search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜாதகம்"

    • குருவே சகலத்துக்கும் ஆதாரமாகத் திகழ்பவர் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
    • கானகத்தில் பெரிதான யானையும் கடலில் பெரியதான திமிங்கிலமும் குருவின் ஆதிபத்தியம் பெற்றவை.

    வியாழன்-குருபகவான்

    குரு பார்க்க கோடி நன்மை, குருவருள் இருந்தால்தான் திருவருளைப் பெறமுடியும் என்பார்கள்.

    குருவே சகலத்துக்கும் ஆதாரமாகத் திகழ்பவர் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

    நம்மில் பலருக்கு குருபகவானுக்கும், தட்சிணாமூர்த்திக்கும் வித்தியாசம் தெரிவதில்லை.

    நவக்கிரக வரிசையில் வடக்கு பார்த்து அமர்ந்திருப்பவர் குரு பகவான். சிவ ஆலயத்தில் தெற்கு நோக்கி, சின்முத்திரை காட்டி அமர்ந்திருப்பவர் தட்சிணாமூர்த்தி.

    இருவருமே ஞானத்தை அருளும் கடவுள் என்றாலும் வித்தியாசத்தினை உணர்ந்து அவரவருக்கு உரிய மந்திரம் சொல்லி வழிபட பரிபூரண அருள் கிட்டும்.

    ''நவகிரகங்களிலேயே மிகவும் விரும்பப்படுபவராகவும் இயற்கைச் சுபராகவும் திகழ்பவர் குரு பகவான் (வியாழன்)

    அளவிலும் மற்ற கிரகங்களைவிட பெரிய கிரகமாகவும் முழுசுபராகவும் திகழ்பவர்.

    கானகத்தில் பெரிதான யானையும் கடலில் பெரியதான திமிங்கிலமும் குருவின் ஆதிபத்தியம் பெற்றவை.

    ஜோதிட சாஸ்திரத்தில் எந்த கிரகம்

    கெட்டுப்போயிருந்தாலும் குருவோ சுக்கிரனோ இவர்கள் இருவரில் ஒருவர் நன்றாக இருந்தாலும் ஜாதகர் சோடை போகாமல் நன்றாக இருப்பார்.

    குரு பலம் பெற்று இருந்தால் ஜாதகருக்கு குரு தசை நடக்கும்போது புகழடையச் செய்வார்.

    குரு பகவான் தனுசு, மீனம், மேஷம், விருச்சிகம், கடகம், சிம்மம் ஆகிய ஆறு லக்னக்காரர்களுக்கும் யோகமான பலன்களைத் தருவார்.

    குருவே தனக்காரகனாகவும் புத்திரக்காரகனாகவும் இருக்கிறார். சந்ததி விருத்திக்கும் இவரே காரணம்.

    வாழ்வதற்குத் தேவையான பண வரவுக்கும் இவரே பொறுப்பாகிறார்.

    மஞ்சள் நிறத்துக்கு அதிபதியாக இருப்பதால், குரு வலுத்திருப்பவர்கள் தங்கம் அதிகமுள்ளவர்களாகவும் செல்வந்தராகவும் இருப்பார்கள்.

    • கல்வி தரும் கடவுளாக புதன் பகவான் உள்ளார்.
    • புதனை வழிபடுவதால் நமது அகங்காரத்தினை அழித்துடு

    புதன் பகவான்!

    கல்வி தரும் கடவுளாக புதன் பகவான் உள்ளார்.

    புதன் பகவான் விரதம் இருந்தால் கல்வி, ஞானம், தனம் போன்றவை பெருகுவதோடு, புதன் பகவானுக்கு "சவும்யன்" என்ற பெயரும் உண்டு.

    புதனை வழிபடுவதால் நமது அகங்காரத்தினை அழித்துடுவார்.

    திருவெண்காடு திருத்தலம், நவக்கிரக திருத்தலங்களில் புதன் பகவானுக்கு உரிய திருத்தலம்.

    மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் செல்லும் வழியில் உள்ளது சீர்காழி. இங்கிருந்து பிரிந்து செல்லும் சாலையில் சென்றால், திருவெண்காடு திருத்தலத்தை அடையலாம்.

    புதன் எனும் சொல் புத்தி என்பதில் இருந்து வந்ததாகச் சொல்வர்.

    சந்திரனின் மைந்தன் புதன் இருவரும் திருவெண்காடு தலத்தில் தவமிருந்து, சிவனாரின் அருளைப் பெற்று, தங்களின் பாவங்களையும் தோஷங்களையும் போக்கிக்கொண்டதாக விவரிக்கிறது ஸ்தல புராணம்.

    புதனின் பகவானுக்கு உகந்தது:

    நிறம் - பச்சை,

    தானியம் - பச்சை பயறு,

    நவரத்தினம் - மரகதம்,

    உலோகம் - பித்தளை,

    பருவம் - இலையுதிர் காலம்,

    பஞ்ச பூதம் - நிலம் ஆகும்.

    புத பகவான்-காயத்ரி மந்திரம்

    ஓம் கஜத்வஜாய வித்மஹே

    சுகஹஸ்தாய தீமஹி

    தந்நோ புத ப்ரசோதயாத்;

    எனும் மந்திரத்தைச் சொல்லி புதன் பகவானை வழிபட்டால் அனைத்து விதமான நன்மைகளும் வந்து சேரும் என்பது நம்பிக்கை. மேலும் புதன் பகவான் உச்சம் பெற்று ஆட்சி செய்யும் மாதமாக புரட்டாசி மாதமாகும்.

    புதன் கிழமை அன்று நாராயணை வழிபட்டு பின்னர் நவக்கிரங்களை வணங்கி, பின் புதன் பகவானை வழிபட எல்லா நலன்களையும் பெற்று வாழலாம்.

    நாம் வீட்டில் பூஜை செய்யும்போது 5 மண் விளக்கு ஏற்றி வழிபடுவதோடு, இஷ்ட தெய்வத்தை வணங்கி அதோடு பெருமாளை வழிபடலாம்.

    மேலும் அந்த நாளில் பச்சை பயறு வேகவைத்து பசு மாட்டுக்கு கொடுப்பது நல்லது.

    • செவ்வாய்க்கு, “அங்காரகன்” என்றும் பெயர் உண்டு.
    • பூமாதேவி அங்காரகனை வளர்த்ததால் செவ்வாய்க்கு “பூமி புத்திரன்” என்று பெயருண்டாயிற்று.

    செவ்வாய்

    செவ்வாய்க்கு, "அங்காரகன்" என்றும் பெயர் உண்டு. மங்கலன் எனவும் அழைப்பர் ஜாதகத்தில் மற்ற எல்லாக்கிரங்களையும் விட அதிக தோஷத்தை உண்டாக்குபவன் செவ்வாயே.

    செவ்வாயின் தோற்றத்தைப் புராணங்கள் பின்வருமாறு கூறுகின்றன.

    பரமசிவனின் வார்த்தைகளைக் கேட்காது, தனது தந்தையான தட்சனின் யாகத்திற்குச் சென்று அங்கு தனது கணவனுக்கு நேர்த்த அவமானத்தைக்கண்டு, வெகுண்டு, அந்த யாகத்தீயில் குதித்து மறைகிறாள் பார்வதி தேவி.

    தேவியை பிரிந்து யோகத்திலிருந்த சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து வியர்வை உண்டாகிப் பூமியில் விழ, அங்காரகன் தோன்றினான்.

    பூமாதேவி அங்காரகனை வளர்த்ததால் செவ்வாய்க்கு "பூமி புத்திரன்" என்று பெயருண்டாயிற்று. அங்காரகன் பெரும் தவம் செய்து, யோகாக்னியை உடலில் பெற்று கிரகங்களுக்குரியபதவியை அடைந்தான்.

    தட்சனின் யாகத்தைக் கெடுத்து மூன்று உலகையும் அழிக்கத் தொடங்கிய வீரபத்திர மூர்த்தியைத் தேவர்கள் யாவரும்பணிந்துத் துதித்து வேண்ட, வீரபத்திரர் கோபம் நீங்கி சௌமியராக வேறு உருவம் கொண்டதாகவும், அவரே அங்காரகன் எனப்பட்டதாக மச்சபுராணம் கூறும்.

    பரத்துவாச முனிவர் நீராட சென்றபோது ஒரு பெண்ணின் அழகில் மயங்கியதாகவும், அவர்களுக்குத் தோன்றியவரே அங்காரகன் எனவும்,

    அவரைப் பூமாதேவி வளர்த்து, பரத்துவாசரிடமே சகலவித்தைகளும்பயிற்றுவித்தாள் எனவும் புராணம் கூறும்.

    குஜன், தராசுதன், பெளமன் ஆகியன பூமாதேவியால் வளர்க்கப்பட்டவன் எனப்பொருள்படும்.

    செவ்வாயும் முருகனும் ஒன்றே என்பர்.

    • சிலர் தங்களது வாழ்க்கையை சுறுசுறுப்பாக வைத்திருப்பார்கள்.
    • அந்த அரிசியைப் பறவைகளுக்கு அல்லது பசு மாட்டிற்குக் கொடுக்க வேண்டும்.

    சந்திரன்

    வாழ்க்கையில் இருக்கும் சிக்கல்கள் தீர்வதற்கு உங்கள் ராசியில் சந்திர பகவான் பலமாக இருக்க வேண்டும்.

    திறமைகள் இருந்தாலும் சிலருக்கு வாய்ப்புகள் அமைவதில்லை. சிலருக்குத் திறமை இருந்தாலும் புத்திசாலித்தனம் இல்லாத காரணத்தினால் மந்தமாகவே இருப்பார்கள்.

    சிலர் தங்களது வாழ்க்கையை சுறுசுறுப்பாக வைத்திருப்பார்கள். படித்த படிப்பிற்கு வேலை கிடைக்க வேண்டும் என்று எண்ணாமல் பணம் சம்பாதிக்க எறும்பு போல் வேலை செய்வார்கள்.

    இப்படி சுறுசுறுப்பாக இருக்க அவர்களின் ஜாதகத்தில் சந்திர பகவான் பலமாக இருக்க வேண்டும்.

    ஒருவரின் ஜாதகத்தில் சந்திர பகவானின் செயல்பாடுகள் கொண்டு மந்த நிலையும், சுறுசுறுப்பான நிலையும் நிர்ணயிக்கப்படுகிறது. மன உளைச்சல், விரக்தி போன்ற எல்லாவிதமான பிரச்னைகளுக்கும் பரிகாரம் உள்ளது.

    சந்திர பகவானை வலுப்படுத்த வேண்டும்

    ஒரு குடும்பத்தில் உணவிற்கான அடிப்படைத் தேவை அரிசி. இதை வீட்டில் எப்போதும் குறையாமல் வைத்துக்கொள்ள வேண்டும். முழுமையாகத் தீர்ந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    பிரச்னைகள் இருப்பவர்கள் கைப்பிடி அளவு அரிசியை எடுத்துக் கொண்டு சந்திர பகவானை மனதார வேண்டிக் கொள்ளவும். பின்னர் அந்த அரிசியைப் பறவைகளுக்கு அல்லது பசு மாட்டிற்குக் கொடுக்க வேண்டும். இது பச்சரிசி ஆக இருந்தால் மேலும் சிறப்பாக இருக்கும்.

    இவ்வாறு செய்தால் உங்கள் ராசியில் இருக்கும் சந்திர பகவானின் பலம் அதிகமாகும். மேலும் சிக்கல்கள் அதிகமாக இருப்பவர்கள் சிவபெருமானை வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

    கங்கை நதியின் தீர்த்தம் கிடைத்தால் அதனைத் தினமும் குளிக்கும் போது தண்ணீரில் கலந்து நீராடினால் சந்திர பகவானின் பலம் அதிகரிக்கும் என்பது ஐதீகமாகும். வாழ்க்கையில் இருக்கும் எல்லா பிரச்னைகளும் தீர்வதற்குச் சந்திர பகவானும் பலம் மிக முக்கியமாகும்.

    மூன்றாம் பிறை தரிசனம்

    மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள். சிவன், பார்வதி, விநாயகப் பெருமான் போன்ற தெய்வங்கள் சூடும் இந்தப் பிறை தெய்வீக சின்னமாகும்.

    காமம், வெகுளி, மயக்கம் இந்த மூன்று குணங்களையும் கடந்தவன் முக்தி அடையலாம் என்பதை நினைவுபடுத்துவதற்கே பெரியவர்கள் இதைக் காணவேண்டும் என்று கூறினார்கள்.

    ஜாதகத்தில் சந்திரதோஷம் இருந்தால் அவர்கள் அமாவாசைக்குப் பின்னர் வரக்கூடிய துவிதியை திதியில் விரதம் இருக்கவேண்டும். விரதம் இருந்த பின்னர் மாலை நேரத்தில் சந்திர தரிசனம் செய்யவேண்டும். சந்திரன் நல்ல நிலைமையில் ஜாதகத்தில் இருந்தால் கவலையில்லை. பலம் குன்றிய சந்திரன்,கிரகண தோஷம், சந்திரனோடு சர்ப்பக் கிரகங்கள் இருக்கும் அமைப்பு, சந்திரன் நீசமாக உள்ள அமைப்பு இருப்பவர்கள் சந்திர வழிபாடு அவசியம் செய்ய வேண்டும்.

    மாங்கல்ய பலம் அதிகரிக்கும்

    மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும்.

    மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும். சந்திரனை தரிசிக்கும் வேளையில், கையில் காசை வைத்து மூடிக்கொண்டு வலமாக மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒரு முறை பிறையை தரிசித்து வணங்க, பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படுகிறது.

    சந்திரன் இரவு வேளைக்கு அதிபதி என்பதால் இன்றைய தினம் இரவு சந்திரனை தரிசனம் செய்தால் மனக்குழப்பம் நீங்கும்.

    பய உணர்வு மிகுதியாக உள்ளவர்கள் திங்கட்கிழமைகளில் மாலை நேரத்தில் வெண்ணிற மலர்களால் சிவபெருமானையும், அம்பிகையையும் வழிபட வேண்டும். திருப்பதி ஏழுமலையானை திங்கட்கிழமைகளில் வழிபட மன குழப்பம் நீங்கும்.

    • ஒருவரின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் மண வாழ்க்கையை நிர்ணயிக்கும் இடம்.
    • ஜோதிட ரீதியாக ஒருவரின் ஜாதகத்தை வைத்து பெற்றோரின் விருப்ப திருமணமா? ஜாதகரின் விருப்ப திருமணமா என்பதை எளிதாக கூற முடியும்.

    மனித வாழ்வின் மிக முக்கிய அங்கமான திருமணத்தை பெற்றோர் நிச்சயிக்கும் திருமணம், சுய விருப்ப விவாகம் என இரண்டாக வகைப்படுத்ததலாம். ஜோதிட ரீதியாக ஒருவரின் ஜாதகத்தை வைத்து பெற்றோரின் விருப்ப திருமணமா? ஜாதகரின் விருப்ப திருமணமா என்பதை எளிதாக கூற முடியும்.

    ஒருவரின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் மண வாழ்க்கையை நிர்ணயிக்கும் இடம். ஐந்தாமிடம் காதலைக் குறிக்குமிடம். ஒன்பதாமிடம் மதம் மற்றும் இனத்தைப் பற்றிக் கூறுமிடம்.இந்த இடங்களும் இந்த இடத்தின் அதிபதிகளும் பலம் பெறுவதும் நீச்சம் அடையாமல் இருப்பதும் முக்கியம்.

    இந்த இடத்தை வைத்துதான் ஒருவரது நடத்தை ஆசை விருப்பம் காதல் ஈடுபாடு போன்றவற்றை அறிய முடியும். ஒருவரின் ஜாதகத்தில் 2,5,7,11-ம் பாவகங்கள் சம்பந்தம் பெற்றால் நிச்சயம் காதல் திருமணம் நடைபெறும். ஏழாம் அதிபதியுடன் சுக்கிரன் செவ்வாய் சனி இணைந்திருந்தாலோ அல்லது ஏழாம் அதிபதியை சுக்கிரன் செவ்வாய் சனி பார்த்தாலோ காதல் திருமணம் நடைபெறும்.

    ஒருவரின் ஜாதகத்தில் ஒன்பதாம் பாவம் அதன் அதிபதி, குரு பலம் குறைந்தால் கலப்பு திருமணம் நடைபெறும். ராகு கேது கிரகங்கள் பிற மதத்தினரை குறிக்கும். இந்த இரண்டு கிரகங்களும் ஐந்து, ஏழு அதிபதிகளுடன் தொடர்பு கொண்டிருப்பது இணைவது சுக்கிரனுடன் ராகு கேது இணைவது வேறு மதத்தினருடன் திருமணம் செய்யும் நிலை ஏற்படும்.

    • அந்த காலத்தில் ஜாதகங்கள் ஓலைச்சுவடியில் குறித்து வைக்கப்பட்டிருந்தன.
    • அந்தக் காலத்தில் ஜோதிடர்கள் என்றாலே வயதானவர்களாக இருப்பதை பார்த்திருக்கிறோம்.

    ஜாதகம் பார்க்க செல்பவர்கள் நல்ல நேரத்தில் ஜாதகம் பார்க்க விரும்புவதுண்டு. சிலர் ராகு காலம், எம கண்டம் போன்றவற்றை தவிர்ப்பார்கள். சிலர் மாலை 6 மணிக்கு மேல் ஜாதகம் பார்க்க விரும்புவதில்லை.

    குறிப்பாக பலருக்கும் மாலை 6 மணிக்கு மேல் ஜாதகம் பார்க்கலாமா? என்ற சந்தேகம் இருக்கும். அது பற்றிய விளக்கத்தை இங்கே காண்போம்.

    அந்தக் காலத்தில் ஜோதிடர்கள் என்றாலே வயதானவர்களாக இருப்பதை பார்த்திருக்கிறோம். மேலும் அக்காலத்தில் பல கிராமங்களில் மின் இணைப்புகளே கிடையாது. மின் விளக்கு இல்லாத வீடுகள் பல இருந்தன. அதோடு பழங்காலத்தில் ஓலைச்சுவடிகளில் தான் ஜாதகம் எழுதி வைத்திருப்பார்கள். மாலை நேரத்தில் ஜோதிடம் பார்க்க வருபவர்களுக்கு வீட்டில் மின் விளக்கு இல்லாமல், மண்ணெண்ணெய் விளக்கோ அல்லது நல்லெண்ணெய் விளக்குகளின் ஒளிகளைக் கொண்டுதான் ஜாதகம் கணித்துச் சொல்வார்கள்.

    இருட்டில் சாதாரணமாக நாம் எந்த வேலைகளையும் செய்ய மாட்டோம் அல்லவா? மின் விளக்கு வரும் வரை நாம் காத்திருக்கின்றோம். அப்படி இருக்கும் போது, நம் வாழ்க்கையை தீர்மானிக்கும் ஜாதகத்தை, சும்மா ஏனோ தானோ என்று பார்த்து விட முடியுமா?.

    மேலும் அந்த காலத்தில் ஜாதகங்கள் ஓலைச்சுவடியில் குறித்து வைக்கப்பட்டிருந்தன. அதனை வயதான ஜோதிடர்கள் விளக்கொளியில் பார்க்கும்போது, தெளிவாக கணிக்க முடியாத சூழல் உருவாக வாய்ப்புள்ளது. அதாவது நம் எதிர்காலப் பலன்கள் சொல்லும் போதோ அல்லது திருமணப் பொருத்தம் பார்க்கும் போதோ, அது தவறாக போவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எப்படி என்றால் ஓலைச்சுவடியில், புள்ளி இல்லாத எழுத்துக்களைக் கொண்டுதான் ஜாதகம் எழுதி வைத்திருப்பார்கள். (எழுத்தாணி கொண்டு ஓலைச்சுவடியில் புள்ளிவைத்தால் அது கிழிந்து விடும்). அதனால் இரவு நேரம் என்றால் சரியாக பார்த்து படிக்க இயலாது.

    உதாரணமாக ஒரு ஜாதகத்தில் சுக்ரன் என்று இருப்பதை ஜோதிடர்கள் அந்த இருள் ஒளியில் சுக்ரனை, சூரியன் என்று படித்துவிட்டு பலன்களை மாற்றி கூறி ஜாதகர்களின் எதிர்காலத்தை மாற்றி பலன் உரைக்க வேண்டி வரும். அதுவே பகல் வேளை என்றால் தெளிவாக பார்த்து பலன்களை சொல்லிவிடலாம். இதன் காரணமாகத்தான் அந்த காலத்தில் இரவு பொழுதில் ஜாதகம் பார்க்க வேண்டாம் என்று ஒரு விதியை வழக்கத்தில் கொண்டு வந்துள்ளனர்.

    ஆனால் தற்காலத்தில் அதுபோன்ற எந்த பிரச்சினையும் கிடையாது. ஏனெனில் இப்போது மின் வசதிகள் இருக்கிறது. மேலும் ஓலைச்சுவடிகளைப் போல் அல்லாமல், தற்போது கம்ப்யூட்டர், கைகளால் எழுதுவது என்று எதுவாக இருந்தாலும் புள்ளி வைத்து எழுகிறோம். இதனால் எழுத்துக்கள் தெளிவாகத்தெரியும். அந்த காலகட்டம்போல் இந்தக் காலத்தில் எந்த பிரச்சினைகளும் இல்லாததால் நாம் எளிதாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கூட ஜோதிடரிடம் அணுகி ஜாதகம் பார்க்க இயலும். எனவே, மாலை மற்றும் இரவு நேரங்களில் ஜாதகம் பார்க்கக் கூடாது என்ற மூட நம்பிக்கைகளை நாம் களைவது மிக முக்கியமானதாகும்.

    இதே போன்று செவ்வாய்க்கிழமை மற்றும் சனிக்கிழமைகளின் போது ஜாதகம் பார்க்கக் கூடாது என்ற கருத்துக்களும் தவறானதாகும். திருமண சுப முகூர்த்தம், தொழில் தொடங்கும் நாள் மற்றும் நேரம், கல்வி கற்க ஆரம்பிக்கும் நாள், சாந்தி முகூர்த்தம் குறிப்பதற்காகத்தான் நாம் நல்ல நேரம் பார்க்க வேண்டுமே தவிர, இதுபோன்ற ஜாதகம் பார்ப்பதற்கெல்லாம் அது தேவையில்லை. ஆகவே இது போன்ற மூட நம்பிக்கைகளை நீக்கி விடுவது மிகவும் நல்லது.

    'ஜோதிடச்சுடர்' ந.ஞானரதம்,

    சென்னை.

    • பகை கிரகங்களின் தசை நடக்கும் ஆண், பெண் ஜாதகங்களை தவிப்பது நல்லது.
    • சூரிய தசை நடந்தால் ராகு/கேது தசை நடப்பவரை திருமணம் செய்யக் கூடாது.

    தசையை நடத்தும் கிரகத்தை விட தசையை நடத்தும் கிரகம் நின்ற நட்சத்திரத்திற்கு வலிமை அதிகம். பலர் கேந்திர திரிகோணதிபதிகள் தசை நடக்கும் போது கூட சந்திக்கும் இடர்பாடுகளுக்கு தசை நடத்தும் கிரகம் நிற்கும் நட்சத்திரமே காரணமாக அமைகிறது. திருமணம் முடிந்து பல வருடங்களான தம்பதிகள் கூட பகை கிரகங்களின் தசை புத்தி காலங்களில் கருத்து வேறுபாட்டை சந்திக்கின்றனர். எனவே பகை கிரகங்களின் தசை நடக்கும் ஆண், பெண் ஜாதகங்களை இணைப்பதை இயன்றவரை தவிர்த்தால் தம்பதியர்கள் அன்புடன் மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.

    சூரியன் + ராகு/கேது

    சூரிய தசை நடந்தால் ராகு/கேது தசை நடப்பவரை திருமணம் செய்யக் கூடாது. இந்த கிரக சம்பந்தம் கிரகண தோஷம். ஆண், பெண் இருவருக்கும் பிரச்சினைகள் தரும். கவுரவத்தை குறைக்கும். ஊர், உலகத்திற்காக வாழ நேரிடும். அரசு வகை ஆதரவை தடை செய்யும். ஆண் வாரிசு குறையும். இது போன்ற பகை கிரக தசை புத்தியால் சிரமங்களை சந்திக்கும் தம்பதிகள் கிரகண காலங்களில் பித்ரு தர்பணம் செய்ய விரைவில் சுப பலன் கிட்டும்.

    சந்திரன்+ புதன்

    இந்த பகை கிரக தசை புத்தி காலங்களில் நரம்பு, தோல் சம்பந்தப்பட்ட நோய் உருவாகும். சிலருக்கு மனநோய், மன அழுத்தம் ஏற்படும். சிலருக்கு இந்த தசை புத்தி திருமணத்திற்கு பிறகு தவறான நட்பை ஏற்படுத்துகிறது. மனசஞ்சலத்தால் எளிதில் கெட்ட பெயரை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இந்த தசை புத்தியால் சிரமத்தை சந்திக்கும் தம்பதிகள் புதன் கிழமை சக்கரத்தாழ்வாரை 108 முறை வலம் வர வேண்டும்.

    சந்திரன் + சுக்கிரன்

    சந்திரன் மாமியார்,சுக்கிரன் மருமகள். இந்த தசை, புத்தி காலங்களில் ஆண் பெண் இருவருக்கும் மாமியார் டார்ச்சர் உண்டு. சந்திரன் வலிமை குறைந்து இருக்கும் மருமகளை மாமியார்கள் பிறந்த வீட்டிற்கு அனுப்ப எந்த பழியையும் சுமத்த தயங்குவதில்லை. சுக்கிரன் வலிமை படைத்த பெண்கள் மாமியாரை வீட்டு வேலை செய்யும் அடிமையாக்கி விடுகிறார்கள். ஆண்கள் மனைவியின் அன்பிற்காக மாமியாரை அனுசரித்து வாழும் நிலையை ஏற்படுத்துகிறது. பிடிக்காத மாமியாருக்காக மனைவியை புகுந்த வீட்டிற்கே அனுப்பாமல் இருக்கும் கணவரும் உண்டு. இந்த அமைப்பு பிறந்த வீட்டு பெண்ணிற்கும், புகுந்த வீட்டுப் பெண்களுக்கும் மனஸ்தாபத்தை ஏற்படுத்துகிறது. இதனால் கணவன், மனைவி உறவில் விரிசல் ஏற்படுகிறது. சிலருக்கு பண இழப்பு மிகுதியாக இருக்கும். இது போன்ற அவஸ்தை இருக்கும் தம்பதிகள் திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு மேல் பச்சரிசி மாவில் மாவிளக்கு தீபம் ஏற்றி மாரியம்மனை வழிபாடு செய்ய வேண்டும்.

    சந்திரன் + சனி

    சந்திர தசை, சனி தசை நடக்கும் ஜாதகத்தை பொருத்தக் கூடாது. ஆண், பெண் இருவரையும் திருமணத்திற்கு முன்னும், பின்னும் பாதிக்கும். வாழ்கையில் தடை, தாமதத்தை அதிகம் தருகிறது. காலாகாலத்தில் எதுவும் நடக்காது. எல்லாம் கால தாமதமாகவே நடக்கும். தாமதத் திருமணம், மன உளைச்சல் நிம்மதியின்மை, தாயார் வழி விரயம், வியாதி, அடிக்கடி தொழில், வேலையை மாற்றுதல் இருக்கும். கால்சிய சத்து குறைவு, மூட்டு தேய்மானம் போன்ற அவஸ்த்தையை தரும். இவர்கள் சனிக்கிழமைகளில் பசுவிற்கு பச்சரிசி, அகத்திக்கீரை வழங்க வேண்டும்.

    சந்திரன் + ராகு/கேது

    சந்திர தசை நடப்பவர்களுக்கு ராகு/கேது தசை நடக்கும் தசை நடக்கும் ஜாதகத்தை இணைக்க கூடாது. இந்த கிரகச் சேர்க்கை ஆண், பெண்களை மனம் ஒன்றி வாழ விடுவதில்லை. தீராத மன உளைச்சல், மன நோயை மிகுதியாக்கி குடும்ப வாழ்க்கையை வெறுத்து தனிமைப்படுத்தி விடுகிறது. சட்ட ரீதியாக விவாகரத்து பெற்றவர்களுக்கு இந்த கிரக தசை, புத்தி சம்பந்தம் இருக்கும். இவர்களின் பிரிவினைக்கு சொல்லிக் கொள்ளும்படியான பெரிய காரணமே இருக்காது. இது போன்ற பிரச்சினை இருக்கும் தம்பதிகள் சர்ப்பம் உள்ள புற்றிற்கு நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

    செவ்வாய் + புதன்

    செவ்வாய், புதன் பகை கிரகங்கள் என்பதால் இந்த கிரகங்களின் தசை நடக்கும் ஜாதகங்களை சேர்க்க கூடாது.அத்துடன் திருமணத்திற்கு பிறகும் இந்த கிரகங்களின் தசை சந்திப்பு இருக்க கூடாது. தைரியமான தவறான நட்பை திருமணத்திற்கு பிறகு ஏற்படுத்தி விடும். 7-ம் பாவகம் வலிமையானவர்களை இது பாதிக்காது. இவர்கள் செவ்வாய் கிழமை முருகன் வழிபாடு செய்ய வேண்டும்.

    செவ்வாய் + சனி

    திருமணத்திற்கு முன்னும், பின்னும் செவ்வாய், சனி தசை சந்திப்பு ஆண், பெண் இருவருக்கும் இருக்க கூடாது. பெண்களுக்கு மாங்கல்ய தோஷமும் ஆண்களுக்கு தொழில் நெருக்கடியும் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். அடிக்கடி விபத்து கண்டம், சொத்து தகராறை ஏற்படுத்தும். இவர்கள் செவ்வாய் கிழமை சிவப்பு துவரை தர வேண்டும். சனிக்கிழமைகளில் பருப்பு சாதத்தை அன்னதானம் செய்ய வேண்டும்.

    செவ்வாய் + ராகு/கேது

    செவ்வாய் தசை நடப்பவருக்கு ராகு/கேது தசை நடப்பவருடன் திருமணம் செய்யக் கூடாது. ஆண்களுக்கு உடன் பிறந்தவர்க ளுடனும், பெண் களுக்கு கணவருடனும் மன வேதனையை ஏற்படுத்தும் பல பெண்களுக்கு திருமணத்தை நடத்துவதில் சிரமத்தை தருகிறது. திருமணம் நடந்த பிறகு கல்யாணம் செய்யாமலே வாழ்வை கழித்து இருக்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்படியான பகை கிரக சேர்க்கை. எதை தின்னால் பித்தம் தெளியும் என்று கணவரை கவுரவப்படுத்தி சமுதாயத்தில் வலம் வர முயன்று மன நோயை வரவழைக்கும் பெண்களே அதிகம். பெண்களை கடுமையாக பாதித்து கணவரிடம் இருந்து பிரிக்கும் தசை புத்தியில் செவ்வாய் + ராகு /கேதுக்களே முதலிடம். கணவனை பாம்பு என்று தாண்டவும் முடியாமல் பழுது என்று நினைத்து மிதிக்கவும் முடியாமல் வாழ வைக்கிறது. இவர்கள் மாதவிடாய் நின்ற சுமங்கலிப் பெண்களிடம் ஆசி பெற வேண்டும்.

    சுக்கிரன் + கேது

    சுக்கிரன்,கேது தசை நடக்கும் ஜாதகங்களை இணைக்க கூடாது. ஆண்களுக்கு சாதகமற்ற பகை கிரகச் சேர்க்கை . சுக்கிரன் + ராகு இரண்டும் போகத்தை தரும் நட்பு கிரகம் என்பதால் பெரிய பாதிப்பை தராது. பல ஆண்களுக்கு திருமணத்தையே நடத்தி தராத கிரகச் சேர்க்கை. திருமணத்திற்கு பெண் தேடியே திருமணத்தில் வெறுப்பை ஏற்படுத்தும். திருமணம் நடந்த பிறகு குடும்ப பிரச்சினைக்காக பஞ்சாயத்திற்கு நடந்தே வாழ்க்கை முடிந்து விடும். இந்த அமைப்பு பல கணவன், மனைவியை விரோதியாகவே வாழ வைக்கிறது. இவர்கள் வீட்டின் பூஜை அறையில் 2 டைமன் கல்கண்டு போட்டு நல்லெண்ணெய் தீபம் ஏற்றினால் நிம்மதி அதிகரிக்கும்.

    சனி +ராகு/கேது

    இந்த 3 கிரகங்களும் கர்ம வினை ஊக்கிகள் என்பதால் சனி, ராகு, கேது தசை நடக்கும் ஜாதகங்களை ஒன்றோடு ஒன்று இணைக்க கூடாது. இந்த கிரக தசை நடக்கும் ஜாதகங்கள் தாளமுடியாத வினைப் பதிவால் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள். இந்த தசை, புத்தி நடப்பில் இருக்கும் தம்பதிகள் சனிக்கிழமை அசைவ உணவைத் தவிர்த்து சிவ வழிபாட்டை கடைபிடித்தால் துக்கம் குறையும். முறையான திருமணப் பொருத்தம் மட்டுமே நிம்மதியான திருமண வாழ்க்கை யைத் தருகிறது. மானிட வாழ்வில் நன்மை, தீமைகளை தீர்மானிப்பதில் தசை புத்தியின் வலிமையே அதிகம். இருவர் ஜாதகத்திலும் நன்மை தரும் தசை ஒருசேர வருவது போலும் தீமை தரும் தசை வரும் காலங்க ளில் ஒருவருக்கு வரும் தீமை மற்றவரின் தசையால் சரிசெய்யக் கூடியதாக இருக்க வேண்டும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×