search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹிஜாப் தடை"

    • பா.ஜனதா தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
    • ஹிஜாப் தடை உத்தரவு நீக்குவதில் பல சட்டசிக்கல்கள் உள்ளன.

    பெங்களூர்:

    கர்நாடகத்தில் கடந்த பா.ஜனதா ஆட்சியில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் உள்பட மத அடையாள ஆடைகள் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை நீக்குவோம் என்று முதல்-மந்திரி சித்தராமையா நேற்று முன்தினம் மைசூருவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கூறினார்.

    இதற்கு பா.ஜனதா தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஹிஜாப் விவகாரம் குறித்து முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஹிஜாப் தடை உத்தரவை திரும்ப பெறுவது குறித்து அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை. என்னிடம் ஹிஜாப் விவகாரம் குறித்து ஒருவர் கேள்வி எழுப்பினார். அப்போது நான், ஹிஜாப் தடையை நீக்குவோம் என்றேன். ஹிஜாப் தடை உத்தரவு நீக்குவதில் பல சட்டசிக்கல்கள் உள்ளன. உடனடியாக தடை உத்தரவை நீக்க முடியாது. அமைச்சரவையில் கலந்தாலோசிக்க வேண்டும். விரைவில் இதுபற்றி அரசு மட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தனிமனித உடை, உணவு விஷயத்தில் கட்டுப்பாடு விதிக்க கூடாது என்றும், ஹிஜாப் தடையை நீக்குவோம் என்றும் நேற்று முன்தினம் சித்தராமையா பேசிய நிலையில் அரசு மட்டத்தில் ஆலோசித்தே முடிவு எடுக்கப்படும் என திடீர் பல்டி அடித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.
    • பள்ளிகள், கல்லூரிகளில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை நீக்கப்படும் என முதல் மந்திரி அறிவித்தார்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் பா.ஜ.க. முதல் மந்திரியாக இருந்த பசவராஜ் பொம்மை, பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதித்து உத்தரவிட்டார்.

    இதற்கிடையே, சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.

    இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை நீக்கம் செய்யப்படுவதாக முதல் மந்திரி சித்தராமைய்யா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக சித்தராமையா கூறுகையில், எந்த உடை அணிவது, என்ன உணவு சாப்பிடுவது என்பது அவரவர்களின் தனிப்பட்ட விருப்பம். அதை நான் ஏன் தடுக்கவேண்டும்? உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப எந்த உடை வேண்டுமானாலும் அணிந்து கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பாவின் மகனும், கர்நாடக பா.ஜ.க. தலைவருமான பி.ஒய்.விஜயேந்திரா கூறுகையில், இந்த நடவடிக்கை துரதிர்ஷ்டவசமானது. காங்கிரஸ் கட்சி பிரித்தாளும் மற்றும் திருப்திப்படுத்தும் அரசியலை செய்கிறது என்றார்.

    • நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது
    • 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வுக்கு மாற்றவேண்டும் என வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார்.

    புதுடெல்லி:

    கர்நாடக மாநிலத்தில் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடை செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. உடுப்பியில் உள்ள அரசு பியுசி கல்லூரியைச் சேர்ந்த முஸ்லிம் மாணவிகள் வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிய அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

    இந்த வழக்கு, நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்களில் ஒருவர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தேவதத் காமத், இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வுக்கு மாற்றவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    அரசியலமைப்பின் 19, 21 அல்லது 25 வது பிரிவின்கீழ் வழங்கப்பட்ட உரிமைகளைப் பயன்படுத்தி, ஒரு பெண் ஹிஜாப் அணிய முடிவு செய்தால், அவளுடைய உரிமைகளை மீறும் வகையில் அரசு தடை விதிக்க முடியுமா? என்று அவர் வாதிட்டார்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இப்போது கேள்வி என்னவென்றால், ஹிஜாப் அணிவதை யாரும் தடை செய்யவில்லை. நீங்கள் எங்கு வேண்டுமானாலும் அதை அணியலாம், பள்ளியில் மட்டுமே கட்டுப்பாடு உள்ளது. அதுபற்றி மட்டுமே நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம், என்றனர்.

    இந்த வழக்கில் நாளையும் வாதம் தொடர்ந்து நடைபெறும்.

    ×