search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 264526"

    • வீட்டில் யாரும் இல்லாத போது பழனிசாமி விஷ மாத்திரை தின்று மயங்கி கிடந்தார்.
    • இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நாகதேவன் பாளையம் பகுதியை சேர்ந்த வர் பழனிசாமி (64). விவசாயி. இவருக்கு குடிபழக்கம் இருந்து வந்ததாக கூறப்படு கிறது.

    இவரது மனைவி உடல்நிலை சரியில்லாமல் வெளியே சென்று விட்டார். இதனால் பழனிசாமி வேதனையடைந்து வந்தார்.

    இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது பழனிசாமி விஷ மாத்திரை தின்று மயங்கி கிடந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    மேல் சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவர் பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரி வித்தனர்.

    இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×