search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மது குடிக்க பணம்"

    • மது குடிக்க பணம் கேட்டு வீட்டில் தகராறு செய்தார்.
    • பணம் கொடுக்க மறுத்ததால் கோவிந்தராஜ் தன் உடலில் தீ வைத்துக் கொண்டார்.

    அந்தியூர், 

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (65). மரம் வெட்டும் தொழிலாளியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படு கிறது.

    இந்த நிலையில் கோவிந்தராஜ் கடந்த வாரம் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதையடுத்து அவர் மீண்டும் மது குடிக்க பணம் கேட்டு வீட்டில் தகராறு செய்தார். ஆனால் வீட்டில் உள்ளவர்கள் பணம் தர மறுதது வட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் திடீரென மண் எண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்றி கொண்டு வீட்டில் உள்ளவர்களிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. ஆனால் அவருக்கு பணம் கொடுக்க மறுத்ததால் கோவிந்தராஜ் தன் உடலில் தீ வைத்துக் கொண்டார்.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சைக்குசேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை கோவிந்தராஜ் பரிதாபமாக இறந்தார். 

    • மது பழக்கத்திற்கு அடிமை யாகி இருந்தார். சம்பவத்தன்று இவரது தாயாரிடம் மது குடிக்க பணம் கேட்டார்.
    • மேல்சிகிச்சைக் காக கடலூரில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டார்

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஆண்டி குப்பத்தை சேர்ந்தவர் காசி இவரது மகன் வினோத்குமார் (வயது 27) திருமண மாகாதவர். இவர் மது பழக்கத்திற்கு அடிமை யாகி இருந்தார். சம்பவத்தன்று இவரது தாயாரிடம் மது குடிக்க பணம் கேட்டார். தாயார் பணம் தரமறுத்ததால் ஆத்திரம் அடைந்த வாலிபர் வீட்டில் தூக்கு போட்டுக்கொண்டார்.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக் காக கடலூரில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்ட தொழிலாளி வினோத்கு மார் அங்கு சிகிச்சை பலனளிக் காமல் பரிதாபமாக உயிர் இழந்தார்.இது குறித்து காடாம் புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    ×