என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பக்தி"
- இங்கு இறைவன் பன்றி (வராகம்) முகத்தோடு காட்சியளிக்கிறார். தாயார் பூமாதேவி.
- பூமியை முன்பு போல நிலைபெறச் செய்தார். தேவர்கள் இதைக்கண்டு மகிழ்ந்தனர்.
சக்ரபாணி திருக்கோவிலுக்கு தென்மேற்கில் அமைந்த இந்த திருக்கோவில், மற்ற கோவில்களை விட வித்தியாசமானது.
இங்கு இறைவன் பன்றி (வராகம்) முகத்தோடு காட்சியளிக்கிறார். தாயார் பூமாதேவி.
முன்னொரு சமயம் "இரண்யாட்சன்" என்ற ஒரு அசுரன் பூமியைக் கவர்ந்து பாதாளத்தில் ஒளிந்து கொண்டான்.
இதனால் பெரிதும் கலக்கமுற்ற வானவர்கள், ஸ்ரீவைகுண்டத்தில் பள்ளி கொண்டிருக்கும் திருமாலிடம் சென்று,
நடந்ததை சொல்லி, பூமாதேவியை அந்த அசுரனிடமிருந்து காக்கும்படி வேண்டினார்கள்.
அந்த அசுரனால் கவர்ந்து செல்லப்பட்ட பூமியைக் கொண்டு வர திருமால் வராக அவதாரம் எடுத்தார். பாதாளம் புகுந்தார்.
அந்த இரண்யாட்சனுடன் கடுமையாக போர்புரிந்து தனது ஒரு கொம்பினால் அவனையும், அவனை சார்ந்த அசுரர் கூட்டத்தையும் அழித்தார்.
அசுரர்கள் கொல்லப்பட்ட பின்பு வராகமூர்த்தி, தனது இன்னொரு கொம்பினால் பூமியை பாதாள உலகத்திலிருந்து தாங்கி, மீட்டுக்கொண்டு மேலே வந்தார்.
பூமியை முன்பு போல நிலைபெறச் செய்தார். தேவர்கள் இதைக்கண்டு மகிழ்ந்தனர்.
இங்கு வராஹமூர்த்தி பூமிதேவியை தனது இடது மடியில் அமர்த்தி வீற்றிருக்கும் கோலத்தோடு காட்சி தருகிறார்.
திருமாலை சரண் அடைந்தால் நாம் நிச்சயம் காப்பாற்றப்படுவோம் என்பதற்கு அடையாளமாக விளங்குவதுதான் குடந்தையில் உள்ள இந்த ஆதிவராகப் பெருமாள் திருக்கோவில்.
- மூலவர் சாரங்கபாணி, எட்டு கைகளுடன் காட்சியளிக்கிறார்.
- தாயார் விஜயவல்லி, பஞ்சமுக ஆஞ்சநேயர் இங்கிருக்கிறார்.
இந்த கோவில் அழகான பல்வகையான மந்திர&தந்திர சிறப்புகளைக் கொண்டது.
காவிரி ஆற்றுக்கு சற்று தெற்கில் இத்தலம் அமைந்துள்ளது.
கல்யாணபுரி, சாரங்கராஜன் பட்டினம் என்று இந்த தலத்திற்கு மற்ற பெயர்களும் உண்டு.
ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் சுற்று மதில் சுவருடன் அர்த்தமண்டபம், மகாமண்டபம் உண்டு.
மூலவர் சாரங்கபாணி, எட்டு கைகளுடன் காட்சியளிக்கிறார்.
தாயார் விஜயவல்லி, பஞ்சமுக ஆஞ்சநேயர் இங்கிருக்கிறார்.
சக்ரபாணியின் எட்டு கைகளுடன் கூடிய திருக்கோலத்தை காண விரும்பிய பிரம்மா, சூரியன், அக்னி, திருமகள் ஆகியோருக்கு பெருமாள் பிரத்ட்சயம் ஆனார் என்பது மிகச்சிறப்பு.
இங்கு எழுந்தருளியிருக்கிற பெருமாள் சக்கர வடிவமாக தாமரைப் பூவில் அறுகோண யந்திரத்தில் காட்சி தருகிறார்.
முன்னொரு சமயம் குடந்தையில் தங்கி தவம் செய்த தேவர்களை முனிவர்களை, அசுரர்கள் பலவகையிலும் தொந்தரவு செய்து துன்புறுத்தினர்.
ஒருகால கட்டத்தில் தொந்தரவு, அளவுக்கு அதிகமாகப் போகவே, அவர்களை அசுரர்களிடமிருந்து காப்பாற்ற பெருமாள் தனது கையிலிருந்த சுதர்சன சக்கரத்தால் அசுரர்களை கொன்று அழித்தார்.
அன்று எந்த கோலத்தில் நின்று அசுரர்களை அழித்தாரோ அதே கோலத்தில் இன்ற நமக்கு கருணை கொண்டு அருள் பாலித்து வருகிறார்.
- அமைதியாகவும், கருணை பொங்குவது போலவும் உருவச் சிலைகள் அமைந்துள்ளன.
- இறைவன் திருநாமம் ராஜகோபாலன். தாயார் செங்கமலவல்லி.
கும்பகோணத்தில் உள்ள பெரிய கடைவீதியில் அமைந்த அற்புதமான கோவில்.
சின்ன கோவில் இது. இறைவன் திருநாமம் ராஜகோபாலன். தாயார் செங்கமலவல்லி.
அமைதியாகவும், கருணை பொங்குவது போலவும் உருவச் சிலைகள் அமைந்துள்ளன.
யார் என்ன பாவத்தை செய்திருந்தாலும், அதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் இந்த தலத்திற்கு வந்து எம்பெருமான் ராஜகோபாலனை மனமுருகி பிரார்த்தனை செய்தால் போதும்,
அவர்கள் அனைவரது பிரார்த்தனைகளும் வெகு சீக்கிரத்திலேயே நிறைவேறி விடும் என்பது இந்த ராஜகோபால சுவாமி கோவிலின் விசேஷம்.
இன்னும் சொல்லப் போனால் மன்னார்குடி ராஜகோபால பெருமாளுக்கு என்ன பெருமை உண்டோ அத்தனையும் இந்த கும்பகோணம் ராஜகோபால சுவாமிக்கும் உண்டு.
- சாமரக் குடையின் கீழ் பட்டாபிஷேக கோலத்தில் கண்குளிரக் காட்சியளிக்கிறார்.
- பங்குனி மாதத்தில் வரும் ராமநவமி அன்று இங்கு வெகு விமரிசையாக விழா நடக்கும்.
இந்த கோவில் கும்பகோணம் நகரில் நடுநாயகமாக வீற்றிருக்கும் பெரிய கடை வீதியின் தென்கோடியில் அமைந்திருக்கிறது.
தஞ்சையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செலுத்திய ரகுநாத நாயக்க மன்னரால் கி.பி.1620ல் இக்கோவில் கட்டப்பட்டதாக வரலாறு.
"ஆதிகும்பேஸ்வரர்" திருக்கோவிலுக்கு மிக அருகில் இருக்கிறது.
கோவிலின் மொத்த நிலப்பரப்பு சுமார் இரண்டு ஏக்கர் இருக்கும்.
5 நிலை ராஜகோபுரத்துடன் வடக்கு நோக்கி மூலவர் ராமர், சீதை, பரதன், லட்சுமணன், சத்ருக்கன், அனுமன் எல்லாருடனும்
சாமரக் குடையின் கீழ் பட்டாபிஷேக கோலத்தில் கண்குளிரக் காட்சியளிக்கிறார்.
நேர்த்தியாகக் கட்டப்பட்ட இந்த கோவில் தூண்களில் நல்ல வேலைப்பாடு அமைந்த சிற்பங்களை காணலாம்.
திருமாலின் அவதாரங்கள் கண்ணைக் கவரும் விதத்தில் சித்தரிக்கப்பட்டு இருக்கின்றன.
ஆஞ்சநேயர் வீணையுடன் ராமாயண பாராயணத்துடனும் இருக்கும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது.
பங்குனி மாதத்தில் வரும் ராமநவமி அன்று இங்கு வெகு விமரிசையாக விழா நடக்கும்.
கோவிலை விட்டு வெளியே வந்தாலும் இந்த கோவிலின் 62 தூண்களில் காணப்படும் நுண்ணிய வியக்கத்தக்க சிற்பங்கள் நம் கண்ணிலேயே நிற்கும்.
- இறைவன் அமிர்தகலேஸ்வரர் என்றும், இறைவி அமிர்தவல்லி என்றும் வழங்கப்படுகின்றனர்.
- சுந்தரர் மிகவும் போற்றி பாடியிருக்கிற பெருமையையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது.
கும்பகோணத்திலிருந்து சுமார் நான்கு கிலோ மீட்டர் தொலைவில் அரசலாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது இந்தத் திருக்கோவில்.
இன்றைக்கு இந்த திருத்தலம் சாக்கோட்டை என்று வழங்கப்பட்டு வருகிறது.
சுந்தரர் மிகவும் போற்றி பாடியிருக்கிற பெருமையையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது.
முன்னொரு காலத்தில் ஏராளமான இயற்கை வளம் பொருத்தி செழிப்பாக விளங்கியது.
மாளிகை, கோட்டைச்சுவர் என்றெல்லாம் இந்த ஊரைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்தது.
இங்குள்ள சிவபெருமானுடைய கோவிலைச் சுற்றி மிக பலமான கோட்டை கட்டப்பட்டிருந்ததால் கோட்டைச் சிவன் கோவில் என்று வழங்கப்பட்டு வருகிறது.
அமிர்த கலசத்தின் நடுப்பகுதி இங்கு தங்கியதால் கலயநல்லூர் என்ற பெயர் முதலில் ஏற்பட்டது.
இந்த இடத்தில் பிரம்ம தேவர் தவம் இருந்து சிவபெருமானே வழிபட்டு வந்ததால் இந்த ஸ்தலத்திற்கு மற்றொரு பெருமையும் உண்டு.
உமையவளே இங்கு வந்து கடுந்தவம் புரிந்து உயிர்களைக் காக்க முயற்சித்ததோடு சிவபெருமானையும் விரும்பி அமர்ந்த இடம் என்று தனிச்சிறப்பும் பெற்றது.
இறைவன் அமிர்தகலேஸ்வரர் என்றும், இறைவி அமிர்தவல்லி என்றும் வழங்கப்படுகின்றனர்.
இங்குள்ள தீர்த்தத்திற்கு நால்வகைத் தீர்த்தம் என்று பெயர்.
- ஆரோக்கியமான புத்திர பாக்கியம் பெறுவார்கள் என்பது காலகாலமாக வழங்கி வரும் நியதி.
- அம்பாள் சோம கமலாம்பாள் என்றும் அழைக்கப் படுகிறார்கள்.
இந்த அழகிய திருக்கோவில் கும்பகோணம் ரயில் சந்திப்பிலிருந்து வடமேற்கில் சுமார் பதினைந்து கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது.
மகா பிரளயத்தின் பொழுது மிதந்து வந்த அமுத கும்பத்தை சிவபெருமான் உடைக்க எண்ணியபொழுது
இந்த இடத்தில் நின்று கொண்டுதான் கும்பத்தின் மீது பாணம் தொடுத்தார்.
பாணம் தொடுத்த இடமாதலால் இந்த இடத்திற்கு பாணாத்துறை என்றும், இறைவன் பாணபுரீஸ்வரர் என்றும்,
அம்பாள் சோம கமலாம்பாள் என்றும் அழைக்கப் படுகிறார்கள்.
புராணத்தில் கூறப்படும் கோவில்களில் அதி முக்கியத்துவம் வாய்ந்த முதன்மையான கோவில் என்றும் சொல்லலாம்.
உலக அழிவை, பிரளயத்தை இங்கு இருந்துதான் சிவபெருமான் தடுத்தார் என்பதால் உன்னதமான தலம்.
இத்தலத்தில் மூன்று கால்கள் உடைய சிவபெருமானின் திரு உருவம் காணப்படுகிறது.
பொதுவாக சிவபெருமான் லிங்க வடிவில்தான் காட்சியளிப்பார். இங்கு மூன்று கால் கொண்ட உருவத்தோடு காட்சியளிப்பது வியப்பினைத் தருகிறது.
அகத்திய முனிவர் தனது சாபம் தீர ஸ்ரீ பாணபுரீஸ்வரம் வந்து இறைவனை வழிபட்டு பேறு பெற்றார்.
சூரசேனனின் மனைவி காந்திமதியும் இங்கு வந்து தவம் புரிந்து சிவபெருமானை வழிபட்டு பேறு பெற்றான்.
காசிக்குச் சென்று விஸ்வநாதரை வணங்கிய வியாசருக்கு தரிசனம் கொடுத்த சிவபெருமான்.
பொய் உரைத்து நிறைய பாவத்தைப் பெற்ற நீங்கள், காசியில் இங்கு வந்து என்னை வணங்கினால் உங்கள் பாவம் கழியாது.
எனவே கும்பகோணம் சென்று அங்குள்ள மகாமகக் குளத்தில் மாசி மகத்தன்று நீராடி அப்படியே பாணபுரீஸ்வரம் சென்று அங்கு எம்மை பூஜித்தால்
யாம் அங்கு வந்து உமது சாபத்தை விமோசனம் செய்வோம் என்று சொன்னதால் வியாசபெருமான் இங்கு வந்து சாபவிமோசனம் பெற்றார்.
புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் இந்த ஸ்தலத்திற்கு வந்து சிவபெருமானை மானசீகமாக வழிபட்டால்,
ஆரோக்கியமான புத்திர பாக்கியம் பெறுவார்கள் என்பது காலகாலமாக வழங்கி வரும் நியதி.
பிரளயம் முடிந்து முதலில் தோன்றிய சிவன் கோவில் என்பதால் மற்ற எந்தக் கோவில்களுக்கும் கிடைக்காத பெருமை, புகழ், அந்தஸ்து இந்தக் கோவிலுக்கு அதிகமாகவே உண்டு.
- இங்குள்ள ஒரு பழமையான சன்னதிக்குப் பெயர் ஜுரகேஸ்வரர்.
- அங்கு தரப்படும் விபூதிப் பிரசாதத்தை சாப்பிட்டால் எப்பேர்ப்பட்ட ஜுரமும் குறைந்து விடும்.
ஆந்திராவில் சித்தூருக்குப் பக்கத்தில், திருப்பதி செல்லும் வழியில் உள்ள காளஹஸ்தி கோவிலுக்குச் சென்று வழிபட முடியாதவர்களுக்கெல்லாம்
இறைவன் தானே அருள்பாலிக்கும் வகையில் கும்பகோணத்திற்குப் பக்கத்தில்
காவிரி நதியின் தெற்கு பக்கத்தில் காளஹஸ்தீஸ்வரராக திருக்கோவில் கொண்டிருக்கிறார்.
இந்த ஸ்தலத்திலுள்ள அம்பிகையான ஞானபிரகலாம்பிகையை வழிபட்டால் வாயு சேத்திரம் என்று அழைக்கப்படும்
காளஹஸ்திப் பெருமானை வணங்கிய புண்ணியம் கிடைக்கும்.
இங்குள்ள ஒரு பழமையான சன்னதிக்குப் பெயர் ஜுரகேஸ்வரர்.
யாருக்கு வெகு நாட்களாக கடுமையான ஜுரம் அடிக்கிறதோ என்ன மருந்து, மாத்திரை கொடுத்தாலும் நிற்கவில்லையோ,
டாக்டர்களாலும் கைவிடப்பட்டாலும் பரவாயில்லை.
அவர்களை சேர்ந்தவர்கள் இந்த சன்னதிக்கு வந்து சுவாமிக்கு வெந்நீரால் அபிஷேகம் செய்து, புழுங்கல் அரிசியால் சாதம் செய்து நிவேதனம் செய்து,
மிளகு ரசம், பருப்புத் துவையல் மற்றும் ஜுரகேஸ்வரருக்கு நைவேத்தியமாகச் செய்து வில்வ இலையால் அர்ச்சனை செய்து,
அங்கு தரப்படும் விபூதிப் பிரசாதத்தை சாப்பிட்டால் எப்பேர்ப்பட்ட ஜுரமும் குறைந்து விடும்.
இது இன்று வரை நடக்கின்ற அதிசயம்.
- முன்பொரு சமயம் இந்த இடம் ஆமணக்கு காடாக இருந்தது.
- மார்க்கண்டேய மகரிஷி பூஜித்த ஸ்தலம் என்பது இன்னொரு பெருமை.
அற்புதமான சிவஸ்தலம்.
அமைதியாக கோடீஸ்வரர் அருள் பாலித்து வருகிறார்.
மார்க்கண்டேய மகரிஷி பூஜித்த ஸ்தலம் என்பது இன்னொரு பெருமை.
ஒரு சமயம் ஹேரண்ட முனிவர் காவிரியில் மூழ்கி இந்த தலத்தில் வெளியே வந்தார்.
இன்னொரு சமயம் திருவலம் சுழியிலுள்ள காவிரி படுகைக்குள் இறங்கி, மறைந்து போனவர்,
இந்த கோடீஸ்வரர் திருக்கோவிலில் எழுந்து நின்று தரிசனம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.
இதற்கு அத்தாட்சியாக கொண்ட முனிவரின் திரு உருவம் இந்தத் திருக்கோவிலில் அமைந்திருக்கிறது.
முன்பொரு சமயம் இந்த இடம் ஆமணக்கு காடாக இருந்தது.
இறைவன் ஆமணக்கு கொட்டைச் செடியின் கீழ் இருந்ததால் இந்த ஊருக்கு கொட்டையூர் என்ற பெயர் ஏற்பட்டது.
சோழ மன்னன் ஒருவன் தன் மீது கொண்ட அளவற்ற பக்தியைக் கண்டு இறைவன் கோடி லிங்கமாக தரிசனம் கொடுத்த ஸ்தலம் என்று பெருமைப்பட்ட ஸ்தலம்.
இதனால் இன்றைக்கு கோடீஸ்வரம் என்று பெயர் வழங்கி வருகிறது.
- இந்த இடத்தைதான் பொற்காசுகளை அடிக்கும் நிலையமாக வைத்திருந்தார்கள்.
- இந்த சுவாமிக்கு கம்பட்ட விஸ்வநாத ஸ்வாமி என்று முதலில் பெயர் ஏற்பட்டது.
மிகப்பெருமையும், புகழும் கொண்ட மற்றொரு திருக்கோவில் இது.
ஆதி கும்பேஸ்வரர் திருக்கோவிலுக்கு தென்மேற்குத் திசையில் அமைந்திருக்கிறது.
தஞ்சை, பழையாறைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டு வந்த சோழ மன்னர்கள்
இந்த இடத்தைதான் பொற்காசுகளை அடிக்கும் நிலையமாக வைத்திருந்தார்கள்.
அதனால் இந்த சுவாமிக்கு கம்பட்ட விஸ்வநாத ஸ்வாமி என்று முதலில் பெயர் ஏற்பட்டது.
உதயகிரி என்னுமிடத்தில் குடிகொண்டிருந்த மாதவர் என்பவர் சிவபெருமானை தரிசனம் செய்யும் பொருட்டு,
தன் புதல்வன் தூம கேதுவுடன் இங்கு வந்தார்.
அப்போது இந்த இடம் மாலதி வனமாக இருந்தது.
இருப்பினும் அதைப் பற்றிக் கவலை கொள்ளாமல் தூமகேது மகாமகத் தீர்த்தத்தில் நீராடி கும்பேஸ்வரரை வணங்கி மாலதி வனத்தில் குடியேறினார்.
- இதனால் கவுதமரின் பசுக்கொலை பாவம் விலகியது.
- கவுதமர் அன்று முதல் கவுதமேசர் என்று பெயர் பெற்றார்.
கவுதமர் என்ற பிரபலமான முனிவருக்கு சிவபெருமான் மீது அளவு கடந்த பக்தி உண்டு.
இவர் தன் மனைவியுடன் தலயாத்திரை செய்து கொண்டே சிதம்பரம் வந்தார்.
பிறகு சீர்காழிக்கு வந்தார்.
அப்போது சீர்காழியில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது.
இந்த பஞ்சத்தை தன்னால் இயன்றவரை தீர்த்துக் கொண்டிருக்கும் பொழுது கவுதமரின் புகழ் பெருமை அன்னதானப் புண்ணியம் இவற்றைக் கண்டு பொறாமைப்பட்ட அவருடைய சீடர்கள் சிலர்,
வேண்டுமென்றே ஒரு பசுவை அவர் முன் கொண்டு வந்து நிறுத்தினர்.
ஏற்கனவே கடுமையான பஞ்சத்தால் இளைத்திருந்த அந்த பசு, கவுதம முனிவரின் கை பட்டவுடன் இறந்து விட்டது.
தான் ஒரு பசுவைக் கொலை செய்து விட்டோமே என்ன செய்வது என்று திகைத்த கவுதமர் உடனே தன் மனைவியோடு சீர்காழியை விட்டுக் கிளம்பி மயிலாடுதுறைக்கு வந்தார்.
மயிலாடுதுறையில் தங்கியிருந்த துர்வாச முனிவரிடம் சீர்காழியில் தான் செய்த பசுவதையைச் சொன்ன போது,
அதற்கு துர்வாச முனிவர் பசுவதையை நீ செய்யவில்லை.
உன் பெருமையைக் கெடுக்க பாதகர் செய்த சூழ்ச்சி.
இனியும் இப்படிப்பட்ட பசுக்கொலை ஏற்படாமலிருக்க கும்பகோணம் சென்று காவிரியில் நீராடி
மகாமகக் குளத்திற்கு தென்மேற்கு முனையில் எழுந்தருளியிருக்கும் உபளிதேச்சுப் பெருமானை தரிசித்தால்
உங்களிடம் ஒட்டிக் கொண்டிருக்கும் பாவம் நீங்கும் என்று வழிகாட்டினார்.
துர்வாச முனிவரின் யோசனையை ஏற்று, கவுதமர் காவிரியில் நீராடி கும்பகோணம் மகாமகக் குளத்தின் அருகே
குடிகொண்டிருக்கும் சிவ பெருமானை வழிபட வந்தார்.
அங்கு தனக்கென்று ஒரு தீர்த்தம் அமைத்தார்.
அதில் தினமும் நீராடி உபளி தேச்சுப் பெருமானை வழிபட்டு வரும் பொழுது சிவபெருமான் கவுதமருக்குக் காட்சியளித்தார்.
இதனால் கவுதமரின் பசுக்கொலை பாவம் விலகியது.
கவுதமர் அன்று முதல் கவுதமேசர் என்று பெயர் பெற்றார்.
அவர் அமைத்த தீர்த்தம் கவுதம தீர்த்தமாக மாறிற்று. கவுதமருக்கு அருள் பாலித்ததால் உபளிதேச்சுப் பெருமான் பின்னர் கவுதமமேசர் என்று பெயர் மாற்றினார்.
அம்பாள் பெயர் சவுந்தரநாயகி. இன்னொரு காரணப் பெயரும் உண்டு.
அமுதக் குடத்திலிருந்து கயிறு (பூணூல்) விழுந்த இடம் இந்த ஸ்தலம்.
இங்கு தோன்றிய சிவலிங்கத்திற்கு கோவில் கட்டப்பட்டு முதலில் யக்நோபஷதேஸ்வரர் என்று பெயர் வைத்தார்கள்.
பின்னர் உபளிதேச்சுப் பெருமானாக மாறி இன்றைக்கு கவுதமேஸ்வரர் கோவிலாக விளங்கி வருகிறது.
- அபிமுகேஸ்வரரை வணங்கினால் நோயெல்லாம் தீரும் என்ற நம்பிக்கை உண்டு.
- அந்தத் தென்னை மரத்திற்கு அடியில் சிவலிங்கமும் தோன்றியது.
இந்த திருக்கோவில் மகாமகக் குளத்தின் கீழ்க்கரையில் அமைந்துள்ளது.
இறைவன் பெயர் அபிமுகேஸ்வரர், அம்பாள் பெயர் அமுதவள்ளி.
பிரளயத்தின் பொழுது சிவபெருமான் வேட உருவம் தாங்கி அமுத கலசத்தை உடைத்த பொழுது அந்தக் கும்பத்திலிருந்த தேங்காய் விழுந்த இடத்தில் ஒரு தென்னை மரம் தோன்றியது.
அந்தத் தென்னை மரத்திற்கு அடியில் சிவலிங்கமும் தோன்றியது.
இதனால் இத்தலத்திற்கு நாளிக்கேசர் என்று பெயர் சூட்டப்பட்டது (நாளி என்றால் சமஸ்கிருதத்தில் தென்னை மரத்தைக் குறிக்கும்).
இத்தலத்தில் இறைவன் முதலில் கிழக்கு நோக்கித்தான் இருந்தார்.
மகாமகக்குளத்தில் மகாமக தினத்தன்று நீராட நவ புண்ணிய நதிக் கன்னியர்கள் வந்த பொழுது,
அவர்களுக்குத் தரிசனம் தர வேண்டி மேற்குத் திசையில் காட்சி கொடுத்தருளினார்.
இதனால்தான் இங்குள்ள இறைவன் பின்னர் அபிமுகேஸ்வரர் என்ற பெயர் பெற்றார்.
எந்த புண்ணிய தலத்திற்கும் சென்றும் தீராத குஷ்ட நோயை "சுமதி" என்ற பெண்ணுக்கு இங்குள்ள இறைவன் அந்த நோயைத் தீர்த்தார் என்பதால்
அபிமுகேஸ்வரரை வணங்கினால் நோயெல்லாம் தீரும் என்ற நம்பிக்கை உண்டு.
- இத்தீர்த்தத்தில் மூழ்கி விரதம் இயற்றி பேறு பல பெற்றவர்கள் பலராவர்.
- இச்சங்குதீர்த்தம், மூழ்குவோரின் உளப்பிணியையும் உடற்பிணியையும் போக்கி வருகிறது.
சங்கு தீர்த்தம் ஆழ்ந்து அகன்றதாகவும் மழை வளம் குறைந்த காலத்தும் வற்றாத நீரூற்றை உடையதாகவும் உள்ளது.
வருவாய் வழிகள் அடைபட்ட இக்காலத்தும் வடபால் எப்போதும் தெளிந்த நீரையுடையது.
முற்காலத்தில் சம்புலிங்கம் என்கிற பெயரையுடைய பிரம்மச்சாரி பிராமணன் ஒருவன், ஒரு குருவை அடைந்து யோக நூல்கள் பயின்று வந்தான்.
அந்தக் குருவானவர் காலா காலங்களில் செய்ய வேண்டிய நித்திய நியமங்களைச் செய்யாதவராய், எப்பொழுதும் உறங்கிக் கொண்டிருந்தார்.
இதனைக்கண்ட சம்புலிங்கம் அவர் செயல்கள் தனக்கு வருத்தம் தந்ததால்,
அக்குருவை அணுகி அவர் தவறுகளைக் கூறி, அவரிடமிருந்து விலகிச் செல்வதாகக் கூறினான்.
குருவானவர் சம்புலிங்கத்தை குருவைக் கண்டித்த நீ சித்தப்பிரமை கொண்டு அலையக் கடவாயாக என்று சாபமிட்டார்.
அதனால், சம்புலிங்கம் சித்தப்பிரமை அடைந்து பல இடங்களில் அலைந்து இவ்வேதகிரியை அடைந்தான்.
சங்குதீர்த்தத்தில் அதன் மகிமை அறியாமலேயே மூழ்கினான்.
அவன் சித்தப்பிரமை நீங்கி தெளிவு பெற்றான்.
அவன் நாள்தோறும் சங்கு தீர்த்தத்தில் மூழ்கி மலை வலம் வந்து, இறைவனை வழிபட்டுக் கொண்டிருந்தான்.
ஒரு நாள் அவன் சங்கு தீர்த்தத்தில் மூழ்கி படியில் அமர்ந்து இறைவனைத் துதித்துக் கொண்டிருக்கையில்,
அத்தடாகத்தின் மீது பெரிய பறவையொன்று ஒரு கெண்டை மீனைத் தன் வாயில் வைத்த வண்ணம் பறந்து வந்தது.
அப்பறவை வாயில் இருந்த மீன் பறவையின் வாயிலிருந்து நழுவி தடாகத்தில் விழுந்துவிட்டது.
தடாகத்தில் விழுந்த மீன் ஒரு யட்சனாக (கந்தருவனாக) உருமாறி வெளிவந்தான்.
விண்ணில் கந்தருவர்கள் புட்பக விமானத்துடன் நின்றிருந்தனர்.
இந்த அதிசயத்தைக் கண்ட சம்புலிங்கம் அந்த யட்சனை அணுகி அவன் வரலாறு பற்றி வினவினான்
யட்சன், "நான் கயிலையில் உள்ள பெரிய தடாகத்தில் காமகளியாட்டத்தில் இருந்தேன்.
அங்கு வந்த நந்திதேவரை நான், மதிக்காமல் என் விளையாட்டிலேயே இருந்துவிட்டேன், நந்திதேவர் கோபித்து என்னைப் பார்த்து நீ தம்மை மதியாது நீரில் காம மயக்கத்தில் இருந்ததால் மீன் உருவமாகி நீரில் கிடப்பாயாக என்று சாபமிட்டார்.
நான் பயந்து அவரை வணங்கி சாப விமோசனம் கேட்டேன்.
நந்தி தேவர் ஆயிரம் ஆண்டுகள் நீ மீனாக இத்தடாகத்தில் வசித்த பிறகு ஒரு பறவை உன்னைக் கவ்விக் செல்லும்.
அப்பறவை தேகிரியில் உள்ள தடாகத்தின் மீது செல்லும் போது நீ அதன் வாயினின்றும் நழுவித் தடாகத்தில் விழுவாய்.
அப்போது உன் சாபம் தீர்ந்து நீ யட்ச உருவடைவாய்.
உன்னை கந்தருவர்கள் அழைத்துச் செல்வார்கள்" என்று அருள் செய்தார் என்று கூறி, கந்தவருடன் புட்பக விமானம் ஏறி வானுலகம் சென்றான்.
சம்புலிங்கம் அத்தடாகத்தின் மகிமையை உணர்ந்து நாள் தோறும் அதில் மூழ்கி, மலை வலம் வந்து தவமியற்றி முத்தி அடைந்தான்.
சங்கு தீர்த்தத்தில் மூழ்குவோர் சித்தப் பிரமை நீங்கி தெளிவடைதல் யாவரும் அறிந்த உண்மை.
இத்தீர்த்தத்தில் மூழ்கி விரதம் இயற்றி பேறு பல பெற்றவர்கள் பலராவர்.
சிவபெருமான் இத்தலத்தில் தீர்த்தம் வேறு, சிவம் வேறு என்று இரண்டில்லை., இவை (இரண்டும்) ஒன்றே என்கிறார்.
சங்குதீர்த்தத்தில் பிறக்கும் சங்குகளால் கார்த்திகைத் திங்களில் கடைசி திங்கட்கிழமையில் வேதகிரிப்பெருமானுக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.
வடநாட்டு யாத்திரீகர்கள் இத்தலத்தில் உள்ள இத்தீர்த்தத்தில் நீராடுவதற்காகவே வருகிறார்கள்.
அவர்கள் இத்தலத்தை தீர்த்ததலம், பட்சிதீர்த்தம் என்று குறிப்பிடுகின்றனர்.
வடநாட்டு யாத்திரீகர்கள் கங்கை, பட்சிதீர்த்தம், இராமேசுவரம் சேது இந்த மூன்றில்தான் நீராடுவர்.
அவர்கள் நீராடும், மூழ்கும் இடங்களில் ஒன்று நதி, ஒன்று குளம், ஒன்று கடல்.
பாரத நாட்டிலுள்ள குளங்களில் இது ஒன்று தான் தீர்த்தம் என்று அவர்கள் மூழ்குகிறார்கள்.
இன்றும் நாள்தோறும் சில நூறு யாத்திரீகர்கள் இத்தலத்திற்கு வந்து, சங்கு தீர்த்தத்தில் நீராடி மலை ஏறி வேதகிரி ஈசனையும், கழுகுகளையும் தரிசித்துச் செல்கின்றனர்.
இச்சங்குதீர்த்தம், மூழ்குவோரின் உளப்பிணியையும் உடற்பிணியையும் போக்கி வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்