என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பருவமழை"

    • தொடர்ந்து 5 மணி ேநரம் இடைவிடாது கனமழை பெய்தது. பல இடங்களில் சாலைகளில் முட்டளவு தண்ணீர் தேங்கியது. தஞ்சை காந்திஜி சாலையில் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
    • புதுஆற்றுபாலம் அருகே ராணிவாய்க்கால் தண்ணீர் வேகமாக வந்ததால் ஆற்றங்கரையோரத்தில் அரிப்பு ஏற்பட்டது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக லேசான சாரல் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் தஞ்சையில் நேற்று பகலில் மழை இன்றி வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது.

    மாலை 4 மணியளவில் குளிர்ந்த காற்று வீச தொடங்கி சிறிது நேரத்தில் மழை கொட்ட தொடங்கியது.

    நேரம் செல்ல செல்ல மழையின் வேகம் அதிகரித்தது. மேலும் இடி- மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது.

    தொடர்ந்து 5 மணி ேநரம் இடைவிடாது கனமழை பெய்தது. பல இடங்களில் சாலைகளில் முட்டளவு தண்ணீர் தேங்கியது. தஞ்சை காந்திஜி சாலையில் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

    சேவப்பநாயக்கன்வாரி வடகரையில் 12-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    புதுஆற்றுபாலம் அருகே ராணிவாய்க்கால் தண்ணீர் வேகமாக வந்ததால் ஆற்றங்கரையோரத்தில் அரிப்பு ஏற்பட்டது.

    இதன் காரணமாக அருகில் இருந்த மின்கம்பம் சாய்ந்தது. தகவல் அறிந்து கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், ஆணையர் சரவணக்குமார், மேயர் சண்.ராமநாதன்மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். கலெக்டர் உத்தரவுப்படி பணிகள் துரிதப்படுத்தப்பட்டு மின்கம்பம் சீரமைக்கப்பட்டது.

    தொடர்ந்து இடைவிடாது பெய்த மழையால் தஞ்சையில் எங்கு பார்த்தாலும் வெள்ள க்காடாக காட்சியளித்தது. சாலைகளில் தண்ணீர் ெபரும ளவில் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு இடையே சென்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    இந்த கனமழைக்கு ஒரு கூரைவீடு பகுதி அளவில் சேதமடைந்தது. 2 கால்நடைகள் இறந்தன.

    இதேப்போல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்தது. தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில் 409.90 மி.மீ. மழை பதிவாகியது.

    அதிகபட்சமாக தஞ்சையில் 177.50 மி.மீ. பெய்தது.இன்று காலை 9 மணி வரை தஞ்சையில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது.

    தொடர்ந்து நேற்று போல் இன்றும் கனமழை பெய்வதற்கான அறிகுறி தென்படுகிறது.

    தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை 9 மணியுடள் முடிவடைந்த மழையின் அளவு மி.மீ. வருமாறு:-

    தஞ்சாவூர்-177.50, நெய்வாச ல்தென்பாதி-72.60, வல்லம்-40, குருங்குளம்-34.60, கீழணை-28, அய்யம்பேட்டை-16, பூதலூர்-10.80.

    • நகராட்சியின் சார்பில்க லைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ. 58 லட்சம் செலவில் தூர்வாரப்பட்டு சுற்றுச்சுவர் கட்டப்பட்டு குளத்தை அழகுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
    • ஆறுகாட்டுக்குறை பகுதிக்கு செல்லும் வழியில் வைதூக்கையம்ஆலயத்தின் எதிர் புறத்தில் நகராட்சி க்கு சொந்தமான குளம் அமை ந்துள்ளது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சி சார்பில் வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ளும் விதமாக தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக நகராட்சி முழுவதும் 35 கிலோமீட்டர் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு மழை பெய்தவுடன் தண்ணீர் உடனுக்குடன் வடியும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இந்த வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை நகரமன்ற தலைவர் புகழேந்தி , நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகராட்சி பொறியாளர் இப்ராஹிம், ஓவர்சீயர் குமரன் ஆகியோர் ஆய்வு செய்தனர் .

    மேலும் ஆறுகாட்டுக்குறை பகுதிக்கு செல்லும் வழியில் வைதூக்கையம்ஆலயத்தின் எதிர் புறத்தில் நகராட்சி க்கு சொந்தமான குளம் அமை ந்துள்ளது.

    நாள்தோறும் நூற்றுக்க ணக்கான மக்கள் குளிப்பதற்கு பயன்படும் இந்த குளம் மாசுபட்டு இருந்தது. அதனை தற்போது நகராட்சியின் சார்பில்க லைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ. 58 லட்சம் செலவில் தூர்வாரப்பட்டு சுற்றுச்சுவர் கட்டப்பட்டு குளத்தை அழகுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    தற்போது குளம்தூர்வா ரப்பட்ட பின்பு மிகுந்த தூய்மையாகவு ம்பெருவாரியான மீனவ மக்கள் குளிப்பதற்கும் பயன்பட்டு வருகிறது இந்த குளக்கரையில் நடைபெறும் பணியினையும் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்கும் படியும் கேட்டுக் கொண்டனர். 

    • தூத்துக்குடி மாநகர் முழுவதும் அமைச்சர், மேயர், அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
    • மழைநீர் தேங்காதவாறு பாதுகாக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் உத்தரவிட்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மழையின் காரணமாக மாநகராட்சி பகுதியில் பொதுமக்கள் பாதிக்காத வகையில் பல்வேறு கட்ட முன்னெச் சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கடந்த ஆண்டு பாதிப்பை போல் இந்த ஆண்டு மழைகாலங்களில் அது போன்ற நிலை வரக்கூடாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி மாநகராட்சி பகுதி முழுவதும் புதிய கால்வாய் சாலை வசதி என கட்டமைப்பு பணிகளை விரைவாக செய்துகொடுக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதை மாநகர் முழுவதும் அதிகாரிகள் உள்பட அமைச்சர், மேயர் கண்காணித்து வருகின்றனர்.

    50-வது வார்டு என்.ஜி.ஓ. காலனி கிழக்கு தாழ்வான பகுதிகளில் மழைநீர் கடந்த காலங்களில் தேங்கியதையடுத்து இந்த ஆண்டு அது போல் நடைபெறாமல் பாதுகாத்து கொள்ளும் வகையில் 50-வது வார்டு கவுன்சிலர் சரவணக்குமாரிடம் பகுதி சபா கூட்டத்தின் போது பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதனையடுத்து வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பகுதியில் சாலையை உயர்த்துவது, மணல் சரல் போன்றவற்றை நிரப்பி மழைநீர் தேங்காதவாறு பாதுகாக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு பணியை தொடங்கி வைத்தார்.

    ஆய்வின் போது மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர் சரவணக்குமார், வட்டப்பிரதிநிதிகள் வேல்மணி, ராஜேந்திரன், செல்வம், ராஜேஷ், சங்கரநாராயணன், பகுதி சபா உறுப்பினர் சிவசங்கர், முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார் மற்றும் அல்பட் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • பாலத்தின் அருகில் தற்போது பெய்த வடகிழக்கு பருவ மழையினால் அடியோடு தார் சாலையை பெயர்ந்து தண்ணீரில் கலந்து சென்றுவிட்டது.
    • இதனை சீரமைத்து தர வேண்டும என 10க்கும் மேற்பட்ட கிராமத்தில் உள்ள விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே காணி மேடு கிராமம் மண்டகப்பட்டு கிராமம் இடையே தரைப்பாலம் அமைந்துள்ளது. பாலத்தின் அருகில் தற்போது பெய்த வடகிழக்கு பருவ மழையினால் அடியோடு தார் சாலையை பெயர்ந்து தண்ணீரில் கலந்து சென்று விட்டது. இதனால் இரு சக்கர வாகனம் மற்றும் லாரிகள் டிராக்டர்கள் நடந்து செல்லும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கடும் அவதி அடைந்து வருகிறார்கள் எனவே இதனை சீரமைத்து தர வேண்டும என 10க்கும் மேற்பட்ட கிராமத்தில் உள்ள விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • மாண்டஸ் புயல் காரணமாக வேகவதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தினால் இந்த பாலப்பகுதி முழுவதுமாக சேதம் அடைந்தது.
    • கன்னிகாபுரம் பகுதி மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை சரி செய்யப்படாமல் உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் முருகன் காலனிக்கு செல்லும் கன்னிகாபுரம் பகுதியில் வேகவதி ஆற்று தரைப்பாலம் உள்ளது. பருவமழை மற்றும் மாண்டஸ் புயல் காரணமாக வேகவதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தினால் இந்த பாலப்பகுதி முழுவதுமாக சேதம் அடைந்தது. இதனால் கன்னிகாபுரம் மக்கள் சுற்றுப்பாதையை பயன்படுத்தி வந்தனர்.

    இந்நிலையில் பருவமழை முடிந்த பின்னரும் சேதம் அடைந்த வேகவதி ஆற்றுத்தரைப் பாலம் இன்னும் சீரமைக்கப்படவில்லை. இது குறித்து கன்னிகாபுரம் பகுதி மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை சரி செய்யப்படாமல் உள்ளது. சேதம் அடைந்த இந்த தரை பாலத்தின் வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர். பொதுமக்களும் நீண்ட தூரம் சுற்றி செல்வதற்கு பதிலாக சேதமடைந்த இப்பாலம் வழியாக ஆபத்தான முறையில் செல்வதினால் அடிக்கடி கீழே விழுந்து காயம் அடைந்து வருகிறார்கள். எனவே சேதம் அடைந்த இந்த பாலத்தை உடனே சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • ஜூன் மாதம் முதல் வாரத்துக்கு பின்னரே பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • பருவ மழையானது தமிழகத்தில் சராசரி அளவிலேயே பெய்யும் என கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் கணித்துள்ளது.

    கோவை:

    தென்மேற்கு பருவமழை ஆண்டு தோறும் மே இறுதியிலோ அல்லது ஜூன் முதல் வாரத்திலோ தொடங்கும். இந்த மழையானது செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும்.

    கேரள மாநிலத்தில் அதிகம் பெய்யும் தென் மேற்கு பருவமழை அதனை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் கொட்டித்தீர்க்கும். இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் வாரத்துக்கு பின்னரே பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் பருவ மழையானது தமிழகத்தில் சராசரி அளவிலேயே பெய்யும் என கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் கணித்துள்ளது. இதுகுறித்து வேளாண்மை பல்கலைக்கழகம் கூறியிருப்பதாவது:-

    எதிர்வரும் தென்மேற்கு பருவமழை காலத்துக்கான (ஜூன் முதல் செப்டம்பர்) மழை பற்றிய முன்னறிவு செய்வதற்காக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம், பயிர் மேலாண்மை இயக்கம் ஆகியவை ஆராய்ச்சி மேற்கொண்டன.

    இதற்காக மார்ச், ஏப்ரல் மாதங்களில் பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடல் பகுதியில் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை, தென் மண்டல காற்றழுத்த குறியீடு ஆகியவற்றை உபயோகித்து ஆஸ்திரேலிய நாட்டில் இருந்து பெறப்பட்ட மழை மனிதன் என்னும் கணினி கட்டமைப்பை கொண்டு 2023-ம் ஆண்டுக்கான தென் மேற்கு பருவமழை முன்னறிவிப்பு பெறப்பட்டது.

    அதன்படி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சராசரி அளவில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • சேதமடைந்துள்ள நீர் நிலைப்பகுதிகளை சீரமைப்பது குறித்தும் கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.
    • அடிப்படை வசதிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட் டது.

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்டத்தில் எதிர்வரும் தென்மேற்கு பருவமழை காலத்தை எதிர்கொள்ள தயார்நிலையில் மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், நீர் நிலைகள் அருகில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது, சேதமடைந்துள்ள நீர் நிலைப்பகுதிகளை சீரமைப்பது குறித்தும் கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுப் பணித்துறை, நெடுஞ்சா லைத்துறை, நீர்வளத்துறை மற்றும் உள்ளாட்சி துறை களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆறுகள், கால்வாய்கள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளை சீரமைப்பது குறித்து துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் பெருவெள்ள காலங்களில் பாதிப்பு ஏற்படக்கூடிய சானல் மற்றும் குளக்கரைகளை சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மண்டல அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வட்டத்திற்குட்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப் படக்கூடிய இடங்களை ஆய்வு செய்யவும், மழை வெள்ளத்தால் பாதிக்கப் படக்கூடிய இடங்களில் இருந்து வெளியேற்றி மக்கள் தங்கும் இடங்களை ஆய்வு மேற்கொள்ளவும், சார் நிலை அலுவலர்களின் அலைபேசி எண்களை சரி பார்த்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய இடங்களை அலுவலர்களு டன் ஆய்வு செய்யவும், நீர்வழி தடங்களில் ஏற்பட்டுள்ள தடைகளை அகற்றிட ஏற்கனவே நீர் ஆதாரத் துறை அலுவ லர்களுக்கு வழங்கப்பட்ட அறிவுரைகள் கடை பிடிக்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்திடவும் உள்ளாட்சி அமைப்புகளின் இருப்பில் இருக்கும் நீர் வெளியேற்றும் பம்புகளின் ஆற்றல் 15 குதிரை திறன் அளவுக்கு மேல் இருப்ப தையும் அவற்றின் செயல் பாட்டுத்திறனையும் ஆய்வு செய்திடவும் மண்டல அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பருவமழை காலங்களில் சீரமைப்பு பணிகளுக்கு தேவையான மணல் மூட்டைகள், மரம் அறுக்கும் எந்திரங்கள், ஜே.சி.பி., மின்மோட்டார் போன்றவற்றை போதுமான அளவில் தயார்நிலையில் வைக்கவும், தற்காலிக தங்கும் முகாம்களை உடனடியாக பார்வையிட்டு அவற்றின் போதிய அடிப்படை வசதிகள் உள்ள னவா? என்பதை உறுதி செய்யவும், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தர விடப்பட்டது.

    அதனடிப்படையில் கிள்ளியூர் வட்டத்திற்குட் பட்ட கலிங்கராஜபுரம் அரசு ஆதிதிராவிடர் நலத்துறை நடுநிலைப்பள்ளி மற்றும் ஏழுதேசப்பற்று அரசு மேல்நிலைப்பள்ளி வளாகங்களில் பேரிடர் காலங்களில் நீர்நிலைப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை பத்திரமாக மீட்டு தங்க வைப்பதற்கான அடிப்படை வசதிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட் டது.

    மேலும் பணமுகம் வழியாக ஓடும் கால்வாய் தாமிரபரணி ஆற்றில் கலக்கும் போது கரையோரப்ப குதிகளில் தண்ணீர் பெருகுவதை தவிர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    அதனைத்தொடர்ந்து மங்காடு சப்பாத்து பாலத்தின் கீழ் அடைப் பட்டுள்ள கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்தி சீராக தண்ணீர் செல்ல வழிவகை செய்யுமாறு நெடுஞ் சாலைத்துறை, நீர்வளத்துறை, வருவாய்துறை உள்ளிட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு தாமிரபரணி ஆற்றுத்தண்ணீர் சென்றடையும் பகுதியான வைக்கலூர், பரக்காணி பகுதி கரையோரத்தில் குடியிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருப்பதற்கான சூழலை உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். கிள்ளியூர் தாசில்தார் அனிதாகுமாரி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • ஜூன் மாதம் இறுதியாகியும் ஒரு கனமழை கூட பெய்யவில்லை.
    • சிறுவாணி அணை, வறண்டு பாளம் பாளமாக காட்சியளிக்கிறது.

    கோவை,

    தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரையிலான நான்கு மாதங்கள் பெய்யும். தற்போது ஜூன் மாதம் கடைசி வாரத்துக்கு வந்த நிலையிலும், ஒரு கனமழை கூட கோவை மாவட்டத்தில் பெய்யவில்லை.

    அணைகள் வறண்டன

    கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணை, வறண்டு பாளம் பாளமாக காட்சியளிக்கிறது. அணை நீர்த்தேக்கப் பகுதியில் ஆங்காங்கே குட்டை குட்டையாக தேங்கியுள்ள தண்ணீரை சேகரித்து குடிநீர் வழங்கி வருகின்றனர்.

    மற்றொரு குடிநீர் ஆதாரமான பில்லூர் அணையிலும் மொத்த உயரம் 100 அடியில், 81 அடி உயரத்துக்கே தண்ணீர் இருக்கிறது. பாதிக்கும் மேல் சேறு நிரம்பியிருக்கும் இந்த அணையும், மழையை எதிர்பார்த்தே இருக்கிறது.

    இந்த பகுதியில் இருக்கும் பாசன அணைகளிலும் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. ஆழியாறு அணையில் 57 அடி (மொத்த நீர்த்தேக்க உயரம் 120 அடி), திருமூர்த்தி அணையில் 23 அடி (மொத்த உயரம் 60 அடி), பரம்பிக்குளத்தில் 15 அடி (மொத்த உயரம் 72 அடி) மட்டுமே தண்ணீர் இருக்கிறது.

    ஜூன் மாதத்தில் நேற்று வரை பெய்திருக்க வேண்டிய இயல்பு மழை, 137.2 மி.மீ., ஆகும். ஆனால், கண்ணாமூச்சி காட்டும் பருவக்காற்றால், இதுவரை 58.4 மி.மீ., மட்டுமே மழை பதிவாகியுள்ளது. இது, 57 சதவீதம் பற்றாக்குறை யாகும்.வரும் நாட்களிலும் மழை பெய்ய தவறினால் நிலைமை மிகவும் மோசமாகிவிடும் என்பதால் உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகிகள், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • பாசன குளங்கள் வறண்டது
    • பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 20.80 அடியாக சரிவு

    நாகர்கோவில், ஜூன்,28-

    குமரி மாவட்ட விவசாயிகள் பேச்சிபாறை, பெருஞ்சாணி அணைகளின் தண்ணீரை நம்பி சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்பொழுது மாவட்டம் முழுவதும் கன்னி பூ சாகுபடி நடைபெற்று வருகிறது.

    மாவட்டம் முழுவதும் 4 ஆயிரம் ஹெக்டேர் பரப்ப ளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1500 ஹெக்டோரில் சாகுபடி செய்ய விவசாயிகள் தயாராகி வருகிறார்கள். பூதப்பாண்டி,அருமநல்லூர், சுசீந்திரம், சுங்கான் கடை, தக்கலை பகுதிகளில் விவசாயிகள் நடவு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு சில இடங்களில் நேரடி நெல் விதைப்பணியும் நடந்து வருகிறது. ஒரு சில இடங்களில் களை எடுக்கும் பணியிலும் பெண்கள் ஈடுபட்டு உள்ளனர்.

    சாகுபடி பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கடைமடை பகுதி வரை தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். பேச்சிபாறை அணை பாசனத்திற்காக கடந்த 1-ந் தேதி திறக்கப்பட்டது. அணை திறக்கப்பட்டு இன்றுடன் 28 நாட்கள் ஆகியும் கடைமடை கடை வரம்பு பகுதி வரை தண்ணீர் செல்லாத நிலை உள்ளது.

    சானல்கள் தூர் வாரப்படாததால் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். தற்பொழுது சானல்கள் தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து பாசனத்திற்காக தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரு கிறது. இதனால் அணை களின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வருகிறது. பருவமழையும் பெய்யாமல் தொடர்ந்து கண்ணாமூச்சி காட்டி வருவதால் அணை களின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் இன்று காலை 20.80 அடியாக இருந்தது. அணைக்கு 27 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. பேச்சிபாறை அணை நீர்மட்டம் 36.49 அடியாக உள்ளது. அணைக்கு 487 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 718 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. 2 அணை களில் இருந்தும் வெளி யேற்றப்படும் தண்ணீர், தோவாளை சானல், அனந்தனார் சானல்களில் விடப்பட்டு வருகிறது. சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 10.56 அடியாகவும், சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 10.66 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 12.20 அடி யாகவும், மாம்பழத்துறையார் அணை நீர்மட்டம் 3.23 அடியாகவும் உள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாசன குளங்களும் த ண்ணீரின்றி காணப்படுகிறது. பெரும்பாலான குளங்கள் வறண்ட நிலையிலேயே உள்ளது. ஆனால் மலையோர பகுதிகளிலும், அணை பகுதிகளிலும் லேசாக மழை பெய்து வருகிறது.

    மற்ற இடங்களில் மழை இல்லாததால் நிலத்தடி நீர்மட்டமும் குறைய தொடங்கியுள்ளது. தென்மேற்கு பருவமழை கேரளாவில் பெய்ய தொடங்கியுள்ள நிலையில் குமரி மாவட்டத்தில் மழையை எதிர்நோக்கி வி வசாயிகள் காத்திருக்கி றார்கள். வருண பகவான் கை கொடுத்தால் மட்டுமே விவசாயம் செய்து உள்ள நெற்பயிர்களை காப்பாற்ற முடியும் என்றும் விவசாயி கள் தெரிவித்தனர்.

    • கோழிக்கோடு மாவட்டத்திற்கு வருகிற 5-ந்தேதி ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேரள பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை தாமதமாக தொடங்கி உள்ளது. இதனால் பரவலாக அனைத்து மாவட்டங்களி லும் மிதமான அளவு மழை பெய்து வருகிறது.

    தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அடுத்த 5 நாட் களுக்கு பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு, மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கண்ணூர் மற்றும் காசர் கோடு மாவட்டங்களுக்கு நாளை முதல் 5-ந்தேதி வரையிலும் எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம், கோழிக் கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு 4-ந்தேதியும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் 115 மில்லி மீட்டர் முதல் 204 மில்லி மீட்டர் வரை மழை பெய்யுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கோழிக்கோடு மாவட்டத்திற்கு வருகிற 5-ந்தேதி ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த மாவட்டத்தில் சிவப்பு எச்சரிக்கை போன்று மிக கனமழை பெய்யுமென்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. அங்கு 204.4 மில்லி மீட்டருக்கு மேல் மழை பெய்யுமென்று எதிர்பார்க் கப்படுகிறது.

    இதேபோல் பத்தினம் திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கனமழையின்போது, பல இடங்களில் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேரள பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது.

    அவசரகால அறிவுறுத்தல் களை பின்பற்றுமாறும், கடல் தாக்குதலுக்கு உள்ளா கும் பகுதிகளில் வசிப்பவர்கள் நிவாரண முகாம்களுக்கு செல்ல தயாராக இருக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    மீனவர்கள் வருகிற 5-ந்தேதி வரை கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவு கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டுமென அறிவுறுத்தப் பட்டுள்ளது. கடற்கரைகளில் மணிக்கு 40 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், தளவாட பொருட்கள் தயார் நிலையில் உள்ளன.
    • மீட்பு பணிகளுக்காக வாகனங்கள் மற்றும் இதர கருவிகளை தயார் நிலையில் வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

    உடுமலை:

    உடுமலை ,பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், பருவமழை இன்னும் துவங்கவில்லை. மழை பொழிவு துவங்கினால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் நீர் புகுவது, வெள்ளத்தில் சிக்கும் சம்பவங்களும் நடக்கும். எனவே மழை காலங்களில் இதுபோன்ற பிரச்னைகளை எதிர்கொள்ளவும், பொதுமக்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லவும், தீயணைப்புத்துறை வாயிலாக நடவடிக்கை எடுக்க ஆயத்தமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் கூறுகையில், பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், தளவாட பொருட்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும் தீயணைப்பு வீரர்கள் அடங்கிய குழுவினரும் மீட்பு பணியில் ஈடுபட தயார் நிலையில் உள்ளனர். மழை காலத்தில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம் என்றனர்.

    மழை பெய்யும் போது மரத்தடியில் நிற்பதை தவிர்க்க வேண்டும். நீர்வரத்தை அறியாமல் ஆறு, ஓடைகளில் நிற்பதையும், நீர்வழித்தடங்களில் வாகனங்களில் கடந்து செல்வதையும் தவிர்க்க வேண்டும். வீடுகளில் ஈரமான சுவற்றில் உள்ள மின் சுவிட்ச்களை பாதுகாப்பாக கையாள வேண்டும். இதில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    தென்மேற்கு பருவமழை காலத்தில், பாதிப்புகளை தவிர்க்கும் வகையில், மீட்பு பணிகளுக்காக வாகனங்கள் மற்றும் இதர கருவிகளை தயார் நிலையில் வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி உடுமலை தீயணைப்பு மீட்பு நிலையத்தில், மீட்பு பணிகளுக்கான வாகனங்கள் மற்றும் கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    தீயணைப்பு நிலைய அலுவலர் கோபால் மற்றும் பணியாளர்கள், கருவிகளின் நிலை குறித்து ஆய்வு செய்து அவற்றை தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்தனர். 

    • ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை துவங்காமல் வறட்சியான காற்றும், அதிக வெப்பமும் நிலவியது.
    • தென்னை மரங்களுக்கும் போதிய தண்ணீர் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    குடிமங்கலம்:

    குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள 23 ஊராட்சிகளில் 50க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. ஒன்றிய மற்றும் ஊராட்சி நிர்வாகங்களின் கட்டுப்பாட்டிலுள்ள இக்குளங்களுக்கு பருவமழை காலங்களில் நீர்வரத்து இருக்கும். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் குளங்கள் நிரம்பி உபரி நீர் வெளியேற்ற ப்பட்டது. இந்நிலையில் நடப்பாண்டு கோடை கால மழை பெய்யவில்லை.

    ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை துவங்காமல் வறட்சியான காற்றும், அதிக வெப்பமும் நிலவியது.இதனால் குளங்களில் நிலத்தடி நீர் மட்டம் வேகமாக குறைய துவங்கியது. தற்போது பொன்னேரி, கோட்டமங்கலம், குடிமங்கலம் உள்ளிட்ட பெரும்பாலான குளங்கள், தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது.கடந்த சில நாட்களாக சாரலாக பெய்த தென்மேற்கு பருவமழையும் இடைவெளி விட்டுள்ளது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    குடிமங்கலம் வட்டாரத்தில் 4 ஆண்டுகளுக்கு பிறகு, கோடை கால மழை மற்றும் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாமல் வறட்சி துவங்கியுள்ளது. கிணறு மற்றும் போர்வெல்களில் தண்ணீர் வெகுவாக குறைந்துள்ளது. கோடை கால மழையை எதிர்பார்த்து விதைப்பு செய்யப்பட்ட மானாவாரி பயிர்கள் கருகி வருகிறது.

    தென்னை மரங்களுக்கும் போதிய தண்ணீர் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பருவமழை தீவிரமாக பெய்யாவிட்டால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். ஆடிப்பட்ட விதைப்புக்கு முன் மழை பெய்யும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர். 

    ×