search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டிலில் இருந்து"

    • மேனகா திடீரென கட்டிலில் இருந்து கீழே விழுந்து மூச்சு பேச்சின்றி கிடந்துள்ளார்.
    • பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே மேனகா இறந்து விட்டதாக கூறியுள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்துள்ள சித்தோடு ஆதிபில்டர்ஸ், அண்ணாமலை வீதியை சேர்ந்தவர் மேனகா (44). இவரது கணவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.

    இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மேனகா உடல் நலம் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்றும் வந்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மதியம் 2 மணியளவில் கட்டிலில் படுத்திருந்த மேனகா திடீரென கட்டிலில் இருந்து கீழே விழுந்து மூச்சு பேச்சின்றி கிடந்துள்ளார்.

    அதைக்கண்ட அவரது மகன் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் மேனகாவை மீட்டு பெருதுறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றார்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே மேனகா இறந்து விட்டதாக கூறியுள்ளார். இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்து மயங்கினார்.
    • உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் பகுதியை சேர்ந்த வர் சாமிநாதன் (68). இவரது மனைவி கண்ணம்மாள் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி லண்டனில் வசித்து வருகிறார்.

    இவர்களது மகன் செல்வக்குமார் (43). இவரை பெருந்துறையில் உள்ள தனியார் மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளனர். கடந்த ஒன்றரை மாதமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை தூங்கி கொண்டிருந்த அவர் திடீரென கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்து மயங்கினார்.

    உடனடியாக மறுவாழ்வு மையத்தினர் பெற்றோர்க ளுக்கு தகவல் கூறி உடனடியாக வர சொல்லி உறவினர்கள் உதவியுடன் பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனை க்கு அழைத்து சென்றனர்.

    பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அழைத்து சென்றனர். அவரது உடலை பரிசோதித்த டாக்டர் அவர் வரும் வழி யிலேயே இறந்து விட்டதாக கூறி அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக பெருந்துறை போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நேற்று முன் தினம் கார்த்திகா, குழந்தையை மில்லில் உள்ள காவலாளி அறை அருகில் உள்ள அறையில் கட்டிலில் படுக்க வைத்துவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார்.
    • பின்னர் மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது குழந்தை மகாஸ்ரீ தூங்கிக் கொண்டிருந்தது.

    ஈரோடு:

    அரியலூர் மாவட்டம், இளங்குடந்தை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகா (24). இவர் காங்கயத்தில் உள்ள ஒரு நூல் மில்லில் வேலை பார்த்து வந்தபோது விக்னேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கனீஸ் (6) என்ற மகனும், மகாஸ்ரீ (3) என்ற மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில், கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    கார்த்திகா தனது மகளுடன் ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகே உள்ள பழைய அய்யம்பா–ளையம் பகுதியில் உள்ள நூல் மில்லில் உள்ள குடியிருப்பில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன் தினம் கார்த்திகா, குழந்தையை மில்லில் உள்ள காவலாளி அறை அருகில் உள்ள அறையில் கட்டிலில் படுக்க வைத்துவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார்.

    பின்னர் மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது குழந்தை மகாஸ்ரீ தூங்கிக் கொண்டிருந்தது.

    இதையடுத்து கார்த்திகாவும் குழந்தை மகா ஸ்ரீ அருகிலேயே படுத்து தூங்கியுள்ளார். சிறிது நேரத்தில் காவலாளி கார்த்திகாவை அழைத்து–ள்ளார். இதையடுத்து கார்த்திகா வெளியே சென்று காவலாளியிடம் பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது குழந்தை மகாஸ்ரீ அழும் சத்தம் கேட்டு உள்ளே சென்று கார்த்திகா பார்த்தார். அப்போது கட்டிலில் தூங்கிக் கொண்டி–ருந்த குழந்தை மக ஸ்ரீ கட்டில் இருந்து தவறி கீழே விழுந்து தலையில் அடிபட்டு இருப்பது தெரியவந்தது.

    உடனடியாக அவரை கோபி அரசு மருத்துவ–மனையில் சேர்த்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ–மனையில் சேர்த்துள்ளனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தை மகாஸ்ரீ சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.குழந்தையின் உடலைப் பார்த்து கார்த்திகா அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து வரப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×