search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்துக்கள்"

    • உத்தரகண்ட் மாநிலத்தில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை என்று வைக்கப்பட்டுள்ள பேனர்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    • ஏஐஎம்ஐஎம் கட்சியினர் இத்தகைய பேனர்கள் தொடர்பாக போலீசில் புகார் அளித்தனர்

    உத்தரகாண்ட் மாநிலத்தின் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை என்று வைக்கப்பட்டுள்ள பேனர்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    அந்த பேனர்களில், "இந்துக்கள் அல்லாதவர்கள், ரோஹிங்கியா முஸ்லிம்கள் மற்றும் வியாபாரிகள் ஆகியோர் கிராமத்திற்குள் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது. கிராமத்தில் எங்காவது நீங்கள் கண்டுபிடிக்கப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிதிக்கப்ட்டுள்ளது.

    முஸ்லிம் சேவா சங்கதன் மற்றும் ஏஐஎம்ஐஎம் கட்சியினர் இத்தகைய பேனர்கள் தொடர்பாக போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து சில கிராமங்களில் வைக்கப்பட்டிருந்த இத்தகைய பேனர்களை போலீசார் அகற்றியுள்ளனர். இத்தகைய பேனர்கள் தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • கடந்த ஒரு மாதத்தில் 35 முஸ்லிம் ஊடுருவல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • அப்படி வருபவர்கள் பெங்களூரு, தமிழ்நாடு சென்று ஜவுளித் தொழில் வேலைக்காக செல்கின்றனர்.

    கவுகாத்தி:

    அசாம் முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    வங்கதேசத்தில் இருந்து கடந்த ஒரு மாதத்தில் ஒரு இந்து கூட இந்தியாவுக்குள் நுழைய முயன்றது கண்டறியப்படவில்லை.

    இந்துக்கள் இந்தியாவிற்கு இடம்பெயராமல், பிரச்சனையால் பாதிக்கப்பட்ட வங்கதேசத்தில் தங்கி, போராடி வருகின்றனர்.

    கடந்த ஒரு மாதத்தில் 35 முஸ்லிம் ஊடுருவல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் உள்ளே நுழைய முயற்சிக்கிறார்கள், ஆனால் வருபவர்கள் பெங்களூரு, தமிழ்நாடு, கோயம்புத்தூர் சென்று ஜவுளித் தொழிலில் வேலை செய்ய உள்ளனர்.

    இந்துக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாக வங்கதேச அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

    • மத்தியில் ஆளும் பாஜக அரசால் பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த மார்ச் மாதம் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது.
    • நாட்டில் ஏற்கனவே உள்ள புலம்பெயர்ந்தோரை சட்டவிரோத குடியேறிகள் என்று கூறி இந்திய குடியுரிமை பறிக்கப்படுமோ என்று எதிர்க்கட்சிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

    மத்தியில் ஆளும் பாஜக அரசால் பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த மார்ச் மாதம் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. ௨௦௧௯ ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி, குடியுரிமை சட்டத்தில், மேற்கு வங்கம், பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான் பகுதியில் உள்ள முஸ்லீம் அல்லாத சமூகத்தினருக்கு முக்கியமாக ஹிந்துக்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜைனர்கள், கிறித்தவர்களுக்கு விரைந்து குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யபட்டது.

    இஸ்லாமியர்களை பாதிக்கும் வகையில் பாரபட்சமாக இந்த சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது என்பதே எதிர்க்கட்சிகளின் வாதமாக உள்ளது. அனால் பாஜக இதை தொடர்ந்து மறுத்து வருகிறது. நாட்டில் ஏற்கனவே உள்ள புலம்பெயர்ந்தோரை சட்டவிரோத குடியேறிகள் என்று கூறி இந்திய குடியுரிமை பறிக்கப்படுமோ என்று எதிர்க்கட்சிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். முக்கியமாக தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயந்த இலங்கைத் தமிழர்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

    இந்நிலையில் சிஏஏ மூலம் நாட்டில் முதற்கட்டமாக 14 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியுரிமைக்கு விண்ணப்பித்த டெல்லியைச் சேர்ந்த 14 புலம்பெயர்ந்வர்களிடம் மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா அவர்களுக்கான குடியுரிமை ஆவணங்களை வழங்கி அதன் நன்மைகள் குறித்து பேசினார்.இதில் பல்வேறு அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

    • பிரதமர் மோடி வெறுப்புணர்வு பிரசாரத்தை கையில் எடுத்துள்ளார்.
    • பிரதமர் பதவியில் இருப்பவர் அநாகரீகமான செயலில் ஈடுபடக்கூடாது.

    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலை வருமான பரூக் அப்துல்லா பிரசார கூட்டத்தில் பேசியதாவது:-

    பிரதமர் மோடி ஓட்டுக்காக இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார். அவரை அனைவரும் ஒன்று சேர்ந்து அதிகாரத்தில் இருந்து விரட்ட வேண்டும்.

    முஸ்லிம்கள், இந்துக்கள் மத்தியில் திட்டமிட்டு பிரதமர் மோடி வெறுப்புணர்வு பிரசாரத்தை கையில் எடுத்துள்ளார். பிரதமர் பதவியில் இருப்பவர் இத்தகைய அநாகரீகமான செயலில் ஈடுபடக்கூடாது.

    பிரதமர் மோடி வெளி நாட்டுக்கு செல்லும் போது இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர் அனைவருக்கும் அவர்தான் பிரதமர். ஆனால் அவர் உள்ளூரில் ஓட்டுக் கேட்கும் போது, அனைவரையும் மத ரீதியாக பிரிக்க முயற்சி செய்கிறார்.

    பிரதமர் மோடி எப்போ தும் ராமரை பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார். இதற்கு முன்பு அவர் ராமரை பற்றி அதிகம் பேசியதில்லை. தேர்தல் என்றதும் ராமரை கையில் எடுத்துள்ளார்.

    ராமரை பிரதமர் மோடி அருகில் இருந்து பார்த்தது போலவே பேசுகிறார். ஓட்டுக்காக அவர் எந்த பொய்யையும் சொல்வார். கடந்த தேர்தலின் போது புல்வாமா தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப் பட்ட விவகாரத்திலும் நிறைய சதி உள்ளது.

    வெடிகுண்டுகளுடன் அந்த பகுதியில் கார், 3 வாரங்களாக சுற்றிக்கொண்டே இருந்தது. குறிப்பிட்ட பகுதிக்கு வந்ததும் அப்பாவி மக்களை கொல்லும் வகையில் தாக்குதல் நடத்தப்பட்டது.

    பிரதமர் மோடி இந்த தாக்குதலுக்கு வெளி யாட்கள் தான் காரணம் என்றார். பிறகு பாகிஸ்தா னில் துல்லிய தாக்குதல் நடத்தியதாக கூறினார். இந்த பொய்யை சொல்லியே மோடி கடந்த முறை தேர்தலில் வெற்றி பெற்றார்.

    இப்போது மத ரீதியாக வெறுப்புணர்வை தூண்டி பேசி வருகிறார். காஷ்மீரில் 370-வது சட்டப் பிரிவு நீக்கப்பட்டதை ஏற்க இயலாது. இதற்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.

    தற்போது இருப்பது காந்தியின் இந்தியாவில் அல்ல. மோடியின் இந்தியா. மோடி இந்தியாவில் முஸ்லிம்கள், இந்துக்கள் தனித்தனியாக இருக்க வேண்டும் என்கிறார்கள். அதை நாங்கள் ஏற்கமாட்டோம்.

    இவ்வாறு பரூக் அப்துல்லா பேசினார்.

    • அரசியல் ஆதாயத்திற்காக பா.ஜ.க ராமர் பெயரை பயன்படுத்துகிறது.
    • கிழக்கிந்திய கம்பெனி போல பா.ஜ.க. செயல்படுகிறது.

    தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

    செவெல்லா தொகுதியில் பிரசாரத்தில் அவர் பேசியதாவது:-

    பா.ஜ.க.வினரின் பார்வையில் கடவுள் ஓட்டுக்காகவும் ராமர் இருக்கைக்காகவும் நிற்கிறார். அரசியல் ஆதாயத்திற்காக பா.ஜ.க ராமர் பெயரை பயன்படுத்துகிறது.

    பா.ஜ.க. தலைவர்கள் போலியான இந்துக்கள். ஆனால் எங்களுக்கு ராமர் எப்போதும் ராமர் தான். அயோத்தி கோவிலில் சிலை பிரதிஷ்டை முன்பு ராமரை அவமதித்து புனித அரிசி விநியோகம் செய்து பா.ஜ.க. தலைவர்கள் ஏமாற்றினர். ரேசன் கடைகளில் சேகரிக்கப்படும் அரிசியில் மஞ்சள் தூள் கலந்து அதனை புனித அரிசி என ஏமாற்றி வினியோகம் செய்தனர். அரசியல் சட்டத்தை மாற்றவும் இட ஒதுக்கீடுகளை ரத்து செய்யவும் பா.ஜ.க. சதி செய்கிறது.

    கிழக்கிந்திய கம்பெனி போல பா.ஜ.க. செயல்படுகிறது. அதன் தலைவர்கள் நாட்டையும் மக்களையும் அம்பானி அதானிகளிடம் அடகு வைக்க விரும்புகிறார்கள்.

    பா.ஜ.க. என்பது பிரிட்டிஷ் ஜனதா கட்சி.யாரை கேள்வி கேட்டாலும் கைது செய்து விடுவோம் என மிரட்டுகிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இந்துக்களின் வழிபாட்டு முறைகளை பின்பற்றி வரும் 'சிந்திஸ்' எனும் சமூகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் சென்னையில் வசித்து வருகிறார்கள்.
    • உணவுப்பொருட்களை 25 வயது முதல் 86 வயதான தன்னார்வலர்கள் கொண்ட குழு பரிமாறுகிறது.

    சென்னை:

    இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பு மேற்கொள்வது வழக்கம். இதையொட்டி அனைத்து பள்ளிவாசல்களிலும் நோன்பு திறக்கும் நேரமான மாலை நேரத்தில் நோன்பு கஞ்சி வழங்கப்படும்.

    சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பெரிய பள்ளிவாசலில் நடைபெறும் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.

    இங்கு நோன்பு கஞ்சியுடன், வெஜிடபிள் பிரிஞ்சி சாதம், வாழைப்பழம், திராட்டைப்பழம், குளிர்ந்த ரோஸ்மில்க், தண்ணீர் ஆகியவையும் சேர்த்து வழங்கப்படுகிறது. நோன்பு கஞ்சியை பொறுத்தமட்டில் பள்ளிவாசலில் இருந்து வழங்கப்படுகிறது.

    இதை தவிர்த்து நோன்பு திறப்புக்கான மற்ற அனைத்து உணவு பொருட்களையும் கடந்த 36 ஆண்டுகளாக இந்துக்கள் வழங்கி வருகிறார்கள்.

    இந்துக்களின் வழிபாட்டு முறைகளை பின்பற்றி வரும் 'சிந்திஸ்' எனும் சமூகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் சென்னையில் வசித்து வருகிறார்கள். அகதிகளாக சென்னைக்கு வந்த இச்சமூகத்தின் மூதாதையர்கள் 'கடவுளுக்கு சேவை செய்வோம்... சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டு சக மனிதர்களுக்கு சேவை செய்வோம்' என்ற குறிக்கோளை அடிப்படையாக கொண்டு சென்னை மயிலாப்பூரில் சுபிதர் அறக்கட்டளை என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை தொடங்கி உள்ளனர்.

    இவர்கள் வகுத்துள்ள குறிக்கோளுக்கு எடுத்துக்காட்டாக தங்களது அறக்கட்டளை வளாகத்தில் இந்து சாமிகள் மட்டுமல்லாமல் ஏசு கிறிஸ்து, மாதா, அந்தோணியார் சொரூபங்களையும் வைத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் முஸ்லிம்கள் வழிபாடு செய்வதற்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.

    சுபிதர் அறக்கட்டளை மூலம் தான் 36 ஆண்டுகளாக திருவல்லிக்கேணி பெரிய பள்ளிவாசலில் இவர்கள் நோன்பு திறப்புக்கான உணவுகளை வழங்கி வருகிறார்கள்.

    இவர்களது மயிலாப்பூர் அறக்கட்டளையில் தயாராகும் நோன்பு திறப்புக்கான உணவு பொருட்கள் வாகனத்தில் ஏற்றப்பட்டு மாலை 5.30 மணிக்கு பெரிய பள்ளிவாசலுக்கு கொண்டுவரப்படுகிறது.

    இந்த உணவுப்பொருட்களை 25 வயது முதல் 86 வயதான தன்னார்வலர்கள் கொண்ட குழு பரிமாறுகிறது.

    நோன்பு திறப்பு நேரம் தொடங்கியதும் அல்லாவை வணங்கி நோன்பு திறப்புக்கான உணவு பொருட்களை அருந்துகிறார்கள். ஒருமைப்பாட்டுக்கு எடுத்துக்காட்டான இந்த சேவை ஓசையில்லாமல் நடந்து வருகிறது.

    மதத்துக்கு அப்பாற்பட்டு இந்த சேவையில் ஈடுபட்டு வரும் சுபிதர் அறக்கட்டளையைச் சேர்ந்த ராம்தேவ் நானி கூறும்போது, 'இந்த சேவையில் 36 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளோம். எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல் உள்ளார்ந்த அன்போடு இந்த பணியை அனைவரும் செய்து வருகிறோம். இது, எங்களுக்கு மிகுந்த மகிழ்வை தருகிறது. முஸ்லிம்கள் அணியும் குல்லாவை அணிந்து கொண்டு இந்த சேவையில் ஈடுபடுகிறோம்' என்றார்.

    36 ஆண்டுகளாக இந்த பணியில் ஈடுபட்டு வரும் 86 வயதான நாராயண் என்பவர் கூறும்போது, இந்த சேவை தொடங்கப்பட்ட நாளில் இருந்து தற்போது வரை ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் தவறாமல் இந்த சேவையை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

    • 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு இஸ்லாமியர்கள் சீர்வரிசை வழங்கினர்
    • நாட்டில் உள்ள அனைவரும் சகோதரத்துடன் தொப்புள் கொடி உறவாய் வாழ வேண்டும் என இரு தரப்பினரும் கேட்டுக் கொண்டனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாகலூரில் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு இஸ்லாமியர்கள் சீர்வரிசை வழங்கினர். நாட்டில் அனைவரும் சகோதரத்துடன் வாழ வேண்டுமென இந்துக்களும் இஸ்லாமியர்களும் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

    இந்த பழமையான கோயிலை சுமார் 7 கோடி ரூபாய் செலவில் புரணமைக்கும் பணிகளில் கோயில் நிர்வாகத்தினர் ஈடுபட்டு வந்தனர். அதன்படி கோயில் கட்டுமான பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் கடந்த 17-ம் தேதி முதல் வரும் 19-ம் தேதி வரை கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஸ்ரீகோட்டை மாரியம்மன் கோயிலில் இன்று நடைபெற்ற கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாகலூர் பகுதியில் வாழும் இஸ்லாமியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தாய் வீட்டு சீதனமாக சீர்வரிசை பொருள்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

    இதில், ஒரு லட்சம் ரூபாய் பணம், பட்டுச்சேலை, பழங்கள், இனிப்புகள், மலர் மாலைகள் உள்ளிட்ட பொருள்களை தாம்பூலத் தட்டில் எடுத்து வந்த இஸ்லாமியர்கள் அதனை கோயில் நிர்வாகத்தினரிடம் வழங்கினர்.

    இதைத் தொடர்ந்து இஸ்லாமியர்களும், இந்துக்களும் ஒருவருக்கொருவர் இனிப்புகளை ஊட்டி மகிழ்ந்தனர். பாகலூர் பகுதியில் இஸ்லாமியர்களும் இந்துக்களும் ஒற்றுமையாக இருப்பதை போல நாட்டில் உள்ள அனைவரும் சகோதரத்துடன் தொப்புள் கொடி உறவாய் வாழ வேண்டும் என இரு தரப்பினரும் கேட்டுக் கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியாவை பொறுத்தவரைக்கும், இங்குள்ள மதம், கலாசாரம் அனைத்து மதத்திற்கும், நம்பிக்கைக்கும் மரியாதை அளிக்கிறது
    • இது இந்துக்களின் நாடு. இதனால் மற்ற மதத்தினர் புறந்தள்ளப்படுகிறார்கள் என்று அர்த்தம் அல்ல

    நாக்பூரில் ஒரு பள்ளியில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் 350-வது முடிசூட்டு விழா தொடர்பான நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார்.

    அப்போது மோகன் பகவத் பேசியதாவது:-

    இந்தியாவை பொறுத்தவரைக்கும் இங்குள்ள மதம், கலாசாரம் அனைத்து மதங்களுக்கும், நம்பிக்கைக்கும் மரியாதை அளிக்கிறது. அந்த மதம் இந்து. இது இந்துக்களின் நாடு. இதனால் மற்ற மதத்தினர் புறந்தள்ளப்படுகிறார்கள் என்று அர்த்தம் அல்ல. ஒருமுறை நீங்கள் இந்து என்று சொன்னவுடன், முஸ்லிம்கள் பாதுகாக்கப்பட்டார்கள் என்று கூற வேண்டிய அவசியம் இல்லை. இந்துக்கள் மட்டும் இதை செய்கிறார்கள். இந்தியா மட்டுமே இதைச் செய்கிறது. மற்றவர்கள் இதை செய்யவில்லை.

    எங்கு பார்த்தாலும் சண்டை நடைபெற்று வருகிறது. உக்ரைன் போர், ஹமாஸ்- இஸ்ரேல் போர் குறித்து நீங்கள் கேள்விபட்டு இருப்பீர்கள். இதுபோன்ற பிரச்சினை காரணமாக இந்தியாவில் ஒருபோதும் சண்டை நடைபெற்றதில்லை. மன்னர் சிவாஜி காலத்தில் நடந்த படையெடுப்பு இந்த வகையில்தான். ஆனால் இந்த பிரச்சினையில் நாங்கள் யாருடனும் சண்டை போட்டதில்லை. அதனால்தான் நாங்கள் இந்துக்கள்.

    இவ்வாறு மோகன் பகவத் குறிப்பிட்டார்.

    • கருப்பர் கோவிலுக்கு இஸ்லாமியர்கள் சீர்வரிசை எடுத்து சென்றனர்.
    • பள்ளிவாசல் திறப்பு விழாவில் இந்துக்கள் பங்கேற்றனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கைமாவட்டம் சிங்கம்புணரி அருகே கரிசல்பட்டி கிராமம் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது. கரிசல்பட்டியில் மதநல்லிணக்க சந்தனக்கூடு விழா, மற்றும் கந்தூரி விழாவில் இந்துக்கள் கலந்து கொண்டு சிறப்பிப்பதும் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

    அதனடிப்படையில் கரிசல்பட்டியில் வஞ்சினி கருப்பர் கோவில் கும்பாபி ஷேகம் நடந்து முடிந்த நிலையில் வருடாபிஷேக சிறப்பு பூஜையும் வஞ்சினி கருப்பர் கோவில் ஆவணி திருவிழாவை முன்னிட்டு அன்னதானமும் நடந்தது.

    வஞ்சினி கருப்பர் கோவில் ஆவணி திருவிழா அன்னதானத்தை முன்னிட்டு கரிசல்பட்டி முஸ்லிம் ஜமாத்தார்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து கிராம மக்கள் அழைத்தனர்.

    இதனை ஏற்றுக்கொண்ட ஜமாத்தார்கள் கோவிலுக்கு தேங்காய், பழம், பட்டு உள்ளிட்ட இந்துக்களின் வழிபாட்டு சீர்வரிசை எடுத்து வந்து மதநல்லிணக்க திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பின்னர் கலந்து கொண்ட ஜமாத்தார்களுக்கு ஊர் மரியாதை செய்யப்பட்டது.

    இந்நிகழ்வு இந்த பகுதி பாரம்பரியத்தையும் சகோதரத்துவத்தை உலகிற்கு எடுத்துச் சொல்லும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.இதேபோல் சிங்கம்புணரி அருகே நாகமங்கலத்தில் தாருல் ஹைராத் மதரஸத்துன் நிஸ்வான் பள்ளிவாசல் திறப்பு விழா நடந்தது.

    இதில் பங்கேற்ற இந்துக்கள் மந்தையம்மன் கோவிலிலில் இருந்து பள்ளிவாசலுக்கு இனிப்புகள், பழங்களுடன் ஊர்வலமாக சீர் வரிசை கொண்டு வந்தனர்.

    புதிய பள்ளிவாசல் திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் பெரியகருப்பன், மாவட்ட சேர்மன் பொன்.மணிபாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் 2 ஆயிரம் பேருக்கு அசைவ விருந்து வழங்கப்பட்டது.

    • முன்னோர்களுக்கு திதி கொடுப்பது, நேர்த்திக்கடன்களை செலுத்துவது குடும்பத்தின் வளர்ச்சிக்கு வித்திடும் என்பது ஐதீகம்.
    • ஆடி அமாவாசையான இன்று நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நீர்நிலைகளில் அதிகாலை முதலே மக்கள் கூட்டம் குவிந்த வண்ணம் இருந்தது.

    நெல்லை:

    ஆடி அமாவாசை நாளில் புண்ணிய தலங்களுக்கு சென்று நீர் நிலைகளில் நீராடி விட்டு தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது, நேர்த்திக்கடன்களை செலுத்துவது குடும்பத்தின் வளர்ச்சிக்கு வித்திடும் என்பது ஐதீகம்.

    நெல்லை

    இதனால் ஆடி அமாவாசை நாளில் அதிகாலையிலேயே பொதுமக்கள் நீர்நிலைகளில் சென்று தர்ப்பணம் செய்வார்கள். காசி நதிக்கு ஒப்பாக கருதப்படும் நெல்லை தாமிரபரணி நதியில் அமாவாசை நாளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் வந்திருந்து தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்துவது வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இந்த ஆண்டும் ஆடி அமாவாசையான இன்று நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நீர்நிலைகளில் இன்று அதிகாலை முதலே மக்கள் கூட்டம் குவிந்த வண்ணம் இருந்தது. நெல்லை மாவட்டம் பாபநாசம் பாபநாசநாதர் சுவாமி கோவில் முன்பு உள்ள படித்துறையில் இன்று அதிகாலை முதலே பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக குவிந்தனர்.

    தர்ப்பணம்

    அவர்கள் படித்துறையில் அமர்ந்து வாழை இலையில் அரிசி மாவால் பிண்டம் பிடித்து, வாழைப்பழம், வெற்றிலை, ஊதுபத்தி ஆகியவற்றை படைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் அந்த பிண்டத்தை தாமிரபரணி ஆற்றில் கரைத்தனர். தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் புனித நீராடினர்.

    இதற்காக குடும்பத்தினருடன் கார்கள், வேன்களில் வந்து பெரும்பாலானோர் வந்திருந்தனர். ஏற்கனவே காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா நடைபெற்றதால் அங்கும் பஸ் போக்குவரத்து இருந்ததால் பாபநாசநாதர் சுவாமி கோவில் முன்பு வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    அதனை அங்கு காவல் பணியில் இருந்த போலீசார் சரி செய்தனர். இதேபோல் அம்பை, கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி உள்ளிட்ட இடங்களில் தாமிரபரணி நதிக்கரையில் ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்தனர்.

    போலீஸ் பாதுகாப்பு

    நெல்லை மாநகர பகுதியில் டவுன் குறுக்குத்துறை, கொக்கி ரகுளம், வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோவில் படித்துறை, குட்டத்துறை முருகன் கோவில் படித்துறை, அருகன்குளம் ஜடாயு தீர்த்தம் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் தாமிரபரணி நதியில் நீராடி, பின்னர் தர்ப்பணம் கொடுத்து சென்றனர்.

    இதனால் மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் வசதிக்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அதேநேரத்தில் படித்துறை பகுதிகளில் மாநகர போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தீயணைப்பு வீரர்களும் முன்எச்சரிக்கையாக பணியில் ஈடுபட்டிருந்தனர். மாவட்டத்தில் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ள கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் குடும்பத்தினருடன் வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    தென்காசி

    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இன்று அதிகாலை முதலே அருவிக்கரைகளில் பொதுமக்கள் குவிந்தனர். மெயின் அருவியில் மிகவும் குறைந்த அளவே பாறையை ஒட்டியபடி தண்ணீர் விழுந்தது. ஆனாலும் குற்றாலம் அருவி கரையை சுற்றிலும் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. அவர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக நீண்ட வரிசையில் நின்று புனித நீராடினர்.

    தூத்துக்குடி

    தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் கடற்கரையில் இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் கடலில் புனித நீராடி, வரிசையாக அமர்ந்திருந்த அர்ச்சகர்களிடம் முன்னோர்கள் பெயர் மற்றும் நட்சத்திரம் போன்ற விவரங்களை கூறி எள்ளும் தண்ணீரும் வைத்து தர்ப்பணம் செய்தனர். தூத்துக்குடி தெர்மல் நகர் புதிய துறைமுகம் பகுதியில் உள்ள கடற்கரையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.


    வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோவில் ஆற்றில் ஆடி அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திரண்ட பொதுமக்கள்.

    வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோவில் ஆற்றில் ஆடி அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திரண்ட பொதுமக்கள்.


     


    • கோவிலில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டக படிதாரர்கள் சார்பில் திருவிழா நடைபெற்றது.
    • விரதமிருந்த பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

    சிவகிரி:

    சிவகிரி அருகே விஸ்வநாதபேரி திரவுபதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் ஆடிமாதம் பூக்குழி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டக படிதாரர்கள் சார்பில் திருவிழா நடைபெற்றது. திரவுபதி அம்மன் திருக்கல்யாண அலங்காரம், கனி பறித்தல், அர்ச்சுனன் தபசு, பூப்பறித்தல், அரவான் களப்பொலி, துச்சாதனன் பலி வாங்குதல் ஆகிய வடிவங்களில் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. 9-ம் திருநாளான நேற்று சேனைத்தலைவர் சமுதாயத்தினர் சார்பில் பூக்குழி திருவிழா நடைபெற்றது.

    காலையில் திரவுபதி அம்மன் உட்பட அனைத்து தெய்வங்களுக்கும் அபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்ட பூக்குழி திடலில் வேதபராயண முறைப்படி அக்னி வளர்க்கப்பட்டது.

    தொடர்ந்து பகலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை 6 மணிக்கு திரவுபதி அம்மன், அர்ச்சுனன், கிருஷ்ணன் சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர்.

    பின்னர் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மாலை 6.30 மணிக்கு பூக்குழி திடலை அடைந்த உடன் பூசாரி மணிகண்டன் பூக்குழி இறங்கி தொடங்கி வைத்தார். தொடர்ந்து விரதமிருந்த பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

    இதில் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள், பக்தர்கள், முக்கிய பிரமுகர்கள், விழா கமிட்டியினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மொகரம் பண்டிகையை தங்கள் இல்ல விழாவாக இந்துக்கள் கொண்டாடி சமூக நல்லிணக்கத்தை போற்றி வருகின்றனர்.
    • இஸ்லாமியர்களின் பஞ்சா எனப்படும் கரகத்தை கிராமத்தில் உள்ள இந்துக்களின் வீடுகளுக்கு தாரை தப்பட்டையுடன் கொண்டு சென்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அருகே உள்ளது காசவளநாடு புதூர் கிராமம். இந்த கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் பெரும்பாலான மக்கள் இந்துக்கள் ஆவர்.

    இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்களின் பண்டிகையான மொகரம் பண்டிகையை விமர்சையாகக் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

    இந்த கிராமத்தில் சாதி மத பேதம் இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். இதற்காக ஆண்டுதோறும் மொகரம் பண்டிகையை தங்கள் இல்ல விழாவாக இந்துக்கள் கொண்டாடி சமூக நல்லிணக்கத்தை போற்றி வருகின்றனர்.

    அதன்படி இன்று இஸ்லாமியர்களால் மொகரம் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மற்ற கிராமத்தைக் காட்டிலும் காசவளநாடு கிராம இந்து மக்கள் வழக்கம் போல் இந்த ஆண்டும் மொகரம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். மொகரம் பண்டிகை கொண்டாடுவதற்கு 10 நாட்களுக்கு முன்பாகவே இந்துக்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற விரதமிருந்து பயபக்தியோடு பண்டிகைக்கு தயாராகி வந்தனர்.

    அதன்படி இன்று இஸ்லாமியர்களின் பஞ்சா எனப்படும் கரகத்தை கிராமத்தில் உள்ள இந்துக்களின் வீடுகளுக்கு தாரை தப்பட்டையுடன் கொண்டு சென்றனர். அப்போது ஒவ்வொரு வீடுகளிலும் உள்ள மக்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற அந்த கரகத்திற்கு தண்ணீர் ஊற்றி எலுமிச்சை மாலை மற்றும் பட்டுத் துண்டை சாத்தி வேண்டிக்கொண்டனர். பின்னர் அங்குள்ள அல்லா கோவிலுக்கு கொண்டு வந்து பாத்தியா ஓதி தங்களது உறவினர்கள், பொதுமக்களுக்கு வழங்கினர்.

    இதையடுத்து அந்த பஞ்சா கரகம் அங்குள்ள பூக்குழியில் இறங்கியவுடன் அல்லா சாமியை சுமந்து வந்தவர்கள் முதலில் தீ மிதித்தனர். பின்னர் பயபக்தியுடன் மற்ற பொதுமக்கள் தீ மிதித்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் திருநீறு, எலுமிச்சை பழம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதனால் இன்று அந்த கிராமமே விழாக்கோலம் பூண்டது.

    இதுகுறித்து காசவளநாடு புதூரைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், இஸ்லாமியர்களின் பண்டிகையான மொகரம் பண்டிகையை இந்துக்கள் அதிகம் உள்ள எங்களது ஊரில் எங்களது முன்னோர்கள் வழிகாட்டுதலின்படி தொடர்ந்து பாரம்பரியமாக 300 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் கொண்டாடி வருகிறோம் என்றனர்.

    ×