search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பருவமழை"

    • பாலத்தின் அருகில் தற்போது பெய்த வடகிழக்கு பருவ மழையினால் அடியோடு தார் சாலையை பெயர்ந்து தண்ணீரில் கலந்து சென்றுவிட்டது.
    • இதனை சீரமைத்து தர வேண்டும என 10க்கும் மேற்பட்ட கிராமத்தில் உள்ள விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே காணி மேடு கிராமம் மண்டகப்பட்டு கிராமம் இடையே தரைப்பாலம் அமைந்துள்ளது. பாலத்தின் அருகில் தற்போது பெய்த வடகிழக்கு பருவ மழையினால் அடியோடு தார் சாலையை பெயர்ந்து தண்ணீரில் கலந்து சென்று விட்டது. இதனால் இரு சக்கர வாகனம் மற்றும் லாரிகள் டிராக்டர்கள் நடந்து செல்லும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கடும் அவதி அடைந்து வருகிறார்கள் எனவே இதனை சீரமைத்து தர வேண்டும என 10க்கும் மேற்பட்ட கிராமத்தில் உள்ள விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • தூத்துக்குடி மாநகர் முழுவதும் அமைச்சர், மேயர், அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
    • மழைநீர் தேங்காதவாறு பாதுகாக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் உத்தரவிட்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மழையின் காரணமாக மாநகராட்சி பகுதியில் பொதுமக்கள் பாதிக்காத வகையில் பல்வேறு கட்ட முன்னெச் சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கடந்த ஆண்டு பாதிப்பை போல் இந்த ஆண்டு மழைகாலங்களில் அது போன்ற நிலை வரக்கூடாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி மாநகராட்சி பகுதி முழுவதும் புதிய கால்வாய் சாலை வசதி என கட்டமைப்பு பணிகளை விரைவாக செய்துகொடுக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதை மாநகர் முழுவதும் அதிகாரிகள் உள்பட அமைச்சர், மேயர் கண்காணித்து வருகின்றனர்.

    50-வது வார்டு என்.ஜி.ஓ. காலனி கிழக்கு தாழ்வான பகுதிகளில் மழைநீர் கடந்த காலங்களில் தேங்கியதையடுத்து இந்த ஆண்டு அது போல் நடைபெறாமல் பாதுகாத்து கொள்ளும் வகையில் 50-வது வார்டு கவுன்சிலர் சரவணக்குமாரிடம் பகுதி சபா கூட்டத்தின் போது பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதனையடுத்து வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பகுதியில் சாலையை உயர்த்துவது, மணல் சரல் போன்றவற்றை நிரப்பி மழைநீர் தேங்காதவாறு பாதுகாக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு பணியை தொடங்கி வைத்தார்.

    ஆய்வின் போது மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர் சரவணக்குமார், வட்டப்பிரதிநிதிகள் வேல்மணி, ராஜேந்திரன், செல்வம், ராஜேஷ், சங்கரநாராயணன், பகுதி சபா உறுப்பினர் சிவசங்கர், முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார் மற்றும் அல்பட் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • நகராட்சியின் சார்பில்க லைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ. 58 லட்சம் செலவில் தூர்வாரப்பட்டு சுற்றுச்சுவர் கட்டப்பட்டு குளத்தை அழகுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
    • ஆறுகாட்டுக்குறை பகுதிக்கு செல்லும் வழியில் வைதூக்கையம்ஆலயத்தின் எதிர் புறத்தில் நகராட்சி க்கு சொந்தமான குளம் அமை ந்துள்ளது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சி சார்பில் வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ளும் விதமாக தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக நகராட்சி முழுவதும் 35 கிலோமீட்டர் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு மழை பெய்தவுடன் தண்ணீர் உடனுக்குடன் வடியும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இந்த வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை நகரமன்ற தலைவர் புகழேந்தி , நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகராட்சி பொறியாளர் இப்ராஹிம், ஓவர்சீயர் குமரன் ஆகியோர் ஆய்வு செய்தனர் .

    மேலும் ஆறுகாட்டுக்குறை பகுதிக்கு செல்லும் வழியில் வைதூக்கையம்ஆலயத்தின் எதிர் புறத்தில் நகராட்சி க்கு சொந்தமான குளம் அமை ந்துள்ளது.

    நாள்தோறும் நூற்றுக்க ணக்கான மக்கள் குளிப்பதற்கு பயன்படும் இந்த குளம் மாசுபட்டு இருந்தது. அதனை தற்போது நகராட்சியின் சார்பில்க லைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ. 58 லட்சம் செலவில் தூர்வாரப்பட்டு சுற்றுச்சுவர் கட்டப்பட்டு குளத்தை அழகுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    தற்போது குளம்தூர்வா ரப்பட்ட பின்பு மிகுந்த தூய்மையாகவு ம்பெருவாரியான மீனவ மக்கள் குளிப்பதற்கும் பயன்பட்டு வருகிறது இந்த குளக்கரையில் நடைபெறும் பணியினையும் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்கும் படியும் கேட்டுக் கொண்டனர். 

    • தொடர்ந்து 5 மணி ேநரம் இடைவிடாது கனமழை பெய்தது. பல இடங்களில் சாலைகளில் முட்டளவு தண்ணீர் தேங்கியது. தஞ்சை காந்திஜி சாலையில் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
    • புதுஆற்றுபாலம் அருகே ராணிவாய்க்கால் தண்ணீர் வேகமாக வந்ததால் ஆற்றங்கரையோரத்தில் அரிப்பு ஏற்பட்டது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக லேசான சாரல் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் தஞ்சையில் நேற்று பகலில் மழை இன்றி வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது.

    மாலை 4 மணியளவில் குளிர்ந்த காற்று வீச தொடங்கி சிறிது நேரத்தில் மழை கொட்ட தொடங்கியது.

    நேரம் செல்ல செல்ல மழையின் வேகம் அதிகரித்தது. மேலும் இடி- மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது.

    தொடர்ந்து 5 மணி ேநரம் இடைவிடாது கனமழை பெய்தது. பல இடங்களில் சாலைகளில் முட்டளவு தண்ணீர் தேங்கியது. தஞ்சை காந்திஜி சாலையில் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

    சேவப்பநாயக்கன்வாரி வடகரையில் 12-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    புதுஆற்றுபாலம் அருகே ராணிவாய்க்கால் தண்ணீர் வேகமாக வந்ததால் ஆற்றங்கரையோரத்தில் அரிப்பு ஏற்பட்டது.

    இதன் காரணமாக அருகில் இருந்த மின்கம்பம் சாய்ந்தது. தகவல் அறிந்து கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், ஆணையர் சரவணக்குமார், மேயர் சண்.ராமநாதன்மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். கலெக்டர் உத்தரவுப்படி பணிகள் துரிதப்படுத்தப்பட்டு மின்கம்பம் சீரமைக்கப்பட்டது.

    தொடர்ந்து இடைவிடாது பெய்த மழையால் தஞ்சையில் எங்கு பார்த்தாலும் வெள்ள க்காடாக காட்சியளித்தது. சாலைகளில் தண்ணீர் ெபரும ளவில் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு இடையே சென்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    இந்த கனமழைக்கு ஒரு கூரைவீடு பகுதி அளவில் சேதமடைந்தது. 2 கால்நடைகள் இறந்தன.

    இதேப்போல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்தது. தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில் 409.90 மி.மீ. மழை பதிவாகியது.

    அதிகபட்சமாக தஞ்சையில் 177.50 மி.மீ. பெய்தது.இன்று காலை 9 மணி வரை தஞ்சையில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது.

    தொடர்ந்து நேற்று போல் இன்றும் கனமழை பெய்வதற்கான அறிகுறி தென்படுகிறது.

    தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை 9 மணியுடள் முடிவடைந்த மழையின் அளவு மி.மீ. வருமாறு:-

    தஞ்சாவூர்-177.50, நெய்வாச ல்தென்பாதி-72.60, வல்லம்-40, குருங்குளம்-34.60, கீழணை-28, அய்யம்பேட்டை-16, பூதலூர்-10.80.

    • பருவ மழையை முன்னிட்டு திருவாடானை பகுதியில் விவசாய பணிகள் தீவிரமடைந்துள்ளது.
    • 42 ஆயிரத்து 500 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளான திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய பகுதிகளில் ஏராளமானோர் விவசாய பணிகளை செய்து வருகின்றனர். தற்போது ஐப்பசி மாதம் வருவதையொட்டி பருவமழை பெய்யும் என எதிர்பார்த்து அந்தப்பகுதியில் விவசாய ப்பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

    தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள 42 ஆயிரத்து 500 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. திருவாடானை பகுதியில் 26 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு விவசாயப்பணிகள் நடந்து வருகின்றன. இதுகுறித்து விவசாயி கடுக்களுர் துரைப்பாண்டி கூறுகையில், பொதுவாக ஆடியில் விதை விதைப்பார்கள்.

    இந்தப்பகுதி வானம் பார்த்த பூமியாக இருப்பதாலும், பருவ மாற்றம் காரணமாகவும் ஆவணி, புரட்டாசி மாதங்களில் விதைக்கிறார்கள். தற்போது பெய்த மழையில் சில இடங்களில் பயிர் முளைத்துள்ளது. களைக்கொல்லி தெளிக்க ப்பட்டும், ஸ்பிரே செய்யப்பட்டும் வருகிறது. அடுத்த மழைப்பொழிவை எதிர்பார்த்து உரம் போடப்பட்டு வருகிறது. இந்த வருடம் பருவமழை கைகொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் விவசாயப்பணிகளை தொடங்கியுள்ளோம் என்றார்.

    • கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள குளங்களில் தேவையான தூர்வாரும் பணிகள்
    • பள்ளிகள் மற்றும் பிற பகுதிகளில் நிற்கும் மரங்களை சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் அகற்றப்பட்டதை உறுதி செய்ய அனைத்து வட்டாட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட் டத்தில் எதிர்வரும் வட கிழக்கு பருவமழை காலத்தை எதிர்கொள்ள தயார் நிலையில் மேற் கொள்ள வேண்டிய முன் னெச்சரிக்கை நடவ டிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள பிரெய்லி கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள குளங்களில் தேவையான தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்கவும், பெருவெள்ள காலங்களில் பாதிப்பு ஏற்படக் கூடிய சானல் மற்றும் குளக்க ரைகளை சீரமைக் கும் பணி களை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

    கடலோரப் பகுதிகளில் மற்றும் வெள்ள அபாய பகுதிகளில் பாதிக்கப்படும் நபர்களை மீட்க தேவையான மீட்பு உபகரணங்களை தயார்நிலையில் வைக்க மீன்வளத்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு தெரிவிக்கப் பட்டது. மேலும் பொது மக்களின் உயிருக்கும் உடமைக்கும் ஆபத்தாக நெடுஞ்சாலைகள், பள்ளிகள் மற்றும் பிற பகுதிகளில் நிற்கும் மரங்களை சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் அகற்றப்பட்டதை உறுதி செய்ய அனைத்து வட்டாட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் பருவமழை காலங்களில் சீரமைப்பு பணிகளுக்கு தேவையான மணல் மூட்டைகள், மரம் அறுக்கும் இயந்திரங்கள், ஜேசிபி. மின்மோட்டார் போன்றவற்றை போதுமான அளவில் தயார்நிலையில் வைக்கவும், தற்காலிக தங்கும் முகாம்களை உடனடியாக பார்வையிட்டு அவற்றின் போதிய அடிப் படை வசதிகள் உள்ள னவா என்பதை உறுதி செய்யவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

    பருவமழை மற்றும் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் ஆறு மற்றும் கடலோரப் பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கவும், சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை மேற்படி பகுதிகளுக்கு அழைத்துச்செல்லாமல் தற்காத்துக்கொள்ளவும், தன்னார்வலர்கள் தங்கள் பகுதிகளில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பொது மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, நாகர்கோவில் மாநக ராட்சி ஆணையர் ஆனந்த்மோகன், பத்மனாபபுரம் சப்-கலெக் டர் அலர்மேல்மங்கை, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

    ×