search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 arrested 2 பேர்"

    • பவளத்தானுர் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து சோதனை நடத்தினர்.
    • அவர்களிடம் 14 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா பொட்டலம் இருப்ப தும் கண்டுபிடிக்கப்பட்டது.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகி லுள்ள பவளத்தானுர் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து சோதனை நடத்தினர்.

    அவர்க பாப்பம்பாடி பகுதியை சேர்ந்த குப்புசாமி மகன் கார்த்திக் ராஜா (23), பாரகல்லூர் பகுதியை சேர்ந்த மணி மகன் மணிகண்டன் (22) என தெரியவந்தது. அவர்களிடம் 14 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா பொட்டலம் இருப்ப தும் கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து 2 பேரை யும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த கைப்பற்றினர்.

    • மேட்டூர் அருகே உள்ள மாதையன்கொட்டாய் மேல்வாய்க்கால் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட் டனர்.
    • பஸ் கண்ணாடிகளை உடைக்க லாம் என சத்தமாக பேசிக்கொண்டிருந்தனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் போலீசார் நேற்று மாலை மேட்டூர் அருகே உள்ள மாதையன்கொட்டாய் மேல்வாய்க்கால் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட் டனர். அப்போது மேட்டூர் பொன்நகரை சேர்ந்த அர்ஜூனன் மகன் மாதேஷ் (வயது 29), எடப்பாடி கலர்காட்டை சேர்ந்த கோபி மகன் தீபக்குமார் (22) ஆகியோர் பொதுமக்கள் தங்களை பார்த்து அச்சப்பட வேண்டும் என்பதற்காக பஸ் கண்ணாடிகளை உடைக்க லாம் என சத்தமாக பேசிக்கொண்டிருந்தனர். இதை பார்த்த போலீசார், அவர்களால் பொது சொத்துக்கு பங்கம் ஏற்படும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருவரை யும் போலீசார் கைது செய்தனர்.

    • சேலம் இரும்பாலை அருகே உள்ள எஸ்.கொல்லப்பட்டி ஓம் சக்தி நகர் பகுதியில் கந்து வட்டியால் கணவன்- மனைவி தற்கொலை செய்து கொண்டனர்.
    • போலீசார் அதிரடியாக செயல்பட்டு கந்துவட்டி கேட்டு மிரட்டிய பெண் உள்பட 2 பேர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    சேலம்:

    சேலம் இரும்பாலை அருகே உள்ள எஸ்.கொல்லப்பட்டி ஓம் சக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 65). இவரது மனைவி விஜயா (58). இவர்களுக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.லேத் பட்டறை வைத்து நடத்தி வந்த தங்கராஜ் வீட்டு தேவைக்காக ரூ.2 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.

    வாங்கிய பணத்தை கட்ட முடியாததால் கடன் கொடுத்தவர்கள் வடிவேல் வட்டி போட்டு பணத்தைக் கேட்டு கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் மனமுடைந்த தங்கராஜ் கடந்த 8-ம் தேதி பூனைக்காடு பகுதியில் எலி மருந்து சாப்பிட்டு மயங்கி கிடந்தார்.

    இதுகுறித்த தகவல் இந்த குடும்பத்தினர் தங்கராஜ் மீட்டு அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தங்கராஜ் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.கணவரை மருத்துவமனையில் உடனிருந்து கவனித்து வந்த விஜயா, தங்கராஜ் இறந்ததால் கடும் அதிர்ச்சி அடைந்தார்.

    கணவர் இருந்த துக்கம் தாளாமல் இருந்த அவர் நேற்று காலை அதே மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தங்கராஜ் மகன் கோபி சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் தனது தந்தை தங்கராஜ் ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்த ராஜா(46) மற்றும் ரெட்டிபட்டி அடுத்த நரசோதிப்பட்டி பகுதி சேர்ந்த கிருஷ்ணன் மனைவி சாவித்திரி என்கிற சித்ரா(45) ஆகியோரிடம் கடந்த 2018 -ம் ஆண்டு தொழிலை அபிவிருத்தி செய்ய ரூ. 4 லட்சம் கடன் வாங்கியதாகவும், அந்த பணத்திற்கு ரூ.10 வட்டி செலுத்தி வந்ததாகவும் வாங்கிய தொகைக்கு 2 மடங்குக்கு மேல் பணம் கட்டியும்,மேலும் பணம் கேட்டு எனது தந்தை தங்கராஜுக்கு நெருக்கடி கொடுத்ததால் தனது தந்தை தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார்.

    போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி இதுபற்றி விசாரித்து தம்பதி தற்கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டார். மாநகர போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி மேற்பார்வையில் சூரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்ற்உம் போலீசார் கந்து வட்டி கொடுமையின் கீழ் வழக்கு பதிவு செய்து ராஜா மற்றும் சாவித்திரி என்ற சித்ராவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    மருத்துவமனையில் விஜயா தற்கொலை செய்து கொண்டது குறித்து இறந்து போன தம்பதிகளின் மற்றொரு மகன் ஹரிபாபு கொடுத்த புகார் பேரில் அஸ்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கந்து வட்டி கொடுமையால் கணவனும் மனைவியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் உள்ளவர்களை கடும் சோகத்தில் ஆழ்த்திய நிலையில் போலீசார் அதிரடியாக செயல்பட்டு இந்த தற்கொலைக்கு காரணமாக கைது செய்து சிறையில் அடைத்தது பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தகராறில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • புகாரின் பேரில் பரமத்தி போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் விக்னேஸ்வரன்.இவரது மகன் விஜயகாந்த் (27). கூலித்தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்த அஜந்தன் (24) கூலித்தொழிலாளி.இவர்கள் இருவரும் கடந்த 27-ந் தேதி மது அருந்தி விட்டு விஜயகாந்த் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

    அப்போது விஜய காந்திடம் இருந்த அஜந்தனின் மோட்டார் சைக்கிள் சாவியை கேட்டுள்ளார். சாவியை விஜயகாந்த் தரமறுத்துள்ளார்.இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த அஜந்தன் விஜயகாந்த் மற்றும் அவரது தாய் ஜானகியை பார்த்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் விஜயகாந்த் அதே பகுதியில் உள்ள அஜந்தனின் சித்தப்பா மகள் சரேந்தினியிடம் (25) மது அருந்தி விட்டு சென்று தகராறு செய்துள்ளார். . தகவல் அறிந்து அங்கு வந்த அஜந்தனுக்கும் விஜயகாந்துக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் விஜயகாந்த் அஜந்தனையும் அவரது சகோதரி சுரேந்தினியையும் தாக்கி தீ வைத்து கொளுத்தி விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்துள்ளார். சம்பவம் குறித்து இரு தரப்பினரும் பரமத்தி போலீஸ்நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் பரமத்தி போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து அஜந்தன் மற்றும் விஜயகாந்த் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×