search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் உள்பட 2 பேர் கைது"

    • டோல்கேட் அருகில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி தாலுகா ேபாலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் டோல்கேட் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அவர் 10 கிலோ கஞ்சா வைத்து இருந்தது தெரியவந்தது. ஆந்திர மாநிலம், குப்பம் அடுத்த மல்லனூர் பகுதியை சேர்ந்த மாரியப்பா மனைவி ஜெயலட்சுமி (வயது40) என்பது தெரியவந்தது. இது ெதாடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து ஜெயலட்சுமியை கைது செய்தனர்.

    இதே போல் பர்கூர் அடுத்த ஜெகதேவி ஞானம்மாள் காலனியை சேர்ந்த யூசுப்கான் என்பவர் கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்டது.

    • சிங்காரப்பேட்டை அருகே ரெட்டியூரில் பொம்மி (எ) பச்சையம்மாள் (55) என்ற பெண் 10 லிட்டர் சாராயத்துடன் பிடிபட்டார்.
    • காமராஜ் நகரில் முத்துசாமி என்பவரும் கள்ள சாராயம் விற்றுக்கொண்டு இருந்தவர்கள் போலீசை கண்டதும் ஓட்டம் பிடித்து விட்டனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகேயுள்ள காலம்பட்டி பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர்.அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வைத்து ஒருவர் கள்ள சாராயம் விற்றது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த நபரை பிடித்து விசாரித்தபோது அவர் திருப்பத்தூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த ராமசாமி (வயது 57) என்பது தெரிய வந்தது.அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 8 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர்.

    இதேபோல சிங்காரப்பேட்டை அருகே ரெட்டியூரில் பொம்மி (எ) பச்சையம்மாள் (55) என்ற பெண் 10 லிட்டர் சாராயத்துடன் பிடிபட்டார். அவரை கைது செய்தனர்.

    மேலும் அதே பகுதியில் மங்காயி என்பவரும்,காமராஜ் நகரில் முத்துசாமி என்பவரும் கள்ள சாராயம் விற்றுக்கொண்டு இருந்தவர்கள் போலீசை கண்டதும் ஓட்டம் பிடித்து விட்டனர்.

    அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த 35 லிட்டர் சாராயத்தை அழித்த போலீசார் அவர்கள் 2 பேரையும் தேடி வருகின்றனர்.

    ×