search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொகுதி"

    • தொகுதி பங்கீட்டை விரைவில் முடித்து விட்டு வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி விரும்புகிறது.
    • உத்தர பிரதேசத்தில் சமாஜ் வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களை தர இயலாது என்று கைவிரித்துள்ளார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ளன. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைக்க பாரதிய ஜனதா கட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கிவிட்டது.

    ஜனவரி 15-ந்தேதிக்கு பிறகு பல அதிரடி அறிவிப்புகளை வெளியிடவும் பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது.

    பா.ஜ.க. சவாலை சமாளிக்க காங்கிரஸ், தி.மு.க., ராஷ்டீரிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி, கம்யூனிஸ்டுகள் உள்பட 27 கட்சிகள் ஒருங்கிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்த கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் இதுவரை 4 முறை சந்தித்து பேசி உள்ளனர்.

    கூட்டணிக்கு பெயர் வைத்த பிறகு தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு, குறைந்தபட்ச பொது செயல்திட்டம் போன்ற நடவடிக்கைகளில் தலைவர்கள் ஈடுபட்டாலும் இன்னமும் அதற்கு முடிவு எதுவும் கிடைக்கவில்லை. தொகுதி பங்கீட்டை விரைவில் முடித்து விட்டு வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி விரும்புகிறது.

    ஜனவரி 17-ந்தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மணிப்பூரில் இருந்து மும்பைக்கு பாத யாத்திரை மேற் கொள்ள இருக்கிறார். அதற்கு முன்பாக இந்தியா கூட்டணியில் உள்ள செல்வாக்குமிக்க மாநில கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை முடிக்க அவர் விரும்புகிறார். இதற்காக காங்கிரஸ் தலைவர்கள் கடந்த 2 நாட்களாக டெல்லியில் கூடி ஆலோசித்தனர்.

    அடுத்த கட்டமாக வருகிற 4-ந்தேதி மீண்டும் கூட உள்ளனர். அதற்கு பிறகு தான் மாநில கட்சிகளுடன் தொகுதி பங்கீடு உறுதியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் அதற்கு முன்னதாக தொடக்கத்திலேயே காங்கிரஸ் தலைவர்கள் தொகுதி பங்கீடு விசயத்தில் கடும் சிக்கலையும், இழுபறியையும் சந்திக்க தொடங்கி உள்ளனர்.

    மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதிகளை விட்டு தரமாட்டோம் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி திட்ட வட்டமாக கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி தனக்கு நிபந்தனை விதிக்கும்பட்சத்தில் தனித்து போட்டியிடுவோம் என்றும் அவர் மிரட்டல் விடுத்து உள்ளார்.

    இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் சமாஜ் வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களை தர இயலாது என்று கைவிரித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் மொத்தம் 80 எம்.பி. தொகுதிகள் இருக்கின்றன. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு 4 அல்லது 5 தொகுதிகள் மட்டுமே தரப்படும் என்று அகிலேஷ் யாதவ் கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியும் காங்கிரசுக்கு அதிக தொகுதிகளை விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. அங்கு மொத்தம் 48 தொகுதிகளில் சுமார் 25 முதல் 30 தொகுதிகள் வரை போட்டியிட சிவசேனா விரும்புகிறது. மீதமுள்ள 18 தொகுதிகளை காங்கிரசுக்கும், தேசியவாத காங்கிரசுக்கும் விட்டு தருவதாக அறிவித்துள்ளது.

    இதற்கு காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் கடும் அதிருப்தியயை தெரிவித்துள்ளன. இந்நிலையில் டெல்லி, பஞ்சாபில் ஆம்ஆத்மி கட்சி 90 சதவீத இடங்களில் போட்டியிடப் போவதாகவும் 10 சதவீத இடத்தை மட்டுமே கூட்ட ணிக்கு ஒதுக்க முடியும் என்று கூறியுள்ளது.

    கேரளாவிலும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி அதிக இடங்களை காங்கிரசுக்கு கொடுக்க விரும்பவில்லை. பீகாரில் நிதிஷ்குமாரும், லல்லு பிரசாத் யாதவும் தங்களுக்குரிய இடங் களை வைத்துக் கொண்டு தான் மீதமுள்ள இடங்களை காங்கிரசுக்கு கொடுக்கும் நிலையில் உள்ளனர்.

    இதன் காரணமாக உத்தரபிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, டெல்லி, பஞ்சாப், கேரளா, மேற்கு வங்காளம் உள்பட பல மாநிலங்களில் சுமூகமான தொகுதி பங்கீட்டை செய்ய முடியாத நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் மேலிட தலைவர்களை தவிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.

    இந்நிலையில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் அதிக தொகுதிகளில் போட்டியிடும் நிலையில் இருக்கிறது. தமிழகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் இடையே பங்கீட்டில் சிக்கல் வர வாய்ப்பு இல்லை. தி.மு.க. கொடுக்கும் தொகுதிகளை காங்கிரஸ் பெற்றுக் கொள்ளும் நிலையில்தான் உள்ளது.

    ஒடிசா, குஜராத் உள்பட சில மாநிலங்களில் செல்வாக்கு இல்லாத நிலையில் காங்கிரஸ் அங்கு தனித்து விடப்படும் நிலையில் இருக்கிறது. இதனால் காங்கிரசுக்கு தோழமைக் கட்சிகள் மூலம் அதிக இடங்கள் கிடைக்குமா? என்பதில் சிக்கல் நிலவுகிறது.

    5 மாநில தேர்தலில் தெலுங்கானா தவிர மற்ற 4 மாநிலங்களிலும் காங்கிரஸ் தோல்வியை தழுவியது. இதன் காரணமாக இந்தியா கூட்டணியில் உள்ள மாநில கட்சிகளிடம் அதிக தொகுதிகள் கேட்டு பேரம் பேச முடியாத நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது. காங்கிரசின் சூழ்நிலையை புரிந்து கொண்டு மாநில கட்சி தலைவர்களும் நிபந்தனை விதிப்பதால் "இப்பவே கண்ணைக் கட்டுதே" என்ற நிலையில்தான் காங்கிரஸ் தலைவர்கள் உள்ளனர்.

    இந்தியா கூட்டணி தலைவர்கள் பா.ஜ.க.வை வீழ்த்த 400 தொகுதிகளில் பொது வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்று கூறி வருகின்றனர். இதுவும் காங்கிரசுக்கு சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. இத னால் இந்தியா கூட்டணியில் எதிர்பார்த்தபடி தொகுதி பங்கீடு குறிப்பிட்ட காலத்துக்குள் செய்து முடிக்க முடியுமா? என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.

    • கடந்த பாராளுமன்ற தேர்தலில் 10 மாநிலங்களிலும் காங்கிரஸ் பெற்ற வெற்றி, தோல்வி அந்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்படுகிறது.
    • தமிழக காங்கிரஸ் நிலவரம் பற்றி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி முழுமையான அறிக்கை தயாரித்து உள்ளார்.

    பா.ஜனதாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா கூட்டணியை மேலும் வலிமைப்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அதற்கு வசதியாக 10 மாநிலங்களில் செல்வாக்கு மிக்க மாநில கட்சிகளுடன் சுமூகமான தொகுதி பங்கீட்டை நடத்தி முடிக்க காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    தமிழ்நாடு, பீகார், உத்தர பிரசேதம், மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட், காஷ்மீர், பஞ்சாப், மராட்டியம், டெல்லி ஆகிய மாநிலங்களில் சுமூகமான தொகுதி பங்கீடு செய்தால் பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் பொது வேட்பாளரை நிறுத்த முடியும் என்று கருதுகிறது.

    எனவே இந்த 10 மாநிலங்களிலும் காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டியிட வேண்டும், மாநில கட்சிகளுக்கு எத்தனை தொகுதி கொடுக்க வேண்டும் என்பதை முதலில் முடிவு செய்ய தீர்மானித்துள்ளனர். இதற்காக டெல்லியில் வருகிற 29, 30-ந் தேதிகளில் 2 நாட்கள் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் நடக்கிறது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழகம் உள்பட 10 மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது. 10 மாநில தலைவர்களிடமும் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்த உள்ளனர்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் 10 மாநிலங்களிலும் காங்கிரஸ் பெற்ற வெற்றி, தோல்வி அந்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்படுகிறது. கடந்த தேர்தலில் போட்டியிடும் இடங்கள் பற்றியும் விவாதிக்கப்பட உள்ளது. அதன் அடிப்படையில் மாநில கட்சிகளிடம் தொகுதிகளை பெற பட்டியல் தயாரிக்கப்படும்.

    இதற்காக முழு அளவில் அறிக்கைகள் தயாரித்து தயாராக வருமாறு மாநில தலைவர்களுக்கு காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் தமிழக காங்கிரஸ் நிலவரம் பற்றி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி முழுமையான அறிக்கை தயாரித்து உள்ளார்.

    டெல்லியில் 29, 30-ந் தேதிகளில் ஆலோசனை கூட்டம் நடக்கும்போது தமிழக காங்கிரசின் செல்வாக்கு மற்றும் எத்தனை தொகுதிகளில் போட்டியிட ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது பற்றி கே.எஸ்.அழகிரி விரிவாக தெரிவிப்பார். அதன் அடிப்படையில் தி.மு.க.விடம் தொகுதிகளை பெறுவது பற்றி காங்கிரஸ் மேலிடம் இறுதி முடிவு செய்யும்.

    • 50,000 நீட் விலக்கு கையெழுத்துகள் பெறவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
    • நிகழ்ச்சிக்கு மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆஸ்பின், கிருபா ஆகியோர் தலைமை தாங்கினார்

    மார்த்தாண்டம் :

    விளவங்கோடு சட்டமன்றத்தொகுதி தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணி சார்பில் நீட் கையெழுத்து இயக்கம் குறித்து ஆலோசனை கூட்டம் குழித்துறை நகர தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆஸ்பின், கிருபா ஆகியோர் தலைமை தாங்கினார். தொகுதி ஒருங்கிணைப் பாளர்கள் ஆல்பின் கான், ரூபின் தியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மேல்புறம் தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜேஷ்குமார், குழித்துறை நகர செயலாளர் வினுக்குமார், குமரி மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சிவபாலன், கிள்ளியூர் வடக்கு ஒன்றிய துணை செயலாளர் ஜாண்சன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் லிஜிஸ் ஜீவன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி சார்பில் 50,000 நீட் விலக்கு கையெழுத்துகள் பெறவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு
    • கிள்ளியூர் தாலுகா பொதுமக்கள் நலன் கருதி தாலுகாவிற்கு ஒரு நீதிமன்றம்

    மார்த்தாண்டம்,அக்.30-

    குமரி மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் விளையாடுவதற்கும் முறையாக பயிற்சிகள் மேற்கொள்வதற்கும் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் அரசு சார்பில் அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் இல்லை. சட்டமன்றத்தில் மானிய கோரிக்கையின் போது அரசு சார்பில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் மினி விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட மினி விளையாட்டு மைதானத்தை கிள்ளியூரில் அமைத்து தர வேண்டும்.

    முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதிகளான அதங்கோடு, செங்கிலம், மங்காடு, ஆலு விளை, மாமுகம், பணமுகம், பள்ளிக்கல், முஞ்சிறை, பார்த்திவபுரம், விரிவிளை, வைக்கலூர், மரப்பாலம், பருத்திக்கடவு, கழியான்குழி, ஈழக் குடிவிளாகம், பரக்காணி போன்ற பகுதிகளில் மழை காலங்களில் ஏற்படும் பெருவெள்ளத்தால் வீடுகளில் ஆற்றுநீர் புகுந்து விடுகிறது. இதனால் ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள வீடுகள் ஆற்றில் அடித்து செல்லப்படுகிறது. இதனால் அப் பகுதிகளில் தாமிரபரணி ஆற்றின் இருப்பக்கங்களிலும் நிரந்தர பக்கசுவர்கள் அமைத்து அங்கு குடியிருக்கும் பொது மக்களையும் அவர்களின் வீடுகளையும் பேரழிவிலிருந்து பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கிள்ளியூர் தாலுகா பொதுமக்கள் நலன் கருதி தாலுகாவிற்கு ஒரு நீதிமன்றம் என்கிற அடிப்படையில் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியிலுள்ள அனைத்து வருவாய் கிராமங்களையும் உட்படுத்தி கிள்ளியூர் பகுதியில் உரிமையியல் நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 100 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட கரும்பு, சவுக்கு உள்ளிட்ட பயிர்களில் தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஏமப்பூரில் பெரிய ஏரி உள்ளது.இந்த ஏரிக்கு தென்பெண்ணை ஆற்றில் இருந்து வரக்கூடிய தண்ணீர் வாய்க்கால் வழியாக வந்து ஏரி நிரம்பியது. இதனால் தி.மழவராயனூர் கிராம விவசாயிகள் 100 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட கரும்பு, சவுக்கு உள்ளிட்ட பயிர்களில் தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் அமைச்சர் பொன்முடி, ஏமப்பூர் ஏரி நீர் தேங்கியுள்ள விவசாய நிலங்களை பார்வையிட்டு பின் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி, நீர்வள த்துறை செயற்பொறியாளர் சோபனா மற்றும் அதிகாரி கள், விவசாயிகளிடம் ஆலோ சனை நடத்தினார். அதன் பிறகு விவசாய பயிர்களில் தேங்கியுள்ள நீரினை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    அப்போது அவருடன் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.புகழேந்தி, செயற்பொறியாளர் ராஜா, உதவி செயற்பொறியாளர், அய்யப்பன், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், தி.மு.க.ஒன்றிய செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான விசுவநாதன், ஒன்றிய குழுதலைவர் ஓம்சிவ சக்திவேல், தாசில்தார் ராஜ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் கேசவலு, ஒன்றிய விவசாய அணி செயலாளர் வெங்கடேசன், மாவட்ட பிரதிநி பக்தவச்சலு, ஒன்றிய பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர்கள் பாரதிமோகன்ராஜ், தேவிசெந்தில், தி.மு.க.நகர செயலாளர் பூக்கடை கணேசன்,பேரூராட்சி துணைத் தலைவர் ஜோதி, ஆவின் இயக்குனர் விஜயபா பு,நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு கிருஷ்ணராஜ்,மாவட்ட மருத்துவர் அணி அமை ப்பாளர் காவியவேந்தன், சிறுமதுரை செல்வம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • 2026-ம் ஆண்டுக்குப்பின் பாராளுமன்ற தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில் பாராளுமன்றம் மற்றும் சட்டசபை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படும்.

    சென்னை:

    மக்கள் தொகை அடிப்படையில் 2026-ம் ஆண்டுக்குப்பின் பாராளுமன்ற தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அடுத்த ஆண்டு பாராளு மன்ற தேர்தல் முடிந்ததும், புதிதாக பொறுப்பு ஏற்கும் அரசு இதற்கான நடவடிக்கைகளை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அப்போது தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் பாராளுமன்ற தொகுதிகள் எண்ணிக்கை குறையும் என்று கூறப்படுகிறது. உத்தரபிரதேசம் உள்பட வடமாநிலங்களில் தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கார்னேஜ் மையத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    தென் மாநிலங்களை விட, வடமாநிலங்களில் மக்கள் தொகை எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கிறது. 2026-ம் ஆண்டுக்குப்பின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பின்பு தொகுதி மறுவரையறை பணிகள் மேற்கொள்ளப்படும். மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில் பாராளுமன்றம் மற்றும் சட்டசபை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படும்.

    அப்போது உத்தரபிரதேசத்துக்கு 11 பாராளுமன்ற தொகுதிகள் கூடுதலாக கிடைக்கும். தமிழகத்தில் 8 பாராளுமன்ற தொகுதிகள் வரை குறைய வாய்ப்புள்ளது. இதனால் தற்போது இருக்கும் தமிழக எம்.பி. தொகுதிகளின் எண்ணிக்கை 39-ல் இருந்து 31 பாராளுமன்ற தொகுதிகளாக மாறலாம். 42 தொகுதிகள் உள்ள ஆந்திரா, தெலுங்கானாவில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 34 ஆக குறையலாம்.

    இதேபோல் கேரளாவிலும் பாராளுமன்ற தொகுதிகள் எண்ணிக்கை 20-ல் இருந்து 12ஆக குறையலாம். கர்நாடகாவில் பாராளுமன்ற தொகுதிகள் 28-ல் இருந்து 26 ஆக குறையலாம்.

    தொகுதி மறுவரையறையின் முக்கிய நோக்கமே, ஒவ்வொரு தொகுதியிலும், ஓரளவு சமமான எண்ணிக்கையில் வாக்காளர்கள் இருப்பதை உறுதி செய்வது தான். அப்போதுதான் பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் நியாயமான பிரதிநிதித்துவம் இருக்கும்.

    தொகுதி மறுவரையால் உ.பி.க்கு 11 தொகுதிகளும், பீகாருக்கு 10 தொகுதிகளும், ராஜஸ்தானுக்கு 6 தொகுதிகளும், மத்திய பிரதேசத்துக்கு 4 தொகுதிகளும், குஜராத், அரியானா, ஜார்க்கண்ட், டெல்லி மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதிகள் அதிகரிக்கலாம்.

    தொகுதி வாக்காளர்கள் அடிப்படையில் உத்தரபிரதேசத்தில் தற்போது ஒரு எம்.பி. 30 லட்சம் பேரின் பிரதிநிதியாக உள்ளார். ஆனால் தமிழகத்தில் ஒரு எம்.பி. 18 லட்சம் பேரின் பிரதிநிதியாக உள்ளார். தொகுதி மறுவரையறைக்கு மத்திய அரசு கடந்த 1976-ம் ஆண்டு தடைவிதித்தது. இந்த தடை தற்போது 2026-ம் ஆண்டு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

    இந்த தடை காரணமாக பாராளுமன்றத்தில் சம நிலையற்ற பிரதிநிதித்துவம் உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின் நியாயமான பிரதிநிதித்துவம் இருக்கும் வகையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • கூடுதலாக 3 வாக்குச்சாவடிகள் அமைப்பு
    • பஸ் வசதி உட்பட அடிப்படை வசதிகள் அந்த வாக்குச்சாவடிக்கு இருக்கு மாறு செய்ய வேண்டும்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் வாக்குச்சா வடி மறு சீரமைப்பு தொட ர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் ஸ்ரீதர் தலை மையில் நடந்தது.

    தி.மு.க.சார்பில் அகஸ்தீ சன், காங்கிரஸ் சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் நவீன் குமார், முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிரு ஷ்ணன், அ.தி.மு.க. சார்பில் வக்கீல் ஜெயகோபால், பாரதிய ஜனதா சார்பில் ஜெகநாதன், தே.மு.தி.க. சார்பில் மணிகண்டன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இசக்கி முத்து மற்றும் அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் அரசியல் கட்சியினர் கூறியதாவது :-

    வாக்குச்சாவடிகள் ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றும்போது அதன் அருகில் இருக்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டும். பஸ் வசதி உட்பட அடிப்படை வசதிகள் அந்த வாக்குச்சாவடிக்கு இருக்கு மாறு செய்ய வேண்டும்.

    விளவங்கோடு தொகுதி க்குட்பட்ட உண்ணாமலை கடை பேரூராட்சி பகுதியில் இறந்த வாக்காளர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் உள்ளது. அதை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதுபோல் மாவட்டம் முழுவதும் இறந்தவர்கள் பெயர்களை வாக்கா ளர் பட்டியலில் இருந்து நீக்கினால் 80 முதல் 90 சதவீதம் வரை வாக்குப்பதிவு நடைபெறும். இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ளதால் தான் வாக்கு சதவீதம் நமது மாவட்டத்தில் குறைவாக இருந்து வருகிறது.

    பூச்சிவிளாகம்பகுதியில் உள்ள வாக்குச்சாவடியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கூறி னார்கள். கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் தற்போது 1695 வாக்குச்சாவ டிகள் உள்ளது. 1500 வாக்கா ளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை இரண்டாக பிரிக்க நட வடிக்கை எடுக்கப்பட்டு cள்ளது. அதன்படி பத்ம நாபபுரம் தொகுதியில் 3 வாக்குச்சாவடிகள் கூடு தலாக அமைக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து தற்போது 1698 வாக்கு சாவடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    கன்னியாகுமரி தொகு தியை பொறுத்த மட்டில் 310 வாக்குச்சாவடிகளும், நாகர்கோவிலில் 275 வாக்குச்சாவடிகளும், குளச்சலில் 300 வாக்குச்சா வடிகளும், பத்மநாப புரத்தில் 273 வாக்குச்சாவடிகளும், கிள்ளியூ ரில் 268 வாக்குச்சா வடிகளும், விளவங்கோட்டில் 272 வாக்குச்சாவடிகளும் தற்பொழுது உள்ளது.

    கன்னியாகுமரி தொகுதி யில் 3 வாக்குச்சாவடியும், நாகர்கோவில் தொகுதியில் 16 வாக்குச்சாவடியும், குளச்சல் தொகுதியில் 5 வாக்குச்சாவடியும், பத்மநாப புரத்தில் 10 வாக்குச்சாவடியும், விளவங்கோடு தொகுதியில் 28 வாக்குச்சாவடியும் , கிள்ளியூர் தொகுதியில் 2 வாக்குச்சாவடி என 64 வாக்குச்சாவடிகள் தற்பொ ழுது செயல்பட்டு வரும் இடத்திலிருந்து வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

    6 சட்டமன்ற தொகுதி களிலும் 22 வாக்குச்சாவடி களின் பெயர்களை மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது .

    அரசியல் கட்சி நிர்வாகிகள் வாக்குச்சாவடி மாற்றம் தொடர்பாக 2 நாட்களுக்குள் எழுத்து பூர்வமாக தகவல் கொடுத்தால் அந்த இடத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியன் கோட்டாட்சியர் சேது ராமலிங்கம் மற்றும் தேர்தல் தாசில்தார் சுசீலா, தாசில்தார்கள் ராஜேஷ், வினைதீர்த்தான், கண்ணன், அனிதா குமாரி, குமாரவேல், முருகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • முடங்கி கிடந்த முதுகுளத்தூர் முன்னேறிய தொகுதியாக மாறிவருகிறது என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசினார்.
    • கமுதி, முதுகுளத்தூர், கடலாடி பகுதிகள் நிரந்தர பாசன வசதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தேவர் கல்லூரியில் பிற்பட்டோர் நல மாணவியர் விடுதி திறப்பு விழா நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் தலைமை தாங்கினார். மக்கள் தொடர்பு அலுவலா் பாண்டி வரவேற்றர். மாணவியர் விடுதியை அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    முடங்கி கிடந்த முதுகுளத் தூர் தொகுதி முன்னேறிய தொகுதியாக மாறிவருகிறது. திராவிட மாடல் ஆட்சியில் அனைவரும் சமம். கட்சி பாகுபாடு இல்லாமல் மக்களின் தேவைகள் நிறை வேற்றப்பட்டு வருகின்றன. கமுதி மற்றும் முதுகு ளத்தூருக்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

    காவிரி குடிநீர் பிரச்சினை ஒரு ஆண்டில் முழுமையாக தீரும். பொது மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இங்கேயே ஒவ்வொரு வருக்கும் மாதம் ரூ.20 ஆயிரம் சம்பளம் கிடைக்கும் வகையில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.

    கமுதியில் பாலிடெக்னிக் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். கடலாடியில் தொழிற்பயிற்சி நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

    கமுதி, முதுகுளத்தூர், கடலாடி பகுதிகள் நிரந்தர பாசன வசதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேவர் கல்லூ ரியில் கூடுதல் பாடப்பி ரிவுகள் கொண்டுவரவும், காலி இடங்களை நிரப்பவும், புதிய கட்டிட வசதிகள் செய்து கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல், கமுதி பேரூராட்சி சேர்மன் அப்துல் வஹாப் சகாரணி, ஒன்றிய செயலாளர்கள் முதுகுளத்தூர்பூபதி மணி, கோவிந்தராஜ், கடலாடி ஆறுமுகவேல், சாயல்குடி குலாம் முகைதீன், ஜெயபால், மணலூர் ராமர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கல்லூரி முதல்வர் அருணாசலம் நன்றி கூறினார்.=

    • ஈரோடு இடைத்தேர்தல் அனைத்து அமைச்சர்களும் தொகுதியில் முகாமிட்டிருப்பது தவறான நடைமுறை என்று மாநில செயலாளர் கூறினார்.
    • அதானி குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் பொதுக் கூட்டத்தில் பேசுவதுபோல் பேசி உள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பால கிருஷ்ணன் இன்று நிருபர்க ளிடம் கூறியதாவது:-

    மத்தியில் அதானி ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரதமர் வெளிநாடுகளுக்கு செல்லும்போது அதானியை அழைத்து செல்கிறார். மோடி அரசு அதானிக்கு சலுகைகளை வாரி வழங்குகிறது. பாராளு மன்றத்தில் மோடி அதானி குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் பொதுக் கூட்டத்தில் பேசுவதுபோல் பேசி உள்ளார்.

    ஈரோடு இடைத்தேர்தலில் பிரசாரத்திற்காக அனைத்து அமைச்சர்களும் அங்கு முகாமிட்டுள்ளனர். இந்த நடைமுறையை கொண்டு வந்தது அ.தி.மு.க.தான். இதை தவிர்க்க வேண்டும்.

    தமிழகத்தில் பெண்கள் காப்பகத்தில் விதிமுறைகள் மீறப்படுகின்றன. மேலும் அங்கு பாலியல் தொல்லை களும் கொடுக்கப்படுகிறது. எனவே தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காப்பகங்களை அரசே பொறுப்பேற்று நடத்த வேண்டும். ஈரோடு இடைத்தேர்தலில் மதசார்பற்ற கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெறுவார்.

    நிலக்கரி ஆலைகளால் கடுமையாக மாசு ஏற்படுகி றது. ஆனால் அதைபற்றி எதுவும் சொல்லாமல் பட்டாசு ஆலைகளை குறைகூறுவது தவறான நடைமுறை. விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழிலை பாதுகாக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மாவட்ட செயலாளர் அர்ச்சுணன், மாநிலக்குழு உறுப்பினர் பாலசுப்பிர மணியன், சி.ஐ.டி.யூ. செயலாளர் தேவா ஆகி யோர் உடன் இருந்தனர்.

    • சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள 10 முக்கியமான கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை 15 நாட்களில் மாவட்ட கலெக்டரிடம் வழங்க வேண்டும்
    • சாலையின் நடுவே பதிக்கப்பட்டு உள்ள ராட்சத சிமெண்டு குழாய்கள் நீரின் அழுத்தம் தாங்காமல் உடைந்து சாலையில் அதிக மான இடங்களில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது.

    கன்னியாகுமரி :

    தி.மு.க. அரசு பொறுப் பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி 'உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்' திட்டத்தை விரிவுபடுத்துவது தொடர்பாக, சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள 10 முக்கியமான கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை 15 நாட்களில் மாவட்ட கலெக்டரிடம் வழங்க வேண்டும் என்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அவர் கடிதம் எழுதினார்.

    இதனையடுத்து கிள்ளியூர் தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள 10 முக்கியமான கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார், குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்திடம் வழங்கினார். மனுவில் கூறப்பட்டுள்ள முக்கியமான கோரிக்கைகள் விவரம் வருமாறு:-

    குமரி மாவட்டத்தில் சுனாமி கூட்டுக் குடிநீர் திட்டம், குழித்துறை தாமிரபரணி ஆற்றை நீர் ஆதாரமாக கொண்டு கடந்த 2006 -ம் ஆண்டு அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்காக கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி வழியாக, ஐரேனிபுரம் முதல் சடையன்குழி, கிள்ளி யூர், பாலூர், கருங்கல், மத்திகோடு, திக்கணங்கோடு, திங்கள்நகர் வரை சாலையின் நடுவே பதிக்கப்பட்டு உள்ள ராட்சத சிமெண்டு குழாய்கள் நீரின் அழுத்தம் தாங்காமல் உடைந்து சாலையில் அதிகமான இடங்களில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது.

    இதன் காரணமாக விபத்துகள் ஏற்பட்டு பல உயிரிழப்புகளும் ஏற்பட்டு உள்ளன. எனவே, விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க சாலையின் நடுவே பாதிக்கப்பட்டு உள்ள ராட்சத சிமெண்டு குழாய்களுக்கு பதிலாக டி.ஐ. பைப்புகளை சாலையின் ஓரமாக பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    2019 -ம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட கிள்ளியூர் தாலுகாவிற்குட்பட்ட அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். ஒரு தாலுகாவிற்கு ஒரு நீதிமன்றம் இருக்கவேண்டும் என்ற அரசு விதிமுறைப்படி கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வருவாய் கிராமங்களையும், காவல் நிலையங்களையும் உட்படுத்தி மாவட்ட உரிமை யியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அமைத்து தர வேண்டும்.

    ஆறுதேசம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பழுதடைந்துள்ள பழைய கட்டிடமான ஆய்வக பிரிவு கட்டிடம், புற நோயாளிகள் கட்டிடம் மற்றும் குடும்ப நலப்பிரிவு கட்டிடம் ஆகிய கட்டிடங்களை அகற்றி அந்த இடத்தில் 30 -படுக்கை வசதிகள் கொண்ட கட்டிடம் அமைக்க வேண்டும்.

    பெரும்பாலான மக்கள் பயன்படுத்துகின்ற கருங்கல் பேருந்து நிலையத்தை ஆய்வு மேற்கொண்டு விரி வாக்கம் செய்து நவீன மயமாக்கப்பட்ட பேருந்து நிலையமாக மறு சீரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குப்பட்ட மீனவ மக்கள் பயன்பெறும் வகை யில் மீன்வளக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை மனுவில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

    ×