search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Collector’s Advice"

    • குடும்ப சூழலை கருத்தில் கொண்டு நன்றாக படிக்க வேண்டும் என்று கலெக்டர் அறிவுரை கூறினார்.
    • வீரராகவன், காரைக்குடி வட்டாட்சியர் தங்கமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் அரசு போட்டி தேர்வாளர்களுக்கு பயிற்சி வகுப்பு தொடங்கி யது. இதில் சிறப்பு விருந்தினராக கலெக்டர் ஆஷா அஜித் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    அரசுப்பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் பல்வேறு பணியிடங்க ளுக்கான அறிவிப்புகள் அவ்வப்போது வரப்பெறு கின்றன. தமிழக அரசின் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் தினந்தோறும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. சிவகங்கையைச் சேர்ந்த தேர்வாளர்கள் பயன்பெறும் வகையில், சிவகங்கையிலும் படிப்பு வட்டத்தில் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

    முன்னதாக காரைக்குடி பகுதியைச் சுற்றியுள்ள தேர்வாளர்களும் பயன்பெறும் வகையில் இது போன்ற பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டு அதன் மூலம் தேர்வா ளர்களும் பயன்பெற்றுள்ள னர்.

    தேர்விற்கு தேவை யானதை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். குறிப்பாக தங்களது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு படிக்க வேண்டும். நல்லமுறையில் பயின்று தாங்கள் பயின்றதை திருப்புதல் செய்தலும் மிகவும் அவசியம் ஆகும். நாம் படிப்பதில் புரிதல் இருக்க வேண்டும்.

    அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள பல்வேறு போட்டித் தேர்வுகளை முறையாக பயன்படுத்திக் கொண்டு சிறந்த முறையில் போட்டித் தேர்வுகளை எதிர்கொண்டு வெற்றி பெற்று தங்களது வாழ்வில் சிறந்து விளங்கிட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகன ச்சந்திரன், மகளிர் திட்ட அலுவலர் வானதி, மாவட்ட கலெக்டன் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வீரராகவன், காரைக்குடி வட்டாட்சியர் தங்கமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை இயக்கிய 101 பேர் பலியானார்கள்.
    • தலைக்கவசம் அணிந்து பயணம் செய்ய கலெக்டர் அறிவுரை கூறினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 2022 ஜனவரி முதல் 2022 ஆகஸ்டு வரை 233 வாகன விபத்துக்கள் மூலம் 249 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதில் 98 இருசக்கர வாகன விபத்துகளில் 101 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

    இந்த விபத்துகளில் 99 சதவீதம் இரு சக்கர வாகனத்தில் பயணித்த வர்கள் தலைக்கவசம் அணியாமல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

    பொதுவாக தலைக்க வசம் அணிய வேண்டும். அதுதான் உயிர் கவசம் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தலைக்கவசம் அணியாமல் செல்வதை தவிர்த்து இனி கட்டாயம் தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனத்தை பயன்படுத்த வேண்டும்.

    இதுபோன்ற விபத்துக்க ளால் உயிரிழந்தவர்களின் நிலை அவர்களோடு முடிவதில்லை. அவர்க ளுக்கு பின்னால் குடும்பம் எந்த அளவிற்கு பாதிக்கப்படும் என்பதை உணர்ந்தாலே ஒவ்வொருவரும் தலைக்கவசம் அணிந்து வாகனத்தை பாதுகாப்பாக பயன்படுத்தி பாதுகாப்புடன் செல்லலாம்.

    எனவே அரசின் விதி முறைகளை கடைபிடித்து 4 சக்கர வாகன ஓட்டுபவர்கள் உரிய வேகத்தில் செல்வதும், இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் தலைக்கவசம் அணிந்து மிதமான வேகத்தில் செல்வதும், சாலையை கடந்து செல்பவர்கள் அனுமதிக்கப்பட்ட இடங்க ளில் மட்டுமே சாலையை கடப்பது என சாலை விதிகளை கடைப்பிடித்து பாதுகாப்பான பய ணத்தை மேற்கொண்டு பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×