search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மல்லிகார்ஜுன கார்கே"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒவ்வொரு சிலையும் திட்டமிட்டு குறிப்பிட்ட காரணத்துக்காகவே ஏற்கனவே இருந்த இடங்களில் வைக்கப்பட்டிருந்தன.
    • பாராளுமன்றத்தில் அம்பேதகர் சிலையை நிறுவுவதற்கான போராட்டத்தில் நானும் பெருமையோடு கலந்துகொண்டேன்.

    பழைய பாராளுமன்றத்தில் விரவி இருந்த தலைவர்களின் சிலைகள் அவ்விடங்களிலிருந்து அகற்றப்பட்டு புதிய பாராளுன்றத்தின் பின்புறத்தில் 'பிரேர்னா' ஸ்தல் என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவில் நிறுவப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி, அம்பேத்கர், சத்திரபதி சிவாஜி உள்ளிட்ட 50 பேரின் சிலைகள் இதில் அடங்கும்.

     

     

    பிரேர்னா ஸ்தல் பூங்காவை நேற்று {ஜூன் 16) துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் திறந்து வைத்தார். தலைவர்களின் சிலைகளை இடம் மாற்றும் முடிவுக்கு தொடக்கத்திலிருந்தே காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது இடமாற்றத்துக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், யாரிடமும் கருத்து கேட்காமல் எந்த ஒரு விவாதமும் இன்றி பாராளுமன்ற விதிகளுக்குப் புறம்பாக தலைவர்களின் சிலைகள் இடமாற்றும் செய்யப்பட்டுள்ளன. தலைவர்களின் சிலைகளை தன்னிச்சையாக இஷ்டத்துக்கு இப்படி இடம்மாற்றுவது ஜனநாயகத்துக்கு விரோதமானது. சுமார் 50 சிலைகள் இடம்மாற்றப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிலையும் திட்டமிட்டு குறிப்பிட்ட காரணத்துக்காகவே ஏற்கனவே இருந்த இடங்களில் வைக்கப்பட்டிருந்தன.

    முக்கியமாக மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகிய தலைவர்களின் சிலைகள் பாராளுமன்றத்துக்கு தனித்துவமான அடையாளத்தை வழங்கிவந்தன. பழைய பாராளுமன்ற கட்டிடத்தின் முன்னாள் இருந்த மகாத்மா காந்தியின் தியான சிலை அருகே ஜனநாயக முறையில் போராட்டங்களை நடத்தும்போது உத்வேகம் அளிப்பதாய் இருந்தது.

     

    அம்பேத்கர் சிலை இந்திய அரசியலமைப்பின் சக்தியை உணர்த்துவதாக இருந்தது. 1960 களில் எனது கல்லூரிப் பருவத்தில் பாராளுமன்றத்தில் அம்பேத்கர் சிலையை நிறுவுவதற்கான போராட்டத்தில் நானும் பெருமையோடு கலந்துகொண்டேன். தற்போது இது அனைத்தையும் சீர்குலைக்கும் வகையில் அவை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன என்று விமர்சித்துள்ளார்.

    • பா.ஜ.கவின் என்.டி.ஏ அரசு வெகு நாட்கள் நீடிக்காது என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளன.
    • நாட்டு மக்களுக்கு நன்மையானதாக இருந்தால் சரிதான். நாட்டின் வளர்ச்சிக்காக நாம் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும்

    பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. கடந்த ஜூன் 9 ஆம் தேதி மோடி தொடர்ந்து 3 வது முறையாக பிரதமராக பதவியேற்றார். அவருடன் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 72 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

    இந்த தேர்தலில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையை இழந்து நிதிஷ் குமாரின் ராஷ்டிரிய ஜனதா தளம் [ 12 சீட்] சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் [16 சீட்] ஆகிய கூட்டணி கட்சிகளின் தயவில் ஆட்சி செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

     

    காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 235 இடங்களை கைப்பற்றி பாராளுமன்றத்தில் தங்களின் பிரதிநிதித்துவத்தை வலுவாக நிறுவியுள்ளது. நிதிஷ் குமாரும் சந்திரபாபு நாயுடுவும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவளித்திருந்தால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்னும் சூழலில் பா.ஜ.கவின் என்.டி.ஏ அரசு வெகு நாட்கள் நீடிக்காது என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளன.

    இன்று பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, என்.டி.ஏ கூட்டணி தலைமையிலான அரசு தவறுதலாக உருவாகியுள்ளது. .மோடியிடம் அரசைத் தக்கவைக்க எந்த உறுதியும் இல்லை. இது ஒரு மைனாரிட்டி அரசு. எனவே இந்த அரசு எந்த நேரமும் சரிய வாய்ப்புள்ளது. ஆனால் இந்த அரசு தொடரவே நாங்கள் விரும்புகிறோம். அது நாட்டு மக்களுக்கு நன்மையானதாக இருந்தால் சரிதான். நாட்டின் வளர்ச்சிக்காக நாம் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    கடந்த காலங்களில் எதிர்க்கட்சிகள் அவையில் இல்லாமலேயே பல முக்கிய சட்டங்களை பெரும்பான்மை வைத்திருந்ததால் பா.ஜ.க தன்னிச்சையாக நிறைவேற்றியது. இனி எந்த சட்டமாக இருந்தாலும் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் கருத்தையும் கேட்க வேண்டிய நிர்பந்தம் பா.ஜ.கவுக்கு ஏற்பட்டுள்ளது என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். 

    • நடிகர் சிரஞ்சீவி தனது எக்ஸ் பக்கத்தில், மேரு மலையே தலைவணங்கும் அளவுக்கு வாழ்ந்த ராமோஜி ராவின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.
    • காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, இயக்குனர் ராம் கோபால் வர்மா, இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

    ராமோஜி ராவ் ஃபிலிம்சிட்டி, ராமோஜி குழும நிறுவனங்களின் தலைவரும், ஈநாடு பத்திரிகை நிறுவனருமான ராமேஜி ராவ் (87) உடல்நகுறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3.45 மணிக்கு காலமானார்.

    ராமோஜி பிலிம் சிட்டியை நிறுவியதன் மூலம் ஐதராபாத் மற்றும் திரைப்படத் துறையின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர் ராமோஜி ராவ். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில், 'ராமோஜி ராவ் இந்தியாவின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டவர். அவருடன் பல முறை உரையாடுவதற்கு எனக்கு கிடைத்த வாய்ப்பை அதிர்ஷ்டமாக நினைக்கிறேன்.அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அபிமானிகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி' என்று பதிவிட்டுள்ளார். மேலும் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தனது எக்ஸ் பக்கத்தில், மேரு மலையே தலைவணங்கும் அளவுக்கு வாழ்ந்த ராமோஜி ராவின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

    ஜுனியர் என்.டி.ஆர் தனது எக்ஸ் பக்கத்தில், இந்திய சினிமாவிலும் பத்திரிக்கைத் துறையிலும் தீர்க்கதரிசியாக விளங்கிய ராமோஜி ராவின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். எனது முதல் படமான நின்னு சூடலனி உருவாக காரணமாக இருந்த அவரை என்றென்றைக்கும் நினைவில் வைத்திருப்பேன். அவரது ஆன்மா சாந்தியடைவதாக. அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்வதாக பதிவிட்டுள்ளார்.

    மேலும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, இயக்குனர் ராம் கோபால் வர்மா, இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். 

    • மோடி மறைமுகமாக பிரச்சாரம் செய்ய முயற்சிக்கிறார் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
    • " அரசியல் ஆதாயங்களுக்காக ஒரு மதத்தினருக்கு எதிராக மற்றோரு மதத்தினரிடம் வெறுப்பைப் பரப்புவது தவறானது"

    பிரதமர் மோடியின் கன்னியாகுமரி தியானம் தேர்தலுக்காக நடத்தப்படும் நாடகம் என்று கார்கே தெரிவித்துள்ளார். 3 நாள் பயணமாக தமிழகம் வரும் பிரதமர் மோடி விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்து வருகிறார்.

    நாளை (மே 31) மக்களவைத் தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் மோடி மறைமுகமாக பிரச்சாரம் செய்ய முயற்சிக்கிறார் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. தியானம் செய்வதாக இருந்தால் தனிப்பட்ட முறையில் இல்லாமல் கேமராவை கூட்டிச்சென்று வீடியோ எடுப்பது அப்பட்டமான தேர்தல் நடத்தை விதிமீறல் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள கார்கே, மதத்தையும் அரசியலையும் ஒன்று கலக்கக் கூடாது. இரண்டும் தனித்தனியாக இருக்க வேண்டும். அரசியல் ஆதாயங்களுக்காக ஒரு மதத்தினருக்கு எதிராக மற்றோரு மதத்தினரிடம் வெறுப்பைப் பரப்புவது தவறானது.

    ஆன்மீக பயணம் என்று போர்வையில் கன்னியாகுமரிக்கு தியானம் செய்யப்போவதாக மோடி சென்றுள்ளது சுத்த நாடகமாகும். தேவையில்லாமல் போலீசாரை பயன்படுத்தி காசை விரயமாக்கும் செயலாகும். மோடியின் இந்த செயல் நாட்டுக்கு தீங்கையே விளைவிக்கும். உங்களுக்கு உன்மையில் கடவுள் மீது நம்பிக்கை இருந்தால் உங்களது வீட்டில் இருந்தபடியே தியானம் செய்யலாம் என்று தெரிவித்துள்ளார். 

     

    • நட்சத்திர பேச்சாளர்கள் தலைமையிலான பிரசாரத்தின் தரம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
    • இதனால் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் இதுவரை 5 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது. வரும் 25ம் தேதி ஆறாம் கட்ட வாக்குப்பதிவும், ஜூன் ஒன்றாம் தேதி 7வது கட்ட வாக்குப்பதிவும் நடைபெற உள்ளது.

    தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகள் தங்களின் பிரசாரத்தை தீவிரப்படுத்து வருகின்றன. நட்சத்திர பேச்சாளர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே, நட்சத்திர பேச்சாளர்கள் தலைமையிலான பிரசாரத்தின் தரம் வீழ்ச்சியடைந்ததை அடுத்து பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது.

    இந்நிலையில், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாவது:


    நட்சத்திர பேச்சாளர்களின் சொற்பொழிவை சரிசெய்வதற்கும், அக்கறையுடன் செயல்படுவதற்கும், ஒழுக்கத்தைப் பேணுவதற்கும் முறையான குறிப்புகளை வெளியிட வேண்டும் என அறுவுறுத்தியுள்ளது.

    மத்தியில் ஆளும் கட்சி என்ற முறையில் பா.ஜ.க. நாட்டின் சமூக கட்டமைப்பு தேர்தல் வழிமுறைகளுக்கு உட்பட்டு நடக்கும் என தேர்தல் ஆணையம் எதிர்பார்க்கிறது.

    இந்திய அரசியல் சாசனம் ரத்து செய்யப்பட்டு விடும், விற்பனை செய்யப்பட்டு விடும் என்பது போன்ற கருத்துகளை தெரிவிக்க வேண்டாம்.

    சமூகத்தை பிளவுபடுத்தும் வகையிலான கருத்துகளை தெரிவிக்கவேண்டாம் என பேச்சாளர்களுக்கு அறிவுறுத்துங்கள்.

    மதம், இனம் சார்ந்த பரப்புரைகளை இனி மேற்கொள்ள வேண்டாம். தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

    • நாட்டில் மக்களவைத் தேர்தல் நடந்து வரும் நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவுடன் கூட்டாக செய்தியாளர்களை சாதித்து கார்கே உரையாடினார்.

    நாட்டில் மக்களவைத் தேர்தல் நடந்து வரும் நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிப் பேசி வருவதால் அரசியல் களம் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது. இதில் பிரதமர் மோடி உடன்பட பல பாஜக தலைவர்கள் வெறுப்பு பேச்சில் ஈடுபடுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. தேர்தல் ஆணையம் இதுகுறித்து பாராமுகம் காட்டுவதாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மோடி பிரச்சாரங்களில் பேசி வருவது குறித்து விமர்சித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவுடன் கூட்டாக செய்தியாளர்களை சாதித்து கார்கே உரையாடினார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி, இந்து- முஸ்லிம், மட்டன்- சிக்கன் என பிரச்சாரத்தில் பேசுவதை விட்டுவிட்டு நாட்டில் உள்ள மக்கள் பிரச்சனயை பற்றி பேச வேண்டும்.

    அவரது பிரச்சாரத்தில், மட்டன், மாட்டிறைச்சி,சிக்கன், மீன், பெண்களின் தாலி உள்ளிட்ட வார்த்தைகளையே கேட்க முடிகிறது. அவர் மக்களிடம் இந்து- முஸ்லிம் விளையாட்டை விளையாடுவதை விட்டுவிட்டு நாட்டுக்கு பாஜக செய்த்வற்றைப் பற்றி பேச வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், நாட்டில் நடந்து முடித்த 4 கட்ட வாக்குப்பதிவைப் பார்க்கும்போது இந்தியா கூட்டணி வலிமையுடன் இருப்பதாக தெரிவித்தார். 

    • சந்திரசேகர ராவ் மறைமுகமாக பா.ஜ.க.வை ஆதரித்து வருகிறார்.
    • பிரதமர் மோடி தெலுங்கானா மக்களுக்காக எதையும் செய்யவில்லை.

    தெலுங்கானா மாநிலம் நக்ரேக்கல் பகுதியில் நடந்த பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம் செய்தார்.

    தெலுங்கானாவில் முன்னாள் முதல் மந்திரி சந்திரசேகர ராவ் மறைமுகமாக பா.ஜ.க.வை ஆதரித்து வருகிறார். இந்த தேர்தலுக்கு பிறகு அவருடைய கட்சி காணாமல் போய்விடும்.

    பிரதமர் மோடி தெலுங்கானா மக்களுக்காக எதையும் செய்யவில்லை. முந்தைய காங்கிரஸ் அரசில் உருவாக்கிய பொதுத் துறை நிறுவனங்களை மோடி பலவீனப்படுத்தினார். பா.ஜ.க.வின் கஜானாவை நிரப்புவதற்காக மக்களையும், நாட்டையும் கொள்ளையடித்தார்.

    மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. ஆகியோரின் அடிப்படை உரிமைகளை பறித்து அடிமைகளாக மாற்றுவார்கள். அரசியல் சட்டத்தை மாற்றி இட ஒதுக்கீட்டை அகற்றி உங்கள் அடிப்படை உரிமைகள் அனைத்தையும் பறிக்க நினைக்கிறார்கள்.

    மோடியை வெளியேற்றி நாட்டை காப்பாற்ற வேண்டிய நேரம் இது.

    தெலுங்கானா மக்கள் இந்த தேர்தலில் கவனமுடன் வாக்களிக்க வேண்டும். உங்களுடைய தேர்வு சர்வாதிகாரத்தில் இருந்து நாட்டை காப்பாற்றுவதாக இருக்க வேண்டும்.

    வேலையில்லா திண்டாட்டம் விலைவாசி உயர்வு கவலையை அளிக்கிறது. மக்களின் அடிப்படை உரிமைகள், அரசியலமைப்பு சட்டத்தை நாங்கள் முன்னின்று காப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மத நல்லிணக்கத்தில் நம்பிக்கையுள்ள இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதி.
    • ஒவ்வொரு கட்டத்திலும் காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்து முறியடித்து வருகிறது.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்கள் போல் இருக்கிறார்கள் என்று கூறியதாக ஒரு கருத்தை வைத்துக்கொண்டு காங்கிரஸ் கட்சியுடன் உள்ள உறவை முறிக்க தி.மு.க. தயாரா என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி சவால் விடுத்திருக்கிறார்.

    எதற்கு எதை முடிச்சு போடுவது என்று தெரியாமல் அரசியல் உள்நோக்கத்தோடு கருத்துகளை திரித்து பேசுவது மோடியின் கை வந்த கலையாக இருக்கிறது. அதை ஒவ்வொரு கட்டத்திலும் காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்து முறியடித்து வருகிறது.

    இந்நிலையில் அமெரிக் காவில் வாழ்கிற சாம்பிட் ரோடா ஏற்கனவே தெரிவித்த ஒரு கருத்துக்கு காங்கிரஸ் கட்சி மறுப்பை வெளியிட்டது. அதேபோல, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இக் கருத்தை காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை என மறுப்பு கூறியிருக்கிறார்.

    இதைத் தொடர்ந்து அகில இந்திய காங்கிரசின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவின் பொறுப்பிலிருந்து சாம்பிட்ரோடா விலகிக்கொண்டிருக்கிறார். இதன் மூலம் அவரது கருத்தை காங்கிரஸ் கட்சி முழுமை யாக நிராகரித்திருக்கிறது. இதற்கு பிறகும் இக்கருத்தின் அடிப்படையில் சவால் விடுவது அரசியல் நாகரீக மற்ற செயலாகும். இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

    அமெரிக்க குடியரசு தலைவராக பராக் ஒபாமா 2010-ல் இந்தியாவுக்கு வருகை புரிந்த போது, அன்றைய பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங்கை சந்தித்து இந்தியாவில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த முஸ்லீம்களுக்கு எதிராக வளர்ந்து வருகிற அச்சுறுத் தலையும், அதன்மூலம் இந்து தேசியவாதத்தை பா.ஜ.க. வளர்ப்பதையும் கவலையோடு பகிர்ந்து கொண்டதை இங்கு நினைவு கூறுவது அவசியமாகும்.

    அன்று பராக் ஒபாமா எதை கண்டு அச்சம் தெரிவித்தாரோ அத்தகைய அச்சத்தை 10 ஆண்டுகால மோடி ஆட்சியின் மூலம் நாடு முழுவதும் தீய பிரசாரம் பரப்பப்பட்டு வருகிறது. மக்களவை தேர்தலில் தோற்பது உறுதியாகியதை முற்றிலும் உணர்ந்து விட்ட மோடி, மக்களை பிளவு படுத்துவதற்கு இல்லாததை எல்லாம் இட்டுக் கட்டி அப வாதங்களை கூறி வருகிறார்.

    10 ஆண்டுகால ஆட்சியின் மூலம் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் மக்கள் விரோத ஆட்சியினால் ஏற்பட்ட பாதிப்புகளை மூடி மறைப்பதற்கு வகுப்புவாத, நச்சு கருத்துகளை பரப்பி மக்களை பிளவுபடுத்தும் மோடியின் முயற்சியை காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் களத்தில் நின்று போராடி மக்கள் மன்றத்தில் முறியடித்து வருகிறார்கள்.

    இவர்களது கடும் பரப்புரையினால் வகுப்புவாத மோடி ஆட்சி வீழ்த்தப்பட்டு, மத நல்லிணக்கத்தில் நம்பிக்கையுள்ள இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகியிருக்கிறது. இதன்மூலம் மக்களவை தேர்தலுக்கு பிறகு அனைத்து மக்களையும் உள்ளடக்கிய நல்லாட்சியை இந்தியா கூட்டணி அமைப்பதை நரேந்திர மோடி உள்ளிட்ட எவராலும் தடுக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மோடிக்கு எதிராக ஒரு லட்சம் கையெழுத்துடன் தேர்தல் ஆணையத்திடம் மனு தாக்கல் செய்ய காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது
    • ஒரு பிரதமர் எப்படி எல்லாவற்றிலும் பொய் சொல்லி இப்படி போலியான செய்திகளை பரப்புவார்?

    ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி பேசியது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    அவர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள ஒரு கருத்தை குறிப்பிட்டு பேசும்போது கூறியதாவது:-

    இது நகர்ப்புற நக்சல் மனநிலை. தாய்மார்கள், சகோதரிகள்... அவர்கள் உங்களுடைய மங்களசூத்ராவை (தாலி) கூட விட்டு வைக்கமாட்டார்கள். அவர்கள் அந்த நிலைக்கு கூட போவார்கள்...

    தாய்மார்கள், சகோதரிகள் வைத்துள்ள தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு, தகவல்கள் பெறப்பட்டு, பகிர்ந்து கொடுப்போம் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சொல்கிறது.

    அவர்கள் யாருக்கு பகிர்ந்து அளிப்பார்கள். முந்தைய மன்மோகன் சிங் அரசு, நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை எனத் தெரிவித்திருந்தது.

    முன்னதாக, அவர்களுடைய (காங்கிரஸ்) அரசு ஆட்சியில் இருந்தபோது, நாட்டிகள் சொத்துகளில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை எனக் கூறியது. இதன் அர்த்தம் யாருக்கு சொத்து பகிர்ந்தளிக்கப்படும்?. அதிக குழந்தைகளை வைத்திருப்பர்களுக்கிடையே பகிர்ந்து அளிக்கப்படும். இந்திய நாட்டுக்குள் ஊடுருவியர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். உங்களுடைய கடின உழைப்பால் சம்பாதித்த பணம் ஊடுருவியவர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா?

    இது உங்களுக்கு ஏற்கத்தக்கதா?. நீங்கள் கடுமையாக உழைத்து சம்பாதித்த உங்கள் சொத்தை பறிமுதல் செய்ய அரசுகளுக்கு உரிமை உள்ளதா? நம் தாய், சகோதரிகளுடன் இருக்கும் தங்கம் வெளியில் காட்டிக் கொள்வதற்காக அல்ல, அது அவர்களின் சுயமரியாதை சம்பந்தப்பட்டது.

    அவர்களின் மங்களசூத்திரத்தின் (தாலி) மதிப்பு தங்கத்திலோ அல்லது அதன் விலையிலோ இல்லை, வாழ்க்கையில் அவரின் கனவுகளுடன் தொடர்புடையது. அதையும் பறிப்பது பற்றி நீங்கள் பேசுகிறீர்களா?

    இவ்வாறு பிரதமர் மோடி பேசியிருந்தார்.

    இந்நிலையில், பிரதமர் மோடியின் இத்தகைய பேச்சிற்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையின் நகல்களை பிரதமருக்கு அனுப்பப்போவதாகவும், மோடிக்கு எதிராக ஒரு லட்சம் கையெழுத்துடன் தேர்தல் ஆணையத்திடம் மனு தாக்கல் செய்ய காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

    ஒரு பிரதமர் எப்படி எல்லாவற்றிலும் பொய் சொல்லி இப்படி போலியான செய்திகளை பரப்புவார்? இந்த நாட்டில் அதிகம் பொய் சொல்பவர் அவர்தான் என்பதை அவரது நேற்றைய பேச்சு உணர்த்துகிறது என்று அவர் தெரிவித்தார்.

    தேர்தல் ஆதாயத்திற்காக பிரதமர் மதவாத உணர்வுகளைத் தூண்டி இந்திய மக்களைப் பிளவுபடுத்த முயற்சிக்கிறார். நடந்து முடிந்த பாராளுமன்ற முதல் கட்ட தேர்தல் பாஜகவிற்கு சாதகமாக இல்லை என்பதை புரிந்து கொண்ட பிறகு பிரதமர் இதுபோன்ற கீழ்த்தரமான தந்திரங்களை கையாள்கிறார்" என்று அவர் குற்றம் சாட்டினார்.

    காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை நேரில் சந்தித்து விளக்குவதற்காக பிரதமர் மோடியிடம் நேரம் கேட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியுள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், "எங்களது தேர்தல் அறிக்கையின் நகலை அவருக்கு வழங்குவோம். எங்கள் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் வேட்பாளர்கள் அனைவரும் எங்களது தேர்தல் அறிக்கையின் நகலை அவருக்கு அனுப்பி வைப்பார்கள். எல்லாவற்றிலும் பொய் சொல்ல பிரதமருக்கு தேர்தல் கமிஷன் அனுமதி அளித்துள்ளதா? எல்லாவற்றிலும் தலையிடும் தேர்தல் ஆணையம் இந்த விஷயத்தில் ஏன் மவுனம் காக்கிறது" என்று தெரிவித்தார்.

    • டெல்லி தலைமை அலுவலகத்தில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.
    • பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சாடினார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு டெல்லி பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. பிரதமர் மோடி, பா.ஜ.க தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், அமித்ஷா உள்ளிட்டோர் முன்னிலையில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

    இந்நிலையில், பாஜக தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சாடியுள்ளார். இதுதொடர்பாக கார்கே கூறியதாவது:

    விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார். எம்.எஸ்.பி.யை உயர்த்தி சட்டப்பூர்வ உத்தரவாதம் தருவதாகச் சொல்லியிருந்தார் - இதுதான் உத்தரவாதமா?

    நாட்டு மக்கள் அனைவருக்கும் பயனளிக்கும் பெரிய பணி எதையும் அவர் தனது ஆட்சிக் காலத்தில் செய்யவில்லை.

    இளைஞர்கள் வேலை தேடுகிறார்கள். பணவீக்கம் அதிகரித்து வருகிறது. பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் பற்றி அவர் கவலைப்படவில்லை.

    10 ஆண்டுகளில் இந்த மனிதரால் ஏழைகளுக்கு எதுவும் செய்ய முடியவில்லை.

    அவரது தேர்தல் அறிக்கையை நம்புவது சரியல்ல. மக்களுக்கு வழங்குவதற்கு அவரிடம் எதுவும் இல்லை என்பதை இது நிரூபிக்கிறது என தெரிவித்தார்.

    • இந்திய பகுதிகளை ஆக்கிரமித்து சீனா அச்சுறுத்தி வரும் நிலையில், பிரதமர் மோடி கச்சத்தீவு கதையாடலில் தப்பித்துக்கொள்ள பார்க்கிறார்
    • சீனாவின் இந்த கேவலமான செயல்களை இந்திய மக்களாகிய நாங்கள் ஒன்றாகக் கண்டிக்கிறோம்

    அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சுமார் 30 இடங்களுக்கு சீனா பெயர் சூட்டி உள்ளது. கிழக்கு அருணாச்சலில் உள்ள பகுதியை தங்களது ஆளுகைக்கு உட்பட்ட "ஸங்னங்" பகுதி என பெயரிட்டு சீனா அழைக்கிறது.

    11 குடியிருப்பு மாவட்டங்கள், 12 மலைகள், 4 ஆறுகள், 1 ஏரி, 1 நிலப்பகுதி உள்ளிட்ட 30 இடங்களுக்கு சீனா புதிய பெயர் சூட்டியுள்ளது. ஏற்கனவே 2017, 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் அருணாச்சலில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சீனா புதிய பெயர்களை சூட்டி உள்ளது. தற்போது 4வது முறையாக அருணாச்சல பிரதேச பகுதிகளுக்கு, புதிய பெயர்களை சீனா சூட்டியுள்ளது.

    தற்போது 4வது முறையாக அருணாச்சல பிரதேச பகுதிகளுக்கு, புதிய பெயர்களை சீனா சூட்டியுள்ளது. இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பகுதிகளுக்கு சீனா புதிய பெயர்களை சூட்டி வருவதால் சர்ச்சை எழுந்துள்ளது.

    இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "இந்திய பகுதிகளை ஆக்கிரமித்து சீனா அச்சுறுத்தி வரும் நிலையில், பிரதமர் மோடி கச்சத்தீவு கதையாடலில் தப்பித்துக்கொள்ள பார்க்கிறார்.

    சீனப் பிரதமருடன் குறைந்தபட்சம் 19 சுற்று இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும், பிரதமர் மோடியால் சீனாவின் மீது எந்த ராஜதந்திர செல்வாக்கையும் பயன்படுத்தி இந்தியப் பகுதிகளுக்கு 'மறுபெயர்' செய்யும் இந்த அபத்தத்தை நிறுத்த முடியவில்லை.

    டோக்லாம் மற்றும் கால்வானுக்குப் பிறகு, லடாக்கில் 2000 சதுர கிலோமீட்டர் இந்தியப் பகுதிகளை சீன ஆக்கிரமிப்புக்குப் பிறகு, அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பல அத்துமீறல்கள் நடந்த பிறகு, பிரதமர் மோடி வசதியாக சீனா மீது எந்த தவறும் இல்லை என்றார்.

    "56 இன்ச்" என அழைக்கப்படும் மோடி சைனீஸ் பிளிங்கர்ஸ் அணிந்துள்ளார்!

    கல்வானில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்த பிறகு, சீனர்களுக்கு இலவச பாஸ் வழங்கிய பிரதமர் மோடியை எந்த திசை திருப்பினாலும் மாற்ற முடியாது!

    பல்வேறு நாடுகளின் பிரதேசங்களுக்கு உரிமை கோருவது மற்றும் பெயர் மாற்றம் செய்வதை சீனா தொடர்ச்சியாக செய்து வருகிறது.

    சீனாவின் இந்த கேவலமான செயல்களை இந்திய மக்களாகிய நாங்கள் ஒன்றாகக் கண்டிக்கிறோம்.

    மோடி அரசாங்கத்தால் செய்யக்கூடியது என்னவென்றால் குறைந்தபட்சம் சீனாவின் இந்த அபத்தமான செயல்கள் மற்றும் அறிக்கைகளை கடுமையாக கண்டிப்பதும்தான்" என்று பதிவிட்டுள்ளார். 

    • காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன
    • தேர்தல் ஆணையம், வருமானவரித்துறை, அமலாக்கத்துறை போன்றவை சுதந்திரமாக செயல்பட வேண்டும்

    காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. தேர்தல் நேரத்தில் முடக்கப்பட்டுள்ளது அந்த கட்சிக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

    அப்போது பேசிய சோனியா காந்தி, "ஒருபுறம், தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு பெரும் தொகை நன்கொடையாக வந்துள்ளது. மறுபுறம், காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. இதனால் கட்சிக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு, தேர்தல் செலவுகள் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த சவாலான சூழ்நிலையிலும் தேர்தல் பரப்புரையை திறம்பட செய்ய எங்களால் முடிந்தவற்றை செய்கிறோம்

    இது நமது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் ஆகும். ஜனநாயகத்தை முடக்கும் வகையில் பாஜக செயல்படுகிறது என்று அவர் பேசினார்.

    பின்னர் பேசிய கார்கே, "தேர்தல் ஆணையம், வருமானவரித்துறை, அமலாக்கத்துறை போன்றவை சுதந்திரமாக செயல்பட வேண்டும். நியாயமான, நேர்மையான முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேர்தல் களம் சமமாக இருக்க வேண்டும். கணக்கில் வராத கட்டுக் கட்டான பணம் பாஜகவுக்கு சென்றுள்ளது. ஒரே கட்சி எல்லாவற்றையும் கைக்குள் வைத்துக்கொள்ள முயற்சித்து செயல்படுகிறது.

    தேர்தல் பத்திரத்தின் மூலம், 55% நிதியை பாஜக பெற்றிருக்கிறது. காங்கிரஸ் கட்சி வெறும் 11% மட்டுமே பெற்றிருக்கிறது. இந்நிலையில் தான், எங்கள் வங்கி கணக்குகளையும் முடக்கி, அபாயகரமான விளையாட்டை பாஜக விளையாடியிருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

    ×