search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "7 பேர் கைது"

    • குரும்பபட்டி முத்தாலம்மன் கோவில் பின்புறம் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.
    • சாணார்பட்டி போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து 7 பேரையும் கைது செய்தனர்.

    குள்ளனம்பட்டி:

    சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிராஜூதீன் தலைமையில் ஏட்டுகள் தோமனிக்,கோவிந்தராஜ் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது கூவனூத்து குரும்பபட்டி முத்தாலம்மன் கோவில் பின்புறம் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். அந்த கும்பலை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் கூவனூத்து குரும்பபட்டியை சேர்ந்த ரத்தினகிரி (வயது 67),காலனி தெருவை சேர்ந்த முத்துக்குமார் (45),வடக்கு தெருவை சேர்ந்த ராமசாமி (70),குரும்பபட்டியைச் சேர்ந்த ரவி (54),முருகேசன் (62) நொச்சி ஓடைப்பட்டியைச் சேர்ந்த முனியாண்டி (60) ஆர்.எம்.டி.சி.காலனியைச் சேர்ந்த சுப்ரமணி (52)என்பது தெரியவந்தது.

    இதையடுத்து சாணார்பட்டி போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து 7 பேரையும் கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள், ரூ.5020 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    • சக்திவேல் பரமசிவம் என்பவரிடம் ஜேசிபி எந்திர டிைரவராக வேலை செய்து வந்தார்.
    • ஜே.சி.பி எந்திர டிரைவர் சக்திவேலை அழைத்து சென்றதாக கூறப்படுகிறது

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கூகையூர் போயர் தெருவை சேர்ந்தவர் ராமசாமி இவரது மனைவி வள்ளியம்மாள்(வயது 58), கூலிவேலை செய்து வருகின்றனர். இவருக்கு இந்திரா என்ற மகளும், சக்திவேல் என்ற மகனும் உள்ளனர். மகளை நைனார் பாளையத்தில் திருமணம் செய்து வைத்துள்ளனர். சக்திவேலுக்கு சென்னையை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளனர்.

    சக்திவேலின் மனைவி மற்றும் பிள்ளைகள் சென்னையில் அவரது பெற்றோருடன் தங்கி வருகின்றனர். சக்திவேல் கடந்த 4 ஆண்டுகளாக கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா புலிக்கரம்பூர் கிராமத்தை சேர்ந்த பரமசிவம்(43) என்பவரிடம் ஜேசிபி எந்திர டிைரவராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் சக்திவேலுக்கு சரிவர சம்பளம் தரவில்லை என கூறப்படுகிறது. இதனால் தற்போது சக்திவேல் டிரைவர் வேலைக்கு செல்லவில்லை. மேலும் சக்திவேல், பரமசிவம் ஆகியோர்களுக்குள் கொடுக்கல், வாங்கல் பிரசினையும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது .

    இந்நிலையில் கடந்த 4-ம் தேதி காலை 10.30 மணியளவில் சக்திவேல் தன் வீட்டில் இருந்தபோது, 2 மோட்டார்் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 4 பேர் லஷ்மணபுரம் சாலையில் ஜேசிபி எந்திரம் கவிழ்ந்து விட்டது. அதனால் ஜே.சி.பி எந்திர டிரைவர் சக்திவேலை அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதை நம்பிய சக்திவேல் அவர்களுடன் மோட்டார்் சைக்கிளில் சென்றுள்ளார். அதன் பின்னர் சில மணி நேரம் கழித்து சக்திவேலின் தாய்க்கு வந்த போனில் சக்திவேலை கடத்தி விட்டதாகவும், ரூ. 5 லட்சம் பணம் தந்துவிட்டு சக்திவேலை மீட்டு செல்லுங்கள் என தெரிவித்துள்ளனர். மேலும் பணம் கொடுக்கவில்லை என்றால் சக்திவேலை கொலை செய்து விடுவோம் என மிரட்டி உள்ளனர்.

    இதுகுறித்து வள்ளியம்மாள் கீழ்குப்பம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மியாடிட் மனோ தலைமையில் தனிப்படை அமைத்து கடத்தப்பட்ட சக்திவேலை தேடி வந்தனர். இந்நிலையில் செல்போன் டவர் மூலம் திட்டக்குடி அருகே புலிக்க ரும்பூர் பரமசிவம் என்பவரது மாடி யில் இருந்த சக்திவேலை மீட்டனர். மேலும் இந்த வழக்கில் ஜேசிபி இயந்திர உரிமையாளர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை சேர்ந்த பரமசிவம்(43), அவரது டிரை வர் சுப்ரமணி மகன் ரமேஷ்(36), ஜெயகுமார் மகன் ஜெகதீஷ்(23), ராஜா மகன் ரவி(19), முத்துகிருஷ்ணன் மகன் பெரியசாமி(23), பழனிவேல் மகன் வெற்றிசெல்வன்(19), சவுந்தர்ராஜன் மகன் சந்திரன்(20) மற்றும் பென்னாடம் பகுதியைச் சேர்ந்த தனபால் மகன் தனராஜ் (42) உள்ளிட்ட 8பேரை கீழ்குப்பம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் சின்னசேலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பெரியமோட்டூர் பகுதியில் கிருஷ்ணகிரி டேம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அருகே பெரியமோட்டூர் பகுதியில் கிருஷ்ணகிரி டேம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.

    அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்ததில், அதேபகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது29), தமிரசன் (29), அசோக்குமார் (30), செவத்தன் (39) ஆகியோர் என்பது தெரியவந்தது. 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    இதேபோன்று பேரிகை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் பணம் வைத்து சூதாடிய திம்மராயன் உள்பட 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.8 ஆயிரம் பணம் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்தனர்.

    • மதுரை அருகே பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • ரூ. 27 ஆயிரத்து 580 ரொக்கம் மற்றும் சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    மதுரை

    மதுரையை அடுத்துள்ள பசுமலை தியாகராஜர் காலனி பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக திருப்பரங்குன்றம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில் சம்பவத்தன்று போலீசார் அந்தப்பகுதியில் ரோந்து மேற்கொண்டனர்.

    அப்போது அங்குள்ள ஒரு கட்டிடத்தில் பணம் வைத்து சூதாடிய 7 பேர் கும்பலை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தியதில், அவர்கள் கோவிந்தராஜ் (வயது63), கதிரேசன் (54), பைபாஸ் ரோடு நேரு குறுக்கு தெரு சுரேஷ்பாபு (38), ராஜபாளையம் போத்திராஜ் (57), பசுமலை ராஜா (49), ஈஸ்வரன் (57), திருநகர் கணேசன் (54) என்று தெரியவந்தது. இவர்களிடம் இருந்து ரூ. 27 ஆயிரத்து 580 ரொக்கம் மற்றும் சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • காந்திநகர் பண்ணாரி அம்மன் கோவில் அருகே போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
    • 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    கோவை,

    கோவை மாநகரில் போதைப்பொருள், கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போதைக்கு அடிமையான இளைஞர்கள் சிலர் வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி அதனை நீரில் கரைத்து ஊசி மூலம் உடலுக்குள் செலுத்தி போதை ஏற்றி வருகின்றனர். மேலும் டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகளை மருந்து கடைகளில் விற்க கூடாது எனவும் போலீசார் அறுவுறுத்தி உள்ளனர்.

    இந்நிலையில், நேற்று கோவை கடைவீதி அருகே காந்திநகர் பண்ணாரி அம்மன் கோவில் அருகே ஒரு கும்பல் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபடுவதாக கடைவீதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், கடைவீதி போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த 4 பேர் கும்பலை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். சந்தேகமடைந்த போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது அந்த கும்பல் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் போதை மாத்திரை விற்பனை கும்பலை சேர்ந்த வேலாண்டி பாளையத்தை சேர்ந்த கணேஷ் பாபு (வயது24), பீளமேடு ஆவாரம் பாளையம் இளங்கோ நகரை சேர்ந்த சரவணன் (31), இடையர்பாளையத்தை சேர்ந்த கணேஷ்குமார் (21), திருச்சி ரோடு ஹைவே காலனியை சேர்ந்த ஜான் ஜோசப் (31) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 85 போதை மாத்திரைகள், 4 செல்போன்கள், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    இதேபோல், பீளமேடு ஆவாரம்பாளையம் சோபா நகர் மாநகராட்சி பூங்கா அருகே போதை மாத்திரை விற்பனை செய்த ஆவாரம்பாளையம் இளங்கோ நகரை சேர்ந்த சுஜித் (25), ஜெகநாதபுரத்தை சேர்ந்த சிவசூரியன் (23) மற்றும் புலியகுளம் மருதாச்சலம் தெருவை சேர்ந்த வெங்கடேஷ்குமார் (22) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 100 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் 3 பேரையும் ஜெயிலில் அடைத்தனர்.

    • லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • இதில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் பல்வேறு பகுதிகளில் சோதனை செய்து வருகிறார்கள்.

    இதேபோல் ஈரோடு பச்சப்பாளி பகுதியில் முகமது சித்திக் என்பவர் நின்று கொண்டு இருந்தார். அப்போது ஒரு வாலிபர் அவரிடம் வெள்ளை தாளில் லாட்டரி சீட்டுகளின் எண்கள் எழுதி அவரிடம் வாங்க வற்புறுத்தினார்.

    இதை வாங்க விருப்பம் இல்லாத அவர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் லாட்டரி விற்பனை செய்தவரை பிடித்து விசாரித்தனர்.

    இதில் அவர் பச்சப்பாளியை சேர்ந்த மாரிசாமி என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து லாட்டரி சீட்டு எண்கள் எழுதி வைத்து இருந்த வெள்ளை தாள்களை பறிமுதல் செய்தனர்.

    பவானி அடுத்த லட்சுமி நகர் பகுதியில் தொட்டிபாளையத்தை சேர்ந்த லோகநாதன் (26) என்பவர் வெள்ளை தாளில் லாட்டரி சீட்டு எண்களை எழுதி விற்பனை செய்ய வைத்து இருந்தார்.

    இதையடுத்து சித்தோடு போலீசார் அவரை பிடித்து விசாரித்து அவரிடம் இருந்து லாட்டரி சீட்டு எண்களை எழுதி வைத்து இருந்த வெள்ளை தாள்களை பறிமுதல் செய்தனர்.

    இதே போல் சித்தோடு அடுத்த ஆர்.என். புதூர் பகுதியில் வெள்ளை தாளில் லாட்டரி சீட்டு எண்களை எழுதி வைத்து விற்பனை செய்த ஜெகதீசன் (37) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி அவரிடம் இருந்து லாட்டரி சீட்டு எண்கள் எழுதி வைத்து இருந்த வெள்ளை தாள்களை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு மரப்பாலம் பகுதியில் வெள்ளை தாளில் லாட்டரி சீட்டு எண்கள் எழுதி வைத்து விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த செந்தில்வேலன் (57) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி அவரிடம் இருந்து லாட்டரி சீட்டு எண்கள் எழுதி வைத்து இருந்த வெள்ளை தாள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 4 பேரை கைது செய்தனர்.

    இதேபோல் சத்தியமங்கலம் பகுதியில் சிலர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சத்தியமங்கலம் கோட்டு வீராம்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த பகுதியில் 2 பேர் இரு சக்கர வாகனத்தில் அமர்ந்து கொண்டு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ய வைத்து இருந்தனர்.

    இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கேரளா மாநிலத்தை சேர்ந்த சத்தியசீலன் (73), சத்தியமங்கலம் அடுத்த ரங்கசமுத்திரம் பகுதியை சேர்ந்த சிவா (42) என தெரிய வந்தது.

    இதை தொடர்ந்து அவர்கள் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரத்து 160 மதிப்புள்ள 90 லாட்டரி சீட்டுகள் ரூ.20 ஆயிரத்து 500 பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    இதே போல் சத்தியமங்கலம் பூ மார்க்கெட் அருகே ஒருவர் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து கொண்டு லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்து இருந்தார்.

    அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் பு.புளியம்பட்டி பகுதியை சேர்ந்த அன்வர் பாஷா (49) என்பதும், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கு வைத்து இருந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து சத்தியமங்கலம் போலீசார் அவரிடம் இருந்து ரூ.480 மதிப்புள்ள 12 லாட்டரி சீட்டுகள், ரூ.17 ஆயிரத்து 700 பணம் மற்றும் அவரது மோட்டார் சைக்கிள் ஆகிய வற்றை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 3 பேரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கும்பலாக வந்த ஒரு தரப்பினர் வாலிபர்களை சரமாரியாக அரிவாள் மற்றும் கத்தியால் வெட்டி னர்.
    • மேல்மங்கலத்தில் பதட்ட மான சூழல் நிலவுவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரிய குளம் அருகே மேல்மங்க லத்தை சேர்ந்தவர் வெற்றி வேல். இவரது மோட்டார் சைக்கிள் திருடு போனது. இதனைத் தொடர்ந்து அவர் வடுகபட்டி, தாமரைக்குளம், கள்ளிப்பட்டி பகுதியில் இருந்து வந்த வாலிபர்களிடம் விசாரித்தார்.

    அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கிருந்த வர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கு கும்பலாக வந்த ஒரு தரப்பினர் வாலிபர்களை சரமாரியாக அரிவாள் மற்றும் கத்தியால் வெட்டி னர். இந்த தாக்கு தலில்ஜெகதீஸ்வரன், முத்துக்குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    ஜெகதீஸ்வரன் தேனி அரசு ஆஸ்பத்திரியிலும், முத்துக்குமார் மதுரை அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர்.

    இதில் 5 பேர் திருச்சியை சேர்ந்த ரவுடிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் சிலரை தேடி வருகின்றனர். இதனால் மேல்மங்கலத்தில் பதட்ட மான சூழல் நிலவுவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

    • கோவை மாநகரில் போலீசார் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
    • போலீசார் அந்த வாலி பர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.

    கோவை,

    கோவையில் அடுத்தடுத்து 2 கொலை சம்பவங்கள் நடந்தது. இதனையடுத்து கோவை மாநகரில் போலீசார் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    2 நாட்களுக்கு முன்பு ரெயில் நிலையம் அருகே துப்பாக்கியுடன் சுற்றிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். இந்தநிலையில் நேற்று மேலும் 7 பேர் ஆயுதங்களுடன் சிக்கினர்.

    செல்வபுரம் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் செல்வ சிந்தாமணிகுளம் வழியாக ரோந்து சென்றனர்.அப்போது அங்கு 3 வாலிபர்கள் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டு இருந்தனர்.

    அவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர். இதனையடுத்து போலீசார் அந்த வாலி பர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்து சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் 3 பேரும் 3 கத்திகளை தங்களது உடலில் மறைத்து வைத்து இருப்பது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து போலீசார் பிடிபட்ட 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் செல்வபுரம் விஜயலட்சுமி நகரை சேர்ந்த கனகராஜ் (வயது 32), சொக்கம்புதூரை சேர்ந்த பிரதாப் (23), தேவேந்திரா வீதியை சேர்ந்த இந்திரகுமார் (26) என்பது தெரிய வந்தது.

    இவர்கள் மீது ஏற்கனவே செல்வபுரம் போலீசில் நிலையத்தில் கொலை மிரட்டல், கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. 3 பேரிடம் போலீசார் கத்தியுடன் சுற்றியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் வழிப்பறியில் சம்பவத்தில் ஈடுபடுவதற்காக கத்தியுடன் சுற்றியதாக தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    சரவணம்பட்டி அருகே சாரதா சிட்டியில் உள்ள பெட்டிக்கடை முன்பு வாள், அரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் 2 மோட்டார் சைக்கிள்களில் 4 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் கீரநத்தத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் கொள்ளையடிப்பது குறித்து பேசிக்கொண்டு இருந்தனர். இதனை கேட்டு பெட்டிக்கடைக்காரர் அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து அவர் சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனடியாக போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்ற ஆயுதங்களுடன் நின்று கொண்டு இருந்த 4 வாலிபர்களையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 2 மோட்டார் சைக்கிள், ஒரு வாள், ஒரு அரிவாள், 2 கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் கைது செய்யப்பட்ட 4 பேரையும் போலீஸ் நிலையம் அைழத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கணபதியை காமராஜபுரத்தை சேர்ந்த கவுரிசங்கர் (24), சுகந்தராம் (23), சரவ ணம்பட்டி விநாயகா புரத்தை சேர்ந்த ரித்திக் (19), ஜெகதீஸ் (30) என்பது தெரிய வந்தது. போலீசார் கைது செய்யப்பட்ட 4 வாலிபர்களையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.  

    • 204 கிலோ குட்கா பறிமுதல் செய்தனர்.
    • கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    சூலூர்,

    சூலூர் அருகே பெட்டிக்கடைகளில் குட்கா பொருள் பதுக்கி வைத்திருந்து விற்பனையில் ஈடுபட்ட 7 பேரை சூலூர் போலீசார் மற்றும் தனிப்படையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 204 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.

    சூலூர் சுற்றுவட்டார பகுதியில் பெட்டிக்கடைகளில் குட்கா பொருள்கள் பதிக்க வைத்து விற்பனை செய்வதாக சூலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முனுசாமி, பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் தீபிகா மற்றும் தனிப்படை போலீசார் அப்பகுதி கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது சூலூர் பகுதியில் குட்கா பதுக்கி வைத்திருந்த சூலூரைச் சேர்ந்த கடை உரிமையாளர்கள் கண்ணன் (வயது42), ரத்னா மூர்த்தி (45), சச்சிதானந்தம் (55), பரமசிவம் (57), அருணாச்சலம் (57), ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது (48), மதுரையை சேர்ந்த ஜெயபாலன் (33), ஆகிய 7 பேரை பிடித்தனர்.

    இதனையடுத்து அவர்களிடமிருந்து 204 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 7 பேரும் கைது செய்யப்பட்டு சூலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
    • போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்

    கோவை,

    கோவை மதுக்கரை அருகே உள்ள மரப்பாலம் ராஜேஸ்வரி நகரில் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதனையடுத்து மதுக்கரை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்த பரமக்குடியை சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது 23), சுண்டக்காமுத்தூரை சேர்ந்த பூவேந்தன் (22) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்த 6 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    ேபாலீசாரை பார்த்ததும் தப்பி ஓடிய ஆரோன் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    சரவணம்பட்டி போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் அழகு செல்வி தலைமையில் காளப்பட்டி ரோடு மகா நகர் மைதானம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த கணபதியை சேர்ந்த ஜெயக்குமார் (25), மணியக்கார ன்பாளையதத்தை சேர்ந்த முகேஷ் கண்ணா (23) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சா, 7 போதை மாத்திரைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    இதேபோல சரவணம்பட்டி அஞ்சுகம் நகரில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த சின்னவேடம்பட்டியை சேர்ந்த மாரி என்ற மனோஜ் (22), விமல் (24), முரளி (30) ஆகியோரை கைது செய்தனர்.

    இவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய கவுதம் என்பவரை தேடி வருகிறார்கள். 

    • நேற்று இரவு ஜீவா உள்பட 7 பேர் கொண்ட கும்பல் திடீரென்று சேதுபதி வீட்டிற்குள் அத்துமீறி உள்ளே நுழைந்தனர்.
    • கொலை மிரட்டல் விடுத்ததோடு வீட்டின் ஜன்னல், கதவு மற்றும் மோட்டார் சைக்கிளை உடைத்து சேதப்படுத்தினர்.

    கடலூர்:

    கடலூர் அருகே தென்னம்பாக்கம் சேர்ந்தவர் சேதுபதி. இவருக்கும் கலையூர் சேர்ந்த ஜீவா என்பவருக்கும் கடந்த 15 -ந் தேதி பெட்ரோல் போடும்போது வாக்குவாதம் ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர். இதன் காரணமாக இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்த நிலையில் நேற்று இரவு ஜீவா உள்பட 7 பேர் கொண்ட கும்பல் திடீரென்று சேதுபதி வீட்டிற்குள் அத்துமீறி உள்ளே நுழைந்தனர். அப்போது சேதுபதி அங்கு இல்லாததால் அவரது அண்ணன் பூபாலன், இவரது மனைவி பவித்ரா ஆகியோரை சரமாரியாக தாக்கினார்கள். மேலும் பவித்ராவை மானபங்கப்படுத்தியதாக கூறப்படுகிறது . மேலும் பூபாலன் மீது பெட்ரோலை ஊற்றி கொலை மிரட்டல் விடுத்ததோடு வீட்டின் ஜன்னல், கதவு மற்றும் மோட்டார் சைக்கிளை உடைத்து சேதப்படுத்தினர்.

    இதில் காயம் அடைந்த பூபாலன் மற்றும் அவரது மனைவி பவித்ரா ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து பூபாலன் தூக்கணாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கலையூர் சேர்ந்த ஜீவா (வயது23), தூக்கணாம்பாக்கம் சேர்ந்த கணபதி 22, செல்லஞ்சேரி சேர்ந்த ரகு (22), கலையூர் சேர்ந்த சதீஷ்குமார் (26), புதுவை கல்மண்டபம் சேர்ந்த தினகரன் (24), புதுவை ஏம்பலம் சேர்ந்த யுவராஜ் (21), கலையூர் சேர்ந்த சூர்யா (21) ஆகிய 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
    • 2 தரப்பையும் சேர்ந்த ஏழு பேரை கைது செய்து சிறையில் அடைத்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகேயுள்ளது கருங்கல் நகர். இப்பகுதியை சேர்ந்த சீனிவாசன், கண்ணன், மோகன் உள்ளிட்ட நான்கு பேர் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

    ஆம்பள்ளி காலனி அருகே சென்றபோது ஏன்இருசக்கர வாகனத்தை வேகமாக ஒட்டி வருகின்றீர்கள் என்று அப்பகுதியை சேர்ந்த சிலர் தடுத்து கேட்டுள்ளனர்.

    அப்போது இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.இதையடுத்து கருங்கல் நகர் பகுதியினர் அங்கிருந்து சென்று விட்டனர்.

    இந்நிலையில் ஆம்பள்ளி காலனி பகுதியை சேர்ந்த ராமன், லட்சுமணன், சக்தினாதன் உள்பட 12 பேர் ஒன்பது இருசக்கர வாகனங்களில் கருங்கல் நகர் சென்று சீனிவாசனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

    அந்த ஊர் காரர்கள் சுற்றி வளைக்கவே இருசக்கர வாகனங்களை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர். இது குறித்து தகவல் அறிந்த மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் இரு தரப்பு மீதும் வழக்கு பதிவு செய்து 2 தரப்பையும் சேர்ந்த ஏழு பேரை கைது செய்து சிறையில் அடைத்தார்.

    ×