search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "108 ஆம்புலன்ஸ்"

    • ஆசாரிமேடு என்ற பகுதியில் சென்றபோது பூமணிக்கு பிரசவ வலி அதிகரித்தது.
    • நிலைமையை புரிந்து கொண்ட ஓட்டுனர் உதயகுமார் ஆம்புலன்சை பாதுகாப்பாக ஓரமாக நிறுத்தினார்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் தாலுக்கா, டி.என்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி பூமணி (29 வயது). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பூமணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

    இதை அடுத்து அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். டி.என்.பாளையம் 108 ஆம்புலன்ஸ் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பூமணியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபி செட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    ஆசாரிமேடு என்ற பகுதியில் சென்றபோது பூமணிக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையை புரிந்து கொண்ட ஓட்டுனர் உதயகுமார் ஆம்புலன்சை பாதுகாப்பாக ஓரமாக நிறுத்தினார். அவசரகால மருத்துவ உதவியாளர் பவித்ரா, கர்ப்பிணி பூமணிக்கு பிரசவம் பார்த்தார்.

    இதில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பிறகு தாய் மற்றும் குழந்தைக்கு முதலுதவியளித்து கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    மருத்துவமனையில் தாயும், சேயும் நலமாக உள்ளனர். தக்க நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் அவசரகால மருத்துவ உதவியாளர் பவித்ரா மற்றும் அவசர சிகிச்சை வாகன ஓட்டுனர் உதயகுமார் ஆகியோரின் இந்த செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

    • அன்னக்கொடிக்கு திடீரென பிரசவ வலி அதிகமானது.
    • 108 ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினருக்கு அன்னக்கொடி உறவினர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகா, கல்வாரை பகுதியை சேர்ந்தவர் தனபால். கூலி தொழிலாளி. இவரது மனைவி அன்னக்கொடி. கர்ப்பிணியான இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக தேவர் மலையில் இருந்து 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அன்னக்கொடி மற்றும் உறவினரை ஏற்றுக்கொண்டு பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது அன்னக்கொடிக்கு திடீரென பிரசவ வலி அதிகமானது.

    நிலைமையை புரிந்து கொண்ட அவசரகால மருத்துவ நுட்புநர் பூபதி சாலை ஓரமாக வாகனத்தை நிறுத்தி 108 ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தார். அப்போது அன்னக்கொடிக்கு பெண் குழந்தை பிறந்தது.

    பின்னர் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு தாயும், குழந்தையும் நன்றாக உள்ளனர். இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினருக்கு அன்னக்கொடி உறவினர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

    • கோவையில் 66 ஆம்புலன்ஸ்களில் 12 அதிநவீன ஆம்பு லன்ஸ், 4 பைக் ஆம்புலன்ஸ், 2 பச்சிளம் குழந்தைகளுக்கான ஆம்புலன்ஸ், வால்பாறையில் ஜீப் ஆம்புலன்ஸ் இயக்கப்பட்டு வருகிறது.
    • தமிழகத்தில் கடந்த ஆண்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பயன் அடைந்தவர்கள் பட்டியலில் திருவள்ளூர் மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது.

    கோவை:

    தமிழ்நாட்டில் 108 ஆம்புலன்ஸ் சேவை கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது 2000-க்கும் மேற்பட்ட 108 ஆம்பு லன்ஸ் வாகனங்கள் சேவையாற்றி வருகின்றன. குறுகிய மற்றும் நீண்ட தொலைவில் உள்ள மலை கிராமங்களிலும் இந்த சேவையை வழங்க ஜீப் மற்றும் பைக் ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    கோவை மாவட்டத்தில் 66 ஆம்புலன்ஸ்களில் 12 அதிநவீன ஆம்பு லன்ஸ், 4 பைக் ஆம்புலன்ஸ், 2 பச்சிளம் குழந்தைகளுக்கான ஆம்புலன்ஸ், வால்பாறையில் ஜீப் ஆம்புலன்ஸ் இயக்கப்பட்டு வருகிறது. விபத்து, கர்ப்பிணிகள், முதியோர், தற்கொலை முயற்சி மற்றும் அவசர மருத்துவ உதவி தேவைப்படுபவர்கள் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையை நாடுகின்றனர். அவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை கிடைக்கவும், உயிர்களை காப்பாற்றவும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து சென்று சேவையாற்றி வருகின்றனர்.

    கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டவர்கள் குறித்து 108 ஆம்புலன்ஸ் பிரிவு அதிகாரி செல்வமுத்துகுமார் கூறியதாவது:-

    கோவை நகரில் இருந்து 108 ஆம்புலன்சுக்கு அவசர சிகிச்சை உதவிக்கு அழைத்தால் 9 நிமிடத்திற்குள் சம்பவ இடத்தை அடையும் வகையில் துரித சேவை அளிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு (2023) ஜனவரி 1 -ந் தேதி முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை கர்ப்பிணிகள் 16,962 பேர், பச்சிளம் குழந்தைகள் 1,091 பேர், விபத்தில் சிக்கிய 15,567 பேர், சர்க்கரை நோயாளிகள் 2,673 பேர், ஆம்புலன்சில் 33 பிரசவம், உடல் உபாதையால் பாதித்த 5,830 பேர் என மொத்தம் 85,256 பேர் அவசர மருத்துவ சிகிச்சை கேட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பயன் அடைந்துள்ளனர்.

    தமிழகத்தில் கடந்த ஆண்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பயன் அடைந்தவர்கள் பட்டியலில் திருவள்ளூர் மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது. 2-வது இடத்தை கோவை மாவட்டம் பெற்று உள்ளது. கோவை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் மூலம் 85,256 பேர் அவசர மருத்துவ சிகிச்சை உதவி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிறுவனின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல உதவுமாறு ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் லிங்கப்பா அழுதபடி கேட்டார்.
    • 108 ஆம்புலன்சில் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்ல அனுமதி இல்லை என்று கூறி சென்று விட்டனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் அமரபுரம் மண்டலம் அனுமந்துனி பல்லே என்ற கிராமத்தை சேர்ந்தவர் லிங்கப்பா. விவசாயி. இவருடைய மகன் ருஷி கடந்த சில நாட்களாக சிறுவனுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.

    அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிறுவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை சிறுவனுக்கு வலிப்பு ஏற்பட்டது. உடனடியாக லிங்கப்பா 108 ஆம்புலன்சை தொடர்பு கொண்டார். ஆம்புலன்ஸ் மூலம் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மதக சிறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிறுவனை கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

    ஆஸ்பத்திரியில் பரிசோதித்த டாக்டர்கள் சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதனையடுத்து சிறுவனின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல உதவுமாறு ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் லிங்கப்பா அழுதபடி கேட்டார்.

    ஆனால் 108 ஆம்புலன்சில் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்ல அனுமதி இல்லை என்று கூறி அவர்கள் சென்று விட்டனர்.

    இதனால் லிங்கப்பா அவரது உறவினர் ஒருவரை வரவழைத்தார். பின்னர் சிறுவன் உடலை 40 கிலோ மீட்டர் தூரம் பைக்கில் தூக்கிச் சென்றார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து மதகசிறை மற்றும் அமரபுரம் மண்டல வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 108 ஆம்புலன்ஸ் மூலம் பக்கத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர்.
    • இருப்பினும் சிகிச்சை பலன்அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

    கன்னியாகுமரி :

    காரக்குறிச்சி அருகே உள்ள கல்பாடி காருப்பாறை பகுதியை சேர்ந்தவர் அருணாசலம் (வயது 70).

    இவர் நேற்று இரவு கொட்டாரம் அருகே உள்ள பெருமாள்புரம் பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டி ருந்தார். அவர் "திடீர்"என்று ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று இவர் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பக்கத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர்.

    பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலன்அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கன்னியா குமரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    • அரசு பஸ் ஒன்று பாவூர்சத்திரத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது.
    • டிரைவர் பஸ்சை நிறுத்தும் முன்பே மூதாட்டி இறங்கியதால் தவறி விழுந்தார்.

    தென்காசி:

    தென்காசியில் இருந்து பாவூர்சத்திரம், ஆலங்குளம் வழியாக நெல்லை செல்லும் அரசு பஸ் ஒன்று பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு நெல்லைக்கு புறப்பட்டது.

    இந்நிலையில் நெல்லை- தென்காசி 4 வழிச்சாலையில் பாவூர்சத்திரம் பிரதான பகுதியில் சென்று கொண்டிருந்த போது அந்த பஸ்சில் வழி தவறி ஏறிய சுமார் 80 வயது உள்ள மூதாட்டி ஒருவர் அவசரமாக இறங்குவதற்கு முயற்சித்துள்ளார்.

    இந்நிலையில் பஸ் டிரைவர் நிறுத்துவதற்கு முன்பே அந்த மூதாட்டி பதட்டத்தில் இறங்கியதால் தவறி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டது. உடனே பஸ் நிறுத்தப்பட்டது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இந்நிலையில் அந்த மூதாட்டிக்கு தலையில் அடிபட்டதால் தனது பெயர், அவரது ஊர் மற்றும் உறவினர்கள் பெயரை சொல்ல முடியாமல் திணறினார். சம்பவம் அறிந்து விரைந்து வந்த பாவூர்சத்திரம் போலீசார் அந்த மூதாட்டியை 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் மூலம் சிகிச்சை கொடுத்து பின்னர் அவரை அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். ஆம்பு லன்சில் ஏறுவதற்கு மறுத்த மூதாட்டியை பெண் போலீஸ் ஒருவர் கரிசனையுடன் பேச்சு கொடுத்து அவரை 108 ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காகவும், மூதாட்டியின் உறவினர்கள் யார் என்பதை தெரிந்து கொள்வதற்காகவும் அழைத்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியாக பார்க்கப்பட்டது. அந்த பெண் போலீசுக்கு பாராட்டுகளும் குவிகிறது. இந்நிலையில் மூதாட்டியின் சொந்த ஊர் மடத்தூர் என்பது தெரியவந்தது.

    • காப்புக்காடு பகுதியில் வந்து கொண்டிருந்த போது நடுரோட்டில் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த ஒருவர் 108 ஆம்புலன்சை விடாமல் வழிமறித்தார்.
    • நீண்ட நேரமாக நடுரோட்டில் நின்று கொண்டு 108 ஆம்புலன்ஸை விடாமல் தடுத்து நிறுத்தினார்.

    நாகர்கோவில்:

    குமரி மேற்கு மாவட்டம் பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

    ஆம்புலன்ஸ் டிரைவர் சம்பவ இடத்திற்கு வந்து கர்ப்பிணி பெண்ணை குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு கர்ப்பிணி பெண்ணை பிரசவத்திற்காக சேர்த்து விட்டு திரும்பிக்கொண்டிருந்தார். காப்புக்காடு பகுதியில் வந்து கொண்டிருந்த போது நடுரோட்டில் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த ஒருவர் 108 ஆம்புலன்சை விடாமல் வழிமறித்தார்.

    நீண்ட நேரமாக நடுரோட்டில் நின்று கொண்டு 108 ஆம்புலன்ஸை விடாமல் தடுத்து நிறுத்தினார். டிரைவரை அவதூறாக வசை பாடினார்.

    இதை பார்த்த ஆம்புலன்ஸ் டிரைவர் அந்த சம்பவத்தை வீடியோவில் பதிவு செய்தார். இதற்கிடையில் ஆம்புலன்சில் இருந்த செவிலியர் புதுக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதற்குள் ஆம்புலன்ஸை தடுத்து நிறுத்தி ரகளையில் ஈடுபட்ட நபர் அங்கிருந்து சென்று விட்டார்.

    போலீசார் இது தொடர்பாக விசாரித்தபோது அந்த நபர் குடிபோதையில் 108 ஆம்புலன்ஸை வழிமறித்து ரகளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் ஆம்புலன்ஸ் டிரைவர் தனது செல்போனில் பதிவு செய்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தார். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்திலும் வாலிபர் ஒருவர் குடிபோதையில் ரகளை ஈடுபட்டார். தற்பொழுது 108 ஆம்புலன்ஸை தடுத்து நிறுத்தி ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம்புலன்ஸில் நோயாளிகள் இல்லாததால் மிகப்பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

    • காஞ்சீபுரத்தை சேர்ந்தவர்கள்
    • போலீசார் விசாரணை

    வெம்பாக்கம்:

    காஞ்சீபுரம் தாலுகா புஞ்சையரசங் தாங்கல் கிராமம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி.

    இவர்களது மகள்கள் சுப்புலட்சுமி (வயது 29), பாவணா (16). இருவரும் திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா பாண் டியம்பாக்கம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு மொபட்டில் சென்றனர். பின்னர் அங்கிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.

    வந்தவாசி - காஞ்சீபுரம் சாலையில் தூசி கிராமம் அருகே வந்தபோது எதிரே வந்த கார் இவர்களது மொபட் மீது மோதியது. இதில் அக்காள் தங்கை இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர் .

    பின்னர் அந்த வழியாக சென்றவர்கள் இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்புலட்சுமி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தாயார் மலர்கொடி தூசி போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பாலு, சப்- இன்ஸ் பெக்டர் சுரேஷ் பாபு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வேலை முடிந்து வீடு திரும்பிய போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 25) பெயிண்டர் இவருக்கு கடந்த வருடம் திருமணம் ஆகி மாலா என்ற மனைவி உள்ளனர்.

    தற்போது 5 மாதம் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் அண்ணாமலை கடந்த

    19-ந் தேதி ஆசிரியர் பகுதியில் வேலை முடித்துவிட்டு தனது மொபட்டில் வீடு திரும்பினார்.

    அப்போது அச்சமங்கலம் அருகே சென்ற போது பின்னால் வந்த தனியார் பஸ் அண்ணாமலை மொபட் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அண்ணாமலை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

    சேலம் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய தனியார் பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.

    • தாராபுரம் ஐ.டி.ஐ. கார்னரில் உள்ள 108 ஆம்புலன்சு கட்டிடத்தில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது.
    • ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் அவசர கால மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) தாராபுரம் ஐ.டி.ஐ. கார்னரில் உள்ள 108 ஆம்புலன்சு கட்டிடத்தில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. வாகன ஓட்டுனருக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற வேண்டும். 24 வயதுக்கு மேல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம். இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் பெற்றிருக்க வேண்டும். உரிய ஆவணங்களை சரிபார்ப்புக்கு கொண்டு வர வேண்டும்.

    மருத்துவ உதவியாளர் பணிக்கு பி.எஸ்சி.நர்சிங், ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி.எம்.எல்.டி. படிப்புகளை 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும். பி.எஸ்சி. விலங்கியல், தாவரவியல், பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பையாலஜி படித்திருக்க வேண்டும். 19 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். பகல் மற்றும் இரவு நேரங்களில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கொரோனா கால கட்டத்தில் நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 542 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.
    • கிட்டத்தட்ட 6 லட்சத்து 30 ஆயிரத்து 500 பேர் வரை ஆம்புலன்ஸ் மூலம் பயன் அடைந்தனர்.

    மதுரை:

    தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் முதல் மாநில மாநாடு, மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தில் நடந்தது. இதில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-

    கடந்த 2008-ம் ஆண்டு 200 வாகனங்களுடன் தொடங்கப்பட்ட 108 ஆம்புலன்சு திட்டத்தில் தற்போது 1,353 வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. இதில் 205 வாகனங்கள் மேம்படுத்தப்பட்ட உயிர் காக்கும் கருவிகளுடன் அமைந்து உள்ளன. மீதம் உள்ளவற்றில் 65 ஆம்புலன்சுகள் குழந்தைகளுக்கானவை.

    தி.மு.க. அரசு பொறுப்பேற்ற ஒரே ஆண்டில் 293 ஆம்புலன்சுகள் புதிதாக வாங்கப்பட்டுள்ளன. இதற்காக ரூ.102 கோடியே 28 லட்சத்து 37 ஆயிரம் செலவிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் மிகப்பெரிய அடையாளமாக 108 ஆம்புலன்ஸ் திட்டம் உள்ளது. இதனை அனைத்து மாநிலங்களும் பின்பற்றி வருகின்றன.

    அவசர தொலைபேசி எண் 108-க்கு தினமும் 12 ஆயிரத்து 500 அழைப்புகள் வருகின்றன. இலவச ஆம்புலன்ஸ் மூலம் கடந்த 2008-ம் ஆண்டு முதல் தற்போது வரை 1 கோடியே 46 லட்சத்து 71 ஆயிரத்து 266 பேர் பயன் அடைந்துள்ளனர்.

    கொரோனா கால கட்டத்தில் நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 542 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. அப்போது கிட்டத்தட்ட 6 லட்சத்து 30 ஆயிரத்து 500 பேர் வரை ஆம்புலன்ஸ் மூலம் பயன் அடைந்தனர். இதற்காக 108 ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாநாட்டில் அமைச்சர் மூர்த்தி, எம்.எல்.ஏ.க்கள் தளபதி, பூமிநாதன், 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் கலந்து கொண்டனர். 

    • 108 ஆம்புலன்சு டிரைவர் மீது தாக்குதல் நடந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விருதுநகர்

    திருச்சுழி அருகே உள்ள சவ்வாஸ்புரத்தை சேர்ந்தவர் மருதுபாண்டி (வயது32). இவர் செங்கல்பட்டில் 108 ஆம்புலன்சு டிரைவராக பணிபுரிகிறார். இந்த நிலையில் திருவிழாவிற்காக சொந்த ஊருக்கு வந்தார்.

    அப்போது கருப்பசாமி என்பவர் மருதுபாண்டியிடம், உனது மனைவிக்கும், உறவினரான விஜயகுமாருக்கும் பழக்கம் இருக்கிறது என்று கூறினார். பொது இடத்தில் கருப்பசாமி அருகில் இருந்தபோதே விஜயகுமாரிடம் மருதுபாண்டி இதுகுறித்து கேட்டார். ஆனால் விஜயகுமார் அதற்கு பதில் அளிக்காமல் அமைதியாக சென்று விட்டார். தான் கூறியதை விஜயகுமாரிடம் கேட்டதால் ஆத்திரம் அடைந்த கருப்பசாமி தனது நண்பர் ராமர் என்பவருடன் சேர்ந்து மருதுபாண்டியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் காயம் அடைந்த மருதுபாண்டி அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருச்சுழி போலீஸ் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×