search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாஸ்மாக் கடைகளுக்கு"

    • ஈரோடு மாவட்டத்தில் வருகின்ற 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காந்தி ஜெயந்தி, 9-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மிலாடி நபிகள் தினம் முன்னிட்டு அரசு மதுபான கடைகள் மூடப்பட்டிருக்கும்.
    • அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் வருகின்ற 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காந்தி ஜெயந்தி, 9-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மிலாடி நபிகள் தினம் முன்னிட்டு மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடைகள், அத்துடன் இயங்கும் மதுக்கூடங்கள் மற்றும் எல் எப். 2, எப். எல். 3 மதுபான உரிமத்தலங்கள் மூடப்பட்டிருக்கும்.

    அன்றைய தினத்தில் மதுபான விற்பனைகள் எதுவும் நடைபெறாது. அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    ×