரூ.850-க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ இன்று ரூ.1,500-க்கு விற்பனையானது. விலை அதிகரித்து காணப்பட்டாலும் தேவை அதிகரிப்பால் வியாபாரிகளும், பொது மக்களும் பூக்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். சில இடங்களில் மல்லிகை பூ மற்றும் பிச்சிப்பூக்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

    • கடந்த சில நாட்களாக 3 முதல் 4 மினி வேன்களில் மட்டுமே மல்லிகை பூ விற்பனைக்கு வருகிறது.
    • மல்லி பூ விலை 3 மடங்காக அதிகரித்து உள்ளது.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மல்லிகை பூ விற்பனைக்கு வருகிறது.

    வழக்கமாக தினமும் 28 மினி வேன்கள் மூலம் மல்லிகை பூ விற்பனைக்கு கொண்டு வரப்படும். இதில் ஏறத்தாழ 20 மினி வேன்கள் அளவிலான மல்லிகை பூக்களை வாசனை திரவியம் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இங்கிருந்து வாங்கி செல்வது வழக்கம். பனி சீசன் நேரத்தில் பொதுவாகவே மல்லி பூ விளைச்சல் இருக்காது.

    கடந்த 10நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை மற்றும் அதனை தொடர்ந்து கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகை பூ விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கோயம்பேடு பூ சந்தைக்கு வரும் மல்லிகை பூக்களின் வரத்து வெகுவாக குறைந்து விட்டது.

    கடந்த சில நாட்களாக 3 முதல் 4 மினி வேன்களில் மட்டுமே மல்லிகை பூ விற்பனைக்கு வருகிறது. இதன் காரணமாக மல்லி பூ விலை 3 மடங்காக அதிகரித்து உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ மல்லிகை ரூ.300-க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் இன்று அதன் விலை அதிகரித்து ஒரு கிலோ ரூ.800-க்கு விற்கப்படுகிறது.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் இருந்து தினசரி விற்பனைக்கு வரும் ஐஸ் மல்லிகை கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.150-க்கு விற்ற நிலையில் இன்று விலை அதிகரித்து கிலோ ரூ.500-க்கு விற்கப்படுகிறது. மல்லிகை பூவை தொடர்ந்து ஐஸ் மல்லிகை விலையும் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து பூ மொத்த வியாபாரி மூக்கையா கூறுகையில், கடும் பனிப்பொழிவு காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் மல்லிகை பூ வரத்து குறைந்து விலை அதிகரித்து உள்ளது. அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் வர உள்ளதால் அதன் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றார்.

    • தஞ்சை பூக்கார தெருவில் பூச்சந்தை அமைந்துள்ள ஏராளமான கடைகள் உள்ளன.
    • நேற்று மல்லிகைப்பூ கிலோ ரூ.1000-க்கு விற்கப்பட்டது. இன்று இரண்டு மடங்காக விலை உயர்ந்து கிலோ ரூ.2000-க்கு விற்பனையாகியது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பூக்கார தெருவில் பூச்சந்தை அமைந்துள்ளது. இங்கு ஏராளமான கடைகள் உள்ளன.

    திண்டுக்கல், ஓசூர், நிலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து தினமும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும்.

    இதே போல் இங்கிருந்து வெளி மாவட்டங்களுக்கும் பூக்கள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும்.

    பண்டிகை காலங்கள், சுபமுகூர்த்த நாட்களில் பூக்களின் விலை கணிசமாக அதிகரிக்கும்.

    இதேபோல் வரத்து குறைவாக இருந்தாலும் விலை அதிகரிக்கும்.

    இந்த நிலையில் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    தீபாவளிக்கு பூக்களின் தேவை அதிகம் என்பதால் அதன் விலையும் கிடுகிடுவென அதிகரித்து உள்ளது.

    அதன்படி நேற்று மல்லிகைப்பூ கிலோ ரூ.1000-க்கு விற்கப்பட்டது.

    இன்று இரண்டு மடங்காக விலை உயர்ந்து கிலோ ரூ.2000-க்கு விற்பனையாகியது.

    இதேப்போல் முல்லைப் பூ விலையும் இரண்டு மடங்கு உயர்ந்து கிலோ ரூ.2000-க்கு விற்கப்பட்டது.

    இதேபோல் கனகாம்பரம் ரூ.1500, செவ்வந்தி ரூ.200, அரளி ரூ.300, ஆப்பிள் ரோஸ் ரூ.200-க்கும் விற்பனையாகின.

    இது குறித்து பூ வியாபாரி சந்திரசேகரன் கூறும்போது:-

    தீபாவளி பண்டிகை என்பதால் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. பொதுமக்களும் ஆர்வத்துடன் பூக்கள் வாங்கி செல்கின்றனர் என்றார்.

    • கேரளாவில் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது.
    • ஓணம் பண்டிகையின் போது மலையாளம் மொழி பேசுபவர்கள் தங்களின் வீடுகளின் முன்பு பூக்களினால் கோலம் போடுவது வழக்கம்.

    கோவை:

    கோவை ஆர்.எஸ்.புரம் அருகே பூ மார்க்கெட் உள்ளது. இங்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பூக்கள் வந்து குவிகின்றன. இந்த பூக்கள் வியாபாரிகள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.

    இங்கிருந்து அண்டை மாநிலமான கேரளாவுக்கும் அதிகளவில் பூக்கள் அனுப்பப்படுகிறது. பூக்களின் விலை நாளுக்கு நாள் மாறுபடும் தன்மையுடையது. பண்டிகை மற்றும் திருவிழா, கோவில் விழா நாட்களில் பூக்கள் விலை மிக உயர்ந்தும், மற்ற நாட்களில் விலை குறைவாகவும் காணப்படும்.

    இந்த நிலையில் கேரளாவில் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையின் போது மலையாளம் மொழி பேசுபவர்கள் தங்களின் வீடுகளின் முன்பு பூக்களினால் கோலம் போடுவது வழக்கம்.

    மேலும் ஓணம் பண்டிகைக்காக கோவையில் இருந்து அதிகப்படியான பூக்கள் கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்டது. சுமார் 100 டன்களுக்கு மேலாக பூக்கள் விற்பனையாகும்.

    நடப்பாண்டில் விநாயகர் சதுர்த்தி, முகூர்த்த தினங்கள், ஓணம் பண்டிகை என தொடர்ச்சியாக வந்ததால், பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. மழையின் காரணமாக பூக்கள் வரத்து குறைந்து, விலை அதிகரித்து காணப்பட்டது.

    ஓணம் பண்டிகைக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் கோவை பூமார்க்கெட்டில் பூக்கள் வாங்க அதிகளவில் பொதுமக்கள் குவிந்திருந்தனர். கேரளாவில் இருந்தும் வியாபாரிகள் மார்க்கெட்டுக்கு வந்து பூக்களை கொள்முதல் செய்து விட்டு செல்கின்றனர்.

    இதனால் பூக்களின் விலை இன்று உயர்ந்து காணப்பட்டது. அதன்படி மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.4000, முல்லை ஒரு கிலோ ரூ.1200, ரோஜா ரூ.200, செவ்வந்தி (ஆரஞ்சு) ரூ.200, செவ்வந்தி (மஞ்சள்) ரூ.160, வாடாமல்லி ரூ.200, தாமரை ஒன்று ரூ.10, அரளி ரூ.250,போழி பூ ரூ.60, துளசி ரூ40, மரி கொழுந்து ரூ.50 (ஒரு கட்டு), நந்தியா வட்டம் ரூ.500 என விற்பனை செய்யப்பட்டது.

    தொடர் பண்டிகை நாட்கள் காரணமாக பூக்கள் விற்பனை அமோகமாக நடந்து வருவதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    • தொடர் மழை காரணமாக வரத்து குறைந்ததால் மதுரையில் மல்லிகை உள்ளிட்ட பூக்களின் விலை உச்சத்தை எட்டியுள்ளது.
    • மல்லிகை ரூ.3ஆயிரத்துக்கு விற்பதால் பூக்களை வாங்க பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மதுரை அருகே திருப்பரங்குன்றம், வலையன்குளம், கொடைரோடு, திருமங்கலம், திண்டுக்கல் நிலக்கோட்டை, விருதுநகர் காரியாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மலர் விவசாயம் அதிக அளவில் இருந்தாலும் பூக்களின் மகசூல் வெகுவாக குறைந்துள்ளது.

    இதன் காரணமாக மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டுக்கு பூக்களின் வரத்து பாதியாக குறைந்துள்ளது. தற்போது கோவில் திருவிழாக்கள் மற்றும் முகூர்த்த நாட்கள் என்பதால் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. இதற்கு பூக்களின் தேவையும் அதிகமாக உள்ளது.

    இதன் காரணமாக பூக்கள் வரத்து போதிய அளவு இல்லாததால் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மதுரை மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் பூக்கள் கொண்டு வரப்படுகிறது. கடந்த வாரம் விநாயகர் சதுர்த்தியையொட்டி மல்லிகை பூக்கள் கிலோ 2000 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

    அதற்கு முந்தைய வாரத்தில் 500 ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லிகை பூவின் இந்த விலை உயர்வு மக்களிடையே பெரும் தவிப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது மல்லிகை பூக்கள் விலை மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி ஒரு கிலோ மல்லிகை 3000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த விலை உயர்வு காரணமாக பொது மக்கள் மல்லிகையே விரும்பினாலும் வாங்க தயக்கம் காட்டுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதுபோல மற்ற மலர்களின் விலையும் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

    50 ரூபாய்க்கு விற்பனையாகும் சம்மங்கி இன்றைக்கு ரூ.300-க்கு விற்பனையாகிறது. 250 ரூபாய், 300 ரூபாய்க்கு விற்பனையாகும் பிச்சி, முல்லை பூக்கள் 1500 ரூபாய்க்கும், 50 ரூபாய்க்கு விற்கும் பட்டன் ரோஸ் 250 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. கனகாம்பரம் பூக்கள் 1,200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    இந்த விலையேற்றம் காரணமாக வியாபாரம் மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ×